search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாராயணசாமி"

    கட்சி நிர்வாகிகள் கூடி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று வைகோ கூறியுள்ளார். #vaiko #mkstalin #parliamentelection #pmmodi

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அவரிடம் கட்சி நிர்வாகிகள் தேர்தல் நிதி வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பேசிய வைகோ கூறியதாவது:-

    தமிழகத்தில் 64 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் தேர்தல் பணிக்குழு நியமனம் நடைபெற்று வருகிறது. 70 சதவீத வேலைகள் முடிந்து விட்டன. தி.மு.க., அ.தி.மு.க. வை அடுத்து ராணுவ கட்டுப் பாட்டுடன் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பாராளுமன்றத்திற்கு முதல் கட்டமாக நடைபெறும் தேர்தலிலேயே தமிழகத்துக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இடைத்தேர்தலை தள்ளி வைக்க அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.

    பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், நானும் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம்.

    கூட்டாட்சி தத்துவத்தை மோடி மதிப்பதில்லை. பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதிலிருந்து விதி விலக்காக கூட்டாட்சி தத்துவத்தையும், மதசார்பற்ற தன்மையும் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்தவர் வாஜ்பாய். மோடி அப்படி செயல்படவில்லை. அவர் தமிழர்களுக்கு ஏராளமான கெடுதல் செய்துள்ளார். பதவி ஏற்ற போதே ராஜபக்சையை அழைத்து முதுகில் குத்தினார்.

    காவிரி பிரச்சினையில் மேகதாது அணை கட்ட மறைமுக ஆதரவு அளித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தஞ்சை பகுதி விவசாய நிலங்களை பாலை வனமாக்க முயன்றார்.

    கஜா புயலின் போது நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. நியூட்ரினோ திட்டம், முல்லை பெரியார் பிரச்சினை, கூடங்குளம் அணு உலை பூங்கா ஆகிய வற்றின் மூலம் தமிழர்களுக்கு கெடுதல்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே தான் மோடி வரும் போது கருப்புக் கொடி காட்டுகிறோம்.

    என்னை அடிப்பதோ, கொல்வதோ கஷ்டமல்ல. இந்த ஆட்சியில் எத்தனையோ கிறிஸ்தவ ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். எனவே அரசு நிகழ்ச்சிக்கு வரும் போது மட்டுமே மோடிக்கு கருப்புக்கொடி காட்டுகிறோம். இப்போது நாங்கள் தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளோம். கலைஞர் நினைவோடு இருக்கும் போதே அவரிடம் வாக்கு கொடுத்து விட்டேன்.

    அதன்படி மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து உதவிகளையும் செய்வேன். ஸ்டெர்லைட் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. இது மக்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வர வாய்ப்புள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இனி யாரும் போராடக்கூடாது என்பதற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் கூலிப்படையாக இந்த அரசு செயல்படுகிறது.

    மத்திய அரசின் கைப் பாவையாக செயல்பட்டு மக்கள் நலனை புறம் தள்ளும் அ.தி.மு.க. தோற்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படாவிட்டால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடும்.

    இந்த ஜனநாயக விரோத குற்றத்தை தேர்தல் ஆணையம் செய்யாது என கருதுகிறோம். பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே அரசு பணம் கொடுத்து விட்டது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் அ.தி.மு.க., பா.ஜனதாவை தோற்கடிப்பார்கள். 40 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும். 2004-ல் நடந்தது போன்று 2019-ல் நடைபெறும்.


    காங்கிரஸ் கட்சிக்கு பிரியங்கா வந்திருப்பதன் மூலம் வட மாநிலங்களில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் கட்டுகடங்காத கூட்டம் அலைமோதுகிறது. எனவே வட மாநிலங்களிலும் பா.ஜனதா படுதோல்வி அடையும். நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு 125 இடங்களுக்கு மேல் கிடைக்காது. காங்கிரஸ் கட்சி தலைமையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்.

    புதுவையில் கவர்னருக்கு எதிரான முதல்-அமைச்சர் நாராயணசாமி போராட்டம் நியாயமானது. கவர்னர் பதவி என்பது ஒழிக்கப்பட வேண்டும். கட்சி நிர்வாகிகள் கூடி முடிவு செய்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #vaiko #mkstalin #parliamentelection #pmmodi

    அதிகாரத்தின் உச்சக்கட்டமாக கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவை கவர்னர் கிரண்பேடி தனது அலுவலகத்தை துணைநிலை ஆளுநர் செயலகம் என அறிவித்துள்ளார்.

    புதுவையில் தலைமைச் செயலகம் மற்றும் சபாநாயகரின் கீழ் செயல்படும் சட்டமன்ற செயலகம் என 2 செயலகங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

    துணைநிலை ஆளுநர் செயலகம் என அறிவித்திருப்பது விதிமுறையை மீறிய செயலாகும்.ஏற்கனவே தனது அதிகாரத்தை மீறி அரசு அலுவலகங்களுக்கு சென்று கவர்னர் ஆய்வு செய்து வருகிறார்.

    மேலும், பல்வேறு உத்தரவுகளையும் கவர்னர் பிறப்பித்து வருகிறார். கவர்னரின் இந்த நடவடிக்கை தவறு என்று பலமுறை எடுத்து கூறியும் தொடர்ந்து அதனை செய்து வருகிறார்.

    சமீபத்தில் கவர்னர் தனது அலுவலகத்தை தேர்வு மையமாகவும் மாற்றி உள்ளார். சமூகநலத்துறை அலுவலக அதிகாரிகளை வரவழைத்து தேர்வு நடத்தி உள்ளார். அரசு ஊழியர்களுக்கு தேர்வு நடத்த தனி அமைப்பு ஏற்கனவே உள்ளது.

    கவர்னர் இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு என்ன செய்ய போகிறார்? அதிகாரிகளுக்கு கவர்னர் சான்றிதழ் அளித்தாலும் அது செல்லாது. அரசு அதிகாரிகளுக்கு தேர்வு நடத்தி இருப்பது அதிகார உச்சகட்டம்.

    தொடர்ந்து பல ஆண்டுகளாக பொங்கல் பரிசு அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்திலும் அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு புதுவை அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்க அரசு சார்பில் கோப்பு கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் கவர்னர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும், அந்தியோஜனா திட்டத்தின் கீழ் மட்டும் பொங்கல் பரிசு வழங்கும் படி கோப்பை திருப்பி அனுப்பி உள்ளார்.

    மீண்டும் கவர்னருக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று கோப்பு அனுப்ப உள்ளோம்.

    மில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்த கோப்பை கவர்னருக்கு அனுப்பினோம். ஆனால், கவர்னர் அந்த கோப்பையும் திருப்பி அனுப்பி விட்டார்

    அதனால் வருகிற 2-ந் தேதி அமைச்சரவையை கூட்டி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக விவாதித்து மீண்டும் கோப்புகளை அனுப்ப உள்ளோம்.

    புதுவை மதசார்பற்ற கட்சிகளின் சார்பில் வருகிற 4-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மாநில அந்தஸ்து கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 21 கட்சிகள் பங்கேற்க உள்ளன. அகில இந்திய தலைவர்களுக்கு அந்த போராட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    பேட்டியின்போது முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

    ×