search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனநாயகம்"

    ஜனநாயகத்தை வலியுறுத்தும் ‘சாவி’ என்னும் கவிதையை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எழுதியுள்ளார். #MamataBanerjee #Key
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நடைபெற இருக்கும் தேர்தலில் பிரமாண்ட எதிர்க்கட்சி கூட்டணியை அமைத்து வருகிறார். அவர் அரசியல்வாதியாக மட்டுமின்றி இதுவரை 80-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். ஒரு பாடல் உள்பட பல கவிதைகளும் எழுதியிருக்கிறார். அவர் டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் தர்ணாவில் பங்கேற்க புறப்படும் முன்பு 18 வரிகள் கொண்ட ஒரு கவிதையை சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.

    ஜனநாயகத்தை வலியுறுத்தும் ‘சாவி’ என்ற அந்த கவிதையில், “இன்றைய மத்திய அரசில் ஒவ்வொருவரின் உதடுகளும் எவ்வாறு பூட்டப்பட்டுள்ளது, எப்படி இந்த நடைமுறை ஜனநாயகத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. ஜனநாயகத்தை படுகொலை செய்யும் இந்த மனப்பான்மை ஒரு நாள் வெடிக்கும்” என்று கூறியுள்ளார். பல வரிகளில் பிரதமர் மோடியை தாக்கியுள்ளார். அவரது இந்த கவிதை சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது.  #MamataBanerjee #Key
    நமது ஜனநாயகமே நாட்டின் மிகப்பெரிய பலம். அதை எந்த விலை கொடுத்தாவது நாம் பாதுகாக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi
    புதுடெல்லி:

    இந்திய நாடாளுமன்ற செயல்பாடுகளை பார்வையிடுவதற்காக ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள் வந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள் ஒருமுறை இந்திய நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்தவாறு நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு இருந்தனர். வெளிநாட்டு எம்.பி.க்கள் முன்னிலையில் இப்படி கோஷமிடுகிறார்களே? இன்று ஒருநாளாவது அமைதியாக சபையை நடத்தியிருக்கக்கூடாதா? என்று எண்ணினேன்.

    பின்னர் ஆப்கானிஸ்தான் எம்.பி.க்கள் என்னை அலுவலகத்தில் வந்து சந்தித்தனர். அப்போது நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிக்காக அவர்களிடம் வருத்தம் தெரிவித்தேன். அப்போது ஒரு எம்.பி. அழத்தொடங்கினார். ஏன் என்று கேட்டபோது, உங்கள் நாடாளுமன்றத்தில் நடந்த இந்த வாதங்கள் எங்கள் நாட்டில் நடந்திருந்தால், அது துப்பாக்கியுடன்தான் நடந்தேறியிருக்கும் என்று சோகத்துடன் கூறினார்.

    நமது ஜனநாயகமே நாட்டின் மிகப்பெரிய பலம். அதை எந்த விலை கொடுத்தாவது நாம் பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு உள்ளார். 
    மாறுபட்ட கருத்து இருக்கக்கூடாது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். #Kamal #MakkalNeedhiMaiam
    கோயம்புத்தூர்:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், சமீபத்தில் கட்சியின் உள்கட்டமைப்பை மாற்றியமைத்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். அதன்பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

    இதற்கிடையே, இன்றும் நாளையும் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.  இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்ற அவர், பாராளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது என்றார்.

    இந்நிலையில், கோவையில் நடைபெற்ற பயிலரங்கத்தில் கமல் ஹாசன் கலந்து கொண்டார். பயிலரங்கம் முடிந்து விமான நிலையத்துக்கு வந்த கமல் ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



    மக்கள் நீதி மையம் பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பல வல்லுனர்கள் கலந்து கொண்டு வழிகாட்டினர். இதில் பங்கேற்றவர்கள் மீண்டும் இதுபோன்ற பயிலரங்கம் நடத்த வேண்டும் என்றனர்.

    அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்பது அவர்களின் ஜனநாயக உரிமை. கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். விமர்சனத்திற்கு தாக்குதல் தான் பதில் என்பது அரசியல் மாண்பல்ல. மாறுபட்ட கருத்து இருக்கக்கூடாது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.

    நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடைத்தேர்தலில் போட்டியில்லை என்பதால் அதை உன்னிப்பாக கவனிப்போம்.  நல்ல மாற்றத்திற்கு பெரிய வீச்சு தேவை. யாராக இருந்தாலும் நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #Kamal #MakkalNeedhiMaiam
    மத்தியில் பாஜக ஆட்சியில் வாழைப்பழ ஜனநாயகமாக மாறி வருகிறது இந்தியா என சிவசேனா கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. #Sivasena #Saamana #BananaRepublic
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நட்ந்து வருகிறது. அங்கு கூட்டணி கட்சியாக சிவசேனா இருந்து வருகிறது. ஆனாலும், இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு செயல்படும் விதத்தை சிவசேனா கடுமையாக தாக்கி வருகிறது.

    இந்நிலையில், மத்தியில் பாஜக ஆட்சியில் இந்தியா வாழைப்பழ ஜனநாயகமாக மாறி வருகிறது என சிவசேனா கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக, சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் கூறுகையில், இந்தியாவில் ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்து வருகிறது. தேசிய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி கவலைப்படாமல் பிசியாக உள்ளார். 

    எரிபொருள் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலையோ 100 ரூபாயை நெருங்குகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
      
    விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. உணவு பொருள்கள் , சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருகிறது. வேலை வாய்ப்பை உருவாக்கும் புதிய திட்டங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன என தெரிவித்துள்ளது. #Sivasena #Saamana #BananaRepublic
    சட்டசபையில் பலப்பரீட்சையை சந்திக்காமல் எடியூரப்பா ராஜினாமா செய்தது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்று மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூறினர். #ChandrababuNaidu #MamataBanerjee #Victory
    கொல்கத்தா:

    கர்நாடக சட்டசபையில் தனக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பலப்பரீட்சையை சந்திக்காமல் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார்.

    இதற்காக மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடாவுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.

    அவர் தனது சமூக ஊடக பதிவில், “ஜனநாயகம் வென்றது. கர்நாடகாவை வாழ்த்துகிறேன். தேவே கவுடா, குமாரசாமி, காங்கிரஸ் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள். இது பிராந்திய முன்னணிக்கு கிடைத்த வெற்றியாகும்” என்று குறிப்பட்டு உள்ளார்.



    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விஜயவாடா நகரில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா ஜனநாயக நெறிமுறைகளை மீறி செயல்பட்டது. கவர்னர் பதவி தவறாக பயன்படுத்தப்பட்டது. எடியூரப்பாவின் பதவி விலகல் மூலம் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டனர். இப்போது இந்தியா மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், “கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் கவர்னர் பதவி தவறாக பயன்படுத்தப்படுவது வருத்தமாக உள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் அமைப்பு முறையை பா.ஜனதா சீரழித்துவிட்டது. அதே முயற்சியை கர்நாடகாவிலும் கையாண்டது. முன்னேற்றம் அடைந்து வரும் மாநிலங்களை மத்திய அரசு பலவீனப்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் பா.ஜனதாவின் திட்டம் நிறைவேறி இருந்தால் அடுத்து ஆந்திராவைத்தான் குறி வைத்திருப்பார்கள்” என்றும் சாடினார்.

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில், “கர்நாடகாவில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பா.ஜனதா தோல்வியைத் தழுவி உள்ளது. குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றும் அவர்களின் அதிகார வெறி இதில் முழுமையாக வெளிப்பட்டு இருக்கிறது. ஆனால் இதிலிருந்து பா.ஜனதா எந்த பாடத்தையாவது கற்றுக் கொள்ளுமா?... ”என்று கூறி உள்ளார்.

    எடியூரப்பாவின் பதவி விலகல் மதச்சார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    அக்கட்சிக்கு இப்போதுதான் சரிவு தொடங்கி இருக்கிறது. ஒருங்கிணைந்து நின்றால் பா.ஜனதாவை வீழ்த்த முடியும் என்பதை மதச்சார்பற்ற சக்திகள் கர்நாடக அரசியல் பாடம் மூலம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  #ChandrababuNaidu #MamataBanerjee #Victory
    ×