என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கவுந்தப்பாடி"
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் நவரத்தினம் (வயது 65). ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை அலுவலர். இவரது மனைவி சாந்தா (55).
இவர்களின் மகன் தமிழ்செல்வன் (35) கோவை விமான நிலையத்தில் மேலாளராக வேலை பார்க்கிறார். இன்னொரு மகன் மாதேஸ்வரன் (34) பெங்களூரில் ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளனர்.
நவரத்தினம் கடந்த 8-ந் தேதி கோவையில் உள்ள மகனை பார்க்க சென்றார். பிறகு அங்கிருந்து தனது மகனை அழைத்து கொண்டு பெங்களூர் சென்றனர். 10-ந் தேதி கோவை வந்து அங்கு மகனுடன் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நவரத்தினம் வீட்டின் கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் புகுந்தனர். அவர்கள் பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் பணம் மற்றும் 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர். வீட்டில் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன.
இன்று நவரத்தினம் வீட்டின் கதவு திறந்து பொருட்கள் சிதறி கிடந்தது. இதை கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோவையில் உள்ள நவரத்தினத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. கோபி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பால முரளி சுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வாசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை டி.எஸ்.பி. ரஜனிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் சம்பவ இடத்துக்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
கவுந்தப்பாடி:
ஈரோட்டில் இருந்து அலுமினிய பீடிங் வேலை செய்யும் நாகராஜ் (வயது 50) என்பவர் சரத்குமார் (22) என்பவருடன் மொபட்டில் ஆப்பக்கூடலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
மொபட்டை நாகராஜ் ஓட்டினார். கவுந்தப்பாடி அருகே வளையக்காரபாளையம் குட்டை பக்கம் வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளும், நாகராஜ் ஓட்டி வந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வளையக்கார பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (35), நாகராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சரத்குமாருக்கு கால் முறிந்தது. ராமச்சந்திரனின் மகன் அருணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலனின்றி நாகராஜ், ராமச்சந்திரன் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து கவுந்தப்பாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்