search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாடுகள்"

    காதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் பாலசிவபிரசாத் கூறினார். #ValentineDay
    ஓசூர்:

    ஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் பாலசிவபிரசாத் கூறியதாவது:-

    நடப்பு ஆண்டு காதலர் தினத்துக்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஜப்பான் உள்பட 12 நாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் வரை ஏற்றுமதி செய்து விட்டோம். கடந்த ஆண்டு ஒரு ரோஜா, 10 ரூபாயில் இருந்து 13 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்பட்டது.

    நடப்பு ஆண்டு, ரோஜாவுக்கு கூடுதல் விலை கிடைத்தது. ஒரு ரோஜா 16 ரூபாயில் இருந்து 17 ரூபாய் வரை ஏற்றுமதியாகி உள்ளது. உள்ளூர் சந்தையில் 20 ரோஜாக்கள் கொண்ட ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ValentineDay

    வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு வாழ் கேரள மக்களிடம் நிதி திரட்டும் யோசனையை கைவிட வேண்டும் என அரசுக்கு கேரள மாநில காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. #KeralaFlood #KVThomas
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் 483 பேர் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும் பலர் தங்கள் வீடு, உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

    கேரள மாநிலத்தின் இந்த நூறாண்டு காணாத மிகப்பெரிய துயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும், பன்மொழி பேசும் மக்களும் பங்கெடுத்தனர். அவர்கள் அழித்த நிவாரணத்தொகை மட்டும் ஆயிரம் கோடியை எட்டியது. மேலும், பல கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களும் கேரளாவுக்கு வழங்கப்பட்டது.



    இந்த கனமழையால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சேதத்தை சரிசெய்ய நிதி திரட்டும் முனைப்பில் தற்போது கேரள அரசு உள்ளது. முன்னதாக கேரள மாநிலத்துக்கு நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் அளிக்க முன்வந்தது. ஆனால் அதை மத்திய அரசு வாங்க மறுத்துவிட்டது.

    இதையடுத்து, கேரளாவில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய வெளிநாடுகளிடமும், வெளிநாட்டு வாழ் கேரள மக்களிடமும் நிதி திரட்ட கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு வெளிநாடுகளுக்கு சென்று நிதி திரட்டும் என தெரிவிக்கப்பட்டது.



    இந்நிலையில், அரசின் இந்த முடிவை கைவிடுமாறு கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.வி. தாமஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், வெளிநாடுகளுக்கு அமைச்சர்களை அனுப்பி கையேந்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனவும், இதனால், இந்தியா மற்றும் கேரள மக்களின் சுயமரியாதை பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், கேரள மந்திரிகள் நிதி திரட்டுவதாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை கைவிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைந்து புணரமைக்க பாடுபட வேண்டும் என கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்மந்திரி உம்மன்சாண்டி கூறியுள்ளார். #KeralaFlood #KVThomas
    ஆசிய பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் அதிகளவிலான பணத்தை தாய் நாட்டிற்கு அனுப்பியவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. #LargestRemittanceCountryList
    நியூயார்க்:

    வெளிநாடுகளில் வேலை செய்யும் ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளை சேர்ந்தவர்களில் இந்தியர்கள் தான் அதிகளவிலான பணத்தை தாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ரெமிட்ஸ்கோப் நிறுவனம் கூறியுள்ளது. சுமார் 256 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை கடந்த ஆண்டு மட்டும் ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்கள் தாய் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களில் சுமார் 69 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு கடந்த ஆண்டு அனுப்பி வைத்ததன் மூலம் அதிகளவிலான பணத்தை தாயகத்திற்கு அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

    இதற்கு அடுத்ததாக சீனா 64 பில்லியன் அமெரிக்க டாலர், பில்லிப்பைன்ஸ் 33 பில்லியன் அமெரிக்க டாலர் பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் முறையே 10 பில்லியன் அமெரிக்க டாலர், 14 பில்லியன் அமெரிக்க டாலர் என அவரவர் தாய் நாட்டிற்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளனர். மொத்த தொகையான 256 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தில் வளைகுடா நாடுகள் 32 % வட அமெரிக்கா 26% ஐரோப்பா 12 % என மொத்தம் 70 % பணம் இந்த மூன்று பகுதிகளில் இருந்து மட்டும் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் மூலமாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த நாடுகளுக்கு வந்தடைந்துள்ளது.

    ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வசிக்கும் 4 பில்லியன் மக்களில் 10 பேரில் ஒருவர் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் நபராகவோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தின் மூலம் உதவி பெரும் நபராகவோ உள்ளார். வெளிநாடுகளில் வேலை செய்பர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் பணத்தின் பெரும் பகுதி கிராமப்புற பகுதிகளுக்கு செல்கின்றன ரெலிட்ஸ்கோப் நிறுவனம் தெரிவித்துள்ளது. #LargestRemittanceCountryList
    ×