search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துன்புறுத்தல்"

    ராமநாதபுரம் அருகே கடனை கேட்டு துன்புறுத்தியதால் பா.ஜனதா நிர்வாகி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகேயுள்ள காருகுடியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டி (வயது42). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் பா.ஜனதா கட்சியின், முன்னாள் ஒன்றிய பொதுச் செயலாளராக இருந்தவர். கடந்த சில நாட்களாக கடன் தொல்லையால் மன உளைச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் காருகுடி தென்னந்தோப்பு பகுதியில் வேப்ப மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். அவர், ‘‘நான் பணப்பிரச்சினையால் கடன் வாங்கியிருந்தேன். என்னை அடித்து அவமானப்படுத்தியதால் மன வேதனையடைந்தேன். என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.

    அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் அவர்களிடம் சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இது குறித்து அவரது மனைவி சாந்தி கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டிய லாரி உரிமையாளர் பக்ருதீன், கலீல் மற்றும் சிலர் மீது பஜார் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படப்பிடிப்பு தளங்களில் நடிகர்கள் மூலமாக பாலியல் அல்லாத வேறுவிதமான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக கங்கனா ரணாவத் குற்றம்சாட்டியுள்ளார். #KanganaRanaut #Manikarnika
    `மீடூ' புகார்கள் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரை பிரபலங்கள் பலரும் பாலியல் பிரச்சனையில் சிக்கினர்.

    கங்கனா ரணாவத் நடித்த குயின் என்ற இந்தி திரைப்படத்தின் இயக்குநர் விகாஷ் பஹால் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டினை கூறினார். இதில் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத் அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேசினார்.

    சமீப காலங்களில் ரணாவத்தின் படங்கள் வெளியாகும் பொழுது, சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜான்சி ராணி கதையை அடிப்படையாக கொண்ட `மணிகர்னிகா' படத்தில் கங்கனா நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 25ந் தேதி திரைக்கு வருகிறது.

    இந்த நிலையில், அவர் தனக்கு நேர்ந்த பாலியல் சாராத துன்புறுத்தல்களை பற்றி தெரிவித்து உள்ளார். அவர் கூறும்பொழுது, துன்புறுத்தல்கள் பல மட்டங்களில் நடைபெறுகிறது. என்னுடைய பணியில் பல நடிகர்களிடம் இருந்து இதுபோன்ற துன்புறுத்தல்களை நான் சந்தித்துள்ளேன்.



    நான் படப்பிடிப்பு தளங்களில் பலமுறை, பாலியல் துன்புறுத்தல்களை சந்திக்கவில்லை. ஆனால் வேறு விதங்களில் துன்புறுத்தப்பட்டேன். சில நடிகர்கள் ஈகோவுடன் செயல்பட்டனர். அவை மீடூவின் கீழ் வராது. ஆனால் அவை துன்புறுத்தல்களே.

    இவற்றில் படப்பிடிப்பு தளத்தில் 6 மணிநேரத்திற்கு மேல் காக்க வைப்பது, தவறான நேரத்தில் படப்பிடிப்புக்கு அழைத்து விட்டு நிற்க வைப்பது, தேதிகளை எப்பொழுதும் தவறாக கொடுத்து அதனால் சந்தர்ப்பங்களை தவற செய்ய விடுவது, இதுபோன்ற நடிகர்கள் கடைசி நிமிடத்தில் படப்பிடிப்பினை ரத்து செய்வது ஆகியவை சில.

    இதேபோன்று பட விழாக்களுக்கு அழைக்காமல் விட்டு விடுவது, என்னை அழைக்காமல் பட டிரெய்லரை வெளியிடுவது, என்னிடம் சொல்ல கூட இல்லாமல் வேறு சிலரை டிப்பிங் பேச வைப்பது என துன்புறுத்தல்கள் தொடர்ந்துள்ளன என்று தெரிவித்து உள்ளார். #KanganaRanaut #Manikarnika

    பேய் விரட்டும் சடங்கு என்ற பெயரில் யாரையாவது துன்புறுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
    சென்னை:

    தர்மபுரியை சேர்ந்தவர்கள் சின்னபொண்ணு, சுசீலா, முத்தாயி, விஜயா. இவர்கள், தங்களுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்டேஷ் விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    சின்னபொண்ணு தன் மகனின் மனைவிக்கு (மருமகளுக்கு) பேய் பிடித்துள்ளது என்று கூறி கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி தங்கள் ஊருக்கு அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அவருடன், அவரது மகள்கள் சுசீலா, முத்தாயி, விஜயா உள்பட 15 பேர் சென்றுள்ளனர்.

    கோவிலில் வைத்து, அந்த பெண்ணின் ஆடைகளை களைந்துள்ளனர். தலைமுடியை வழித்து மொட்டை போட்டுள்ளனர். பின்னர், தீயில் பழுக்க காய்ந்த ஊசியை, அந்த பெண்ணின் நாக்கில் வைத்து சுட்டுள்ளனர்.

    பேய் விரட்டுகிறோம் என்ற பெயரில் இதுபோன்ற சடங்குகளை நடத்தி, ஒருவரை துன்புறுத்த யாருக்கும் உரிமை கிடையாது. ஆண்டாண்டு காலமாக இதுபோன்ற சடங்குகளை நடத்துகிறோம் என்று கூறி, இதுபோன்று கொடூரமாக துன்புறுத்துவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

    சடங்கு என்ற பெயரில் ஒருவரது கண்ணியத்தை சிதைப்பது, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனிதாபிமானமற்ற செயல்களை ஜீரணிக்க முடியாது.

    இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்து தர்மபுரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தண்டனையை மாவட்ட செசன்சு கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.

    அதேநேரம், இந்த சம்பவம் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. தண்டனை பெற்றவர்களுக்கு வயதாகிவிட்டது. எனவே, இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மாற்றி அமைக்கிறேன்.

    ஒரு ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்கிறேன். அதற்கு பதில், இந்த வழக்கில் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தையே தண்டனை காலமாக மாற்றுகிறேன். இதை தவிர, மனுதாரர்கள் 4 பேரும் தலா ரூ.15 ஆயிரத்தை தர்மபுரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் செலுத்த வேண்டும். இந்த தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
    ×