search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐதராபாத்"

    • யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
    • இதுபோன்ற வீடியோவினால் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.




    இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி

    பழைய ஹைதராபாத்தில் உள்ள சித்தியம்பர் பஜார் சந்திப்பு அருகே நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் பாஜக வேட்பாளர் மாதவி லதா பங்கேற்று, திறந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மாதவி லதா, அங்குள்ள மசூதியை நோக்கி வில்-அம்பு ஏவுவது போன்ற செய்கை செய்தார். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்தன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.




    இந்நிலையில் பாஜக வேட்பாளர் மாதவி லதா மாதவி லதா கூறியதாவது :-

    'எனது வீடியோ சமூக ஊடகங்களில் பரவுவது எனது கவனத்திற்கு வந்தது. இது முழுமையடையாத வீடியோ மற்றும் யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த வில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுபோன்ற வீடியோவினால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    நேற்று, ராம நவமியின் போது, நான் வானத்தை நோக்கி ஒரு (கற்பனை) அம்பு எய்ததாக சைகை செய்து கொண்டிருந்தேன். அந்த அம்பை ஒரு கட்டிடத்தை நோக்கி எய்தேன், அப்போது மசூதி அங்கிருந்தது தெரியாது" என கூறி உள்ளார்.

    • இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பிளவை உருவாக்க சதி நடக்கிறது
    • பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

    1984-ம் ஆண்டு முதல், ஹைதராபாத் தொகுதி ஏஐஎம்ஐஎம் வசம் உள்ளது. முதலில் சுல்தான் சலாவுதீன் ஓவைசி பின்னர் 2004 முதல் அவரது மகன் அசாதுதீன் ஒவைசி என 40 வருடங்களாக ஓவைசிகளின் குடும்ப கோட்டையாக ஹைதராபாத் உள்ளது.

    நான்கு முறை எம்.பி-யாக இருந்த அசாதுதீன் ஒவைசி, 2019-ல் பாஜகவின் பகவந்த் ராவை 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த முறை அவருக்குப் போட்டியாக தொகுதியில் செல்வாக்கான மாதவி லதா நிறுத்தப்பட்டுள்ளார்.




    இந்நிலையில் பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரை இன்று நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி நடநத ராமநவமி கொண்டாட்டத்தின் போது

    ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா, மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவது போன்ற செய்கை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.



    பாஜக வேட்பாளரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மாதவி லதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்நிலையில் ராஜா சிங்கின் ராம நவமி ஷோபா யாத்திரைக்கு அனுமதி மறுத்த தெலுங்கானா அரசை மாதவி லதா கடுமையாக கண்டித்து உள்ளார்.

    இது குறித்து மாதவி லதா கூறியதாவது :-



    "சமீபத்தில் ரம்ஜான் கொண்டாட்டங்களுக்கு போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஷோபா யாத்திரைக்கு அனுமதி மறுத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின் போது தான் ரம்ஜான் கொண்டாட்டம் இருந்தது.

    தற்போது ராஜா சிங்கிற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை. அவர் நீண்ட காலமாக ராம நவமி ஷோபா யாத்திரை நடத்தி வருகிறார். தற்போது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பிளவை உருவாக்க சதி நடக்கிறது " என  அவர் கூறினார்.

    • அகமது தான் காரை ஓட்டி பார்க்க விரும்புவதாக தெரிவித்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நார்சிங் பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ். தொழிலதிபரான இவர் ரூ.4 கோடி மதிப்பிலான ஸ்போர்ட்ஸ் கார் வைத்துள்ளார்.

    இவர் அகமது என்பவரிடம் 1 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நீரஜ் தனது ஸ்போர்ட்ஸ் காரை விற்பனை செய்ய முடிவு செய்தார். இது தொடர்பாக அவரது நண்பர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து நீரஜின் நண்பரான அமன் என்பவர் கார் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார்.

    இதனை கண்ட அகமது அது நீரஜ்ஜின் கார் என்பதை தெரிந்து கொண்டார். உடனடியாக அமனை தொடர்பு கொண்டு நான் காரை வாங்க விரும்புகிறேன்.

    மாமிட் பள்ளி கிராமத்தில் உள்ள என்னுடைய பண்ணை வீட்டிற்கு காரை கொண்டு வருமாறு கூறினார். அதன்படி அமன் காரை சம்பவ இடத்திற்கு கொண்டு சென்றார்.

    அப்போது அகமது தான் காரை ஓட்டி பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். காரை அங்குள்ள சாலைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அகமது தனக்கு நீரஜ் 1 கோடி ரூபாய் கடன் தர வேண்டும். அவர் இருக்கும் இடத்தை தெரிவிக்கும்படி கேட்டார். இதனால் அமனுக்கும் அகமதுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த அகமது காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் கார் முழுவதும் பற்றி எரிந்து நாசமானது. ஒரு கோடி ரூபாய் கடனுக்காக 4 கோடி ரூபாய் மதிப்பிலான கார் எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து பஹடி ஷரீப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா.ஜ.க. மூத்த தலைவர்களே பிரசாரத்தில் களம் இறங்கி வருகின்றனர்.
    • பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் ராஜ்பவனில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.

    இதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர்களே பிரசாரத்தில் களம் இறங்கி வருகின்றனர்.

    தென் மாநிலங்களில் மோடி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இன்று ஒரே நாளில் கேரளா, தமிழகம், தெலுங்கானா மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார்.

    பிரதமர் மோடி கேரளா, நாகர்கோவில் பொதுகூட்டங்களுக்கு பிறகு தெலுங்கானா செல்கிறார். இன்று மாலை 4.30 மணி அளவில் சிறப்பு விமானம் மூலம் தெலுங்கானா பேகம் பேட் விமான நிலையத்திற்கு வருகிறார்.


    இதையடுத்து மாலை 5 மணிக்கு மல்காஜ் கிரி, செகந்திராபாத் மற்றும் ஐதராபாத் தொகுதிகளை உள்ளடக்கிய மிர்ஜல குடாவில் தொடங்கி மல்காஜ்கிரி சதுக்கம் வரை 1.3 கிலோ மீட்டர் தூரம் ஒரு மணி நேரம் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகளை பா.ஜ.க. தலைவர்கள் செய்துள்ளனர்.

    இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் ராஜ்பவனில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை காலை 11 மணிக்கு மகபூப் நகர், நாகர் கர்னூல், நல்கொண்டா தொகுதிகளை உள்ளடக்கிய நாகர் கர்னூலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் குல்பர்கா புறப்பட்டு செல்கிறார்.

    வரும் 18-ந் தேதி மீண்டும் தெலுங்கானா வரும் பிரதமர் மோடி கரீம் நகர், நிஜமாபாத், அடிலாபாத் தொகுதிகளை உள்ளடக்கிய ஜகிர் தாலாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். குறிப்பிடத்தக்கது.

    • உடலை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
    • வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

    உக்ரைனுக்கு எதிராக ரஷியா சார்பில் போரில் ஈடுபட்ட இந்தியர் உயிரிழந்தார். இதனை ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ரஷியா - உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியர், ஐதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான் ஆவார். ஆனால், அவர் எதற்காக ரஷியா சென்றார், அங்கு அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    "இந்தியர் ஸ்ரீ முகமது அஸ்ஃபான் என்பவர் உயிரிழந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் ரஷிய அதிகாரிகள் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டிருக்கிறோம். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று ரஷியாவுக்கான இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.



    அதிக சம்பளம் கிடைக்கும் என கூறி வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்ட இந்தியர்களில் ஒருவர் அஸ்ஃபான் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். அஸ்ஃபான் உயிரிழந்த தகவல் அவர்களுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் அசாதுதீன் ஒவைசி மூலமாக தெரிந்து கொண்டதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஒவைசி வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பலர் இந்த விவகாரம் தொடர்பாக ஏமாற்றப்பட்டுள்ளனர். ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு வேலை கொடுக்காமல் போரில் பங்கேற்க கட்டாயப்படுத்துகின்றனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    ஒவைசி எழுதிய கடிதத்திற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவு துறை அமைச்சகம், ரஷியாவில் சிக்கி தவிக்கும் 20 இந்தியர்கள் உதவி கோரியுள்ளதாகவும், அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. துபாயை சேர்ந்த ஃபைசல் கான் என்பவரே இந்தியர்களை அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும் என கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

    • கோவாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாவண்யா போதை பொருள் கடத்தி வந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது.

    தெலுங்கானா மாநிலம், சைபராபாத் அடுத்த கோகா பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் லாவண்யா என்கிற அன்விதா ( வயது 33). இவர் தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் லாவண்யா கோவாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வருவதாக மடப்பூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் லாவண்யாவை கண்காணித்து வந்தனர். அப்போது லாவண்யா போதை பொருள் கடத்தி வந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் நர்சிங் போலீசார் இணைந்து லாவண்யாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து விலை உயர்ந்த எம்.டி.எம்.ஏ எனப்படும் 4 கிராம் எடையுள்ள போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். லாவண்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    அதே குடியிருப்பில் வசித்து வரும் நடிகர் ஒருவருடன் லாவண்யாவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. அந்த நடிகருக்காக லாவண்யா கோவாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. லாவண்யாவுக்கு போதைப் பொருள் சப்ளை செய்த ஒருவர் அவரது காதலியுடன் தலைமறைவாகி உள்ளார். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 

    • சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் அதிக ரெயில்களை இயக்க வேண்டும்.
    • விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், கூடுதல் மேலாளர் மல்லையா, முதன்மை ரெயில்வே இயக்குநர் நீனு ஆகியோரை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து மனு அளித்தார்.

    குமரி, நெல்லை, விருது நகர், மதுரை போன்ற தென்மாவட்ட மக்கள் கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம், உறவுகளை சந்திப்பது மற்றும் சுற்றுலா சம்மந்தமாக அதிக அளவில் மக்கள் சென்னை, கன்னியாகுமரி வழித்தடத்தில் பயணிப்ப தால், போதிய ரெயில்கள் இல்லா ததால் மக்கள் கார்களி லும், பேருந்துகளிலும் சென்று பெரும் சிரமம் அடைவதோடும் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் அதிக பண விரயம் ஏற்படும். எனவே சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில் அதிக ரெயில் களை இயக்க வேண்டும்.

    ஐதராபாத்-தாம்பரம் சார்மினார் ரெயிலை கன்னி யாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இதனால் தென் மாவட்டங்களில் வசித்து வரும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மக்களுக்காகவும் தமிழக தென் மாவட் டங்களில் வசிக்கும் மக்களுக்கும் ஐதராபாத் சென்று வர நேரடி ரெயில் சேவை முக்கியமானது எனவே ஐதராபாத்-தாம்பரம் ரெயிலை கன்னி யாகுமரி வரை நீட்டிக்க வலியுறுத்தினார்.

    தஞ்சை பெரிய கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் போன்ற மும்மத சுற்றுலாத் தலங்கள் செல்வதற்கு திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக் குடி, கன்னியாகுமரி வழித்த டத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை திருவனந்தபுரம்-வேளாங் கண்ணி மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணியளவில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கள் காலை திருவனந்தபுரம் வந்து சேரும்படி இயக்க வலியுறுத்தினார். அதற்கு ஏதுவாக சென்னை சென்ட்ரல் நாகர்கோவில் ரெயிலை, திருவனந்தபுரம் வரை நீட்டிக்க வேண்டும். வாரத்தில் மூன்று நாள் இயக்கப்படும் தாம்பரம்-நாகர்கோவில் இரவு நேர இரயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.

    கொரோனா காலத்திற்கு முன்பாக பயணிகள் ரெயிலாக இயக்கப்பட்ட மதுரை - புனலூர் ரெயில் தற்போது விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பாக பள்ளியாடி, குழித்துறை மேற்கு, ஆரல்வாய்மொழி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சென்றதை சுட்டிக் காட்டி மக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் இந்த ரெயில் நிலையங்களில் மதுரை-புனலூர் விரைவு வண்டி நின்று செல்ல வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இதனை கேட்ட தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மேற்குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மதுரை - புனலூர் விரைவு ரெயில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார். மேலும் அனந்தபுரி மற்றும் நாகர்கோவில்- மும்பை விரைவு ரெயில்களின் நிறுத்தங்களை குறைக்கா மல் அதிவிரைவு ரெயிலாக மாற்றி இயக்கவும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தார்.

    கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் மேம்படுத்தி, அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டுமென்றும் கூறி னார்.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் மக்கள் ரெயில் தண்ட வாளங்களை கடந்து செல்ல ஏதுவாக மேம்பாலங்கள் அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தினார். குறிப்பாக கப்பியறை பஞ்சாயத்து, பள்ளியாடி அருகில் இணைப்பு பாலம் குழித்துறை மேம்பாலம், நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தின் அருகில் ஊட்டால் மொடு ரெயில்வே கிராஸிங்கில் மேம்பாலம் மற்றும் குழித்துறை மேற்கு கடந்தான் கோடு இணைப்பு பாலமும் உடனடியாக அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    கோரிக்கையின் மீது தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    ஐதராபாத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் வகையில் ரோபோ கிச்சன் எனும் பெயரில் ஹோட்டல் ஒன்று ரோபோட்களை கொண்டு செயல்படுகின்றது. #HyderabadRoboKitchen
    ஐதராபாத்:

    தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அன்றாடம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன. அந்த வகையில் ஐதராபாத்தில் ரோபோட்களைக் கொண்டு உணவு பரிமாறும் வகையில் ஹோட்டல் ஒன்று செயல்படுகின்றது.

    ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ‘ரோபோ கிச்சன்’ எனும் ஹோட்டல் உள்ளது. இங்கு உணவு பரிமாற ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான மெனு கார்டுக்கு பதிலாக டேப் ஒன்று கொடுக்கப்படும். அதில் உணவு வகைகள் மெனு போல் இருக்கும். அதில் தேவையான உணவை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் இந்த ஆர்டர் நடமாடும் ரோபோட் மூலம்  கிச்சனுக்கு  கொண்டு செல்லப்படும். கிச்சனில் இருந்து உணவு தயாரானதும் அவைகளை இந்த ரோபோட்களே பரிமாறும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.



    இந்த ஹோட்டலில் தற்போது 4 ரோபோட்கள் பயன்பாட்டிற்காக இயங்கி வருகின்றது. இவற்றிற்கு ‘அழகிய சேவை ரோபோட்கள்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு இந்த ரோபோட்களுக்கு 3 மணி நேரம் சார்ஜ் போடப்படுகிறது.

    சென்னையில் உள்ளதைப் போன்று ஐதராபாத்தில் ரோபோ கிச்சனை கொண்டு வர விரும்பியதாகவும், தற்போது ஐதராபாத்தில்  வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் ரோபோ கிச்சனின் உரிமையாளர்களில் ஒருவரான மணிகாந்த் கூறினார். #HyderabadRoboKitchen 
    குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக தனது 3 வயது மகனை ஆட்டோ மீது தூக்கி அடித்த தந்தையில் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே வசிக்கும் நபர் ஒருவர் நேற்று குடிபோதையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 3 வயது மகனை அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது வேகமாக தூக்கி அடித்தார். மேலும், தலைகீழாக சிறுவனை பிடித்த நிலையில், தனது மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்.

    இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர தந்தைக்கு எதிராக புகாரளிக்க மனைவி மறுத்து விட்டதாகவும், போலீசார் தாமாக முன்வந்து சிறார் வன்கொடுமை சட்டத்தில் தந்தை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    குற்றவாளி தலைமறைவாகிவிட்டதாகவும், குழந்தை தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 4 பேரை ஐதராபாத் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளது. #IPLbetting
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஐபிஎல் போட்டிகளை வைத்து கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இரண்டு இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அதில், இணையதளத்தை பயன்படுத்தி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து ஐந்து செல்போனகள், ஒரு டி.வி மற்றும் ரூ.84,350 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் நான்கு பேர் மீதும் இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #IPLbetting
    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளியிலிருந்து தப்பிச்சென்ற 15 சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #SaidabadJuvenileHome
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சைதாபாத் பகுதியில் மாநில அரசால் நடத்தப்படும் சிறார் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் 18 வயதிற்கு உள்ள கீழ் தவறு செய்த சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காப்பகத்தில் இருந்து 15 சிறுவர்கள் தப்பிச்சென்றது சிசிடிவி-யில் பதிவானது. 14-17 வயதுடைய அந்த சிறுவர்கள் இரவில் வெண்டிலேட்டர் துளை வழியாக வெளியே வந்து சுவரில் ஏறி குதித்து சென்றனர். இவர்கள் ஏராளமான குற்றங்களை செய்துள்ளனர். அதில் ஒரு சிறுவனை தப்பிக்க முயன்ற போது போலீசார் பிடித்தனர்.

    இதையடுத்து, காப்பகத்தின் மேற்பார்வையாளர் மற்றும் இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிசிடிவி கேமரா பதிவை வைத்து சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #SaidabadJuvenileHome
    ஐபிஎல் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை - ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. #IPL2018 #MIvRR #CSKvSRH
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டன. ஐதராபாத் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் சென்னை அணி பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளன. டெல்லி, பெங்களூர் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேற உள்ளன.

    மும்பை, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே பிளேஆப் சுற்றுக்கு செல்வது யார் என்பது? முடிவு செய்ய முடியாத ஒன்றாகவே உள்ளது. அடியில் கிடந்த மும்பை அணி எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.



    கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளும் பிளேஆப் சுற்றுக்குள் நுழைவதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், மும்பை - ராஜஸ்தான் அணிகள் இன்று 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இரு அணிகளும் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன்ரேட்டில் சிறப்பாக இருப்பதால் மும்பை 5-வது இடத்திலும், ராஜஸ்தான் 6-வது இடத்திலும் உள்ளன.

    பிளேஆப் வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. வெற்றி பெறும் அணி தொடர்ந்து வாய்ப்பில் நீடிக்கும். தோற்கும் அணிக்கு வாய்ப்பு குறையும். இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று இருந்தது.

    4 மணிக்கு புனேவில் நடக்கும் மற்றொரு போட்டியில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பை பெற எஞ்சிய 3 ஆட்டத்தில் ஒன்றில் வெல்ல வேண்டும். ஐதராபாத் அணி பலம் பொருந்தியதாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது. தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று வலுவானதாக திகழும் அந்த அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் தடுத்து நிறுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் 8-வது வெற்றியை பெற்று பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் நம்பிக்கையுடன் இருக்கிறது. சென்னை அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. ஆனால் பந்து வீச்சுத்தான் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது.

    பேட்டிங்கில் கேப்டன் டோனி, அம்பதி ராயுடு, வாட்சன், ரெய்னா ஆகியோர் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளனர். பந்துவீச்சு அபாரமாக அமைந்தால் தான் ஐதராபாத்தை வீழ்த்த இயலும். கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் பவுலர்கள் மீது டோனி அதிருப்தி அடைந்தனர். இதனால் இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 வெற்றி, 2 தோல்வி யுடன் 18 புள்ளிகள் பெற்று ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி விட்டது. தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்துடனும் பதிலடி கொடுக்கும் வேட்கையுடனும் அந்த அணி உள்ளது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் ஐதராபாத் அணி திகழ்கிறது கேப்டன் வில்லியம்சன், தவான், யூசுப்பதான், மனிஷ் பாண்டே ஆகியோர் பேட்டிங்கிலும், ரஷித்கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த், கவுல் ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல
    நிலையில் உள்ளனர். சகீப் அல்-ஹசன் ஆல் ரவுண்டரில் முத்திரை பதித்து வருகிறார்கள்.

    இரு அணிகளும் 7 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் சென்னை -5ல், ஐதராபாத்-2ல் வெற்றி பெற்றுள்ளன.
    ×