search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • குளச்சல் பகுதியில் கடந்த 3 நாட்களாக தீவிர வாகன சோதனை நடத்தினர்.
    • ஜனவரி மாதம் முதல் சுமார் 100 வழக்குகள் பதிவு

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பி ரசாத் உத்தரவின் பேரில், குளச்சல் டி.எஸ்.பி. தங்க ராமன் மேற்பார்வையில் குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர் சிதம்பரதாணு, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பால செல்வன் மற்றும் போக்குவரத்து போலீசார் குளச்சல் பகுதியில் கடந்த 3 நாட்களாக தீவிர வாகன சோதனை நடத்தினர்.

    சோதனையின்போது குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட லாரி, கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்ட ஓட்டு நர்களுக்கு குடிபோதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகன ஓட்டுநர்கள் நேற்று இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அதில் மது போதையில் செல்போன் பேசிக்கொண்டு லாரி ஓட்டிய நபருக்கு ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், குடிபோதையில் கார் ஓட்டி வந்தவருக்கு ரூ.17 ஆயிரம் அபராதமும், குடிபோதையில் ஆட்டோ மற்றும் பைக் ஓட்டி வந்தவர்களுக்கு தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டு, மொத்தம் ரூ.57,500 அபராதமாக கோர்ட்டில் செலுத்தப்பட் டுள்ளது.

    சாலை விபத்துக்களை தடுப்பதற்காக குளச்சல் போக்குவரத்து போலீசார் கடந்த ஜனவரி மாதம் முதல் சுமார் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    குமரி மாவட்டத்தில் தொடரும் சோதனை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட் டத்தில் அதிக பாரம் ஏற்றிய அல்லது அனுமதி இல்லாமல் கொண்டு வரப்படுகின்ற கனிம பொருட்களை கண் காணித்து அபராதம் விதிப்பது தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக் கப்பட்டு வருகிறது.

    இந்த குழு விதிகளை மீறி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து வரு கிறது. மேலும் 9 வாகனங்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரையில் இந்த குழு நடத்திய சோதனையில், 6 வாகனங்கள் கைப்பற் றப்பட்டு, அந்த வாகனங் களுக்கு ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் வட்டார போக்குவரத்து அலுவல ரால் விதிக்கப்பட்டு உள்ள தாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் சில வாக னங்களை சாலை யோரம் நிறுத்திவிட்டு டிரை வர்கள் தப்பியோடி விடு கின்றனர். சில வாக னங்களை நேரம் தவறி இயக்குவதாகவும் தெரி கிறது. அத்தகைய வாகன உரிமையாளர்களின் உரி மங்கள் ரத்து செய்ய நட வடிக்கை எடுக்கப்படு வதுடன் அத்தகைய வாகனங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது தெரிய வரும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது.
    • உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 28-ந் தேதி ஒரு திருமண வரவேற்பு நடந்தது.

    இதில் சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது. மணமகள் வீட்டார் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையுடன் குவார்ட்டர் மதுபாட்டில் விநியோகம் செய்யப்பட்டது. திருமண வரவேற்பில் பங்கேற்ற பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மது விநியோகம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து பொது இடத்தில் மது விநியோகம் செய்ததாக கலால்துறையினர் மணமகள் வீட்டார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது. இதன்பேரில் மதுபானம் விற்ற கடை உரிமையாளர், மண்டப உரிமையாளர், மணமகள் உறவினர் ராஜ்குமார் ஆகியோருக்கு மொத்தமாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கையை கலால்துறை துணை ஆணையர் குமரன் எடுத்துள்ளார்.

    • ஹோட்டல்கள் தாபாக்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்துதல் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.
    • சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் பானு சுஜாதா மேற்பார்வையில் பாலக்கோடு காரிமங்கலம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் உணவு பாதுகாப்பு துறை பணியாளர்கள் காரிமங்கலம், மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள குளிர்பான கடைகள், மளிகை கடைகள் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மாட்லாம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரியில் காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் மற்றும் தேதி குறிப்பிடப்படாத தண்ணீர் கேன்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் இது தொடர்பாக இரண்டு கடைகளுக்கு தலா 1000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் ஹோட்டல்கள் தாபாக்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் பயன்படுத்துதல் கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் அகரம் பிரிவு சாலையில் செயல்படும் மாங்காய் மண்டிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு அழுகக்கூடிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் மேற்கொள்ள வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    • ராஜேஷ் விஸ்வாசை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
    • அபராத தொகையை 10 நாட்களுக்குள் நீர்வளத்துறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராய்ப்பூர் :

    சத்தீஸ்கர் மாநிலத்தில் அணைக்கட்டில் தவறிவிழுந்த தனது செல்போனை மீட்க ராஜேஷ் விஸ்வாஸ் என்ற உணவுப்பொருள் ஆய்வாளர் அணை நீரை 'காலி' செய்த சம்பவம் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அதிகாரி ராஜேஷ் விஸ்வாசை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    அவருக்கு வாய்மொழியாக அனுமதி அளித்த நீர்வளத்துறை அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில் சத்தீஷ்கர் நீர்வளத்துறை சார்பில் அதிகாரி ராஜேசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உரிய அனுமதி பெறாமல் டீசல் மோட்டார்களை பயன்படுத்தி 4 ஆயிரத்து 104 கனஅடி நீரை நீங்கள் வீணாக்கியுள்ளீர்கள். இது சட்டவிரோத செயலாகும்.

    இதற்காக ஒரு கனஅடி நீருக்கு ரூ.10.50 வீதம் மொத்தமாக ரூ.43 ஆயிரத்து 92-ஐ செலுத்த வேண்டும். அத்துடன் அனுமதியின்றி நீரை வெளியேற்றியதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். இரண்டையும் சேர்த்து மொத்தமாக ரூ.53 ஆயிரத்து 92-ஐ 10 நாட்களுக்குள் நீர்வளத்துறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் நேற்று மாலை வந்தார்.
    • ஆன்லைனில் அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    சங்ககிரி:

    சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் நேற்று மாலை வந்தார். அப்போது, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், தலைவர் கந்தசாமி தலைமையில், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் செங்கோட்டுவேல், உபதலைவர் சின்னதம்பி , இணைச் செயலாளர் முருகேசன் ஆகியோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    அப்போது பல இடங்களில் லாரிகள் இல்லாமலேயே ஆன்லைனில் அபராதம் விதிக்கின்றனர். எனவே ஆன்லைனில் அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
    • கடந்த ஆண்டு சென்னை மாநகரம் முழுவதும் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 28 ஆயிரத்து 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை:

    மது போதையில் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்காக அதற்கான அபராத தொகை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த வகையில் கடந்த ஆண்டு சென்னை மாநகரம் முழுவதும் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 28 ஆயிரத்து 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இது தொடர்பாக ரூ. 28 கோடியே 2 லட்சத்து 80 ஆயிரம் கடந்த ஆண்டு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த 24-ந்தேதி வரை 15 ஆயிரத்து 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ரூ.15 கோடியே 23 லட்சத்து 10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.43 கோடியே 25 லட்சத்து 40 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

    இது போன்று அபராதம் விதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 50 சதவீதம் அளவுக்கு அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அபராதம் விதிக்கப்பட்ட 28 ஆயிரத்து 23 வழக்குகளில் 13 ஆயிரத்து 35 பேர் மட்டுமே அபராத தொகையை செலுத்தி உள்ளனர்.

    இவர்களிடம் இருந்து 13 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டு இதுவரை 15 ஆயிரத்து 231 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் 3 ஆயிரத்து 527 பேர் மட்டுமே ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ. 3 கோடியே 52 லட்சத்து 70 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கடந்த 1 ஆண்டில் போதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து 16 கோடியே 56 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டாமல் காலம் தாழ்த்தி வரும் நபர்களிடம் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களை போனில் அழைத்து அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • பயணி அபராதம் செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
    • டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 1.65 கோடி ஆகும்.

    புதுடெல்லி :

    மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் சந்திரசேகர் குவார், ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகள் எண்ணிக்கை, அவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டப்படி ரெயில்வேயிடம் கேட்டிருந்தார்.

    அதற்கு ரெயில்வே தெரிவித்த தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் ரெயில்களில் டிக்கெட் இன்றி அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணித்த 3.60 கோடி பயணிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் ஒரு கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.

    2021-22-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 2.70 கோடியாக இருந்தது. அப்போது ரூ.1,574 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருந்தது.

    இந்த 2022-23-ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்து பிடிபட்டவர்களின் எண்ணிக்கை, பல சிறிய நாடுகளின் மொத்த மக்கள்தொகையைவிடவும் அதிகம் என்பது ஒரு சுவாரசிய தகவல்.

    ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து பிடிபடுபவர்கள், டிக்கெட்டுக்கான அசல் கட்டணத்துடன், குறைந்தபட்சம் ரூ.250 அபராதமாக செலுத்த வேண்டும்.

    அந்த பயணி அதை செலுத்த மறுத்தாலோ, அவரிடம் பணம் இல்லாவிட்டாலோ வழக்கு பதிவு செய்யப்பட்டு மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர்படுத்தப்படுவார். அவர் அதிகபட்சமாக ரூ.1,000 வரை அபராதம் விதிப்பார். அந்த பயணி அப்போதும் அபராதம் செலுத்தவில்லை என்றால், 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

    இதற்கிடையில், ரெயில்வேயின் தகவல்படி, 2022-23-ம் ஆண்டில் 2.7 கோடி பயணிகள் டிக்கெட் பெற்றிருந்ததும் காத்திருப்பு பட்டியலில் இருந்ததால் ரெயிலில் பயணம் செய்ய முடியவில்லை. இது முக்கிய வழித்தடங்களில் ரெயில் சேவை பற்றாக்குறையை காட்டுகிறது என பயணிகள் குறை தெரிவிக்கின்றனர்.

    முந்தைய நிதியாண்டில் இவ்வாறு டிக்கெட் பெற்றும் பயணம் செய்ய முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை 1.65 கோடி ஆகும்.

    • விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றனர்.
    • வியாபாரி ரஹமத்க்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பைகள், கவர்களுக்கு தடைவிதித்தது. விழுப்புரம் நகராட்சி சார்பில் நகர சபைத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பா ட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீண்டும் மஞ்சள் பை என்ற தாரக மந்திரத்தை வலியுறுத்தும் வண்ணம் மஞ்சள் துணிப்பையும் பொதுமக்களுக்கு அடிக்கடி இலவசமாக வழங்கி விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார்கள் இதனை மீறியும் ஹோட்டல்கள், சாலையோர தள்ளுவண்டி உணவகங்கள், காய்கறி கடைகள் பழக்கடைகளில் பிளாஸ்டிக் பை, கவர்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதற்கு மூல காரணமாக செயல்படும் மொத்த பிளாஸ்டிக் கைப்பை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் நகராட்சி கமிஷனர் சுரேந்தர் ஷா உத்தரவின்படி விழுப்புரம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதனகுமார் தலைமையில் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு வைத்ததாக கண்டுபிடிக்கப்பட்டு அந்த உரிமையாளர் ஹரிதாஸ் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து விழுப்புரம் புதுவை சாலை உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததாக தெரியவந்தது. வியாபாரி ரஹமத்க்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோல் செயல்களில் ஈடுபட்டால் கடைகளுக்கு சீல் வைக்க நேரிடும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இரு கடைகளிலும் பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பை, கவர்களின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் ஆகும்.

    • 7 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது
    • பறிமுதல் செய்த 6 லாரிகளையும் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலத்துக்கு கனிமவளங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கொண்டு செல்லப்படுவதையொட்டி வந்த புகாரின் அடிப்ப டையில் வருவாய் துறை, கனிம வளத்துறை, போலீஸ், போக்குவரத்து துறை உள்பட 7 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் விளவங்கோடு தனி தாசில்தார் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அழகியமண்டபம் பகுதியில் ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதிக பாரம் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் தொடர்ந்து சோதனை செய்ததில் இதுபோல் மேலும் 5 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்த 6 லாரிகளையும் கோழிப்போர் விளையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த லாரி களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • குறிப்பிட்ட நேரத்தில் ரெயில் நிலையத்தை அவரால் அடைய முடியாமல் போய் விட்டது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்தவர் அருள் தம்பி ஜோன்ஸ், எல்.ஐ.சி. அதிகாரி. இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ரெயிலில் செல்ல முன்பதிவு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து ரெயில் நிலையம் செல்வதற்காக வீட்டில் இருந்து ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் செல்போன் செயலி மூலம் வாடகை காரை முன்பதிவு செய்திருந்தார்.

    அப்போது வந்த டிரைவர் செலுத்த வேண்டிய கட்டணத்தை விட 100 ரூபாய் அதிகம் தர கேட்டுள்ளார். அதற்கு அருள் தம்பி ஜோன்ஸ் மறுக்கவே கார் முன்பதிவை டிரைவரே ரத்து செய்து விட்டு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து அதே தனியார் டிராவல்ஸ் நிறுவன செல்போன் செயலி மூலம் மற்றொரு வாடகை காரை முன்பதிவு செய்தார்.

    ஆனால் 2-வது வந்த டிரைவரும் கட்டணத்தை விட 100 ரூபாய் அதிகம் தர வேண்டுமென கேட்டுள் ளார். ஆனால் அதற்கு அருள்தம்பி ஜோன்ஸ் மறுபடியும் மறுக்க வே கோபமடைந்த டிரைவர் வாடகை காரில் ஏற்றி வைத்த அனைத்து பொருட்களையும் தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டார்.

    இந்த தாமதத்தினால் குறிப்பிட்ட நேரத்தில் ரெயில் நிலையத்தை அவரால் அடைய முடியாமல் போய் விட்டது. இதைத் தொடர்ந்து ஆம்னி பஸ் மூலம் சொந்த ஊர் வந்து சேர்ந்துள்ளார்.

    இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான அவர் வக்கீல் மூலம் சம்பந்தப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு எந்த பதிலும் வரவில்லை. இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தில் அருள் தம்பி ஜோன்ஸ் வழக்கு தொடர்ந் தார்.

    வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் டிராவல்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி ரூ.15 ஆயிரம் அபராதமும், இதனை பாதிக்கப்பட்ட அருள் தம்பி ஜோன்சுக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் பயணம் தொடர்பான செலவுத் தொகை ரூ.16 ஆயிரத்து 688 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    • பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.
    • இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    உத்திரபிரதேசம்:

    இன்ஸ்டாகிராமில் லைக்ஸ், கமெண்ட்ஸ், பெற்று அனைவரிடமும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் எந்த சாகசத்தையும் செய்யத் தயங்குவதில்லை. சிலர் மலைகளில் ஏறி வீடியோ எடுக்கிறார்கள்.

    ரெயில் தண்டவாளத்தில் ஆபத்தான நிலையில் வீடியோ பதிவு செய்கிறார்கள். ஒரு சிலர் ரெயில்வே பிளாட்பாரத்தில் நடனம் ஆடுகின்றனர்.

    இதுபோல பிரபலமாகும் ஆசையில் இளம்பெண் ஒருவர் ரூ.15 ஆயிரம் இழந்துள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், வர்ணிகா பிரயாக் மாவட்டத்தில் உள்ள சிவிலியன் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண்.

    இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என ஆசைப்பட்டார். மணப்பெண் போல் உடை அணிந்து சொகுசு கார் மீது முன்னால் அமர்ந்து பிரபலமான பாடலுக்கு நடனமாடினார். முக்கிய சாலைகளில் சென்று வீடியோவை பதிவு செய்தார்.

    இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டார். இதனை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்ததால் வைரலாக பரவியது.

    ஒரு சிலர் இது குறித்து போக்குவரத்து போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

    இளம்பெண்ணின் வீடியோவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். வீடியோவில் இளம்பெண் அமர்ந்து சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து இளம்பெண்ணின் விவரங்களை கண்டுபிடித்தனர்.

    போக்குவரத்து விதிகளை மீறி இளம்பெண் முக்கிய சாலைகளில் காரின் மீது அமர்ந்து வீடியோ பதிவு செய்ததாக ரூ.15,500 அபராதம் விதித்தனர். இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என இளம்பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

    ×