search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் விற்பனை செய்யப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு வியாபாரிகள் உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அனுமதி சீட்டு பெறாமல் செல்லும் வாகனங்களுக்கு வேளாண்மை ஒழுங்கு ப்படுத்துதல் சட்டப்படி உரிய இணக்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் - ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் விற்பனை செய்யப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு வியாபாரிகள் உரிமம் பெற வேண்டும் என ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்து ள்ளதாவது:

    தானியங்களான நெல், சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம், தினை, குதிரைவாலி, வரகு, சாமை, துவரை, உளுந்து, பச்சை ப்பயிறு, கொண்டை க்கடலை, பட்டாணி, மொச்சை, காராமணி, கொள்ளு, முழு அல்லது உடைக்கப்பட்ட வேர்கடலை (தோலுடன் கூடியது மற்றும் தோல்நீக்கிய பருப்புகள்), நல்லெண்ணை விதை அல்லது எள், ஆமணக்கு (தோலுடன் மற்றும் தோல் நீக்கப்பட்ட), சூரியகாந்தி விதைகள் அல்லது கொட்டைகள், பருத்தி விதை, வேப்ப விதைகள், தேங்காய்நார், புகையிலை, மரவள்ளிக்கிழங்கு, மரவள்ளி பட்டைகள், மரவள்ளி கிழங்கு மாவு, மரவள்ளி மாவுச்சத்து, மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய், அனைத்து வகை பூண்டு, மஞ்சள் மற்றும் கொத்தமல்லி விதைகள் (தனியா), ஏலக்காய், பாக்கு (முழுமையானது அல்லது உடைக்கப்பட்டது), புளி, முந்திரிப் பருப்புகள், இஞ்சி (இஞ்சி, சுக்கு), கரும்பு வெல்லம் (வெல்லப்பொடி, பழுப்பு சக்கரை இதர வகைகள்), பனைவெல்லம், கச்சாரப்பர், (இளநீர் நீங்கலாக)

    திண்டுக்கல் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்ட வேளாண் விளைப் பொருட்களை கொள்முதல், விற்பனை, சேமித்தல், கையாளுதல், உருமாற்றம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வியாபாரி கள் ஒட்டன்சத்திரம் ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் ஒருங்கிணைந்த உரிமம் பெற்றிட வேண்டும்.

    விளைப் பொருட்களை கொள்முதல், விற்றுமுதல், கையாலுதல், உருமாற்றம் செய்தல் போன்ற பணிகளுக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லும்பொழுது விற்பனைக்கூடத்தில் அனுமதி சீட்டு பெற்றுச் செல்ல வேண்டும். அனுமதி சீட்டு பெறாமல் செல்லும் வாகனங்களுக்கு வேளாண்மை ஒழுங்கு ப்படுத்துதல் சட்டப்படி உரிய இணக்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • மதுரை அருகே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டார்.
    • என்ஜினீயருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க கோரி தமிழக அரசுக்கு மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டது.

    மதுரை

    மதுரை சிலைமான் புளியங்குளத்தை சேர்ந்தவர் சையது முகமது. தேசிய நெடுஞ்சாலைத்துறையில் என்ஜினீயராக பணியாற்றுகிறார். இவருடைய சகோதரர் ராஜா முகமது.

    இவர்கள் இருவரும் அக்காள்-தங்கையை திருமணம் செய்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக சையது மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டவர்கள் மீது மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை விசாரிக்குமாறு மேலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து மகளிர் போலீசார், இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் அவர்கள் வெளி யில் வந்தனர்.

    இந்தநிலையில் சையது முகமது, மாநில மனித உரிமை கமிஷனில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    என் மீதும், எனது சகோரேர் மீதும் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மேலூர் மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் வழக்கு குறித்து முறையாக விசாரணை செய்வதற்கு எங்களை அழைக்கவில்லை. எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் 20 போலீசாருடன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி கடந்த 6.7.2019 அன்று எங்கள் வீட்டிற்கு வந்தார்.

    அங்கிருந்த என்னையும், என் சகோதரர் ராஜா முகமதுவையும் கடுமையாக தாக்கி, கைது செய்து அழைத்துச்சென்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக பதிவு செய்யப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை சுப்ரீம் கோர்ட்டு கூறிய வழிகாட்டுதல்களை மேலூர் அனைத்து மகளிர் போலீசார் பின்பற்றவில்லை.

    இதனால் எங்களின் கன்னியத்திற்கு பங்கம் ஏற்பட்டு, கடும் மன உளைச்சலுக்கு ஆளா னோம். எனவே இதற்காக உரிய இழப்பீடு வழங்கவும், போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று கூறியி ருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த நிர்மலா தேவியின் நடவடிக்கை சட்டவிரோதமானது. அவர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரால் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு ரூ.1 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு 4 வாரத்தில் வழங்க வேண்டும். இந்த தொகையை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவியிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

    மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கண்டம் தெரிவித்த அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கடைவீதிக்கு வரும் வாகனங்களை சிலர் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் என். ஜி.ஆர் ரோடு கடைவீதி போக்குவரத்து நிறைந்த இடமாகும். வணிக வளாகங்கள், வியாபாரக் கடைகள் நிறைந்திருப்பதால் எந்த நேரமும் அங்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும்.

    இந்த நிலையில் கடைவீதிக்கு வரும் வாகனங்களை சிலர் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மஞ்சள் கோடுகளை வரைந்துள்ளனர். ஆனால் சிலர் விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனையடுத்து பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசர் தலைமையிலான போலீசார் விதிகளை மீறி மஞ்சள் கோட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு பூட்டு போட்டனர்.

    பின்னர் அவற்றை எடுக்க வந்த உரிமையாளர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் அவ்வாறு நிறுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
    • அரசு, பொதுத்துறை, தனியாா் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளா்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா நோய்த் தொற்றுபரவலை தடுக்கும் விதமாக, அனை வரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு அரசு விதிகளின்படி ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும்.

    அரசு, பொதுத் துறை, தனியாா் அலுவலகங்களில் பணிபுரியும் பணியா ளா்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்.

    பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்களில் பயிலும் மாணவா்கள், ஆசிரியா்கள் முகக்கவம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிா்வாகம் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.

    பஸ்கள், அனைத்து விதமான வியாபார கடைகள், திரையரங்குகள், பொது நிகழ்வுகள், திருமண மண்டபங்களில் நிகழும் திருமணம், காது குத்துதல், இதர நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்கள் முகக்க வசம் அணிந்து வருவதை கோவில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    • நாமக்கல்-நல்லிபாளையம் சாலை, சேந்தமங்கலம் சாலையில் கோழிக்கழிவுகளை இரவு நேரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனா்.
    • சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ. 21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல்-நல்லிபாளையம் சாலை, சேந்தமங்கலம் சாலை உள்ளிட்ட பகுதி களில் இறைச்சிக்காக பயன்படுத்திய கோழிக் கழிவுகள், பண்ணைகளில் உயிரிழந்த கோழிகளை சிலா் இரவு நேரத்தில் வாகனத்தில் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனா்.

    அவ்வாறு கழிவுகளைக் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், அந்தப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொரு த்தப்ப ட்டுள்ளன.

    இந்த நிலையில் நல்லி பாளையம் சாலையில் நேற்று கோழி, முட்டைக் கழிவுகளைக் கொட்ட வந்த லாரியை, நகராட்சி சுகாதார அலுவலா் சுப்பிரமணியன் தலைமை யிலான ஊழியா்கள் மடக்கிப் பிடித்தனா்.

    பின்னா் அந்த லாரி, நாமக்கல் நகராட்சி அலு வலகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ. 21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரபணிகள் இயக்குனர் அறிவுருத்துதலின்படி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகலிங்கம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், ராமலிங்கம், உத்தமன் உள்ளிட்ட குழுவினர்கள் பொன்னமராவதியில் பேரூந்து நிலைய வளாகம், அண்ணாசாலை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை, தேனீர் கடை, மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு மேற்க்கொண்டனர்.

    அப்போது சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் கூலிப் என்ற புகையிலை பொட்டலத்தை பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே அவற்பறை ள்ளி மாணவர்களுக்கு விற்கக்கூடாது. மீறி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகா தாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்

    • வணிக வளாகம், திரையரங்கம், மார்க்கெட், அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
    • 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல், வணிக வளாகம், திரையரங்கம், மார்க்கெட், அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் இதுபோன்ற இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அங்காடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அதிக விலைக்கு சிலிண்டர் விற்ற தனியார் கியாஸ் ஏஜென்சிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு விட்டது.
    • கேஸ் கம்பெனியின் அதிக வசூல், குறித்து வாடிக்கையாளர் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் கடந்த ஆண்டு 2019 மே 6-ந் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் ரீபிள் கேட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் பதிவு செய்தார். கேஸ் ஏஜன்சியினர் சசிகலா பெயரில் ரசீது போட்டு கட்டணம் ரூ.746 என பதிவு செய்துள்ளனர்.

    மே 11-ந் தேதி கேஸ் கம்பெனியினர் சமையல் கேஸ் சிலிண்டரை சசிகலாவின் வீட்டிற்கு கொண்டு வந்து விநியோக புத்தகத்தை வாங்கி கையெழுத்திட்டு, கேஸ் சிலிண்டருக்கு ரூ.800 கட்டணம் கேட்டுள்ளனர். வாடிக்கையாளர் சசிகலா ரசீதில் ரூ.746 என்று தான் உள்ளது. அதை மட்டுமே தருவேன் என்று கூறவே, பணியாளர் ரூ.800 கொடுத்தால் தான் சிலிண்டர் தரமுடியும், இல்லையெனில் நான் திருப்பி எடுத்துப் போகிறேன் என்று கூறிவிட்டு சிலிண்டரை எடுத்துச் சென்றுவிட்டார்.

    கேஸ் கம்பெனியின் இத்தகைய அதிக வசூல், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி சேவைக்குறைபாடு மற்றும் நேர்மையற்ற வணிக முறையாகும் என சசிகாலா நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் முத்துக்குமார், ரத்தினசாமி ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

    விசாரணை முடிவில், வாடிக்கையாளருக்கு பில் விலையிலேயே கேஸ் சிலிண்டரை விநியோகம் செய்ய கோர்ட் உத்திரவிட்டது. மேலும், சசிகலாக்கு கேஸ் ஏஜென்சி ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், மனஉளைச்சல் இழப்பீடாக ரூ.5 ஆயிரம், வழக்கின் செலவுத் தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் நல நிதிக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை 2 மாதத்தில் நிறைவேற்றா விட்டால் சசிகலாக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சசிகலாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு பயனீட்டாளர் சங்க செயலாளர் சுப்பராயன் கோர்ட்டில் ஆஜராகி வாதிட்டார்.

    • சிவகிரி நகர பஞ்சாயத்து சுகாதார அலுவலர்கள் பள்ளிக்கூடங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை செய்தனர்.
    • 6 கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் உத்தரவின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி தலைமையில், சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார், விஷ்ணு, ராஜாராம், சிவகிரி நகர பஞ்சாயத்து சுகாதார மேற்பார்வையாளர் குமார், தினேஷ் குமார் மற்றும் அலுவலர்கள் சிவகிரி பகுதியில் குமாரபுரம், சிவராமலிங்கபுரம் மேலத்தெரு, பஜார், அம்பேத்கர் பகுதி, சிவகிரி முக்கிய ரத வீதிகள் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளிலும் மற்றும் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளிலும் புகையிலை மற்றும் போதைப் பொருட்கள், பீடி, சிகரெட் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை செய்தனர்.

    இவற்றில் பள்ளிக்கூடம் அருகே உள்ள கடைகளில் புகையிலை விற்பனை செய்து கொண்டிருந்ததாக 6 கடை உரிமையாளர்களை பிடித்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    • திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலையில் மாட்டை கட்டி வைத்திருந்த உரிமையாளருக்கு அபராதம் விதித்து ஆணையர் உத்தரவிட்டார்
    • சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்

    திருச்சி:

    திருச்சி மாநகர் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன் அவர்கள் அதை சரியாக கவனித்து வருகிறார்களா என்று தினமும் அதிகாலை நேரங்களில் அதிரடியாக மாநகர் பகுதிகளில் தொடர்ந்து ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்.

    இதையடுத்து இன்று காலை விசுவாஸ் நகர் பகுதியில் சுகாதாரம் சரியாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வில் ஈடுபட்ட மாநகராட்சி ஆணையர் அந்த பகுதியில் சாலையில் அனுமதியின்றி வைத்திருந்த இறைச்சி கடையை அப்புறப்படுத்தினார்.

    மேலும் விசுவாஸ்நகர் பகுதியில் பசு மாடு ஒன்று சாலையில் கட்டியிருப்பதை கண்டு, அந்த மாட்டின் உரிமையாளரை அைழத்து ஆணையர் எச்சரிக்கை தெரிவித்ததுடன் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.

    அந்த அபராதத்தை மாட்டின் உரிமையாளர் கட்டத்தவறினால் மாட்டினை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இனி சாலைகளில் அனுமதியின்றி சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களின் கால்நடைகளை வீட்டிற்குள் வைத்து பாதுகாக்காவிட்டால் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல் மாநகர் பகுதிகளில் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    அவ்வாறு வழங்கினால்தான் தொடர்ந்து மாநகரை தூய்மையாக வைத்திருக்க முடியும் என்றனர். 

    • விவசாய மின் இணைப்பு குறித்து தகவல் அளிக்காத 3 செயற்பொறியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • காலதாமதமாகவும், தகவல் வழங்க மறுத்ததால்,தகவல் பெறும் உரிமை சட்டவிதி 19(8) (B)ன் படி இவ்வாணை கிடைக்கப்பெறவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம், விராட்டி குப்பம்பாதையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தமிழ்நாடு மின்வாரி யத்தில்விழுப்புரம் மாவட்ட த்தில்விவசாயமின் இணைப்புக்காக சுயநிதி திட்டத்தின் கீழ் முழு பணம் செலுத்தியுள்ளார். ஆனால், மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்து ள்ளது. இதனிடையே, மின் இணைப்பு வழங்காமல் 10.10.2019ம் தேதி வரை காத்திருப்பில் உள்ளவர்கள் பட்டியல் குறித்து தகவல் தெரிவிக்குமாறுதகவல் உரிமைபெறும் சட்டத்தின் கீழ் கடந்த 15.10.2019ம் தேதி ராேஜந்திரன் விண்ணப்பி த்தார். ஆனால் அதிகாரிகள் கேட்கப்பெற்ற தகவல்களை தரவில்லை.

    இதையடுத்து, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் விவசாயி ராஜேந்திரன் முறையீடு செய்தார். இந்த முறையீட்டு மனு மாநில தகவல் ஆணையர் தமிழ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விழுப்புரம், திண்டிவனம், கண்டமங்கலம் மின் பகிர்மான வட்ட செய ற்பொறியாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு தகவல் வழங்க மறுத்து உள்ளது உறுதி செய்யப்பட்டது. காலதாமதமாகவும், தகவல் வழங்க மறுத்ததால்,தகவல் பெறும் உரிமை சட்டவிதி 19(8) (B)ன் படி இவ்வாணை கிடைக்கப்பெற்ற ஒருவார காலத்திற்குள் அப்போதைய விழுப்புரம், கண்டமங்கலம், திண்டிவனம் இயக்குதலும், பராமரித்தலும் பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர்கள் நஷ்ட ஈடாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிடப்படுகிறது. மேலும் தகவல்உ ரிமை பெறும் சட்டபிரிவு 20(1)ன்படி நாள் ஒன்றுக்கு ரூ. 250 வீதம் ரூ.25 ஆயிரம் அபராதம்ஏன் விதிக்கக்கூடாது என்று என்பதற்கான விளக்கத்தை நேரில்ஆஜராகி எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கவேண்டும் எனமாநிலதகவல் ஆணையர் தமிழ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    • திண்டிவனம் நகர் பகுதியில் பொது மக்கள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • சுபகாரியங்களில் கலந்துகொள்வோர் கண்டிப்பாக ஒரு வழி காட்டி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தவும், கட்டாய முகக் கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்துதல், உரிய காலங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், கொரோனா வழிகாட்டி விதிமுறைகளின்படி சமூக இடைவெளி கடைபிடித்து, கைகளை தூய்மையாக வைத்திருக்க அறிவுரை வழங்கி உள்ளார். அதனடிப்படையில் திண்டிவனம் பல்வேறு பகுதியில் முக கவசம்அ ணிவதை வலியுறுத்தியும் தடுப்பூசிகள் செலுத்தித்துக்கொள்ளவும், கொரோனாவிதிமு றைகளைவிதியை மீறாமல் கடைபிடிக்கவும், பொதுமக்கள் குழுக்களாக கூடுவதை தவிர்க்கவும், பொதுநிகழ்ச்சிகள், சுபகாரியங்களில் கலந்துகொள்வோர் கண்டிப்பாக ஒரு வழி காட்டி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முககவசம் அணியவேண்டும். மீறுவோர் மீது பொது சுகாதார சட்டத்தின் படி நடவடிக்கைகள் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என திண்டிவனம் நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.

    ×