search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
    • சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் போலீசார் போக்குவரத்து வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

    அளவுக்கு மீறி அதிக அளவில் கரும்புகையை வெளியேற்றி காற்று மாசை ஏற்படுத்தும் வாகனங்கள், அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்களை போலீசார் கைப்பற்றினர். சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வாகனங்களுக்கு புதிய புகை பரிசோதனை சான்றிதழ் பெறப்பட்டது. அதன்பிறகு வாகன ஓட்டிகள் "சுற்றுப்புறசூழலை பாதுகாப்போம்" என்று போலீசார் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    தெலுங்கானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவை வீணாக்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. #Foodwaste #Hotelcollectfine
    வாராங்கல்:

    நம்மில் பெரும்பாலானோருக்கு வீட்டில் சாப்பிடும்போது, பாதி உணவை உண்ணாமல் குப்பை தொட்டிகளில் போடும் வழக்கம் உள்ளது. வீட்டில் மட்டுமல்லாது வெளியே ஹோட்டல்களிலும் இதுபோன்று செய்வதுண்டு. ஹோட்டலில் புதிய உணவுகள் இருந்தால் ருசிபார்க்க முதலில் ஆர்டர் செய்துவிட்டு, பின்னர் பிடிக்கவில்லை என்றால் அதனை கொட்டுவதும் புதிதல்ல.

    இதுபோன்று உணவின் அருமை தெரியாமல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தெலுங்கானாவின் ஹோட்டல் ஒன்று புதிய நடவடிக்கை ஒன்றை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகின்றது.

    தெலுங்கானாவின் வாராங்கல் பகுதியில் கேதாரி உணவகம் உள்ளது. இங்கு பல மக்களும் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிறுவனத்தில் தரமான உணவுகள் வழங்குவது மட்டுமல்லாமல் உணவை வீணாக்குவதை தடுப்பதும் தங்கள் குறிக்கோளாகும் என ஹோட்டலின் உரிமையாளர் லிங்காலா கேதாரி கூறினார்.

    உணவை வீணாக்குவதை தடுப்பதற்காக, அந்த ஹோட்டலின் வாசலில் உணவு வகைகளின் போர்ட்டுடன் சேர்ந்து இதற்கான விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது. சாப்பிட்டபின் தட்டில் உணவு மீதம் இருந்து அதனை குப்பைகளில் கொட்ட நேர்ந்தால், வாடிக்கையாளர்கள் ஒரு தட்டிற்கு ரூ.50 கட்டாயம் அபராதம்  செலுத்த வேண்டும் என அந்த விளம்பர பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பினை செய்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இந்த அபராதத் தொகை தற்போது ரூ.14000 வரை வசூல் செய்யப்பட்டுள்ளது என லிங்காலா தெரிவித்தார். இந்த புதிய நடவடிக்கையால் தற்போது உணவு வீணாவது வெகுவாக குறைந்துள்ளது எனவும், ஆர்டர் செய்வதிலும் கவனமாக உள்ளனர் எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    இதுபோன்ற அறிவிப்பினை செய்த பின்னரும் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர்,  வாடிக்கையாளர்களுக்கு உணவு பிடிக்கவில்லை என்றால், அபராதம் தர இருப்பதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Foodwaste #Hotelcollectfine
    இறுதி தீர்ப்பு நிலுவையில் இருக்கும் போது ஜெயலலிதா உயிரிழந்துள்ளதால், அவர் தரப்பிடம் இருந்து அபராத தொகையை வசூலிக்க அனுமதி கோரிய கர்நாடக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. #Jayalalitha #DACase
    சென்னை:

    சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர்.

    4 ஆண்டுகள் சிறை தண்டனை, 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதால் தனது முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.

    கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை எதித்து சுப்ரீம் கோர்ட்டில் அம்மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்கள் விசாரித்து முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

    இதன் பின்னர், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கியது. அப்போது, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர். ஆனால், ஜெயலலிதா உயிருடன் இல்லாததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    சிறை தண்டனையில் இருந்து மட்டுமே அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.100 கோடி அபராத தொகையை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட் அதனை நிராகரித்தது. 

    இதனை அடுத்து, மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து இறுதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட காலத்தில் தான் ஜெயலலிதா மரணமடைந்தார். இதனால், அவரை குற்றவாளி என அறிவிக்க வேண்டும். அபராத தொகையை வசூலிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
    மோட்டார் பைக்கில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. #TNPolice #Helmet
    சென்னை:

    மோட்டார் வாகன சட்டப்படி நான்கு சக்கர  வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதியை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இந்த விதியை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ‘இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதுதொடர்பான மோட்டார் வாகன சட்ட விதிகள் முறையாக அமல்படுத்தப்படும்’ என்று தமிழக அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    இதனை அடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்பவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
    ஆண்ட்ராய்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி இண்டெர்நெட் பயன்பாட்டில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட கூகுள் நிறுவனம் முயற்சித்ததாக கூறி ஐரோப்பிய யூனியன் சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. #Google #EU
    பிரசெல்ஸ்:

    பிரபல தேடுபொறியான அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் இணைய உலகில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில்,  இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆண்ட்ராய்ட் அமைப்பை கூகுள் நிறுவனம் விதிகளை மீறி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

    இதன் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாகும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. 

    இந்த புகாரின் பேரில் கடந்த மூன்றாண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு இன்று 4.3 பில்லியன் யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 34 ஆயிரம் கோடி)  அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும், கூகுள் தன்னுடைய சட்டவிரோத செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். மீறினால் மேலும் அபராதம் விதிக்கப்படும் அல்லது கூகுள் தன்னுடைய தினசரி வருவாயில் 5 சதவீதத்தை ஐரோப்பிய யூனியனுக்கு செலுத்த வேண்டி வரும் என ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது. 

    இந்த அபராத தொகையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை, புதிய சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    கொழும்பு:

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை, மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச்சென்றனர்.

    இந்தநிலையில்,  ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீது முதல்முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்குபதிய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும், கொழும்பு நீரியல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரூ.50 லட்சம் முதல் ரூ.1.50 கோடி வரை மீனவர்களுக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதனை கட்ட தவறினால் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும் புதிய சட்டத்தில் இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    கேரள கவர்னர் மாளிகைக்கு சொந்தமான கார் வேகமாக சென்றதற்காக மோட்டார் வாகன துறை அபராத நோட்டீஸ் அனுப்பிய நிலையில், சமரசமின்றி அபராதத்தை கட்ட அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கடந்த ஏப்ரல் மாதம் கேரள கவர்னர் சதாசிவம் பயணிக்கும் மெர்சீடிஸ் கார் ராஜ்பவன் அருகே வேகமாக சென்றுள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களை அடையாளம் காட்ட அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமரா, கவர்னரின் காரை புகைப்படம் எடுத்து மோட்டார் வாகன துறைக்கு அனுப்பியுள்ளது.

    இதனை அடுத்து, வேகமாக சென்றதற்காக ரூ.400 அபராதம் கட்ட வேண்டும் என கவர்னர் மாளிகைக்கு மோட்டார் வாகன துறை நோட்டீஸ் அனுப்பியது. தான் காரில் இல்லை என்றாலும், கவர்னர் மாளிகைக்கு சொந்தமான கார் என்பதால், அந்த அபராதத்தை எவ்வித சமரசமும் இல்லாமல் கட்ட வேண்டும் என கவர்னர் சதாசிவம் உத்தரவிட்டுள்ளார்.

    ஒரு நாளைக்கு இதுபோல மூன்றாயிரம் கார்கள் பிடிபடுவதாகவும், இதன்மூலம் மாதம் இரண்டு கோடி வரை அபராதம் வசூலிக்கப்படுவதாகவும் மோட்டார் வாகன துறை தெரிவித்துள்ளது. 
    எட்டயபுரத்தில் பொது இடங்களில் புகை பிடித்த 12 பேருக்கு தலா ரூ. 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
    எட்டயபுரம்:

    கோவில்பட்டி பகுதி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா ஆலோசனையின் பேரில் எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் புகையிலை மற்றும் பீடி, சிகரெட் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எட்டயபுரம் நடுவிற்பட்டி பகுதியில் பட்டத்து விநாயகர் கோவில் அருகே கீழஈரால் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பொது இடங்களில் பீடி, சிகரெட் புகை பிடித்த பொதுமக்கள் மற்றும் விற்பனை செய்த வியாபாரிகள் உள்ளிட்ட 12 பேருக்கு தலா ரூ. 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை செய்யப்பட்டது. 

    சோதனையில் பள்ளி வளாகம் அருகே பீடி, சிகரெட் விற்பனை செய்த கடைகளை கண்டறிந்து கடை உரிமையாளர்களுக்கு ரூ.100  அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இனி வரும் காலங்களில் பள்ளி அருகில் விற்கக்கூடாது என எச்சரிக்கப்பட்டது. 

    நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, சுகாதார ஆய் வாளர்கள் சீனி வாசன், சுப்பிரமணி, மாரிக் கண்ணன், சீத்தாராம் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    வேடசந்தூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    வேடசந்தூர்:

    வேடசந்தூர், எரியோடு, அய்யலூர் ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் ஆட்டோக்களில் உரிய ஆவணங்கள் இல்லாமலும் அளவுக்கு மீறி பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

    இதனையடுத்து வேடசந்தூரில் போக்குவரத்து ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் ஆட்டோக்கள் சோதனை இடப்பட்டன. இந்த சோதனையில் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 6 ஆட்டோக்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் பொது மக்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் உரிய ஆவணங்கள் இன்றியும், பெர்மிட் இல்லாமலும் இயங்கும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
    ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் வழக்கை தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. #Jayalalithaa #highcourt
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவர் ஜெயலலிதா இறப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் தேவையில்லாமல் வழக்கு தொடர்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும், வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதமாக ரூ.50 ஆயிரத்தை மாநில சட்டப்பணிகள் குழு ஆணையத்திற்கு வழங்க உத்தரவிட்டு மனுவை தள்ளுப்படி செய்தனர். #Jayalalithaa #highcourt
    ×