search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாட்டினர்"

    வெளிநாடுகளில் இருந்து பணியாற்றுவதற்காக அமெரிக்காவுக்கு வரும் மக்களை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர்கள் சட்டரீதியான அனுமதியை பெற வேண்டும் என டிரம்ப் குறிப்பிட்டார். #Trumppraises #legalimmigrants
    வாஷிங்டன்:

    அமெரிக்க பாராளுமன்ற மரபுகளின்படி ஆண்டின் ஆரம்பத்தில் அந்நாட்டு பாராளுமன்றத்தின் காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர்கள் பேசுவது வழக்கம். ஆனால், மெக்சிகோ எல்லைப்பகுதியில் மதில் சுவர் கட்டுவதற்கு நிதி ஒதுக்க எம்.பி.க்கள் அனுமதி அளிக்காததால் இந்த ஆண்டின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற மாட்டேன் என அதிபர் டொனால்ட் டிரம்ப் பிடிவாதம் செய்தார்.

    தற்போது இவ்விவகாரத்தில் சற்று சமரசம் ஏற்பட்டு சுமுகநிலை திரும்பியுள்ளதால் பாராளுமன்றத்தின் காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பங்கேற்று உரையாற்றினார்.



    உள்நாட்டு பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி, வர்த்தக முதலீடு, வெளிநாடுகளுடனான நட்புறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி தனது உரையினிடையே குறிப்பிட்ட அவர், அமெரிக்காவில் குடியேறுவதற்காக வெளிநாடுகளில் இருந்துவரும் மக்களைப் பற்றியும் பேசினார்.

    ‘நமது நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படாத ஒரு குடியுரிமைத்துறை கொள்கையை நாம் வகுத்தாக வேண்டும். வெளிநாடுகளில் இருந்து முறையான அனுமதியுடன் இங்குவந்து வேலை செய்து, வாழ்ந்து கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கானவர்களையும் சேர்த்துத்தான் நான் நமது நாட்டு மக்கள் என்று குறிப்பிடுகிறேன்.

    சட்டப்பூர்வமாக இங்கு வந்து குடியேறி வாழ்பவர்கள் நமது நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் பல்வேறு வகைகளில் உதவிகரமாக இருந்து வருகின்றனர். நம் நாட்டுக்கு மேலும் மக்கள் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், அவர்கள் சட்டப்பூர்வமான அனுமதியுடன்தான் அமெரிக்காவுக்குள் நுழைய வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கிறேன்’ என டிரம்ப் தெரிவித்தார். #Trumppraises #legalimmigrants 
    திறமையான வெளிநாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளதால் கிரீன்கார்டு விண்ணப்பித்து காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. #trump #GreenCard

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பணி புரியும் வெளிநாட்டினர் கிரீன் கார்டு அல்லது குடியுரிமைக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அவர்களில் இந்தியர்கள் மட்டும் 6 லட்சம் பேர் அடங்குவர்.

    தங்களுக்கு கிரீன்கார்டு மூலம் குடியுரிமை கிடைக்கும் என காத்திருக்கும் நிலையில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

    அதனால் அவர்களின் எண்ணம் ஈடேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர் ஆயிரக்கணக்கானவர்கள் சட்ட விரோதமாக நாட்டில் குடியேறியுள்ளனர். அவர்களால் திறமையான வெளிநாட்டினருக்கு சட்டப்பூர்வ குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    கிரீன் கார்டு பெற விண்ணப்பித்து அதற்காக லட்சக் கணக்கானோர் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அவர்கள் திறமைசாலிகள் எந்த பணியையும் மிக சரியாக செய்கின்றனர். அவர்கள் நமக்குதேவை.

    ஏனெனில் நமது நாட்டில் (அமெரிக்காவில்) பல கம்பெனிகள் உள்ளன. அவற்றில் பணிபுரிய ஊழியர்கள் தேவை. திறமையின் அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள். எனவே அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படும் என்றார்.

    டிரம்பின் இந்த அறிவிப்பு கிரீன்கார்டு விண்ணப்பித்து காத்திருக்கும் வெளிநாட்டி னருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. #trump #GreenCard

    அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காகவே மகப்பேறு சுற்றுலாவாக வெளிநாட்டில் இருந்து பல கர்ப்பிணிகள் இங்கு வருகின்றனர் என அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #Birthright #UScitizenship #birthtourism #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் உள்ள கொலம்பியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காகவே உலகம் முழுவதிலும் இருந்து கரிப்பிணிப் பெண்கள் அமெரிக்காவுக்கு வருகின்றனர்.

    இங்கு வந்து குழந்தை பெற்றுகொண்டால் அந்த குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் அமெரிக்க குடியுரிமை கிடைப்பதுடன் அவர்களுக்கு தேவையான அனைத்தும் உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இங்கு ‘பிரசவ சுற்றுலா’ வரும் வெளிநாட்டினரின் என்ணிக்கை பெருகி விட்டது என டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    சீனாவில் இருந்தும் இன்னும் சில ஆசிய நாடுகளில் இருந்தும் இதுபோல் அதிகமான பெண்கள் வருகின்றனர். இது இப்போது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. அவர்கள் நமது நாட்டின் எதிரியாக இருக்கலாம். நம்மீது போர் தொடர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கலாம். ஒருவர் நம்மை வெறுப்பவராகவும் தனது நாட்டின் சர்வாதிகாரியாகவும் இருக்கலாம். 

    ஆனால், அவரது மனைவி அமெரிக்காவில் குழந்தை பெற்றுவிட்டால் அவரது மகனுக்கோ, மகளுக்கோ அமெரிக்க குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

    நமது நாட்டின் மண்ணில் கால்பதித்த சில வினாடிகளில் அந்த பெண்களுக்கு குழந்தை பிறந்து விட்டாலும் அன்னியர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்கள்.

    இதுபோன்ற கேலிக்கூத்தான, பைத்தியக்காரத்தனமான கொள்கையால் சட்டவிரோதமாக வருபவர்களுக்கு பிறக்கும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் நாம் குடியுரிமை அளிக்க வேண்டியுள்ளது. இந்த முறைக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். #Birthright #UScitizenship #birthtourism #Trump
    திருவண்ணாமலை தீப மலையில் தடையை மீறி ஏறிய பெண்கள் உள்பட 12 வெளிநாட்டினரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். #ThiruvannamalaiMountain #ForeignersArrested
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மகா தீப மலையில் ஏறுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவில் குறிப்பிட்ட பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. தடையை மீறி தீப மலையில் ஏறினால் கைது நடவடிக்கை பாயும் என வனத்துறையினர் எச்சரித்திருந்தனர்.



    ஆனாலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் அடிக்கடி தீப மலையில் ஏறி சிக்கி கொள்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜதராபாத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மற்றும் ரஷியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தடையை மீறி மலையில் ஏறி மாயமாகினர்.

    3 நாட்கள் தேடுதலுக்கு பிறகு அவர்களை வனத்துறை குழுவினர் மீட்டனர். இந்த நிலையில், இன்று காலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணா ஆசிரமம் பின்புறம் இருக்கும் கந்தாசிரமம் வழியாக வெளிநாட்டை சேர்ந்த 6 பெண்கள் உள்பட 12 பேர் தடையை மீறி தீப மலையில் ஏறினர்.

    இதுப்பற்றி, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. வனத்துறையினர் விரைந்து சென்று மலையில் ஏறிய 12 வெளிநாட்டினரை கைது செய்தனர். அவர்கள், ஐரோப்பியா லிக்டோனியா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இவர்கள், தீப மலையை சுற்றி பார்க்க ஏறியுள்ளனர். இதையடுத்து, அபராதம் விதித்த பிறகு 12 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ThiruvannamalaiMountain #ForeignersArrested



    வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தால் அவர்கள் மீது இந்தியாவால் நடவடிக்கை எடுக்க முடியாது என ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச அளவில் நாடுகள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு லஞ்சம் கொடுப்பது உண்டு. ஊழல் எதிர்ப்பு சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு இது தொடர்பாக நடத்திய ஆய்வில் பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    சீனா, ஹாங்காங், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 2 சதவீதத்துக்கும் மேல் ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உள்ளன.

    ஆனால் கடந்த 1997-ம் ஆண்டு ஐ.நா.சபை நிறை வேற்றிய ஊழல் எதிர்ப்பு தீர்மானத்தில் இந்த நாடுகள் கையெழுத்துப் போடவில்லை.

    இதனால் வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட இந்த 4 நாடுகளுக்கும் லஞ்சம் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் இந்த நாடுகளில் தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு பிரச்சினைகள் வரும். சட்ட அமல் நடவடிக்கைகள் பாதிக்கும்.

    இதற்கு உதாரணமாக சில வழக்குகள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட விமானங்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டும், இந்தியாவால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.

    எனவே வெளிநாட்டவரால் லஞ்சம் வழங்கப்படுவதை கிரிமினல் குற்றமாக இந்தியா அறிவிக்க வேண்டும்.

    அத்துடன் தனியார் துறையில் இடித்துரைப்பாளர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். #tamilnews
    ×