search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 129867"

    • தேர்தல் நடத்தும் அதிகாரியாக மகளிர் திட்ட இயக்குனர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • போட்டியிட விரும்புவோர், 10-ந் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 23-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    கோவை மாவட்ட திட்டக்குழுவுக்கு மாவட்ட ஊராட்சிகளில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 என 18 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்-17, மாநகராட்சி உறுப்பினர்கள்-100, ஏழு நகராட்சிகளின் மொத்த உறுப்பினர்கள்-198, மொத்தமுள்ள 33 பேரூராட்சிகளின் மொத்த உறுப்பினர்கள்-513 என 825 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

    இவர்களில், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நகராட்சியில் தலா ஒன்று, தாளியூர் பேரூராட்சியில் ஒன்று என மூன்று காலியிடங்கள் உள்ளன. அதனால் 822 உறுப்பினர் கள் ஓட்டுப்போட தகுதியானவர்களாக இருக்கின்றனர்.

    இதற்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் கிராந்திகுமார் சமீபத்தில் வெளியிட்டார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக மகளிர் திட்ட இயக்குனர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

    போட்டியிட விரும்புவோர், வருகிற 10-ந் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். 12-ந் தேதி காலை 11 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 14-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வேட்பு மனுவை திரும்ப பெறலாம்.

    போட்டி இருந்தால் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்படும் ஓட்டுச்சாவடியில், 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

    கலெக்டர் அலுவலக பழைய கட்டிடம், இரண்டாவது தளத்தில் அறை எண் 1-ல், மாலை 4 மணி முதல் ஓட்டுகள் எண்ணப்படும்.

    தேர்தல் நடவடிக்கைகள் 24-ந் தேதி முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 28-ந் தேதி நடத்த வேண்டுமென, மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டிருக்கிறது.

    • ஆயத்த கூட்டம் மாதம்பாளையம் சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமையேற்று பேசினார்.

    புளியம்பட்டி,

    புஞ்சைபுளியம்பட்டி நகர அ.தி.மு.க. சார்பில் வார்டு எண் 12, 13 காந்தி நகர் பகுதி மற்றும் மார்க்கெட் பகுதியில் அ.தி.மு.க. கொடியேற்றும் விழா நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் 17 பூத்கள் அமைக்கப்பட்டு அதன் பொறுப்பாளர்களுக்கான ஆயத்த கூட்டம் மாதம்பாளையம் சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமையேற்று பேசினார். பவானிசாகர் பண்ணாரி எம்.எல்.ஏ. முன்னிலையில் நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி மற்றும் அவைத் தலைவர் மயில்சாமி வரவேற்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.பி. காளியப்பன் மற்றும் நகர, கழக பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பவானிசாகர் பேரூர் செயலாளர் துரைசாமி, துரைசாமி, எஸ்.ஆர்.எஸ்.செல்வம், மகளிர் அணியைச் சார்ந்த தமிழ்ச்செல்வி வசந்தாமணி, ஆனந்த பிரபா, சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ், வெற்றிவேல், வேலுச்சாமி, கே.ஜி.சதீஷ், புரட்சி நாகராஜ், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் பாபு பொன்னுச்சாமி பாலன் இளைஞர் அணி சக்தி சண்முகம். கண்ணன், ஆர்.மூர்த்தி, ஆர்.டி.சக்திவேல், மட்டன் குணசேகரன் கேபிள் சிவா வினோபாஜி, ராமசாமி, வசந்தா, மாணிக்கம், மார்க்கெட் கார்த்தி பழனிச்சாமி, சிவகுரு, சுப்பிரமணியன், சாமிநாதன், குமார், ஸ்ரீ பாலாஜி, மளிகை மூர்த்தி, ஜோதி மணியன், கிட்டுசாமி, செல்லதுரை, சுரேஷ், கண்ணன், பாபு மற்றும் பூத்கமிட்டி தலைவர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    பூர்த்தி செய்யப்பட்ட புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் மற்றும் பூத் கமிட்டி படிவங்களை வழங்கினர். இதில் மகளிர் அணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.
    • வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள்.

    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நேற்று பாராளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து ஒரு வரலாற்று பதிவையும் செய்துள்ளது.

    அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் இன்று சென்னை வருகிறார். மாநில தலைவர் அண்ணாமலையுடன் நிருபர்களை சந்தித்து ஒரு மாத பிரசார திட்டங்களை அறிவிக்கிறார்கள்.

    நாளை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்குகிறது. இந்த சந்திப்பின்போது கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.

    அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு மூலம் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் துறைவாரியாக நிதி ஒதுக்கீடுகள், செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் விளக்குகிறார்கள்.

    பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தி இவற்றை பிரசாரம் செய்வது, சமூக வலைத்தள ஆதரவாளர்களுடன் கலந்துரையாடுவது, தொழிலாளர்கள், அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடல், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்க உள்ளார்கள்.

    இது தவிர வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள். இதற்கான திட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் தயார் செய்யும்படி கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. நேற்று பாராளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து ஒரு வரலாற்று பதிவையும் செய்துள்ளது.

    அடுத்தகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை உடனடியாக தொடங்க அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் இன்று சென்னை வருகிறார். மாநில தலைவர் அண்ணாமலையுடன் நிருபர்களை சந்தித்து ஒரு மாத பிரசார திட்டங்களை அறிவிக்கிறார்கள்.

    நாளை முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்குகிறது. இந்த சந்திப்பின்போது கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்கிறார்கள்.

    அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு மூலம் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் துறைவாரியாக நிதி ஒதுக்கீடுகள், செயல்படுத்திய திட்டங்கள் பற்றியும் விளக்குகிறார்கள்.

    பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தி இவற்றை பிரசாரம் செய்வது, சமூக வலைத்தள ஆதரவாளர்களுடன் கலந்துரையாடுவது, தொழிலாளர்கள், அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடல், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்க உள்ளார்கள்.

    இது தவிர வீடுதோறும் மத்திய அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களையும் விநியோகிக்க இருக்கிறார்கள். இதற்கான திட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் தயார் செய்யும்படி கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

    • ஆழியாறு பாசனப்பகுதியை சேர்ந்த 21 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன.
    • தேர்தல் அலுவலராக சப்-கலெக்டர் பிரியங்கா செயல்படுவார்.

    பொள்ளாச்சி,

    ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கர் விளைநிலங்களும் பாசனம் பெறுகிறது. பி.ஏ.பி. பரம்பிக்குளம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் ஆழியாறு பாசனப்பகுதியை சேர்ந்த 21 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் பகிர்மான குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

    இந்த நிலையில், ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் (20-ந் தேதி) நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆழியாறு பாசன திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தேர்தல் அலுவலராக சப்-கலெக்டர் பிரியங்கா செயல்படுவார்.

    திட்டக்குழு தலைவருக்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் காலை 8.30 மணி முதல் 9.30 வரை பெற்றுக் கொள்ளலாம்.

    வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்தல் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடுதல் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும்.

    காலை 10 மணி முதல் 10.30 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்ப பெறுதல் நடக்கிறது. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் காலை 10.45 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    11.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன் பின்னர் உடனடியாக பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இதில், திட்டக்குழு தலைவரை தேர்ந்து எடுப்பதற்காக 4 பகிர்மான குழு தலைவர்களும், அசல் தேர்தல் சான்றிதழுடன் வர வேண்டும்.

    அதனைத் தொடர்ந்து திட்டக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெறும். இதில் ஓட்டுப்பதிவு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • மொத்தம் 454 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
    • மொத்தம் 18 பேர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்படுகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பின ர்களை தேர்வு செய்வத ற்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பி னராக பதவி வகிப்போர், தேர்தல் மூலம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இதற்கான வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி கவுன்சில் உறுப்பினர் 17 பேர், திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் 60, ஆறு நகராட்சிகளின் கவுன்சிலர்கள் 146 பேர், 15 பேரூராட்சிகளின் 231 பேர் என, மொத்தம் 454 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலில் இருந்து 8 பேர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலிருந்து 10 பேர் என, மொத்தம் 18 பேர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்படுகின்றனர்.

    மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், சுமூகமான முறையில் எட்டுபேரை போட்டியின்றி தேர்வு செய்ய உத்தேசித்துள்ளனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், ஆளுங்கட்சியான தி.மு.க.,வின் கை ஓங்கியுள்ளது. அதனால், தங்கள் கட்சி அமைச்சர், மாவட்ட செயலாளர்கள் வாயிலாக, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பதவியை பெற முயற்சித்துவருகின்றனர்.

    அதனால், திருப்பூர் மாவ ட்டத்தை பொருத்தவரை, மாவட்ட திட்டக்குழுவுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    • கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.
    • சேலம் லைன் மேட்டில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றனர்.

    சேலம்:

    கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடி வடைகிறது.

    இதை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கர்நாடக போலீசார் மற்றும் துணை ராணுவம் பாது காப்பு பணீயில் ஈடுபட்டு உள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் கோவை மேற்கு மண்டல காவல்துறையி லிருந்து 210 போலீஸாரும், 60 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுகின்றனர்.

    இவர்கள் நேற்று சேலம் லைன் மேட்டில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றனர்.

    • கர்நாடகா தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற முடியாது என திருமாவளவன் கூறினார்.
    • பல பிரிவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    மதுரை

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிரு பர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் டெல்லி யிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆந்திரா, தமிழ் நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பா.ஜனதா ஒருபோதும் வெற்றி பெறாது.

    புதுச்சேரி ஜிப்மர் மருத்து வமனை தனியாருக்கு தாரைவார்க்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு பல பிரிவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படு கிறது. இதை கண்டித்து நான் கருத்து தெரிவித்தால் புதுச்சேரி கவர்னர், வேறு மாநிலத்திற்குள் உள்ள பிரச்சினைக்கு எப்படி கருத்து சொல்லலாம்? என்று கேட்கிறார்.

    புதுச்சேரி மருத்துவமனை யில் புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி சிதம்பரம் தொகுதி மக்களும் சிகிச்சை பெறுகிறார்கள்.

    பிரதமர் மோடி ஒரு சினிமா ரசிகரை போல் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை ஆதரித்து கருத்து சொல்வது அதிர்ச்சி யாக உள்ளது. இந்த திரைப் படம் வெறுப்பு அரசியலை உருவாக்கும். இதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • வருகிற 27-ந்தேதி நடைபெறும் தேர்தலில் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    சென்னை:

    நடைபாதை வியாபாரிகளுக்கான நகர விற்பனை குழு தேர்தலை சென்னை மாநகராட்சி நடத்துகிறது. இந்த தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் 16 பெண்கள் உள்பட 56 பேர் போட்டியிடுகிறார்கள்.

    இதில் 3 பெண்கள் உள்பட 11 பேர் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 5 பேர் இதர பிற்பட்ட வகுப்பினர். 11 பேர் சிறுபான்மை இனத்தவர். 6 பேர் மாற்றுத் திறனாளிகள். 12 பேர் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள்.

    இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் திருவொற்றியூர் மண்டலத்தை சேர்ந்தவர். மேலும் தண்டையார் பேட்டை மண்டலத்தை சேர்ந்த 2 பேர், ராயபுரத்தை சேர்ந்தவர்கள் 14 பேர், திரு.வி.க.நகரை சேர்ந்தவர்கள் 2 பேர், அம்பத்தூரை சேர்ந்தவர்கள் 15 பேர், அண்ணா நகரைச் சேர்ந்தவர்கள் 2 பேர், தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர்கள் 2 பேர், கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் 12 பேர், அடையாரை சேர்ந்தவர்கள் 4 பேர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என களத்தில் நிற்கிறார்கள்.

    வருகிற 27-ந்தேதி நடைபெறும் இந்த தேர்தலில் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    • டெல்டாவில் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை.
    • நாடாளுமன்ற தேர்தலில் டெல்டாவில் இருந்து பா.ஜ.க. எம்.பி.க்கள் வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்து கொடுத்த தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், உறுதுணையாக இருந்த மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்திற்கும் தமிழ்நாடு விவசாய தமிழர் விழிப்புணர்வு நல சங்கம் சார்பில் தஞ்சையில் பாராட்டு விழா நடந்தது.

    விழாவுக்கு சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் நமச்சிவாயம் வரவேற்றார். மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

    150 ஆண்டு கால காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டு அரசிதழில் வெளியிட்டது பா.ஜ.க. அரசு தான்.

    விவசாயிகளுக்கு பிரச்சினை வருகிறது என்பதற்காக நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை பிரதமரும், மத்திய மந்திரியும் ஒரே முடிவாக எடுத்து 48 மணி நேரத்தில் ரத்து செய்துள்ளனர்.

    விவசாயிகள் மீது பிரதமர் மோடி வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.

    தமிழகத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் கடிதம் எழுதாமல் என்னை தொலைபேசி மூலம் உரிமையாக தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    1960-ம் ஆண்டு தமிழகத்தில் பாசன கால்வாய்கள் மூலம் சாகுபடி நிலப்பரப்பு 11 சதவீதமாக இருந்தது. ஆனால் 2023-ம் ஆண்டில் 3.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது கால்வாய் பாசனம் மூலம் சாகுபடி பரப்பு 9 லட்சம் எக்டேரில் இருந்து 6 லட்சம் எக்டேராக குறைந்துள்ளது. அதேபோல் நீர்த்தேக்கமான குளம், ஏரி மூலம் பாசன பரப்பு 9.41 லட்சம் எக்டேரில் இருந்து 3.69 லட்சம் எக்டேராக குறைந்துள்ளது. 1970-ம் ஆண்டில் 61 லட்சம் எக்டேராக இருந்த பாசன பரப்பு கடந்த 63 ஆண்டுகளில் 45 லட்சம் எக்டேராக மாறி, 16 லட்சம் எக்டேர் பாசன பரப்பு குறைந்துள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா?

    அதேபோல் இந்தியாவில் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் விவசாயிகளின் சராசரி மாத வருமானம் குறைவாகவே உள்ளது. இதை உயர்த்த இந்த திராவிட மாடல் ஆட்சியில் முயற்சிகள் ஏதும் செய்யவில்லை.தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும். விவசாயிகள் மாற்றி யோசித்து அரசியல் சிந்தனை பெற வேண்டும்.

    டெல்டாவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாரும் இல்லை. ஆனாலும் நாங்கள் தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்காக பாடுபட்டு வருகிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தல் முக்கியமானது. நாடாளுமன்ற தேர்தலில் டெல்டாவில் இருந்து பா.ஜ.க. எம்.பி.க்கள் வர வேண்டும். விவசாயிகள் பிரச்சினை பற்றி பேசவும், விவசாயிகளுக்காக குரல் கொடுக்கவும் பா.ஜ.க. எம்.பி.க்கள் வேண்டும். அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    விவசாயிகளை காப்பதற்காக பிரதமர் மோடி கிசான் சம்மான் திட்டம், பயிர் காப்பீடு திட்டம், உரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்றவற்றை கொண்டு வந்துள்ளார். எனவே, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பது பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து அண்ணாமலைக்கும், கருப்பு முருகானந்தத்துக்கும் மலர் கிரீடம், மாலை அணிவித்து விவசாய தமிழர் விழிப்புணர்வு சங்கத்தினர் பாராட்டினர்.

    இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், மாவட்ட ஓ.பி.சி. செயலாளர் முத்துராமலிங்கம், ஐ.டி. மற்றும் எஸ்.எம். பிரிவு மாவட்ட தலைவர் தங்கதுரை, பட்டுக்கோட்டை மணிகண்டன், பொன்னவ ராயன்கோட்டை செல்வமணி, சங்க செயலாளர் சுரேஷ்குமார், காவிரிடெல்டா விவசாயிகள் குழும பொதுச் செயலாளர் சத்யநாராயணன், டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேரன் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பாக்கியராஜ், பெரியண்ணன், புலிவலம் வரதராஜன், சங்கர், முருகையன், சேதுராமன், ரமேஷ், ஊடக பிரிவு சிவபிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி இருளப்பன் நன்றி கூறினார்.

    • திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ம.தி.மு.க. தலைமை அறிவிப்பின்படி, திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் பணி துணைச் செயலாளர் சேதுபதி தேர்தல் ஆணையாளராக செயல்பட உள்ளார். தொடர்ந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் காலை 11 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள பெரியார், அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    எனவே இந்த இரு நிகழ்ச்சிகளிலும் வட்டக்கழக நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், மாநகர் மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக வருகை தந்து சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜபாளையத்தில் ம.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடந்தது.
    • வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. அமைப்பு தேர்தல் ராஐபாளையம் திருவள்ளுவர் மன்றத்தில் நடைபெற்றது. ராஜபாளையம் நகரச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் மதியழகன் விருதுநகர் மாவட்ட தேர்தல் அதிகாரி கல்லத்தியானிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

    ராஜபாளையம் நகர அவைத்தலைவராக சேது.இன்பமணி, பொருளாளராக பிச்சைக்கனி, துணைச்செயலாளர்களாக அக்பர் அலி, லிங்கம், பூபதி மற்றும் மாவட்ட பிரதிநிதிகளாக புஷ்பவேல், ஞானசேகரன், குருமூர்த்தி ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இதில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ரகுராமன், மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் குமரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கம்மாபட்டி ரவிச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர் பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாடகை தொகையை தேர்தல் செலவு நிதியில் இருந்து மட்டுமே ஒதுக்க வேண்டும்.
    • தனியார் பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.43.50 ஆகவும், ஒரு நாளைக்கு ரூ.8,700 ஆகவும் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசு மற்றும் தனியார் பஸ்கள் தேர்தல் பணிக்கு வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்படும். இதையொட்டி அந்த பஸ்களுக்கான வாடகையை நிர்ணயித்து அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    கா்நாடகத்தில் அரசு பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.57.50 ஆகவும், ஒரு நாள் வாடகை குறைந்தபட்சம் ரூ.11 ஆயிரத்து 500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். ஒரு நாள் என்பது 24 மணி நேரங்களை உள்ளடக்கியது. அதற்கு மேல் 2 மணி நேரம் ஆனால், அதை முழு நாளாக கருத வேண்டும். இந்த வாடகை தொகையை தேர்தல் செலவு நிதியில் இருந்து மட்டுமே ஒதுக்க வேண்டும்.

    பெங்களூர் நகருக்குள் பயன்படுத்தப்படும் தனியார் பஸ்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.43.50 ஆகவும், ஒரு நாளைக்கு ரூ.8,700 ஆகவும் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு முடிவு செய்து, அதை பயன்படுத்தாமல் இருந்தால் அதற்கு வாடகையாக ரூ.4,350 செலுத்த வேண்டும். பெங்களூரு நகருக்கு வெளியே பயன்படுத்தப்படும் தனியார் பஸ்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.42.50 ஆகவும், ஒரு நாள் வாடகையாக ரூ.8,200 ஆகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறியரக சரக்கு வாகனங்களுக்கு கிலோ மீட்டருக்கு ரூ.29 ஆகவும், ஒரு நாள் வாடகையாக ரூ.2,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ×