search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 129931"

    விவசாயிகள் வருமானம், கடன் ஆகியவை குறித்து மத்திய அரசு இந்த ஆண்டு ஆய்வு நடத்த உள்ளது. #Agriculture #farmers #CentralGovernment
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. விவசாயிகளின் வருமானம், 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பு ஆக்கப்படும் என்றும் கூறியுள்ளது.



    இந்நிலையில், விவசாயிகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது. இதுபற்றி மத்திய வேளாண்துறை இணை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், பாராளுமன்ற மக்களவையில் எழுத்துமூலம் கூறியதாவது:-

    தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, இந்த ஆண்டு 77-வது சுற்று ஆய்வு நடத்த உள்ளது. அப்போது, விவசாய குடும்பங்களின் நிலை பற்றியும் ஆய்வு நடத்தப்படும்.

    விவசாய குடும்பங்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றிய விரிவான மதிப்பீடு அளிப்பதே இதன் நோக்கம். அதாவது, விவசாயிகளின் வருமானம், செலவு, கடன் ஆகியவை பற்றி இதில் கணக்கு எடுக்கப்படும்.

    இதற்கு முன்பு, 2012-2013-ம் சாகுபடி ஆண்டில்தான் இதுபோன்ற ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு இத்தகைய ஆய்வு நடத்தப்படாததால், விவசாயிகளின் வருமான அதிகரிப்பு பற்றிய தகவல் இல்லை.

    புதிய சூழ்நிலை, தேவை, நிதி ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இத்தகைய சோதனை நடத்தும் முடிவு எடுக்கப்படுகிறது.

    குடும்பங்களின் நுகர்வோர் செலவு, வேலைவாய்ப்பு-வேலைவாய்ப்பின்மை ஆகியவை பற்றி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படுகிறது.

    இவ்வாறு கஜேந்திரசிங் ஷெகாவத் கூறினார். #Agriculture #farmers #CentralGovernment

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 10 மாதங்களில் செல்போன் பாதுகாப்பு கட்டணம் மூலம் ரூ.2 கோடி வருமானம் கிடைத்துள்ளது. #MaduraiMeenakshiTemple
    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் செல்போன்களை கொண்டு செல்ல கூடாது என்று ஐகோர்ட்டு கடந்த மார்ச் மாதம் தடை விதித்தது.

    மேலும் கோவில் நிர்வாகம், பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களை பாதுகாத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    பின்னர் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் 5 கோபுர வாசல்களிலும் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க தனி அறைகள் அமைக்கப்பட்டு, அங்கு தற்காலிக ஊழியர்களை நியமித்தது. மேலும் செல்போன் ஒன்றை பாதுகாக்க அங்கு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் கோவிலுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

    இதற்கிடையே மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மீனாட்சி அம்மன் கோவிலில் இதுநாள் வரை செல்போன் கட்டணமாக எவ்வளவு ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகத்திடம் கேள்வி கேட்டு இருந்தார். அதில் நிர்வாகம் கொடுத்த தகவல் படி கடந்த 10 மாதங்களில் செல்போன் பாதுகாப்பு கட்டணம் மூலம் ரூ.1 கோடியே 99 லட்சத்து 10 வசூலாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கட்டணத்தை ரூ.5 ஆக குறைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #MaduraiMeenakshiTemple

    கடந்த 11 ஆண்டுகளில் ஒப்பிடுகையில் இந்த ஆண்டுதான் காங்கிரசுக்கு 12 சதவீதம் வருமானம் குறைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. #Congress
    புதுடெல்லி:

    அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்வது வழக்கம்.

    அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் வரவு-செலவு கணக்கை தணிக்கை செய்யும்.

    அதன்படி 2017-18ம் ஆண்டுக்கான வருமான விவரத்தை காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து உள்ளது. அதில் 2017-18ம் ஆண்டு ரூ.199 கோடி வருமானம் கிடைத்து இருப்பதாக கூறி உள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 11 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் வருமானத்தில் சரிவு ஏற்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் காங்கிரசுக்கு 12 சதவீதம் வருமானம் குறைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    2001-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சிக்கு அதிக வருமானம் இருந்தது. நாட்டிலேயே அதிக வருமானம் கொண்ட கட்சியாக முதலிடத்தில் காங்கிரஸ் இருந்தது.



    2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் அன்பளிப்புகள் பெருமளவு குறைந்து விட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி வருமானம் பெறுவதில் மிகவும் பின்தங்கி உள்ளது.

    2017-18ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் அன்பளிப்பு தொகையில் வெறும் ரூ. 5 கோடி மட்டுமே காங்கிரசுக்கு கிடைத்தது. ஆனால் பா.ஜனதா இத்தகைய வருமானத்தில் ரூ.210 கோடி வரை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரசுக்கு கிடைத்து உள்ள வருமானத்தில் கூப்பன்கள் விற்றதன் மூலம் ரூ.110 கோடி கிடைத்து உள்ளது. தலைவர்கள் பங்களிப்பு மூலம் ரூ.32 கோடி வந்துள்ளது.

    வருமானம் குறைந்ததால் சில மாநில கட்சிகளை விட காங்கிரஸ் பின்தங்கி உள்ளது. #Congress

    சபரிமலையில் நெய் அபிஷேகம் வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ரூ.20 லட்சம் குறைந்துள்ளது. #Sabarimala
    சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணி முதல் பகல் 11 மணி வரை சுவாமி ஐயப்பனுக்கு பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யலாம். தாமதமாக வரும் பக்தர்கள் இரவு சன்னிதானத்தில் தங்கியிருந்து மறுநாள் நெய் அபிஷேகம் செய்வார்கள்.

    தற்போது சன்னிதானத்தில் இரவு பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பல பக்தர்களால் நெய் அபிஷேகம் செய்ய முடியவில்லை. இதன் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்து விட்டது. கடந்த ஆண்டு நடை திறந்த 16 நாளில் நெய் அபிஷேகம் மூலம் ரூ.41 லட்சத்து 48 ஆயிரம் வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு நெய் அபிஷேக வருமானம் ரூ.21 லட்சத்து 48 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளது. இதன் மூலம் ரூ.20 லட்சம் வருமானம் குறைந்துள்ளது. #Sabarimala

    750 கிலோ வெங்காயத்திற்கு வெறும் 1064 ரூபாய் கிடைத்த விரக்தியில், தனது வருமானத்தை பிரதமர் அலுவலகத்துக்கு மகாராஷ்டிரா விவசாயி அனுப்பி வைத்துள்ளார். #MumbaiFormer #PMModi
    மும்பை:

    மகாரஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நிபாட் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் சாதே. விவசாயியான இவர் தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டு வந்தார்.

    தனது நிலத்தில் விளைந்த வெங்காயத்தை அறுவடை செய்தார். மொத்தம் 750 கிலோ இருந்தது. அவற்றை நாசிக் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றார். அங்கு ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் மட்டுமே விலை போனது.

    இதனால் மனம் நொந்துபோன சஞ்சய், ஒரு கிலோவுக்கு 1.40 ரூபாய் என பேசி முடித்தார். தன்னிடம் இருந்த மொத்த வெங்காயத்தையும் விற்றார். அதில் கிடைத்த பணத்துடன் வீடு வந்து சேர்ந்தார். கடந்த 4 மாத காலமாக கஷ்டப்பட்டு உழைத்தும் சரியான பலன் கிடைக்கவில்லையே என கடும் விரக்தியில் இருந்தார்.

    உடனடியாக அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இப்படி கஷ்டப்பட்டு கிடைக்கும் பணம் விவசாயிகளின் வாழ்க்கையை எப்படி கரை சேர்க்கும் என்பதை அதிகாரிகளுக்கு புரிய வைக்க முடிவெடுத்தார்.

    இந்நிலையில், வெங்காயம் விற்று கிடைத்த பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்ப முடிவு செய்தார். அருகிலுள்ள  
    தபால் அலுவலகம் சென்ற அவர், அங்கு மணியார்டர் மூலம் பிரதமர் நிதிக்கு அந்த தொகையை அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து சஞ்சய் கூறுகையில், 4 மாதம் கஷ்டப்பட்டு உழைத்தும் பலன் கிடைக்கவில்லை. எங்கள் கஷ்டம் உயர் அதிகாரிகளுக்கு தெரியவில்லை. எனவேதான் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளேன் என விரக்தியுடன் தெரிவித்தார்.

    கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறையினரால் தேர்வு செய்யப்பட்டவர் சஞ்சய் சாதே என்பது குறிப்பிடத்தக்கது.
    சீனாவில் பிச்சைக்காரர்கள், பணம் இல்லை என்று சொல்பவர்களிடம் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் யாசகம் பெற்று அதிக லாபம் பெறுகிறார்களாம். #China #DigitalTransaction
    பீஜிங்:

    உலகம் பணமில்லா பரிவர்த்தனையான, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. அதனால் கையில் பணமில்லை என்று சொல்லி விடுவதால் யாசகம் கேட்பவர்களின் நிலைமை மோசமாகி விட்டது.

    இந்த நிலையை சரிசெய்ய முடிவு செய்த சீன யாசகர்கள் தீர்வைக் கண்டுபிடித்துவிட்டனர். ஷான்டோங் மாகாணத்தில் உள்ள ஜினான் நகரில் இருக்கும் யாசகர்கள், தங்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற்றிக்கொண்டனர்.

    வழக்கமாக கையில் பாத்திரமும், பையில் பழைய அழுக்கு துணிகளுமாக இருக்கும் பிச்சைக்காரர்கள், தற்போது கையில் பாத்திரமும், பையில் துணிக்கு பதிலாக பிரிண்ட் செய்யப்பட்ட கியூ.ஆர்.கோட், கடன் அட்டைகளைத் தேய்ப்பதற்கான இயந்திரம் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள். பணம் இருப்பவர்களிடம் பணமாகவும், இல்லாதவர்களிடம் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்யும்படியும் சொல்கிறார்கள்.

    சீனாவின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், பெய்ஜிங் உட்பட பல நகரங்களில் கியூ.ஆர்.கோட் மூலம் யாசகர்கள் அதிக அளவில் வருமானம் பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த டிஜிட்டல் யாசகத்தை எல்லா இடங்களிலும் செய்துவிட முடியாது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களில்தான் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என கணக்கும் அவர்களுக்கு உள்ளதாம்.

    இதுபோன்ற இடங்களில் ஒரு யாசகர் மாதத்துக்கு சுமார் 44 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து விடுகிறாராம். டிஜிட்டல் பரிவர்த்தனையில், அமெரிக்காவை விட 50 மடங்கு அதிகமாக சீனா ஈடுபட்டுவருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. #China #DigitalTransaction
    ×