search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாபஸ்"

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என ஜாக்டோ-ஜியோ அமைப்பு இன்று அறிவித்துள்ளது. #JactoGeo
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று கூறுகையில், முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என உறுதியாக தெரிவித்தது.

    இதையடுத்து, மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.



    இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என ஜாக்டோ-ஜியோ அமைப்பு இன்று அறிவித்துள்ளது.

    சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறுகையில், தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளதாலும், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும், நீதிமன்றம் மற்றும் முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தனர். #JactoGeo
    சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற தொடங்கி விட்டதாக அமெரிக்க கூட்டுபடைகளின் செய்தி தொடர்பாளர் சீன் ரியான் தெரிவித்தார். #USMilitary #Syria
    பெய்ரூட்:

    சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு காலூன்றி ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். அவர்கள் நாட்டின் பெரும்பாலான நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதைத் தொடர்ந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்கு அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு முதல்முறையாக அப்போதைய ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில் அமெரிக்க வீரர்கள் சிரியா சென்றனர்.

    அவர்கள் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து வான்தாக்குதல்கள் நடத்தி, பல நகரங்களை அவர்களிடம் இருந்து மீட்டனர். அமெரிக்க படைகள் வருகைக்கு பிறகு அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெருத்த பின்னடைவை சந்தித்தனர்.

    இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த மாத இறுதியில் அதிரடியாக அறிவித்தார். இது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

    அமெரிக்கா தனது ராணுவத்தை திரும்ப பெற்றால், அது ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போர் நடவடிக்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும் என்பதால் டிரம்பின் சொந்த கட்சியிலேயே இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

    இந்த விவகாரத்தில் டிரம்ப் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் பதவி விலகினார். மேலும் பிரான்ஸ் உள்ளிட்ட நட்பு நாடுகள் டிரம்ப் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தின.

    அதனை தொடர்ந்து, சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை உடனடியாக திரும்பப் பெறப்போவதில்லை என்று டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். அதே போல் சிரியாவில் உள்ள குர்து இன மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை அமெரிக்க படைகள் சிரியாவில் இருக்கும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனும் தெரிவித்தார்.

    ஆனால் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற தொடங்கி விட்டதாக அமெரிக்க கூட்டுபடைகளின் செய்தி தொடர்பாளர் சீன் ரியான் நேற்று தெரிவித்தார்.

    இது குறித்து அவர் கூறுகையில், “சிரியாவில் இருந்து அமெரிக்க வீரர்கள் தங்களுடைய நாட்டுக்கு திரும்ப தொடங்கி இருக்கிறார்கள். பாதுகாப்பு நடவடிக்கைகளை தவிர வேறு எந்த விஷயங்கள் குறித்தும் நாங்கள் ஆலோசிக்கவில்லை” என தெரிவித்தார்.

    அதே சமயம் அமெரிக்க படை வீரர்கள் எந்தெந்த இடங்களில் இருந்து எப்போது புறப்படுகிறார்கள் என்பது குறித்து அவர் விரிவாக தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையில் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹசாகே மாகாணத்தின் மிலான் ராணுவ தளத்தில் இருந்து அமெரிக்க வீரர்கள் வெளியேறி வருகிறார்கள். டிரம்பின் அறிவிப்புக்கு பிறகு அமெரிக்க படைகள் சிரியாவில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் முறை” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #USMilitary #Syria
    உயர்மின்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 13 நாட்களாக நடத்தி வந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். #Powerlines #FarmersProtest
    சென்னை:

    தமிழகத்தில் விவசாய விளைநிலங்களின் வழியாக உயர் மின்கோபுர பாதை அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மாவட்ட விவசாயிகள் கடந்த 17-ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
     
    கேரளாவில் உள்ளதைபோல் சாலையோரம் கேபிள் மூலம் தமிழகத்தில் மின்சாரப் பாதை அமைத்து கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. கோவையில் சுல்தான்பேட்டையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கள்ளிப்பாளையத்திலும் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கிடையே கடந்த 23-ம் தேதி முதல் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி, விஸ்வநாதன், பச்சியப்பன், பால்ராஜ், சிவக்குமார், நாச்சிமுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட விவசாயிகள் 16 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



    இந்நிலையில், உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டத்தை இன்று தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். 

    திருப்பூர், ஈரோடு, கோவையில் 13 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜனவரி 3-ம் தேதி முதல் சென்னையில் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். #Powerlines #FarmersProtest
    நாகையில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்த மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், டீசல் விலை உயர்வை கண்டித்தும் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்க வலியுறுத்தியும் கடந்த 3-ந்தேதியில் இருந்து நாகையில் விசைப்படகு மீனவர்கள் 10 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் நாகையில் பல்வேறு இடங்களில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், 10 நாட்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு அளிக்கவில்லை என்றால் வருகிற 25-ந்தேதி நாகையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
    காற்றழுத்த தாழ்வு பகுதியால் அதிதீவிர கனமழை பெய்யும் என வெளியிடப்பட்ட எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #RedAlert #RedAlertWithdrawn #TNRains #IMD
    சென்னை:

    அரபிக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என்றும், இதன் காரணமாக 7-ம் தேதி தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், தற்போதைய வானிலை  நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



    நேற்று உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் இருக்கிறது. எனவே, நாளை அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை. எனவே, தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்ப பெறப்படுகிறது.

    எனினும், இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் 8-ம் தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.  

    கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு இன்று முதல் 8-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #RedAlert #RedAlertWithdrawn #TNRains #IMD 
    தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. #RationShopEmployeesStrike
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும். ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பொருள்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறுகையில், அரசுடன் கூட்டுறவு சங்க பதிவாளர், கூடுதல் பதிவாளர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். #RationShopEmployeesStrike
    ×