search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்குவாரி"

    சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிக்கராயபுரம் கல்குவாரி நீர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போர்வெல் கிணற்று நீரை பெறவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. #Drinkingwater #Shortage
    சென்னை:

    சென்னையில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 757.6 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் வெறும் 343.7 மி.மீட்டர் மழை மட்டுமே கிடைத்தது. இது 54 சதவீதம் மழை குறைவு ஆகும்.

    பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் நிரம்பவில்லை.

    தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 200 மி.கனஅடியும், (மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி), சோழவரம் ஏரியில் 48 மி.கனஅடி (1081 மி.கனஅடி), புழலில் 741 மி.கனஅடியும் (3300 மி.கனஅடி), செம்பரம்பாக்கத்தில் 53 மி.கனஅடியும் (3645 மி.கனஅடி) தண்ணீர் உள்ளது.

    இந்த நான்கு ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி வெறும் ஆயிரத்து 42 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. இது மொத்த கொள்ளளவில் 9 சதவீதம் ஆகும்.

    இதில் சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு மிகவும் குறைந்த அளவே இருப்பதால் விரைவில் வறண்டு விடும் நிலையில் இருக்கிறது. இதேபோல் மற்ற ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

    ஏரிகளில் தற்போது இருக்கும் நீரை கொண்டு வருகிற மார்ச் மாதம் வரை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்ய முடியும். எனவே இந்த ஆண்டு சென்னை மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி உள்ளனர்.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க இப்போதே அதிகாரிகள் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார்கள். சிக்கராயபுரம் கல்குவாரி நீர், காஞ்சீபுரம்- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போர்வெல் கிணற்று நீரை பெறவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதேபோல் புதிதாக போர்வெல் அமைக்கும் இடங்களையும், மற்ற ஏரிகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தவும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் புதிதாக 200 குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் திட்டமிட்டு இருக்கின்றனர். இதனை வைத்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை ஓரளவு சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் உள்ளனர்.

    இப்போதே சென்னையில் பல இடங்களில் தண்ணீர் சப்ளை குறைக்கப்பட்டு விட்டது. தென்சென்னையில் இந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து சில பகுதிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    இப்போது வரை சென்னை மக்களின் ஒரே நம்பிக்கையாக வீராணம் ஏரி மட்டுமே உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளளவான 1,375 மி.கனஅடியை எட்டி நிரம்பி காணப்படுகிறது. அங்கிருந்து சென்னை குடிநீர் தேவைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. #Drinkingwater #Shortage
    கல்குவாரியில் வேலை ஆட்கள் சரியாக வேலை செய்கிறார்களாக என்று பார்க்க சென்ற சூப்பர்வைசர் கால் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஊத்தங்கரை:

    தருமபுரி மாவட்டம், ஏரியூரை அடுத்த சோமலிகாடு பகுதியை சேர்ந்தவர் தம்பித்துரை (வயது38). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்த தொவரப்பள்ளியில் தனியார் கல்குவாரியில் சூப்பர் வைசராக இருந்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    நேற்று காலையில் வழக்கம் போல் தம்பித்துரை கல்குவாரிக்கு வேலைக்கு சென்றார். பின்னர் கல்குவாரியில் வேலை ஆட்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்று நடந்து சென்று பார்த்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கல்குவாரியில் பள்ளமான பகுதியில் தம்பித்துரை விழுந்தார். 

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனே மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே ஆம்பிலன்சில் தம்பித்துரை பரிதாபமாக உயிரிழந்தார்.
    சங்கரன்கோவில் அருகே ஆனையூர் பகுதியில் உள்ள கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கிராமமக்கள் இன்று மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆனையூர் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒரு கல்குவாரி செயல்பட்டு வந்தது. இதன் லைசென்சு புதுப்பிக்கப்படாததால் சில ஆண்டுகளாக கல்குவாரி செயல்படாமல் இருந்தது.

    இந்நிலையில் இந்த குவாரியின் லைசென்சு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதையடுத்து குவாரியை திறக்க ஆரம்பகட்ட பணிகள் தொடங்கின. இதைத்தொடர்ந்து இந்த குவாரியை திறக்கக்கூடாது என அப்பகுதியினர் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். அப்போது தாசில்தார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஆனையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் இன்று ஆனையூர் மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் சங்கரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    ×