search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்துமஸ்"

    விவிலியத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது நூல் ‘எண்ணிக்கை’. எபிரேய மொழியில் இந்த நூலின் பெயர் ‘பெமிபார்’ என்பதாகும். இதற்கு ‘பாலை நிலத்தில்’ என்பது பொருள்.
    விவிலியத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது நூல் ‘எண்ணிக்கை’. எபிரேய மொழியில் இந்த நூலின் பெயர் ‘பெமிபார்’ என்பதாகும். இதற்கு ‘பாலை நிலத்தில்’ என்பது பொருள்.

    இஸ்ரயேல் மக்களின் பாலை நில வாழ்க்கையைச் சொல்வதால் இந்த பெயர் இடப்பட்டது. ஆனால் கிரேக்க மொழிபெயர்ப்பு செய்தபோது அதன் தலைப்பை ‘அரித்மோய்’ என்று மொழிபெயர்த்தனர். இதற்கு ‘எண்ணிக்கை’ என்பது பொருள்.

    இந்த நூலில் இரண்டு முறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது. தொடக்கத்தில் ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. பின்னர் ஒரு தலைமுறை கடந்தபின் மீண்டும் ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது.

    இந்த நூலின் ஆசிரியரும் மோசே தான். விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களும் ‘தோரா’ என அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்து நூல்களையும் மோசே தான் எழுதியுள்ளார்.

    எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள், கடவுள் வாக்களித்த கானான் நாட்டிற்கு நுழையச் சென்றார்கள். ஒவ்வொரு குலத்தில் இருந்தும் ஒருவராக பன்னிரண்டு பேர் முதலில் ஒற்றர்களாக நாட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சென்று நாட்டை ‘வேவு’ பார்த்துத் திரும்பினர். நாடு வளத்தின் உச்சமாக இருந்தது. ஆனால் அங்குள்ள மக்கள் வலிமையாய் இருந்தனர்.

    காலேபு, யோசுவா என்பவர்களைத் தவிர மற்ற எல்லாருமே உள்ளே செல்வது ஆபத்து, நமக்கு அழிவு நிச்சயம் என அஞ்சினர். கடவுள் தங்களோடு இருப்பதை மறந்தனர். இஸ்ரயேல் மக்களும் அந்த நாட்டுக்குள் செல்ல பயந்து கடவுளுக்கு எதிராகவும், மோசேக்கு எதிராகவும் முணு முணுத்தனர். கடவுள் அவர்கள் மீது கடும் கோபம் கொண்டார்.

    ‘இந்தத் தலைமுறையில் இருக்கும் எவனுமே இந்த நாட்டுக்குள் நுழைய மாட்டான்’ என கடவுள் சாபமிட்டார். மக்கள் அதிர்ந்து போய் நாட்டுக்குள் நுழைய முயன்றார்கள்.

    மோசே அவர்களைத் தடுத்தார். ‘இதுவும் கடவுளின் கட்டளையை மீறிய செயலாகி விடும்’ எனச்சொல்லி, மக்களைத் தடுத்தார்.

    இஸ்ரயேல் மக்கள் தங்கள் தவறினால் பாலை நிலத்தில் அலைந்து திரியத் தொடங்கினார்கள். இந்த நூல் மக்கள் சீனாய் மலையிலிருந்து மோவாபின் சமவெளிகளில் வந்து சேர்வது வரையான நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

    இந்த நூலிலும் குருக்கள் ஆற்றவேண்டிய பணிகள், லேவியரின் பணிகள், லேவியருக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஊதியம், தூய்மையாக்கும் சட்டங்கள் என பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.

    ‘கடவுளின் கோபம் இஸ்ரயேல் மக்கள் மேல் இருந்தாலும் அவர்களை கடவுள் பாலை நிலத்தில் பாதுகாத்தார். அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றினார்’ என இறைவனின் கரிசனையை இந்த நூல் படம்பிடித்துக் காட்டுகிறது.

    இந்த நூலில் தான் பிரபலமான பிலயாம் தீர்க்கதரிசியின் கதை இடம்பெறுகிறது. இஸ்ரயேல் மக்களைச் சபிக்க வேண்டுமென பாலாக் மன்னன் பிலயாமை அழைக்கிறார். கழுதையில் பிலயாம் வருகையில் கடவுளின் தூதர் வழிமறிக்கிறார். பிலயாமின் கழுதை பேசுகிறது. மக்களைச் சபிப்பதற்காக வந்தவர் இறைவனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு இஸ்ரயேல் மக்களை மூன்று முறை வாழ்த்துகிறார்.

    இந்த நூலிலும் இறைமகன் இயேசுவை மையப்படுத்தும் நிகழ்வுகளின் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. பாலை நிலத்தில் பாம்பு கடிபட்டு மக்கள் இறந்து போகின்றனர்.

    ‘பாம்பு கடிபட்டவர்கள் பிழைக்க வேண்டுமெனில் வெண்கலத்தில் ஒரு பாம்பைச் செய்து அதை மோசே உயர்த்திப் பிடிக்கவேண்டும்’ என்கிறார் கடவுள்.

    உயர்த்திப் பிடிக்கப்பட்ட வெண்கலப் பாம்பைப் பார்த்தவர்கள் பிழைத்துக் கொள்கின்றனர்.

    புதிய ஏற்பாட்டில் ‘பாம்பு’ என்பது ‘பாவம்’ அல்லது ‘சாத்தான்’ என்பதன் குறியீடு.

    ‘பாவத்தில் வீழ்ந்தவர்கள் கண்களை ஏறெடுத்து சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கிப்பார்த்தால் மீட்பைப் பெற்றுக்கொள்வார்கள்’ என்பது இது சொல்கின்ற ஆன்மிகப் பாடம்.

    ‘பாலை நிலத்தில் மோசே பாம்பை உயர்த்தியது போல மனு மகனும் உயர்த்தப்பட வேண்டும்’ எனும் இயேசுவின் வார்த்தை இதை விளக்குகிறது.

    லேவியர் நூலில் காணப்படும் பல சிந்தனைகள் இந்த நூலிலும் காணப்படுகின்றன. இரண்டு நூல்களையும் ஒரே நபர் எழுதினார் என்பதும், அவர் கடவுளிடமிருந்து கட்டளைகளை நேரடியாகப் பெற்றார் என்பதும், இது ஒரே ஒரு நீள் பயணத்தின் பதிவுகள் என்பதும் அதன் காரணமாக இருக்கலாம்.

    விடுதலைப் பயண நூலில் கம்பீரமாகக் காட்டப்பட்ட மோசே இந்த நூலில் ஒரு பக்குவப்படுத்தப்பட்ட மக்கள் தலைவராக மாறுகிறார். இரக்கம், மன உருக்கம், தாழ்மை, பணிவு, எளிமை கொண்ட ஒரு அற்புதமான தலைவராக அவர் சித்தரிக்கப்படுகிறார்.

    ‘பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார்’ என்கிறது (எண் 12:3) இந்த நூல்.

    கடவுளின் கோபம் வெளிப்படும் என்பதை இந்த நூல் ஊர்ஜிதப்படுத்துகிறது. ஒரு தந்தையாக வழிநடத்தும் அவர், தவறுகளைக் கண்டால் தண்டிப்பவராக மாறுகிறார். அவருடைய தண்டனைக்கு முன்னால் சிறியோர் பெரியோர் என்று இல்லை. தன் பிரியத்துக்குரியவர் மற்றவர் என்றில்லை. தலைவர் தொண்டர் என்றில்லை. கீழ்ப்படியாமை உடைய மக்களையும், பாவம் செய்யும் மக்களையும் கடவுள் பாகுபாடின்றி தண்டிக்கிறார். இந்த சிந்தனை இந்த நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

    சேவியர்.
    கிறிஸ்துமஸை முன்னிட்டு எஸ்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் அமைப்பிற்கு சென்ற நடிகை சமந்தா, அவர்களுக்கு புதிய உடைகளை பரிசாக அளித்து மகிழ்வித்துள்ளார். #Samantha #NagaChaitanya
    சினிமா நட்சத்திரங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடும் படங்கள் கடந்த 2 நாட்களாக வைரல் ஆகின்றன. இதில் வித்தியாசமாக சமந்தா மட்டும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் அமைப்பிற்கு சென்று கொண்டாடி உள்ளார்.

    கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்துக்கு பதிலாக கிறிஸ்துமஸ் தேவதைபோல் சென்றுள்ளார். அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியதுடன் அவர்களுடன் இணைந்து நடனம் ஆடி மகிழ்ந்தார். முன்னதாக அனைவரையும் பிரபல துணிக்கடைக்கு அழைத்து சென்று, ‘உங்களுக்கு என்ன உடை பிடிக்குமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்.



    சந்தோ‌ஷத்தில் குதித்த குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான உடைகளை தேர்வு செய்தனர். இதுகுறித்து சமந்தா கூறும்போது, ’தொண்டு என்பது பரிதாபத்தால் செய்யப்படுவது அல்ல. அது அன்பால் செய்யப்படுவது. இன்றைக்குத்தான் நான் அதிகமாக அன்பை பெற்றேன், பகிர்ந்தேன்.



    இன்றைக்கு ஒரு நாள் மட்டுமல்லாமல் இந்த ஆண்டு முழுவதும் என்னுடைய பணி இவர்களுக்காக செய்ய காத்திருக்கிறேன். கிறிஸ்துமஸ் தாத்தா வருகைக்காக காத்திருக்காமல் அவராக நாமே ஆகி பரிசுகள் வழங்கிடுவோம்’ என்றார். #Samantha #NagaChaitanya

    ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் நிலையில், அங்கு புத்தாண்டு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth #HappyNewYear2019
    நடிகர் ரஜினிகாந்த் ஒருவார பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். குடும்பத்துடன் சில நாட்கள் தங்கி ஓய்வு எடுக்கும் அவர் ஜனவரி முதல் வார இறுதியில் சென்னை திரும்புகிறார்.

    ரஜினி மட்டும் முன்னதாக சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினர் இன்று இரவு அல்லது நாளை செல்ல இருக்கிறார்கள்.

    அமெரிக்காவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக் காலம். நகரங்களில் அலங்கார விளக்குகளுடன் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

    கிறிஸ்துமசுக்கு முந்தைய நாளான திங்கட்கிழமை மாலை 6 மணி வரையிலும் கடைகள் திறந்திருக்கும். பெரும்பாலான ஊர்களில் கடைசி நேர பரிசுப் பொருட்கள் வாங்ககூட்டம் அலைமோதும். நியூயார்க் போன்ற நகரங்களில் கடும் குளிர் என்ற போதிலும், சாலைகளிலும் கடைவீதிகளிலும் அலை அலையாக மக்கள் கூட்டம் இருக்கும்.

    அமெரிக்காவுக்கு ஓய்வுக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் நியூயார்க்கில் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. அங்கு கடைவீதியில் ஸ்வெட்டருக்கு மேல் நீண்ட கோட் அணிந்து கையுறை, தலையில் குல்லா தொப்பியுடன் எளிதில் அடையாளம் தெரியாத வகையில் நடந்து சென்றுள்ளார்.



    ஆனாலும் அடையாளம் கண்டுள்ள ரசிகர்கள் அவரை அணுகி படம் எடுத்துள்ளனர். மகிழ்ச்சியுடன் படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டுள்ளார்.

    நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் புத்தாண்டு கொண்டாட்டம் புகழ்பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இந்தியர்களும் பெருவாரியாக கலந்து கொள்வது வழக்கமாகும்.

    நியூயார்க்கை வலம் வரும் ரஜினிகாந்த் டைம்ஸ் கொயர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மாறுவேடம் அணிந்து கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Rajinikanth #HappyNewYear2019 

    புதிய படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நடித்து வரும் ஆரி, படப்பிடிப்பில் கிறிஸ்துமஸ் விழாவை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி இருக்கிறார். #Aari
    உலகமெங்கும் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர்கள் தங்களுடைய ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ஆரி கிறிஸ்துமஸ் விழாவை ஆசிரமக் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.

    ஆரியும், ஐஸ்வர்யா தத்தாவும், பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்கள். எஸ்.எஸ்.ராஜ மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இப்படத்தின் இடைவெளியின் போது படப்பிடிப்பில் இருந்த ஆரியும், ஐஸ்வர்யா தாத்தாவும், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆசிரம குழந்தைகளை படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைத்து பொம்மைகள், சான்டா கிளாஸ் மாதிரி பரிசு பொருட்கள் மற்றும் மதிய உணவும் கொடுத்து அவர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி உள்ளனர்.
    இயேசு கிறிஸ்து மண்ணகத்தில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து மரித்தது எல்லாமே மானுட மீட்புக்குக்காகத்தான்.
    ‘மீட்பு’ என்பதற்கு உண்மையான பொருளே ‘முழுமையான விடுதலை’ என்பது தானே?

    ‘உறவுக்குக் கை கொடுத்தார், மக்கள் உரிமைக்குக் குரல் கொடுத்தார், அன்புக்கு ஒளி கொடுத்தார், உலக அமைதிக்கு வழி வகுத்தார், மீட்புக்கு உயிர் கொடுத்தார், இறை ஆட்சிக்கு விதை விதைத்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்’ என்கிறது யோவான் 3-வது அதிகாரம் 14-17 வசனங்கள்.

    இறைத்தூதராக மண்ணில் பிறப்பெடுத்த இயேசு அரச குலத்திலேயே அவதரித்திருக்க முடியும். ஆனால், ஆடம்பர வாழ்க்கைச் சிந்தனையில் இருந்து மக்களை மீட்பதற்காகத்தான், ஏழைப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எளிய மனிதர்களின் தோழனாகவும் வாழ்ந்து காட்டினார்.

    அறியாமை இருளிலிருந்து மீண்டு, மனிதர்கள் ஞான ஒளி பெறவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டவே, குறுக்குப் புத்தியுடன் கேள்வி கேட்ட சதுசேயர்களுக்கும், பரிசேயர்களுக்கும் தனது 12-வது வயதிலேயே ஆலயத்தில் வைத்து பதிலடிகொடுத்தார்.

    பெண் விடுதலையை மீட்டெடுக்கவே, ஓர் விபசாரப் பெண்ணை அவர் முன் நிறுத்தி, தண்டனை வழங்கக் கோரிய பரிசேயர்களுக்கு, ‘உங்களில் பாவம் செய்யாதவன், இவள் மீது கல் எறியட்டும்’ என்று கண்டனம் தெரிவித்தார்.



    தான் யூதகுலம் என்ற உயர்குடியில் பிறந்தாலும் அடிமைத் தளையிலிருந்து, மனிதர்களை மீட்டெடுக்கவே ஒடுக்கப்பட்ட புறவினத்தாரோடும், ஒதுக்கி வைக்கப்பட்டத் தொழுநோயாளிகளோடும் நெருங்கிப் பழகி இயைந்த வாழ்க்கை நடத்தினார்.

    இறைவன் உறையும் ஆலயத்தை வியாபாரிகளிடமிருந்து மீட்கவே அன்று கோவிலைச் சந்தையாக்கிய அந்த கொள்ளையர்களுக்கு சாட்டையடி கொடுத்து சரித்திரம் படைத்தார் இயேசு கிறிஸ்து.

    பகைமை, வெறுப்பு வேற்றுமைகளில் இருந்தெல்லாம் மனித குலத்தை மீட்டு, அவர்களிடையே அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை தழைக்கச் செய்யத்தானே அன்று மலைப்பிரசங்கம் முழங்கினார்.

    மலைப்பிரசங்கம் வழியாகப் பொதுவுடமைச் சிந்தாந்தத்தை முழங்கிய முதல் புரட்சியாளன் இயேசு கிறிஸ்து தான் என்பதை யாரும் மறுக்க முடியுமா?

    பசியிலிருந்தும், பட்டினியிலிருந்தும் மனிதர்களை மீட்கவே அன்றொரு நாள் அப்பத்தையும், மீனையும் ஆசீர்வதித்து அதை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளிக்கச் சொன்னார்.

    அவரது பிறப்பு இயற்கை அமைத்த ஒரு குகையில். இறப்பு இயற்கையினால் கிடைத்த சிலுவை மரத்தில். ஞானஸ்நானம் யோர்தான் நதியில். தனது சீடர்களைத் தேர்ந்தெடுத்தது கடற்கரையில் தான்.

    கெத்சேமெனித் தோட்டத்தில் தான் ஜெபித்தார். கெடுதலான அலகையை மலையில் தான் சபித்தார். வானத்துப் பறவைகளைப் பார்க்கச் சொன்னார். வளர்ந்து நிற்கும் நெற்கதிரை நோக்கச் சொன்னார்.

    இயற்கைப் பேரழிவிலிருந்து உலகை மீட்கவே, இயற்கையை நேசித்து அவற்றோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார் இயேசு.

    அநீதிகள், அக்கிரமங்களின் பிடியிலிருந்து நீதியையும், நேர்மையையும், நியாயத்தையும் மீட்கத்தானே, அன்று அதிகாரத்தின் உச்சத்திலிருந்த பிலாத்து அரசன் கன்னத்தில் அறைந்தபோது, நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யவில்லையெனில் ஏன் என்னை அறைந்தாய் என்று போர்க்குரல் எழுப்பினார்?.

    கயவர்களின் நயவஞ்சகங்களைச் சந்திக்கிறபோது, பொறுமை உணர்வை மீட்டெடுக்கவே கொடூரமான முள் முடியையும், அவமானகரமான சிலுவைச்சாவையும் ஏற்றுக்கொண்டார், நம்மைப் பாவங்களிலிருந்து மீட்க.

    இதைத்தான் எசாயா 53:4-6 வசனங்களில் ‘அவர் நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

    குறைந்த வயதிலேயே மரணத்தை எய்தினாலும், குறிக்கோள் மாறாத ஆன்மிக நாயகனாகவும், உயர்ந்த சமூகப்போராளியாகவும் குவலயத்தில் வாழ்ந்து காட்டி விட்டுப் போனவர் இயேசு கிறிஸ்து.

    எனவே அவர் காட்டிய மீட்பின் வழி நடப்போம். அனைத்து ஆனந்தங்களையும் பெறுவோம்.

    கவிஞர் எல்.பிரைட், தேவகோட்டை.

    நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தலைவர்கள் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Christmas
    சென்னை:

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி:-


    இறைமகன் இயேசு மனிதராய் அவதரித்த புனித நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழும் அன்புச் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ஏழைகளையும், எளிய மனத்தோரையும், கைவிடப்பட்டோரையும் ‘‘இறைவனின் பிள்ளைகள் நீங்கள்’’ என்று வாஞ்சையோடு அரவணைத்து மானிட இனம் நல்வழியில் வாழ, புதிய ஏற்பாடுகளை போதித்த இயேசு பெருமான், தன் போதனைகளாலும், வாழ்ந்து காட்டிய நெறிகளாலும், நம் அனைவரின் வணக்கத்திற்குரியவராகத் திகழ்கிறார்.

    இயேசுபிரான் போதித்த அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம், பகிர்ந்து வாழ்தல் என்னும் உயரிய நெறிகளை வாழ்வில் நாமும் கடைபிடிக்க உறுதி ஏற்போம். அதுவே உண்மையான கிறிஸ்துமஸ் வழிபாடு.

    கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாகக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்வதோடு புதிதாகப் பிறக்க உள்ள ஆண்டில் மகிழ்ச்சியும், அமைதியும் பொங்கிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து மகிழ்கிறோம்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-


    சிறுபான்மை மக்களுக்கு உரிய மரியாதையும், கவுரவமும் தந்து அனைவரையும் ஒன்றாக மதித்து நடந்திடும் நல்லரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஏற்பட இயேசு கிறிஸ்து அருள் பாலிக்கட்டும்.

    உயர்ந்த நற்பண்புகளை உலகில் விதைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரின் வாழ்வில் வளமும், நலமும் பெருகிட உளமாற வாழ்த்துகிறேன். அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    மனிதர்களுக்கு அன்பு, கருணை மற்றும் மன்னிப்பை போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாட்டில் அமைதி நிலவ வேண்டும், பொறாமைகள் அகல வேண்டும், ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம் ஆகும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    பகையும் வெறுப்பும் வளர்ந்து படுகொலைகளும் பஞ்சமா பாதகங்களும் அனைத்து மக்களையும் அச்சுறுத்திக்கொண்டு இருக்கக்கூடிய அபாயகரமான சூழல் வளர்ந்து வரும் இன்றைய நிலையில் சிலுவையைச் சுமந்து சித்திரவதைகளைத் தாங்கி, கல்வாரியில் ரத்தம் சிந்திய இயேசு பெருமானின் மனித நேய அமுத மொழிகள், தமிழ் நாட்டுக்கு இன்றியமையாத தேவை ஆகும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    த.மா.கா என்றும் கிறிஸ்தவ மக்களின் தோழனாக, அரணாக, பாதுகாவலராக இருக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் எளிய நடையையும், நற்பண்புகளையும் பின்பற்றி வருகின்ற கிறிஸ்தவ சமுதாய மக்கள் எல்லோரும் அவரின் நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து நல்வாழ்க்கை வாழவும், வாழ்வில் முன்னேற்றம் காணவும், நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் இறைவன் துணை நிற்க வேண்டி, கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்ஆர். தனபாலன்:-

    இயேசுவின் கட்டளைகளையும், போதனைகளையும் ஏற்றுக்கொண்டு அமைதியான வழியில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வில் எல்லோருடைய அன்பையும், ஆதரவையும் பெற்று சமாதானத்தோடு வாழ்ந்திட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்.

    ஏழை, எளியோர் ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு பார்வையற்றோர், வாய்பேச முடியாத கேட்கும் திறனற்றவர்கள், தொழுநோயாளிகள் என்று சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட அப்பாவிகளுக்காக தேவகுமாரன் பிறந்த இந்நாளில் பிரார்த்தனைகள் செய்யப்படுவதோடு அவர்களுக்கு அன்னதானமும், பல்வேறு கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகின்றன. இந்நாளில் நம் நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவ பெருமக்களுக்கும் இனிய ‘‘கிறிஸ்துமஸ்’’ நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Christmas
    அருமனையில் கிறிஸ்துமஸ் கலாசார ஊர்வலம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.
    அருமனையில் 21-வது கிறிஸ்துமஸ் விழா கடந்த 19-ந்தேதி தொடங்கி நேற்று வரை 5 நாட்கள் நடந்தது. 19-ந்தேதி மாநில அளவில் இறகு பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது. 22-ந்தேதி மாலையில் நடந்த விழாவில் திரைப்பட இயக்குனர் சந்திரசேகர் கலந்து கொண்டு பேசினார்.

    கிறிஸ்துமஸ் கலாசார ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் சிங்காரி மேளம் உள்பட 60-க்கும் மேற்பட்ட கலைக்குழுக்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். புண்ணியம் சந்திப்பில் இருந்து புறப்பட்ட கலாசார ஊர்வலம், சிறப்பு விருந்தினர்களுடன் நெடியசாலை, பனிச்சவிளை, அருமனை சந்திப்பு, நெடுங்குளம் சந்திப்பு வழியாக மேலத்தெருவில் உள்ள விழா மேடையை அடைந்தது. முன்னதாக அங்கு பாடல் போட்டிகள் நடந்தது.

    கிறிஸ்துமஸ் விழா மாநாடு இரவு நடைபெற்றது. இதற்கு அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். தலைவர் டென்னிஸ், பொருளாளர் கென்னத், துணை தலைவர் ஜோஸ் செல்வன், இணை செயலாளர் சி.டி.அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பென்சாம் வரவேற்றார்.

    இதில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெங்கின்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அருமனை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    முன்னதாக விழாவுக்கு வந்த டி.டி.வி. தினகரனுக்கு குமாரகோவில் சந்திப்பில் ஜெங்கின்ஸ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 
    அருமனையில் நாளை கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்புடன் ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் டிடிவி தினகரன் பங்கேற்கிறார். #ttvdinakaran

    மார்த்தாண்டம்:

    அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் 21-வது கிறிஸ்துமஸ் விழா கடந்த 19-ந்தேதி தொடங்கி நாளை (23-ந்தேதி) ஊர்வலம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மத நல்லிணக்க பொதுக்கூட்டம் ஆகியவற்றுடன் நிறைவடைகிறது.

    நிகழ்ச்சியின் முதல் நாள் கலைநிகழ்ச்சிகளும், மாநில அளவிலான இறகு பந்து போட்டியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை மாநில அளவிலான ஓணப்பந்துப் போட்டி நடைபெற்றது. நேற்று மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இன்று (22-ந்தேதி) மத நல்லிணக்க மாநாடு ஆகியன நடக்கிறது.

    நாளை (23-ந்தேதி) நெடிய சாலை சந்திப்பில் இருந்து 60-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஆயிரத்துக்கும் அதிகமான கலைஞர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்புடன் ஊர்வலம் நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து நடைபெறும் மதநல்லிணக்க பொதுக்கூட்டத்திற்கு கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸடாலின் தலைமை தாங்குகிறார். தலைவர் டென்னிஸ், பொருளாளர் கென்னத், துணை தலைவர் ஜோஸ் செல்வன், இணை செயலாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

    மேலும் பி‌ஷப்புகள், சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், போதகர்கள், அருட்பணியாளர்கள், கிறிஸ்தவ அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

    தொடர்ந்து 1000 ஏழைகளுக்கு நல உதவிகள், மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முடிவில் கலைநிகழ்ச்சிகள், திரைப்பட பாடகர்கள் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. #ttvdinakaran

    மனிதனின் நடத்தைக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய இயேசுவின் பிறந்த தினம், கிறிஸ்துமஸ் என்ற பெயரில் உலக அளவில் கொண்டாடப்படுகிறது.
    உலகத்தின் தோற்றம் முதல் இதுவரை குறிப்பிட்ட காலகட்டங்களில் பல்வேறு வகைப்பட்ட தலைவர்கள், மேதைகள் உருவாகி வருவதை பார்த்து வருகிறோம். அரசியல், ஆன்மிகம், விஞ்ஞானம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் மிளிர்ந்து மக்களுக்கான கருத்துகளை இவர்கள் அளித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களின் பல கருத்துகள் காலம் மாறும்போது நாளடைவில் நிலைக்காமல் போய்விட்டன.

    உலகத்தில் இதுபோன்ற தலைவர்களின் பிறப்பு இயல்பானதாகத்தான் இருந்தன. புத்திகூர்மை, அறிவுத்திறன் போன்றவற்றால் இடைக்கால வாழ்க்கையில் தான் அவர்கள் உயர்ந்தனர். மறையும்போது பல தலைவர்களின் பெயர் மங்கியும், குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டதாகவும் தான் இருக்கின்றன.

    இதுபோன்ற தலைவர்களின் வரிசையில் ஆன்மிகக் கருத்துகளை வழங்கியவர் தான் இயேசு என்ற பரவலான தவறான கருத்து உலகம் முழுவதும் நிலவிக்கொண்டிருக்கிறது. சிறப்பு குணங்களால் மேம்பட்டு, மனிதர்கள் நடுவில் தலைவராக ஜொலிப்பவர்களின் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் அல்ல இயேசு.

    ஏனென்றால், இறைவனின் மகனான அவர், மக்களுக்கு ஆன்மிகத்தை போதிப்பதற்காக மனிதர்களுக்குள் ஒரு மனிதனாக பூமியில் இறைவனால் அனுப்பப்பட்டவர். அதற்காக கன்னியின் வயிற்றில் கருவாகவே வைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பு, இடைப்பட்ட வாழ்க்கை, இறப்பு ஆகிய மூன்றுமே மொத்த உலகத்தையும் அதிரச் செய்வதாக இருந்தன, இருக்கின்றன.

    இறைவனின் மகனாக இருப்பதால், பூமியில் பிறந்த மனிதர்கள், ஞானிகள், தலைவர்கள், பிரமுகர்களின் உபதேசங்கள் இயேசுவுக்குத் தேவையில்லாமல் இருந்தன. இறைவனின் சித்தத்தை அறிந்து இயேசு செயல்பட்டாரே தவிர, வேறு யாரிடமும் சென்று ஞானம் பெற அவருக்கு அவசியம் இருந்ததில்லை.

    சரீரத்தில் இருந்து பிரிந்த பிறகு ஆத்மாவுக்கு கிடைக்கும் அடுத்த வாழ்க்கையை நல்லிடத்தில் சேர்ப்பதற்கு மனிதனுக்கு என்ன வழி இருக்கிறது? என்பதை மனித குலத்துக்கு போதிப்பது ஒன்றுதான் இறைசித்தமாயும், அது ஒன்றுதான் தனது வாழ்நாளின் நோக்கம் என்பதையும் உணர்ந்து இயேசு வாழ்க்கை நடத்தினார்.

    எனவே செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை போன்ற உலக சம்பந்தப்பட்ட எதையும் அவர் நாடவில்லை. இவற்றின் மீது நாட்டம் வந்துவிடக் கூடாது என்பதற்காக தனது வாழ்க்கை சூழ்நிலைகளையும் அதற்கேற்றபடி திட்டமிட்டு அமைத்துக் கொண்டார்.

    அதாவது, பூங்காக்கள், தோட்டங்கள், மலையோரங்கள் என மற்றவர்களின் பார்வைக்கு மறைக்கப்படாத இடங்களில் தங்கினார். மக்களுக்கு போதிப்பதில் அதிக நேரம் செலவிட்டார். எங்கு, எதைப்பேச வேண்டும் என்பதை அளந்து பேசினார். யார் மீதும் அரசியல் விமர்சனங்கள், அநியாய குற்றச்சாட்டுகளை அவர் வைக்கவில்லை. அதாவது, உலக இயல்பு நிலையில் இருந்து மாறி வாழ்ந்து காட்டினார்.

    செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை போன்ற அம்சங்கள் அனைத்துமே மனிதனின் சரீரத்தை ஈர்ப்பவையாக உள்ளன. ஆனால் அவற்றில் வைக்கப்பட்ட சோதனைகளையும் சரீரத்தில் இருந்த நிலையிலும் இயேசு தடுமாறாமல் வென்றார். ஏனென்றால், அவரது நோக்கம் மனிதகுல மீட்பு என்ற ஒன்றில்தான் உறுதியாக இருந்தது. அந்த நோக்கத்துக்கு முரணான எதையும் அவர் விரும்பவில்லை.

    ஒவ்வொரு மனிதனுக்கு ஆசை காட்டி, அதன் மூலம் சரீரத்தையும் நெருக்கி, பாவங்களுக்குள் விழச்செய்யும் செல்வம், செல்வாக்கு, நிர்வாக அதிகாரம், கண்களின் இச்சை ஆகிய அம்சங்களுக்கு மனிதர்களும் தன்னைப்போல தப்ப முடியும் என்பதையும், தங்களின் ஆத்மாவை அடுத்த நல்வாழ்க்கைக்கு தன்னைப்போல தயார் செய்துகொள்ள முடியும் என்பதையும், நல்லொழுக்க செயல்பாட்டின் மூலம் செய்துகாட்டியவர் இயேசு.

    எனவேதான் மரணமும் அவரை மேற்கொள்ளவில்லை. அவரை நம்பி பின்பற்றுபவனின் சரீரமும் நல்வாழ்வை அடைவதற்காக மகிமையின் சரீரமாக உயிர்ப்பிக்கப்படும் என்பதும் அவர் உயிர்த்தெழுந்த பிறகு நடந்தது.

    ஆனால், உலகுக்கு போதிப்பதை அப்படியே தனது வாழ்க்கையில் செய்து காட்டியவர்கள் எவரும் இல்லை. பல்வேறு போதனையாளர்கள், தத்துவ மேதைகள், ஞான சொற்பொழிவாளர்களின் சொந்த மற்றும் அந்தரங்க வாழ்க்கை சுத்தமாக இருந்ததில்லை.

    மனிதனின் நடத்தைக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய இயேசுவின் பிறந்த தினம், கிறிஸ்துமஸ் என்ற பெயரில் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்தநாளை கொண்டாடும்போது, அவரது வாழ்க்கையோடு நமது வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியம். அவரது திட்டமிட்ட வாழ்க்கையை நாம் அமைத்திருக்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

    முதலில், இறைவன் சித்தத்தின்படி அவர் கொடுத்த அம்சங்களைத் தாண்டி வேறு எதையும் சம்பாதிக்க அவசியம் இல்லை என்பதை வாழ்க்கையின் உறுதியான தீர்மானமாக கொண்டிருந்தார். இரண்டாவதாக, அந்தத் தீர்மானத்திற்கேற்றபடியான வாழ்க்கை முறையை இயேசு அமைத்துக் கொண்டார். இந்த இரண்டும்தான், இந்த பூமிக்கு அவர் அனுப்பப்பட்டதற்கான இறைசித்தத்தை முழுமையாக நிறைவேற்ற அடிப்படையாக அமைந்திருந்தன.

    இயேசுவுக்கு குடும்ப வாழ்க்கையை இறைவன் அனுமதிக்கவில்லை. எனவே அதை இறைவனிடம் அவர் கேட்கவும் இல்லை. அதை நாடி அவர் செல்லவும் இல்லை. பணக்கார வாழ்க்கையையும் இயேசுவுக்கு இறைவன் தரவில்லை. எனவே அதையும் இயேசு நாடிச் செல்லவில்லை. அதாவது, தனக்கென்று இல்லாததை அவர் திரும்பிக்கூட பார்த்ததில்லை.

    நாமும் இதே பாதையில் செல்கிறோமா? ஊழியம் செய்துவிட்டு வேறெதையும் எதிர்பார்க்கிறோமா? இறைவன் அமைத்துத் தந்துள்ள வாழ்க்கைக்கு ஏற்ப நாம் வசதிகளை அமைத்துக்கொள்கிறோமா? மற்றவர்களைப் பார்த்தோ, ஆசைப்பட்டோ கூடுதல் வசதிகளை (ஆடம்பரம்) அடைய ஆசைப்படுகிறோமா? அதை அடைவதற்காக செய்த பாவங்கள் என்னென்ன? இதனால் ஆத்மாவின் எதிர்காலத்தை நாம் எந்த அளவில் தொலைத்திருக்கிறோம்? தொலைத்திருந்தால் அதை மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதையெல்லாம் கிறிஸ்துமஸ் பண்டிகை காலகட்டத்தில் அனைவருமே சிந்தித்து பார்க்க வேண்டும். இதில் சிந்தனை இல்லாமல் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையினால் ஆத்மாவுக்கு பலனில்லை.
    கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மாநிலங்களவைக்கு ஏற்கனவே ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. #WinterSession #ChristmasHoliday
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் தவிர மற்ற நாட்கள் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவைக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் திங்கட்கிழமை கூட்டத் தொடர் முடிந்ததும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் எம்பிக்கள் பண்டிகை முடிந்த மறுநாளே டெல்லி திரும்ப வேண்டிய நிலை இருந்தது. எனவே, தொடர்ச்சியாக உறுப்பினர்களுக்கு விடுமுறை கிடைக்கும் வகையில் டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 26 ஆகிய நாட்களையும் விடுமுறை நாளாக அறிவிக்கும்படி, அவைத்தலைவருக்கு பல்வேறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். 

    இதனை ஏற்ற அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை காலத்தை நீட்டித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான டிசம்பர் 24 (திங்கட்கிழமை), கிறிஸ்துமசுக்கு மறுநாளான டிசம்பர் 26 (புதன்கிழமை) ஆகிய இரண்டு நாட்களும் மாநிலங்களவைக்கு விடுமுறை விடப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று அறிவித்தார். 

    இதன்மூலம் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. #WinterSession #ChristmasHoliday
    குமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் மதநல்லிணக்க மாநாட்டில் டி.டி.வி. தினகரன் பங்கேற்கிறார். #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அருமனை கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் மதநல்லிணக்க மாநாட்டிற்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற அழைப்பினை ஏற்று, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வரும் (23-ந்தேதி) மாலை 6 மணிக்கு மதநல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு தலைமை உரையாற்றி கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்குகிறார்.

    இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVDhinakaran
    ×