search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிறுவனம்"

    சிட் பண்ட் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கு சொந்தமான நிறுவனத்தின் ரூ.239.29 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. #TMCLeader #PonziCase
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வந்த சாரதா சிட் பண்ட், சுமார் ரூ.1,900 கோடி ஊழலில் ஈடுபட்டது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த முறைகேட்டில் பல்வேறு நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது.

    இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான சிங் என்பவர் தலைவராக இருந்த பிரபல அல்கெமிஸ்ட் குரூப் நிறுவனத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனம் மீது நிதி மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.239.29 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து சிங் எம்.பி. விலகியதாக கூறப்பட்டாலும், அவரது எம்.பி. பதவி தொடர்பான விவரங்களில் அல்கெமிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் தொடர்வதாகவே கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    உத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜனதா தலைவர் அனில் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். #Uttarakhand #ITRaid #BJP #AnilGoyal
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜனதா தலைவர் அனில் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ‘குவாலிட்டி ஹார்டுவேர்’, ‘உமாங் சேரீஸ்’, அலெக்சியா பேனல்ஸ், குவான்டம் பல்கலைக்கழகம், ‘பஞ்சாப் பிளைவுட் இன்டஸ்ட்ரீஸ்’ உள்ளிட்ட இந்த 13 நிறுவனங்களில் விற்பனையை மறைத்தல், கணக்கில் வராத ரசீதுகள் மற்றும் முதலீடுகள் என ஏராளமான ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர்.

    கோயல் 2016-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டார். கட்சியின் மூத்த தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் இவர் சமீபத்தில் டேராடூன் மேயர் பதவிக்கு டிக்கெட் கேட்டு வந்தார்.
    டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. 1,921 இடங்கள் கொசுப்புழு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்தது கண்டறியப்பட்டு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    டெங்கு கொசு ஒழிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் வீடுவீடாகச் சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொசுப்புழுக்கள் உருவாவதை தடுக்க தவறும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர் செந்திரகுமார நாடார் கல்லூரி வளாகங்களில் கலெக்டர் சிவஞானம் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகிறதா என்பதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கல்லூரி வளாகங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களாக அரசு அலுவலர்கள், அனைத்து நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொது இடங்கள், வீடுகள், கல்லூரி வளாகங்கள், பள்ளி வளாகங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 1,921 இடங்களில் லார்வா புழுக்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதுடன் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்த அந்த நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 750 அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.
    கர்நாடக மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், 'சீனாவுடன் போட்டியிடுவோம்' என்ற புதிய திட்டத்தை அம்மாநில முதல்மந்திரி குமாரசாமி அறிவித்துள்ளார். #KarnatakaCM #CompetewithChina
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்மந்திரி குமாரசாமி, தொழில்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை பட்டியலிட்டார்.

    அப்போது, 'சீனாவுடன் போட்டியிடுவோம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்வதாகவும், இந்த புதிய திட்டத்தின் மூலம் கர்நாடகாவில் வருவாய் இல்லாமல் மூடும் தருவாயில் இருக்கும் சிறு நிறுவனங்கள் தங்கள் தொழிலை வளர்க்க உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், சீன தயாரிப்புகளுடன் போட்டியிடுவதற்காக, அதேபோன்ற தயாரிப்புகளை கிராமப்புறங்களில் தயாரிக்க  உள்ளதாகவும், அதனை தாலுகா ரீதியாக  சேகரித்து வணிக வளாகங்கள் மூலம் விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் எனவும் முதல்மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #KarnatakaCM #CompetewithChina
    ×