search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகளை"

    வத்தலக்குண்டு ஓட்டலில் ரகளை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு டென்னீஸ் கிளப் சாலையில் உள்ள ஓட்டலுக்கு கட்டகாமன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த மருதகாளி (வயது25), முனியப்பன் ஆகியோர் சாப்பிட சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை ஓட்டல் முன்பு நிறுத்தி உள்ளனர். உரிமையாளர் பிரவீன் வாகனத்தை ஓரமாக நிறுத்தும்படி கூறி உள்ளார். இதனால்அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்தது.

    இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஓட்டலில் ரகளை செய்து பின்பு தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டனர். இதில் முனியப்பன் படுகாயம் அடைந்து வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மருதகாளியை கைது செய்தனர்.

    சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    அரியாங்குப்பம்:

    புதுவை நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது பள்ளி கோடை விடுமுறையையொட்டி படகு குழாமில் படகு சவாரி செய்ய கூட்டம் அலை மோதுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை சுண்ணாம்பாறு படகு குழாமில் படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் குடிபோதையில் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம் புதுக்குளம் வீதியை சேர்ந்த ஆனந்த் என்ற அலெக்ஸ் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த உதயசெல்வன் (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×