search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டோனி"

    • சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
    • சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. மழை பெய்து ஆட்டம் நின்றுவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை துரத்திய சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது. எப்படியாவது சென்னை அணி ஜெயிக்க வேண்டும் என கோடிகணக்கான ரசிகர்களில் பிரார்தனை வீணாகியது.

    ஆட்டத்தின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுப்பதற்காக மைதானத்தில் நின்று கொண்டு இருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆர்சிபி அணி கைக் கொடுக்க வரவில்லை அவர்கள் போட்டியை வென்ற சந்தோஷத்தில் கொண்டாடிக் கொண்டு இருந்தனர் அதனால் டோனி கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதுக் குறித்து பலரும் பல கருத்துகளையும் விவாதங்களையும் முன் வைத்து வருகின்றனர்.

    இது குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான வாகன் "தோனியின் கடைசி போட்டியா இது இருக்கலாம் என்ற சூழலில், போட்டி முடிந்தவுடன் "லெஜெண்ட் அங்கே இருக்கிறார். முதலில் அவரிடம் சென்று நாம் கை கொடுக்க வேண்டும்" என்று ஆர்சிபி வீரர்கள் மனதில் தோன்றிருக்கவேண்டும். கை கொடுத்து மரியாதை செய்த பின்னர் கொண்டாட்டங்களை தொடர்ந்து இருக்கலாம். டோனிக்கு கை கொடுக்க வேண்டும் என்ற கண்ணியம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என ஆர்சிபி வீரர்கள் வருந்துவார்கள். என கூறியுள்ளார்.

    • சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
    • டோனி கை கொடுக்க வந்தும் அவரைக் கண்டுகொள்ளாமல் ஆர்சிபியினர் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததே டோனி திரும்பிச் சென்றதற்கு காரணம் என ஒலிக்கும் குரல்கள்

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த ஆட்டத்தில் நடந்தவை குறித்த பதிவுகளே சமூக வலைத்தளப் பக்கங்களை ஆக்கிரமித்துள்ளன.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை துரத்திய சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது. ஆட்டத்தின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறியதே தற்போது நடந்துவரும் விவாதங்களுக்குக் காரணம்.

    ஆர்சிபி வீரர்கள் வெற்றிக்களிப்பில் இருந்ததால் கை கொடுக்க சென்ற டோனி சட்டென திரும்பி டிரஸிங் அறைக்குச் சென்ற வீடியோ தீயாக பரவி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். டோனி கை கொடுக்க வந்தும் அவரைக் கண்டுகொள்ளாமல் ஆர்சிபி அணியினர் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததே டோனி திரும்பிச் சென்றதற்கு காரணம் என்று அவருக்கு ஆதரவான குரல்கள் எழத் தொடங்கியுள்ளன

    இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் அணிகள் குறித்தும் தனது விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைக்கக்கூடிய கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான கவுதம் கம்பீர், சில காலத்துக்கு முன் பேசிய பழைய வீடியோ ஒன்றில், சிஎஸ் கே அணி 5 முறை ஐபிஎல் வென்றிருந்தாலும் தாங்கள் பெரியவர்கள் என்ற ஆட்டிட்யூடான மனநிலை அவர்களிடம் இருக்காது.

    ஆனால் விராட் கோலியும் ஆர்சிபி அணியும் ஒரு லீக் போட்டி வென்றாலும், பிளே ஆப்பிற்கு தகுதிபெற்றாலும் கூட தாங்கள் கோப்பையை வென்றதுபோல் நடந்துகொவர்கள் என்று பேசியிருந்தார். அதுவே இந்த மேட்சிலும் நடந்துள்ளதாக இந்த வீடியோவை நெட்டிஸின்கள் அதிகமாக பகிர்ந்து வருவதால் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. 

    • நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.
    • இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    இந்த ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டங் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.

    இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கி 218 ஸ்கோரை துரத்திய சென்னை அணியில் ரச்சின்- ரகானே ஜோடியும் இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய டோனி ஜடேஜா ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி.

    இருப்பினும் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பை வென்ற பிறகு எம்.எஸ்.டோனி ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சென்னை அணி வெளியேறியுள்ளது.

    இந்நிலையில், ருதுராஜ் கெயிக்வாட்டை கேப்டனாக வளர்த்தெடுக்க அடுத்த ஐபிஎல் சீசனிலும் எம்.எஸ்.டோனி விளையாட வேண்டும் என்று முன்னாள் சி.எஸ்.கே. வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    • பொதுவாக தோற்ற அணியினர் வென்ற அணி வீரர்களுக்கு கை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்க சென்றனர்.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது. அதன்பின் பின் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை அணி, 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியிடம் தோற்றது. இதனால் பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    பொதுவாக தோற்ற அணியினர் வென்ற அணி வீரர்களுக்கு கை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் டோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்க சென்றனர்.ஆனால் ஆர்சிபி அணியினர் வெற்றிக் கழிப்பில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்காமலேயே டோனி சட்டென திரும்பி மைதானத்தை விட்டு வெளியேறி டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றார்.

    டோனிகை கொடுக்காமல் வெளியேறிய வீடியோவே தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது. டோனிக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் . இதற்கிடையே கிரிக்கட் பிரபலங்களும் டோனியின் செயல் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

     

    அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரரும் வர்ணனையாளருமான மைக்கல் வாகன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், தோல்வியை எப்படி எடுத்துக்கொள்வது எப்படி என்று டோனி, விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கிரிக்கெட் ஆட்டத்தில் கை கொடுப்பது சிறந்த மாண்பாகும். இதுவே விராட் கோலி கை கொடுக்காமல் சென்றிருந்தால் அவரை ஈகோ பிடித்தவர் என்று பலர் விமர்சிக்கத் தொடங்கியிருப்பர்.

    எனினும் ஆர்சிபி வீரர்களும் தோனிக்கு மரியாதை அளித்து அவர் வந்த பொழுது கைகொடுக்க வந்துருக்க வேண்டும், அப்படி செய்யாமல் அவர்களுக்குளேயே கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.
    • கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்த ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டங் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.

    இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கி 218 ஸ்கோரை துரத்திய சென்னை அணியில் ரச்சின்- ரகானே ஜோடியும் இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய டோனி ஜடேஜா ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி. இருப்பினும் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    மைதானத்தில் வெற்றிக் களிப்பில் கோலி உள்ளிட்ட ஆர்சிபி அணியனர் கொண்டாடித் தீர்த்தனர். இதனிடையே தோற்ற அணியினர் வென்ற அணி வீரர்களுக்கு கைகொடுக்கும் வழக்கப்படி டோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்ற நிலையில் ஆர்சிபி அணியினர் தங்களது கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததால் தோனி அவர்களுக்கு கை கொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறி ட்ரெஸ்ஸிங் ரூமிற்க்கு சென்றார்.


     

    இருப்பினும் பிற சிஎஸ்கே வீரர்கள் ஆர்சிபி அணியினருடன் கைகுலுக்கினர். இந்நிலையில் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்காமலேயே டோனி மைதானத்தை விட்டு வேகமாக வெளியேறிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் தோனியின் செயல் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 

    • முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட டோனியை போன்று வேறு யாரும் இல்லை.
    • காயத்தில் இருந்து மீண்டு வந்து இருப்பதால் தான் இறுதியில் பேட்டிங் செய்ய வருகிறார்.

    பெங்களூரு:

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்சி அளித்த ஒரு பேட்டியில், 'டோனி தொடர்ந்து விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம்.

    அவர் தற்போதும் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். பயிற்சி முகாமுக்கு முன்னதாகவே வந்து நிறைய பந்துகளை எதிர்கொண்டு தயாராகிறார்.

    கடந்த ஐ.பி.எல். தொடருக்கு பிறகு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் அவரது பணிச் சுமையை சரியாக நிர்வகிக்க வேண்டும். அவர் நடப்பு தொடரில் தொடக்கத்தில் இருந்து உடல் தகுதியை சரியாக கவனித்து விளையாடி வருகிறார்.

    காயத்தில் இருந்து மீண்டு வந்து இருப்பதால் தான் அவர் இறுதி கட்டத்தில் பேட்டிங் செய்ய வருகிறார். முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட டோனியை போன்று வேறு யாரும் இல்லை என்று நினைக்கிறேன். அவர் தனித்திறமை மிக்க வீரர். அவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்று நம்புகிறேன்.

    ஆனால் நாம் அதனை காத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் அவர் மட்டுமே முடிவு எடுக்க முடியும். இது குறித்து அவர் உடனடியாக முடிவு எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை' என்று தெரிவித்தார்.

    • குஜராத் டைட்டன்சை நாளை மீண்டும் சந்திக்கிறது சி.எஸ்.கே.
    • குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா?

    அகமதாபாத்:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதா னத்தில் நடந்த 6 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட், ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 5 போட்டியில் இரண்டில் வெற்றி ( மும்பை 20 ரன், பஞ்சாப் 28 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதரா பாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது போட்டியில் குஜராத் டைட்டன்சை நாளை (10-ந்தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு உள்ளது. குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே கடந்த 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார். இதனால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் அவர் தனது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும்.

    கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்.அவர் 1 சதம், 4 அரை சதத்துடன் 541 ரன் குவித்து இந்த தொடரில் 2-வது இடத்தில் உள்ளார்.

    மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அதிரடியாக ஆடுவது அவசியமாகும். ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார்.

    பந்து வீச்சில் துருப்பு சீட்டான இலங்கையை சேர்ந்த பதிரனா எஞ்சிய போட்டிகளில் ஆட முடியா மல் போனது மிகப்பெரிய பாதிப்பே. அவர் 6 ஆட்டத்தில் 13 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதேபோல் 14 விக்கெட் வீழ்த்திய முஸ்டாபிசுர் ரகுமான் சர்வதேச போட்டிக்காக வங்காள நாடு திரும்பி யுள்ளார். தீபக் சாஹரும் காயத்தில் உள்ளார். இதனால் பந்துவீச்சில் பலவீனமாகவே இருக்கிறது. இதை பேட்மேன் கள்தான் சரி செய்ய வேண்டும்.

    துஷர் தேஷ்பாண்டே (12 விக்கெட்), ஷர்துல் தாக்கூர் அவர்களது இடத்தை நிரப்புவார்கள். சான்ட்னர் கடந்த போட்டியில் ரன் கொடுக்காமல் நேர்த்தியாக வீசினார்.

    சுப்மன்கில் தலைமையி லான ருதுராஜ் டைட்டன்ஸ் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதலடி கொடுத்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    குஜராத் அணியில உள்ள தமிழக வீரர்களான சாய் சுதர்சன், ஷாருக்கான், சாய் கிஷோர் ஆகியோர் சென்னைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த கடுமையாக போராடுவார்கள்.

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.
    • இதில் 8 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் குவித்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் கேப்டன் சாம்சன் 86 ரன்கள் குவித்தார்.

    இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அவர் இந்த போட்டியில் 6 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் குறைந்த ஐபிஎல் போட்டியில் 200 சிக்சர்களை விளாசி இந்திய வீரர் என்ற வராலாற்று சாதனையை சாம்சன் படைத்துள்ளார்.

    இந்த பட்டியலில் முதல் இடத்தில் டோனி இருந்தார். அவர் 165 போட்டிகளில் 200 சிக்சர்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. அதனை சாம்சன் முறியடித்துள்ளார். இவர் 159 போட்டிகளிலே 200 சிக்சர்களை விளாசி அசத்தி உள்ளார்.

    இந்த வரிசையில் விராட் கோலி 180 போட்டிகளிலும் ரோகித் 185 போட்டிகளிலும் சுரேஷ் ரெய்னா 193 போட்டிகளிலும் 200 சிக்சர்களை விளாசி உள்ளனர்.

    • கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தையாவார்.
    • டோனி என்னை நன்றாக கவனித்து கொள்கிறார்.

    தர்மசாலா:

    ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் 53-வது லீக் ஆட்டம் இன்று மாலை 3.30 மணிக்கு தர்ம சாலாவில் நடக்கிறது.

    இதில் ருதுராஜ் கெய்க் வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-சாம்கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் தொடர்ந்து இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சென்னை சூப்பர் கிங்சுக்கு இருக்கிறது. பஞ்சாப் கிங்சுக்கு பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை சி.எஸ்.கே. பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீரர் பதிரனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சில் துருப்பு சீட்டாக இருக்கிறார். மலிங்கா போன்று பந்து வீசும் அவர் 6 ஆட்டத்தில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 28 ரன் கொடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றி யது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

    உலக கோப்பை விசா நடைமுறைக்காக நாடு திரும்பியதால் அவர் சென்னையில் கடந்த 1-ந் தேதி பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்றைய ஆட்டத்திலும் அவர் ஆடுவது சந்தேகம் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.

    தற்போது அவர் அணியோடு இணைந்துள்ளார். இதனால் இன்று விளையாடலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தை மாதிரி என்று பதிரனா தெரிவித்துள்ளார். இது தொடர்ச்சியாக அவர் கூறியதாவது:-

    டோனி என்னை நன்றாக கவனித்து கொள்கிறார். நான் என்ன செய்ய வேண்டும் என்று அதிகமான அறிவுரையை வழங்குகிறார். நான் களத்தில் இருந்தாலும், வெளியே இருந்தாலும் அவர் கூறும் சின்ன சின்ன விஷயங்கள் கூட எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தையாவார். எனது தந்தைக்கு பிறகு அவர் தான் (டோனி), எனது தந்தையின் பங்களிப்பில் உள்ளார்.

    வீரர்களை எப்படி கையாள வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் நிச்சயமாக அவரிடம் சென்று கேட்பேன்.

    இவ்வாறு பதிரனா கூறினார்.

    பதிரனா கடந்த ஐ.பி.எல். போட்டியில் 12 ஆட்டத்தில் 19 விக்கெட் கைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற முக்கிய கரணமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாளை ஐபிஎல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது.
    • டோனியின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன. மேலும் ஐ.பி.எல். தொடரின் தொடக்க விழாவும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் டோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. ஐபிஎல் அறிமுக போட்டியில் டோனி எந்த ஹர் ஸ்டைலுடன் இருந்தாரோ அந்த ஸ்டைலுடன் நடப்பு ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளார். கருப்பு நிற உடையில் டோனி இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

    இதற்கு பல லட்சம் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் ஹீரோ மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

    • வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது.
    • டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    சி.எஸ்.கே வீரர் பத்திரனாவுக்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரும் ஐ.பி.எல் தொடரில் சில போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

    வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 4 முதல் 5 வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டுமென அறிவித்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பத்திரனாவுக்கு பதிலாக, வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை விளையாட வைக்கலாம் என்று சென்னை அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்

    மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட மதுலன் போட்டி ஒன்றில் வீசிய யார்க்கர் பந்தைப் பார்த்து, அவரை நெட் பவுலராக சேர்க்க சி.எஸ்.கேவிடம் டோனி பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குகதாஸ் மதுலன் யார்க்கர் பந்து வீசி விக்கெட் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது
    • சிஎஸ்கே அணியில் ஏற்கனவே யார்க்கர் பந்துகளை வீசக்கூடிய இலங்கை பந்துவீச்சாளர் மதீஷா பத்திரனா உள்ளார்.

    இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்

    மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட மதுலன் போட்டி ஒன்றில் வீசிய YORKER பந்தைப் பார்த்து, அவரை நெட் பவுலராக சேர்க்க சிஎஸ்கேவிடம் டோனி பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    புனித ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது பந்துவீச்சாளர் குகதாஸ் மதுலன் யார்க்கர் பந்து வீசி விக்கெட் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    சிஎஸ்கே அணியில் ஏற்கனவே யார்க்கர் பந்துகளை வீசக்கூடிய இலங்கை பந்துவீச்சாளர் மதீஷா பத்திரனா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×