search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருங்காட்சியகம்"

    டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜாலியன்வாலாபாக் நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். #Modiinaugurates #Bosemuseum #Jallianwalamuseum #RedFort
    புதுடெல்லி:

    இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய பொற்கோவில் அமைந்துள்ள அம்ரித்சர் நகரில் ஜாலியன் என்ற இடத்தில் 13-4-1919 அன்று ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் வெள்ளையர்களின் ராணுவம் பீரங்கிகளால் சுட்டதில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

    இந்திய வரலாற்றில் கருப்புதினமாக பதிவான இந்த நாளை நினைவுகூரும் விதமாகவும், இந்திய தேசிய ராணுவம் என்ற படைப்பிரிவை ஏற்படுத்தி நாட்டின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை தொடங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளான இன்று அவரது நினைவை போற்றும் வகையிலும் டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க  செங்கோட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஜாலியன்வாலாபாக் நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.


    இந்த அருங்காட்சியகத்தில் முதலாம் உலகப்போர் தொடர்பான சிறப்பு புகைப்படங்களும், முதலாம் உலகப்போரின்போது கவிக்குயில் சரோஜினி நாயுடு இயற்றிய எழுச்சிகீதமும் இடம்பெற்றுள்ளது.

    இவற்றை திறந்துவைத்த பிரதமர் மோடி இங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு நினைவுக்குறிப்புகளை சுமார் ஒருமணி நேரம் பார்வையிட்டார். #Modiinaugurates #Bosemuseum #Jallianwalamuseum #RedFort

    அரசுமுறை பயணமாக வியட்நாம் நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பழங்காலத்தை சேர்ந்த இந்து கோவிலை இன்று பார்வையிட்டார். #RamNathKovind #Hindutemplecomplex #RamNathKovindinVietnam
    ஹனோய்:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.

    நேற்று பிற்பகல் வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இன்று தனது மனைவி சவிதா கோவிந்துடன் குவாங் நாம் நகருக்கு சென்ற ராம்நாத் கோவிந்த் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கும் பதின்மூன்றான் நூற்றாண்டுக்கும் இடையில் சம்பா வம்சத்தை சேர்ந்த மன்னர்களால் உருவாக்கப்பட்ட ‘மை சன்’ கோவில்களையும், கோபுரங்களையும் பார்த்தார்.

    இந்த இடம் ‘யுனெஸ்கோ’ எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் வரலாற்று சிறப்புக்குரிய இடங்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது,

    மேலும், அங்குள்ள 2 ஆயிரம் ஆண்டுகால பழைமை வாய்ந்த அருங்காட்சியகத்தையும் ஜனாதிபதி சுற்றிப் பார்த்தார்.இந்த அருங்காட்சியத்தில் இந்து-புத்த சமயங்களை சேர்ந்த சாம் நாகரிகம் காலத்து சிற்பங்களையும் அவர் கண்டு ரசித்தார்.

    21-ம் தேதிவரை வியட்நாமில் தங்கும் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து இருநாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #RamNathKovind  #Hindutemplecomplex #RamNathKovindinVietnam
    மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த அரியவகை படங்கள் மற்றும் வரலாற்று பதிவுகளுடன் கூடிய அருங்காட்சியக ரதத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்.
    சிவகங்கை:

    சென்னையில் உள்ள அரசு அருங்காட்சியக துறையின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அருங்காட்சியக காட்சி ரதம் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த ரதம் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய வருகை தந்துள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருகை தந்த அந்த ரதத்தை கலெக்டர் லதா வரவேற்று, அதனை பார்வையிட்டார். பின்னர் அரசுத்துறை அதிகாரிகளும் ரதத்தை பார்வையிட்டனர். பின்னர் கலெக்டர் லதா கூறியதாவது:-

    சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் அருங்காட்சியக ரதத்தின் மூலம் கண்காட்சி நடத்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்திற்கு இந்த ரதம் வருகை தந்துள்ளது. இந்த ரதம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று எல்லோரும் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் அருங்காட்சியக ரதம் செல்லும்.

    இந்த ரதத்தில் தென்னிந்திய நாணயம், சோழர் கால நாணயம், பாரம்பரிய இசைக்கருவிகள், போர் கருவிகள், அரியவகை அஞ்சல் வில்லைகள், சிற்பங்கள், செப்பேடுகள், அரியவகை பாலூட்டி வகைகள், மண்பாண்டங்கள், கனிமங்கள், தாவரவியல், அரியவகை ஓவியங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனத்தின் உள்பகுதியில் மின்னணு திரையில் பாரம்பரிய வரலாற்று சிறப்பு குறித்த குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சிவகங்கை வட்டார பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் அருங்காட்சியக ரதத்தை பார்வையிட்டனர். 
    திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பொக்கி‌ஷங்களை அருங்காட்சியகத்தில் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாப சாமி கோவிலில் ரகசிய நிலவறைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நிலவறைகளை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அதிகாரிகள் திறந்து பார்த்த போது விலைமதிப்பற்ற ஏராளமான தங்கம், வைரம், வைடூரிகம் போன்ற பழமையான நகைகள் அடங்கிய பொக்கி‌ஷம் இருப்பது தெரிய வந்தது.

    இங்குள்ள பெரிய நிலவறையான ‘பி’ நிலவறை மட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அந்த நிலவறையில் மேலும் ஏராளமான பொக்கி‌ஷம் இருக்கும் என்று கருதப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகே இந்த நிலவறையை திறக்க முடியும்.

    பத்மநாபசாமி கோவிலில் பொக்கி‌ஷம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த கோவிலில் செய்யப்பட்டுள்ளது. கமாண்டோ பாதுகாப்பு படையினரும் அந்த கோவிலின் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பத்மநாபசாமி கோவிலில் கிடைத்த பொக்கி‌ஷங்களை பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக இவற்றை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக கேரள சட்டசபையிலும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பேசியதாவது:-

    பத்மநாபசாமி கோவிலிலில் உள்ள பொக்கி‌ஷங்களை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்றால் அதற்கு சுப்ரீம் கோர்ட்டு மற்றும் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தின் அனுமதியுடன் மட்டுமே இதை செய்ய முடியும். அரசு அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    பத்மநாபசாமி கோவிலின் அருகிலேயே அமையுமாறு இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். உலகில் பல நாடுகளில் இது போன்ற அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த அருங்காட்சியகமும் அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பத்மநாபசாமி கோவில் பொக்கி‌ஷங்களை அருங்காட்சியகத்தில் வைப்பது தொடர்பாக ஏற்கனவே திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் கருத்து தெரிவித்து இருந்தனர். அப்போது பொக்கி‌ஷங்களை அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு பதில் அந்த அபூர்வ நகைகளை 3டி புகைப்படங்களாக எடுத்து அதை அருங்காட்சியகத்தில் வைப்பதே பாதுகாப்பாக இருக்கும் என்று கூறி இருந்தனர்.

    சிவகங்கை கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். #MinisterPandiarajan

    மதுரை:

    மதுரைக்கு விமானம் மூலம் வந்த அமைச்சர் மாபா. பாண்டியராஜன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த இரண்டு மாதமாக 4-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து முடிந்துள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய தொண்மையாக பொருட்கள் கிடைத்துள்ளன.

    ஆய்வில் தங்க ஆபரணம் கிடைத்துள்ளது. புதையல் எதுவும் கிடைக்கவில்லை. கீழடியில் கிடைத்த பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து விரிவான அறிக்கை வருகிற 25-ந்தேதி சட்டமன்றத்தில் வெளியிடப்படும்.

    கீழடியை விட திருவள்ளூரில் கற்கால ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவற்றை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    ஆதிச்சநல்லூர், கீழடி, திருவள்ளூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த பொருட்களை வைத்து ரூ. 14 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ரூ. 50 லட்சம் செலவில் ஆய்வு மையம் உருவாக்கி உலகத் தரம்மிக்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterPandiarajan

    ×