search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குகள்"

    சபரிமலை தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரிய கேரள அரசின் மனு மீது 8-ந்தேதி விசாரணை நடைபெறுகிறது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இதனைக் கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கேரள ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    கேரள ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கேரள அரசு மனு செய்தது.

    இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு வருகிற 8-ந்தேதி விசாரணை நடத்த உள்ளது. அதன் பிறகே ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்படுமா? என்பது தெரிய வரும்.

    சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த மனுக்கள் மீது 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அமர்வில் இடம் பெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா விடுமுறையில் இருக்கிறார்.

    அவர், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய பின்னரே இன்று நடக்க இருந்த விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார். கேரள அரசின் மனு மீதான விசாரணை 8-ந்தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்கள் தொடர்பான விசாரணை வருகிற 8-ந்தேதிக்கு முன்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Sabarimala

    எம்எபி, எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PendingCases #SupremeCourt
    புதுடெல்லி:

    குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட  அரசியல்  தலைவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க கோரி, வழக்கறிஞரும் பாஜக தலைவருமான அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை அமிகஸ் கியூரியாக நியமித்தது.

    அஸ்வினி உபாத்யாய்

    இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதிலும் பல்வேறு நீதிமன்றங்களில் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    நாடு முழுவதிலும் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி,எம்எல்ஏக்களுக்கு எதிராக மொத்தம் 4122 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டிலேயே எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 321 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 71 வழக்குகள் மட்டுமே கீழமை நீதிமன்றங்களில் உள்ளதாகவும், மற்ற வழக்குகள் தற்போதுவரை விசாரணை நிலைக்கு வரவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    264 வழக்குகள் மீது உயர்நீதிமன்றங்களால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளில் இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், விசாரணையை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #PendingCases #SupremeCourt
    சென்னையில் இணைய தள குற்றத்துக்காக 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமி‌ஷனர் கூறியுள்ளார். #Chennai #PoliceCommissioner

    சென்னை:

    சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று சர்வதேச கணினி பாதுகாப்பு தினம் கடை பிடிக்கப்பட்டது.

    இதில் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்த கொண்டு பேசியதாவது:-

    இன்று கணினி வழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பொது மக்கள் உ‌ஷராக இருக்க வேண்டும். இளைஞர்களை குறி வைத்து ஆன்லைனில் பல்வேறு மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    தொலைபேசியில் தொடர்பு கொண்டோ ஆன்லைன் மூலமாகவோ வங்கிக் கணக்குகள் தொடர்பாக யாரேனும் தகவல்களை கேட்டால் அதனை பொது மக்கள் கொடுக்கக் கூடாது. இதனை ரிசர்வ் வங்கியும் அறிவுறுத்தி இருக்கிறது. பொது மக்கள் உஷாராக இருந்தால்தான் இதுபோன்ற குற்றசம்பவங்களை தடுக்க முடியும்.

    சென்னை மத்திய குற்றப்பிரிவின் கீழ் வங்கி மோசடி, இணைய தள குற்றவாளிகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு பிரிவுகளும் செயல்படுகின்றன. மத்திய குற்றப்பிரிவில் உள்ள அனைத்து பிரிவுகளுமே சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    சைபர் கிரைம் போலீசார் இணைய தள குற்றவாளிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் இது தொடர்பாக 10,254 மனுக்கள் பெறப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 399 வழக்குகளில் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #Chennai #PoliceCommissioner

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.
    கடையம்:

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குட்டி என்ற கவுளிகுமார் (வயது 35). இவருக்கு மேலகுத்தப்பாஞ்சான் பகுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் மனைவியின் ஊரில் வசித்து வருகிறார். இவர் மீது கொலை வழக்கு மற்றும் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.  

    இந்நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார்  பரிந்துரையில், மாவட்ட கலெக்டர்  ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவின் பேரில் கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலெட்சுமி வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் பாளை சிறையில் அடைத்தனர்.
    தமிழக அரசுக்கு எதிராக வழக்குகளை தொடுக்க தி.மு.க. வக்கீல்கள் செலவு மற்றும் கோர்ட்டு வகைக்காக ரூ.11 கோடிவரை செலவழித்துள்ளதாக பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கு தணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #DMK #DMKGeneralMeeting
    சென்னை:

    தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. பல்வேறு வழக்குகளை கோர்ட்டில் தொடர்ந்து இருந்தது.

    அமைச்சர், போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்புடைய குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி வழக்கு தொடர்ந்தது.

    எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்-மந்திரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 10 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்தது. இது தவிர தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. பல்வேறு வழக்குகளை கோர்ட்டில் தொடுத்தது.

    இந்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராக வழக்குகளை தொடுக்க தி.மு.க. வக்கீல்கள் செலவு மற்றும் கோர்ட்டு வகைக்காக ரூ.11 கோடிவரை செலவழித்துள்ளது. தி.மு.க. பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட கணக்கு தணிக்கையில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. கணக்கு தணிக்கை குழு உறுப்பினர் தெரிவித்தார்.


    ஆர்.கே. நகர் தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.10 லட்சம் செலவழிக்கப்பட்டது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல தி.மு.க.வுக்கு வந்த பணம் விவரம், செலவழித்த மற்ற விவரம் ஆகியவை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஆண்டு தோறும் கணக்கு தணிக்கை தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு தேர்தல் கமி‌ஷனிடம் அனுப்பப்படும். பின்னர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படும். #DMK #DMKGeneralMeeting
    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 640 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் நேற்று இரவு விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்வாமிங் ஆப்ரே‌ஷன் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சியில் போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலும், விழுப்புரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலும் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் நேற்று இரவு மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வாகன சோதனை மற்றும் பழைய குற்றவாளிகளை கண்காணித்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். இந்த திடீர் வாகன சோதனையில் 1430 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 36 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யக்கோரி ஆர்.டி.ஓ. வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

    மேலும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 6 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டிய 571 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மொத்தம் 640 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 89 தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜூகளில் போலீசார் சோதனை செய்தனர்.

    தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளன.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், சிப்காட் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளன.

    இதன் விசாரணை அதிகாரியாக நெல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் குமார் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 20 சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியமர்த்தப்பட்டனர். நேற்று முன்தினம் ஒரு சில போலீசாரே தூத்துக்குடிக்கு வந்தனர்.

    நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் தூத்துக்குடிக்கு இன்னும் வரவில்லை என்றும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் இன்னும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் போலீசார் சம்பவம் நடந்த இடங்களுக்கு சென்று தடயங்களை சேகரிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இன்று (வியாழக்கிழமை) சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முழுவீச்சில் தொடங்க உள்ளனர்.

    இந்த நிலையில் தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் அரசு ஆஸ்பத்திரி முன்பு பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பான வழக்கும், மில்லர்புரத்தில் 2 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட வழக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×