search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    • ஆலங்குளத்தில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமையில் ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    தென்காசி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஆலங்குளத்தில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமையில் ஆலங்குளம் நகர தலைவர் வில்லியம் தாமஸ் ஏற்பாட்டில் காங்கிரசார் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். முன்னதாக அங்கு உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் ஆலடி சங்கரையா, மாநில பொது செயலாளர் ஞானபிரகாஷ், வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ், பி.எஸ்.என்.எல். ராஜேந்திரன், நகர செயலாளர் தமிழ் மணி, இலக்கிய அணி தொகுதி தலைவர் லிவிங்ஸ்டன், மாவட்ட தலைவர் ராஜாராம், இளைஞர் காங்கிரஸ் தனி அமைப்பு அரவிந்த், இயேசு ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு தங்களது சில பணக்கார நண்பர்களின் பயனுக்காக மட்டுமே செயல்படுகிறது.
    • அரசாங்கத்தின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவிக்கிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    ஒரு காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்தது. இளைஞர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிவதை தங்களது கனவாக கொண்டு இருந்தனர்.

    ஆனால் இன்று பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. கடந்த 2014-ம் அண்டு 16.9 லட்சமாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிபவர்கள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 14.6 லட்சமாக குறைந்தள்ளது.

    வளர்ச்சியை நோக்கி செல்லும் நாட்டில் இது போன்ற வேலை வாய்ப்புகள் குறையுமா?

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 1,81,127 பேர் வேலை இழந்துள்ளனர். செய்ல்-61,920, எம்.டி.என்.எல். 34,997, எஸ்.இ.சி.எல். 29,140, இந்திய உணவு கழகம் 28,663, ஒ.என்.ஜி.சி.யில் 21,120 பேர் வேலையை இழந்துள்ளனர்.

    ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்பு என்று பொய் வாக்குறுதி அளித்தவர்கள் வேலைகளை அதிகரிப்பதற்கு பதிலாக 2 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை நீக்கியுள்ளது. இதன் மூலம் இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவனங்களில் ஒப்பந்த ஆட்களை சேர்ப்பது இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிறுவனங்களை தனியார் மயமாக்கும் சதியா?

    இந்த அரசு தங்களது சில பணக்கார நண்பர்களின் பயனுக்காக மட்டுமே செயல்படுகிறது. இந்த அரசாங்கத்தின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவிக்கிறது.

    பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து. அவை இந்தியாவின் முன்னேற்றப் பாதையை வலுப்படுத்தும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    • புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
    • பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர்.

    புதுடெல்லி:

    தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

    சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிட பணிகள் முடிவடைந்தது.

    இதையடுத்து புதிய கட்டிடத்தை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, "புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" என்று கூறியுள்ளார்.

    பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு பல எதிர்க்கட்சி தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர். "பிரதமர் மோடி, அரசு நிர்வாகத்தில் உள்ளார். ஜனாதிபதி, இந்தியாவின் தலைவராக உள்ளார். அவர்தான் பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும்" என்று கருத்து கூறி உள்ளனர்.

    • கர்நாடகத்தில் கிடைத்த வெற்றி நாளை தேசம் முழுவதும் கிடைக்கட்டும்
    • தலைவர் ராகுல்காந்தி பிரதமராக அரியணை ஏறுவதற்கு அச்சாரமாக இருக்கட்டும்

    நாகர்கோவில் :

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி தலைவர் ராகுல் காந்தியின் பிரம்மாஸ்திரமான 'பாரத் ஜோடோ 'யாத்திரையை பிரதிபலிக்கும் வகையிலும், பிரியங்கா காந்தியின் உணர்ச்சிகரமான பிரசாரத்தின் மூலமும் இன்று கர்நாடகத்தில் கிடைத்த வெற்றி நாளை தேசம் முழுவதும் கிடைக்கட்டும். தனிப்பெரும் பான்மையோடு ஆட்சி அமைக்கும் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு எனது வாழ்த்துகள். கடந்த 9 ஆண்டுகளாக இந்திய மக்களையும் இந்திய ஜனநாயகத்தையும் மண்ணில் குழி தோண்டி புதைக்கும் வகையில் செயல்பட்டு வந்த பா.ஜ.க. அரசுக்கு எதிராக வாக்களித்து கர்நாடக மக்கள் இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுத்துள்ளனர்.

    சிலிண்டர் விலை உயர்வு, ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கும் திட்டங்கள், எதிர்த்து கேள்வி கேட்கும் அனைவரையும் ஒடுக்கும் செயல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மக்கள் நாள்தோறும் கடந்த 9 ஆண்டுகளில் சந்தித்து வந்திருந்தனர். சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் எண்ணத்தோடு செயல்பட்டு மதப் பிரச்னைகளை தூண்டி குளிர் காய நினைத்த பா.ஜ.க அரசை கர்நாடக மக்கள் இன்று வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். என்னென்ன சதி வேலைகள், என்னென்ன ஒடுக்குமுறைகள் எதற்கும் அடங்காமல், ஒடுங்காமல் கர்நாடக மாநிலத்தையே பம்பரம் போல் வலம் வந்து, இன்று மதசார்பின்மைக்கு எதிரான மாநிலங்களில் கர்நாடகமும் இணைந்திருப்பது தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்த பரிசு. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பணிபுரிவதற்கு வாய்ப்பாக ஹாசன் நாடாளுமன்ற தொகுதி மேலிடபார்வையாளராக என்னை நியமித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு எனது நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கம் வெற்றி பெற்று தலைவர் ராகுல்காந்தி பிரதமராக அரியணை ஏறுவதற்கு அச்சாரமாக இருக்கட்டும், நாடு வளம் பெறட்டும்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாட்டின் மகள்கள் மீதான அட்டூழியங்களில் இருந்து பா.ஜனதா ஒரு போதும் பின் வாங்கவில்லை.
    • பா.ஜனதாவின் பெண்கள் தொடர்பான முழக்கம் வெறும் பாசாங்கு தனம்.

    டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள்-போலீசாரால் தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கூறும்போது, "மல்யுத்த வீராங்கனைகளை தாக்கியது வெட்கக்கேடானது. நாட்டின் மகள்கள் மீதான அட்டூழியங்களில் இருந்து பா.ஜனதா ஒரு போதும் பின் வாங்கவில்லை. பா.ஜனதாவின் பெண்கள் தொடர்பான முழக்கம் வெறும் பாசாங்கு தனம். நாட்டின் வீரர்களிடம் இதுபோன்ற நடத்தை வெட்கக் கேடானது" என்றார்.

    காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் ஹுடா இன்று அதிகாலை மல்யுத்த வீரர்-வீராங்கனைகளை சந்திக்க சென்ற போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக அவர் கூறும்போது, எங்கள் மகள்களின் (வீராங்கனைகள்) உடல்நிலை குறித்து விசாரிக்க நான் ஜந்தர் மந்தருக்கு சென்ற போது என்னை போலீசார் தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர் என்றார்.

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, டுவிட்டரில் கூறும்போது, பா.ஜனதாவிடம் இருந்து இந்தியாவின் மகள்களை காப்பாற்றுங்கள். இது வெட்கக் கேடானது. அதிர்ச்சி மற்றும் அவமானகரமானது. குற்றவாளி பிரிஜ் பூஷன் சரண்சிங், பா.ஜனதா தலைவராகவும், பா.ஜனதா எம்.பி.யானதால் இந்திய விளையாட்டு வீரர்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள்.

    இது இந்திய விளையாட்டுக்கு ஒரு கருப்பு நாள். இந்தியாவின் மகள்களுக்கு யார் நீதி வழங்குவார்கள்? நள்ளிரவில் எங்கள் மகள்களை துன்புறுத்தவும் அவமானப்படுத்தவும் டெல்லி போலீசாருக்கு மோடி அரசு ஏன் உத்தரவிடுகிறது? என்று கூறியுள்ளார்.

    • மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா கோபி பதவி விலகினார்.
    • 2 ஆண்டு சிறை தண்டனையை ஒருநாள் குறைவாக வழங்கி இருந்தால்கூட எம்.பி. பதவியை இழக்க நேரிட்டு இருக்காது.

    அகமதாபாத்:

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது மோடி குடும்ப பெயர் தொடர்பாக அவதூறாக பேசியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இதைதொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த மார்ச் 23-ந்தேதி அவதூறு வழக்கில் தொட ரப்பட்டது. இந்த வழக்கு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்களுக்கு அவகாசம் கொடுத்து ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து அவரது மக்களவை எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிடப்பட்டது. 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல்காந்தி சூரத் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சூரத் செசன்ஸ் கோர்ட்டு கடந்த 20-ந்தேதி ராகுல்காந்தியின் மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.

    இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி அவர் முறையிட்டார்.

    இந்த மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா கோபி பதவி விலகினார். இதைத்தொடர்ந்து நீதிபதி ஹேமந்த் பிரச்சக் இந்த மனுவை விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

    ராகுல்காந்தியின் மேல் முறையீடு மனு விசாரணை குஜராத் ஐகோர்ட்டில் இன்று தொடங்கியது.

    ராகுல்காந்தி தரப்பில் மூத்த வக்கீல் சிங்கி இந்த வழக்கில் ஆஜராகி வாதாடியதாவது:-

    2 ஆண்டு சிறை தண்டனையை ஒருநாள் குறைவாக வழங்கி இருந்தால்கூட எம்.பி. பதவியை இழக்க நேரிட்டு இருக்காது.

    நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அவதூறு வழக்கில் அதிக பட்ச தண்டனையாக 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்மைக்காலங்களாகவே மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியுடன் மிக நெருக்கம் காட்டி வருகிறார்.
    • கமல்ஹாசனின் சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவை:

    224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் கட்சியான பா.ஜனதா, எதிர்கட்சியான காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

    தேர்தலுக்கு 11 நாட்களே உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதா தலைவர் நட்டா, உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

    இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மாநிலம் முழுவதும் சென்று காங்கிரசுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    தமிழகத்தில் உள்ள பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களும் கர்நாடகத்துக்கு சென்று தங்கள் கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அண்மைக்காலங்களாகவே மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியுடன் மிக நெருக்கம் காட்டி வருகிறார். அந்த கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றது, டெல்லியில் அவருடன் ஒரு மணி நேரம் இந்திய மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியது, ஈரோடு கிழக்கு தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்தது என பல்வேறு செயல்கள் மூலம் அவர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடிவு செய்திருப்பது தெரிய வருகிறது.

    ஈரோடு கிழக்கு தேர்தலில் ஆதரவு அளித்தது மட்டுமல்லாமல், அந்த கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று கோவையில் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தியும், கர்நாடக தலைவரும் கர்நாடக தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள கேட்டு கொண்டதாகவும், இதுகுறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

    இப்படிப்பட்ட சூழலில் தான் கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக மே முதல் வாரத்தில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூறும் போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ஆகியோர் கமல்ஹசானை தொடர்பு கொண்டு கர்நாடக தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    இதுதொடர்பாக கோவையில் நடந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போதும், ராகுல்காந்தி கேட்டு கொண்டதற்கு இணங்க காங்கிரசுக்கு ஆதரவாக தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

    தற்போது அவர் வருகிற மே முதல் வாரத்தில் கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொள்வார். இது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டு, கமல்ஹாசனின் சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்பின்னர் அவர் எந்த தேதியில் பிரசாரம் மேற்கொள்வார் என்பது தெரியவரும் என தெரிவித்தனர்.

    காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதன் மூலம் மக்கள் நீதிமய்யம் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரசுடன் இணைந்து பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக வெளியான தகவலால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • எம்.பி. பதவி பறிபோனதால் டெல்லியில் ராகுல் காந்தி வசித்து வந்த வீட்டையும் காலி செய்யும் நிலை ஏற்பட்டது.
    • எனது அரசு வீடு பறிக்கப்பட்ட நாள் முதல் எனக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்தன.

    புதுடெல்லி:

    கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசினார் என கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் நடந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து பாராளுமன்ற செயலகம் அவரது எம்.பி. பதவியை பறித்தது. எம்.பி. பதவி பறிபோனதால் டெல்லியில் ராகுல் காந்தி வசித்து வந்த வீட்டையும் காலி செய்யும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி, டெல்லி அரசு வீட்டை காலி செய்து விட்டு தாயார் சோனியா வீட்டுக்கு சென்றார். இதுபற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:-

    உண்மை பேசியதற்காக எனது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்காக நான் பயப்பட போவதில்லை. எம்.பி. பதவியை பறித்ததோடு டெல்லியில் உள்ள அரசு வீட்டையும் காலி செய்ய கூறினார்கள். இதனை அறிந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் தங்க வருமாறு என்னை அழைத்தனர்.

    எனது அரசு வீடு பறிக்கப்பட்ட நாள் முதல் எனக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்தன. அதில் மக்களின் அன்பை தெரிந்து கொண்டேன். அவர்களின் இதயங்களில் நான் வாழ்வதை புரிந்து கொண்டேன்.

    வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்புவதில் நம்பிக்கை கொண்ட பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிராக காங்கிரஸ் எப்போதும் உறுதியாக போராடும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ராகுல்காந்தி பதவி பறிப்பு அநீதியானது என மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
    • 140 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகரில் மாணிக்கம்தாகூர் எம்.பி. தலைமையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 140 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராகுல் காந்தி பதவிபறிப்பு என்பது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். கர்நாடக மாநிலம் கோலார் சட்டசபை தொகுதியில் பேசிய பேச்சின் அடிப்படையில் குஜராத்தில் தீர்ப்பு பெற்று அவர் வீட்டை காலி செய்யும் வரை பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை இனி மக்கள் மன்றத்திற்கு எடுத்து செல்வோம். கர்நாடக மாநில சட்ட சபையின் போதும் இந்த பிரச்சினையை மக்களிடம் எடுத்து செல்ல காங்கிரஸ் நடவடிக்கை மேற்கொள்ளும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை தி.மு.க.வினர் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதனை தி.மு.க.வினர் சட்டபூர்வமாக எதிர்கொள்வர்.

    மத்திய அரசு சி.ஆர்.பி.எப். தேர்வினை தமிழில் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் மத்திய அரசு அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மறியலில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீ ராஜாசொக்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ண சாமி, முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன், வெயிலுமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வயநாட்டில் இன்று மாலை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • டெல்லியை விட்டு வெளியே வந்து பிரியங்கா பேசுவது இதுவே முதல் முறை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ராகுல் மேல்முறையீடு செய்துள்ளார். வழக்கின் முடிவை பொறுத்துதான் ராகுல்காந்தி தேர்தலை சந்திக்க முடியுமா? முடியாதா? என்பது தெரியவரும்.

    வழக்கில் கவனம் செலுத்துவது மட்டுமில்லாமல் தேர்தலை சந்திக்க கட்சியையும் தயார்படுத்த வேண்டும் என்று மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக பிரியங்காவையும் முன்னிலை படுத்த வேண்டும் என்று பலரும் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.

    பிரியங்காவும் முழு நேர அரசியலுக்கு தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. டெல்லியில் நடந்த போராட்டங்களில் அவரும் பங்கேற்று ஆவேசமாக பேசினார்.

    ராகுல்காந்தி வயநாடு எம்.பி.யாக பதவி வகித்தவர். பதவி பறிக்கப்பட்ட பிறகு தொகுதியில் மக்களை சந்திக்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டது.

    அதன்படி வயநாட்டில் இன்று மாலை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதுபற்றி கேரள மாநில பொறுப்பாளரும், அகில இந்திய செயலாளருமான பி.விசுவநாதன் கூறியதாவது:-

    ராகுல்காந்திக்கு ஆதரவாகவும், மோடியை கண்டித்தும் கேரளா முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தீப்பந்தங்கள் ஏந்தி எழுச்சியுடன் போராடி வருகிறார்கள்.

    இந்நிலையில் இன்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஆர்.எஸ்.பி.ஜே.டி. (எஸ்) உள்ளிட்ட 7 கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் கலந்து கொள்ள விமானத்தில் கோழிக்கோடு வரும் ராகுல்காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டரில் வயநாடு வருகிறார். அவருடன் பிரியங்காவும் கலந்து கொள்கிறார்.

    டெல்லியை விட்டு வெளியே வந்து பிரியங்கா பேசுவது இதுவே முதல் முறை. இது பிரியங்காவையும் தேசிய அரசியலில் முன்னிலை படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் கே.சுதாகரன், கே.சு.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பி.விஸ்வநாதன் தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகிறார்கள்.

    • அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி இன்று பிற்பகலில் மேல்முறையீடு செய்கிறார்.
    • ராகுல்காந்தி அப்பீல் செய்வதற்காக கோர்ட்டுக்கு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசினார். அப்போது அவர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், குஜராத் முன்னாள் மந்திரியுமான புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 23-ந் தேதி தீர்ப்பு விதிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது.

    2 ஆண்டு சிறை தண்டனையை தொடர்ந்து மறுநாளே ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி இன்று பிற்பகலில் மேல்முறையீடு செய்கிறார். அவர் சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார்.

    மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்வதற்காக ராகுல்காந்தி இன்று காலை சூரத் புறப்பட்டார்.

    சூரத் புறப்பட்டு செல்வதற்கு முன்பு ராகுல்காந்தியை சோனியாகாந்தி சந்தித்தார். அவரது வீட்டுக்கு நேரில் சென்று சோனியா சந்தித்தார். இதேபோல பிரியங்காவும் ராகுல்காந்தி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார்.

    ராகுல்காந்தி குஜராத் மாநிலம் சூரத் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய வரும்போது காங்கிரஸ் தலைவர்கள் உடன் செல்வார்கள்.

    காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், இமாச்சலபிரதேச முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங், மேல்சபை எம்.பி. கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உடன் செல்லலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ராகுல்காந்தி அப்பீல் செய்வதற்காக கோர்ட்டுக்கு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மேல்முறையீடு மனுவில் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கம் ரத்தாகும்.

    • மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது.
    • மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசினார். அப்போது அவர் மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்தி ரேட் கோர்ட்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், குஜராத் முன்னாள் மந்திரியுமான புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு ஜாமீன் கொடுக்கப்பட்டது. 2 ஆண்டு சிறை தண்டனையை தொடர்ந்து அவரது மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப் பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல்முறையீடு செய்வதற்காக அவர் சூரத் செல்கிறார். 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அவர் சூரத் செசன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார்.

    மேல்முறையீடு மனுவில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்தாகும்.

    ×