search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 135775"

    • நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக மேட்டுப்பாளையம் நகரம் விளங்கி வருகிறது.
    • சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து அதிகரித்து வாகன நெரிசல் காணப்படுகிறது.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக மேட்டுப்பாளையம் நகரம் விளங்கி வருகிறது. தற்போது ஊட்டியில் குளுகுளு கோடை சீசன் தொடங்கியுள்ளதால் மேட்டுப்பாளையம் நகரம் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து அதிகரித்து வாகன நெரிசலும் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில்கொண்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மாவட்ட காவல்துறையின் சார்பில் மேட்டுப்பாளையம் நகரில் இன்று முதல் 2 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் இன்று அமலுக்கு வந்தது. எந்த சுற்றுலா வாகனங்கள் மேட்டுப்பாளையம் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி செல்லும் வாகனங்கள் பாரத் பவன் ரோடு-ரெயில் நிலையம் ரோடு-சிவம் தியேட்டர்-சக்கரவர்த்தி சந்திப்பு வழியாக செல்லவேண்டும். நீலகிரியில் இருந்து கோத்தகிரி வழித்தடத்தில் வரும் வாகனங்கள் ராமசாமி நகர் பாலப்பட்டி வேடர் காலனி-சிறுமுகை ரோடு-ஆலங்கொம்பு சந்திப்பு-தென்திருப்பதி 4 ரோடு-அன்னூர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அவ்வழியாக கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லவேண்டும்.

    நீலகிரியில் இருந்து குன்னூர் வழியாக வரும் வாகனங்கள் பெரிய பள்ளிவாசல்-சந்தக்கடை-மோத்தைபாளையம்-சிறுமுகை ரோடு-ஆலாங்கொம்பு-தென்திருப்பதி 4 ரோடு சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு உள்ளது. மேட்டுப் பாளையம்-சிறுமுகை இடையே ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சத்தியமங்கலம் பண்ணாரி-ஈரோட்டிலிருந்து சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையம் செல்ல விரும்புவோர் ஆலங்கொம்பு-தென் திருப்பதி 4 ரோடு-அன்னூர் சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்தை சீரமைக்க போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
    • ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஊட்டி,

    தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    சமவெளியில் வெயில் நிலவி வரும் அதே வேளை யில், நீலகிரி மாவட்டத்தில் குளுமையான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.இதையடுத்து நீலகிரியில் நிலவி வரும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே அறை எடுத்து இங்கு தங்குவது வழக்கம்.

    இதற்காக அவர்கள் சுற்றுலாவுக்கு ஊரில் இருந்து புறப்படும் முன்பே இணையதளத்தில் சென்று விடுதியை புக் செய்வது வழக்கம்.

    தற்போது கோடை சீசன் தொடங்கி நடந்து வருகிறது. சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பலர் தங்களது குடும்பத்தி னருடன் ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர்.

    இந்த நிலையில் தங்கும் விடுதிகளில் வாடகை கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களில் விடுதி கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிக அதிகமாகும். இதனால் ஊட்டிக்கு வரக்கூடிய நடுத்தர மற்றும் ஏழை சுற்றுலா பயணிகள் மி கவும் பாதிப்படைந்து ள்ளனர். விடுதி கட்டணம் மட்டு மின்றி, லாட்ஜ் அறைகள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். காசு அதிகம் கொடுத்து உணவு வாங்கி சாப்பிட்டாலும், அந்த உணவு தரமாக இருக்க வேண்டும் என அனை வரும் எதிர்பார்ப்பது தான். ஆனால் அங்குள்ள பல ஓட்டல்களில் காசை அதிகமாக வாங்கி கொண்டு தரமற்ற உணவுகளை விற்பதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    சமீபத்தில் கூட ஊட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டுபோன உணவு பரிமாறப்பட்டதாக பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி வீடியோவை பகிர்ந்திருந்தது நினைவுகூரத்தக்கது.

    2 நாள்கள் ஊட்டிக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, நிம்மதியாக தங்கி செல்லலாம் என வரும் சுற்றுலா பயணிகளுக்கு விடுதி கட்டணம் உயர்வு, தரமற்ற உணவு போன்றவை அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    • ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
    • ஊட்டி அருகே தொட்டபெட்டா மலை சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது.

    ஊட்டி:

    தமிழகத்தில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதனால் வெயிலை சமாளிக்க பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிர் நிலவும் சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். மேலும் தொடர் விடுமுறை வேறு சேர்ந்து கொள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. குழந்தைகள் தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல் நகருக்கு வெளியில் உள்ள சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம், கேர்ன்ஹில் வனம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் காணப்பட்டது.

    ஊட்டி - கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரத்தில் வழக்கத்தை விட இன்று கூட்டம் அதிகமாக இருந்தது. இங்குள்ள காட்சி கோபுரத்தில் இருந்து தொலைநோக்கி மூலம் காட்சி கோபுரங்களை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். மலை சிகரம் மற்றும் பாறைகளில் நின்றபடி சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் நீலகிரியில் விளைந்த பழங்கள், மலைக்காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். அதிக வாகனங்கள் சென்று வந்ததில் சிகரத்திற்கு செல்ல கூடிய சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    ஊட்டி அருகே தொட்டபெட்டா மலை சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. ஒரு நபருக்கு ரூ.10 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டு உள்ளது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் நவீன தொலைநோக்கிகள் மூலம் குன்னூர் நகரம், வெலிங்டன், கோவை, கேத்தி பள்ளத்தாக்கு, ஊட்டி நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை, முக்கூர்த்தி அணை உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம்.

    • வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • வாலிபரை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தார்.

    ஊட்டி,

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் அவரை சோதனை செய்தபோது, அவரிடம் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் தோடர் மந்து பகுதியை சேர்ந்த நோட்டஸ் குட்டன் (வயது 25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதேபோல் மேல் கூடலூர் அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த சர்புதீன் (25) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    • புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டெருமை, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
    • சிறுத்தை உலா வந்ததை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டெருமை, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. சமீப காலமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவமும் நடக்கிறது.

    இந்தநிலையில் மஞ்சூர் அடுத்த எடக்காடு ஆடமனை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதை பார்த்த விவசாயிகள் சத்தம் போட்டு விரட்டினர். மேலும் சிறுத்தை உலா வந்ததை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை உலா வருவதால், வேலைக்கு செல்ல தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

    • 800-க்கும் மேற்பட்ட பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள் உள்ளனர்.
    • 300 பேர் மட்டுமே பணி நிரந்த ரம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் 800-க்கும் மேற்பட்ட பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 300 பேர் மட்டுமே பணி நிரந்த ரம் செய்யப்பட்டுள்ளனர்.

    மீதமுள்ள 500 பேர் தற்காலிக பணியாளர்க ளாகவே உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த போதிலும், இவர்கள் இதுவரை பணிநி ரந்தரம் செய்யப்படவில்லை. மேலும், நிரந்தர பணியா ளர்களுக்கும் இதுவரை யில் தோட்டக்கலைத்துறை சார்பில் காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை.மேலும், ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு போன்றவை வழங்கப்படாமல் உள்ளது. இதனால், தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும். பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பண்ணை பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகை பிடித்தம் செய்திட வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பத்தாண்டு பணிக்காலம் முடிந்தவர்க ளுக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் காலியாக உள்ள மஸ்தூர் மற்றும் அடிப்படை பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தோட்டக் கலைத்துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி தாவரவியல் பூங்கா பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கி ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4-வது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத், தோடர் சமுதாய முன்னேற்ற சங்க தலைவர் மந்தேஸ் குட்டன், படுக தேச பார்ட்டி தலைவர் மஞ்சை மோகன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

    பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகளோ அல்லது மாவட்ட நிர்வாகமோ பேச்சு வார்த்தை எதுவும் நடத்தவில்லை. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • பள்ளி ஆண்டு அறிக்கையையும் வாசிக்கப்பட்டது.
    • விழாவில் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது.

    இதில் ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவை ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் ஆசிரியர் ரமேஷ் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் பியூலா வரவேற்றார். பள்ளி ஆண்டு அறிக்கையை ஆசிரியை ஏஞ்சலா பொன்மணி வாசித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சந்தோஷ், நீலகிரி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் சத்யராஜ் , சமூக ஆர்வலர் சம்பத் மற்றும் அரசு அலுவலர்கள், சோலாடா, ஆல்காட் நகர், பன்னி மரம், காம்பளை, கல்லட்டி, மாசிக்கல், ஆசான துரை, சுற்று வட்டார கிராம தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் குழந்தைகளுக்கு பரிசுகளை ஆசிரியை கல்பனா வழங்கினார். முடிவில் ஆசிரியை மல்லிகா நன்றி கூறினார்.

    • புத்தகத் திருவிழா மாணவ, மாணவிகள், சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது
    • பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பழமை வாய்ந்த புத்தகங்களும் இங்கு அமைக்கப்பட்டு இருந்தன.

    ஊட்டி,

    ஊட்டியில் முதல் முறையாக நடைபெற்ற புத்தகத் திருவிழா பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாக கவர்ந்தது. கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த புத்தகத் திருவிழாவை ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பழமை வாய்ந்த புத்தகங்களும் இங்கு அமைக்கப்பட்டு இருந்தன. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற நிகழ்சியில், சுற்றுலாதுறை அமைச்சர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புத்தக திருவிழாவிற்க்கு சிறப்பான பங்களிப்பு வழங்கியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் அதிக நன்கொடை வழங்கிய ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயனுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    • ஏப்ரல் 2-வது வாரத்தில் பூங்காவில் பூக்கள் பூத்து குலுங்கும்.
    • கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.

    ஊட்டி

    ஊட்டியில் பனி குறைந்துள்ள நிலையில், தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளை பனியில் இருந்து பாதுகாக்க வைக்கப்பட்டிருந்த கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.

    ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டு தோறும் மே மாதம் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி உலக புகழ் பெற்றதாகும். இந்த கண்காட்சி நடத்துவதற்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

    மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, 35 ஆயிரம் தொட்டிகளிலும் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஊட்டியில் பனி பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால், மலர் நாற்றுக்கள் கருகும் அபாயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த மலர் நாற்றுகள் கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு அரண் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.

    தற்போது ஊட்டியில் பனியின் தாக்கம் முற்றிலும் குறைந்துள்ளதால் தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் இந்த தொட்டிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் இந்த தொட்டிகளில் மக்களின் மனங்களை கவரும் வகையில் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் என அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர். 

    • கூடலூர் நகர தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • முதியோர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் முன்னிட்டு நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர தி.மு.க. சார்பில் பிறந்தநாளை விழா கொண்டாடப்பட்டது. இதில் நகர செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் கூடலூர் முதியோர் இல்லம் அஷா பவனில் முதியோர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர அவை தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஜபருல்லா, மாவட்ட பிரதிநிதி நெடுஞ்செழியன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ரெனால்ட் வின்சென்ட், தேவர்சோலா பேரூர் செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய துணை செயலாளர் வெங்கடசலம், இளைஞர் அணி விஜயகுமார், தொண்டர் அணி அமைப்பாளர் ஜானி, வார்டு செயலாளர்கள் அசைணார், ராஜகோபால், கிருஷ்ணமூர்த்தி, மல்லிகராஜ், சடையபிள்ளை, இஸ்மாயில், கனகராஜ், சாதிக் பரசுராமன், நகர் மன்ற உறுப்பினர்கள் சத்யசீலன், நிர்மல் மும்தாஜ், தாஹீர், அபுதாஹீர், மூசா, கணேசன், செல்வபாரதி, சாமிநாதன், மணல் மணி, முருகையா, ராமசந்திரன், ஜோசப் நடராஜ், பிரசாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விடுமுறை நாட்களில் 20 ஆயிரம் பேரும் வந்து செல்கிறார்கள்.
    • திருவிழா காலங்களில் 50 டன் வரையும் குப்பை சேகரமாகிறது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வழக்கமான நாட்களில் 10 ஆயிரம் பேரும், வார விடுமுறை நாட்களில் 20 ஆயிரம் பேரும் வந்து செல்கிறார்கள்.

    ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும், 3,436 நிறுவனங்களும் உள்ளன. வழக்கமாக ஊட்டியில் தினமும் 36 டன்னும், திருவிழா காலங்களில் 50 டன் வரையும் குப்பை சேகரமாகிறது.

    இதில் 9 டன் நகராட்சி மார்க்கெட்டில் இருந்து வருகிறது. ஊட்டி நகராட்சியில் லாரி மூலமாகவும், வார்டு வாரியாக பணியாளர்கள் வாகனங்களில் சென்றும் குப்பையை சேகரித்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து தீட்டுக்கல் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, மக்கும் குப்பை உரமாக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், திருமண மண்டபங்களில் வரவேற்ப விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதால் கூடுதல் செலவாகும் நிலையில், தனியார் காட்டேஜ்களில் திருமண வரவேற்பு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இதனால் குப்பை அதிகளவில் சேர்வதுடன், நகராட்சி பணியாளர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தனியார் தங்கும் விடுதிகளில் திருமண வரவேற்பு விழா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எம்.காந்திராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியாதவாது:-

    2016-ம் ஆண்டு அரசு உத்தரவுப்படி 5000 சதுர அடி பரப்பளவுக்கு மேல் உள்ள இடங்கள் அல்லது தினசரி 1000 கிலோவுக்கு மேல் குப்பை உருவாக்கப்படும் இடங்களில் தாங்களாகவே குப்பையை அகற்றி கொள்ள வேண்டும்.

    இதற்காக பதிவு செய்து, திருமண மண்டபங்கள் தனியாக வரி செலுத்துகின்றன. ஆனால் காட்டேஜ்களில் இதுபோல் எந்த வரியும் செலுத்தாமல் திருமண வரவேற்பு விழா நடத்துவதால், அங்கு குப்பை அதிகளவில் சேர்கிறது. எனவே காட்டேஜ்களில் திருமண வரவேற்பு விழா நடத்தக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என முப்பெரும் விழா நடைபெற்றது.
    • கல்லூரியின்ஆண்டு மலரான பார்ம சாகா 30-வது தொகுப்பை பற்றி விளக்கினார்.

    ஊட்டி,

    ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.பி. தனபால் அனைவரையும் வரவேற்றார். முனைவர்கள் கே.பி. அருண் மற்றும் சத்திய நாராயணா ஆகியோர் கல்லூரி ஆண்டறிக்கையை வழங்கினர். மருந்தியல் துறை தலைவர் டாக்டர் கே.கவுதமராஜன் கல்லூரியின்ஆண்டு மலரான பார்ம சாகா 30-வது தொகுப்பை பற்றி விளக்கினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக கேரளா மாநிலம் செருத்துத்தியில் அமைந்துள்ள பஞ்சகர்மா தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் சுதாகர் கலந்து கொண்டார்.

    கவுரவ விருந்தினராக பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி.பிருந்தா, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவ இயக்குநரும், டாக்டருமான பரந்தாமன், அபெக்ஸ் மருத்துவ நிறுவன உதவி பொது மேலாளர் ராஜ்குமார், மைசூர் எஸ்.எஸ்.மஹாவித்யாபீட மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர்.ஆர்.மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மருந்து வேதியியல் துறை தலைவர் டாக்டர் காளிராஜன் நன்றி கூறினார். விழாவில் சிறந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    ×