search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசிகர்கள்"

    ஓமலூரில் நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் பட பேனர்களை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Viswasam
    ஓமலூர்:

    ஓமலூரில் நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படம் இன்று வெளியானது இதற்கு வரவேற்பு தெரிவித்தும், படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கபட்டுள்ளது.

    இந்த நிலையில் ஓமலூர் பேரூராட்சி பகுதிகளில் பேனர்கள் வைக்க அஜித்குமார் ரசிகர்கள் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், பேரூராட்சி நிர்வாகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஓமலூர் பேரூராட்சி வணிக வளாகத்தின் மேலே உள்ள விளம்பர தட்டிகள் மீதும் வைக்கப்பட்டது. இதனிடையே ஓமலூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அஜித் பேனர் வைக்கப்பட்டது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஓமலூர் பேரூராட்சி அதிகாரிகள் பேனர் வைக்கப்பட்ட வணிக வளாகத்திற்கு சென்று ஆய்வுகள் செய்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற முயன்றனர்.

    அப்போது அங்கே வந்த திமுக சமூக ஊடாக பிரிவு நிர்வாகிகள் பிரகாஷ், சீனிவாசன் ஆகியோரும், அஜித் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். பேனரை அகற்றகூடாது என்றும் அகற்றினால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அப்போது பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி வணிக வளாக பகுதிகளில் அனுமதின்றி பேனர் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தொடர்ந்தே இங்கே வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

    இதனை திமுக நிர்வாகிகள் மற்றும் அஜித் ரசிகர்கள் ஏற்க மறுத்த தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த கூட்டத்தினரை விரட்டி அடித்தனர். தொடர்ந்து வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டு, அதற்காக அமைக்கபட்டிருந்த இரும்பு தூண்களும் அகற்றப்பட்டது. தொடர்ந்து அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #Viswasam
    பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 53வது பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து சொல்ல நள்ளிரவு முதலே அவரது வீட்டை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #HappyBirthdaySRK
    மும்பை:

    பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இன்று 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதலே அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

    ஷாருக் கான் தற்போது நடித்து வரும் ஜீரோ உள்ளிட்ட இரண்டு படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

    இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஷாருக் கானுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.



    இந்நிலையில், மும்பையில் உள்ள மன்னாட் பகுதியில் வசித்து வரும் ஷாருக் கான் வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கிலான ரசிகர்கள் குவிய தொடங்கினர்.

    ரசிகர்கள் கூடியதை அறிந்த ஷாருக் கான், தனது வீட்டின் பால்கனிக்கு வந்து நின்றார். அங்கிருந்து தனது ரசிகர்களை பார்த்துக் கையசைத்து வாழ்த்து பெற்றார். இதனால் அந்த பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. #HappyBirthdaySRK
    உலக கோப்பை கால்பந்து மற்றும் விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டி என இரண்டு இறுதி போட்டிகள் விருந்து படைக்க உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். #Finals #WorldCupFootball #WimbletonTennis #Fans
    லண்டன்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் போட்டிகள் மற்றும் நாக் அவுட் சுற்று போட்டிகள் முடிந்துள்ளன. இன்று முதல் காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. இதையடுத்து அரையிறுதி போட்டிகளும், அடுத்த வாரம் இறுதி போட்டியும் நடக்கவுள்ளது.

    இதேபோல், பிரபலமான டென்னிஸ் போட்டியான விம்பிள்ட்ன் டென்னிஸ் போட்டிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் இறுதிப் போட்டி அடுத்த வாரம் இறுதியில் நடைபெறவுள்ளது.

    இந்த மாபெரும் இரண்டு இறுதி போட்டிகளும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் மிகையில்லை.



    இந்த இறுதி போட்டிகளை ஒளிபரப்ப அனைத்து தொலைக்காட்சிகளும் முழு வீச்சில் ஏற்பாடுகளை தயார் செய்து  வருகின்றன. பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனமும் தனது நிகழ்ச்சிகளை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

    விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி குறைந்த பட்சம் 2 மணி 45 நிமிடங்கள் நடைபெறும். உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியும் குறைந்தது 2 மணி நேரம் நடைபெறும் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ரஷியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றாலும், லண்டனில் வசிப்பவர்கள் தங்களது இங்கிலாந்து அணி இறுதி போட்டியில் நுழைய வேண்டும் என்பதற்காக காத்திருக்கின்றனர்.

    எது எப்படியோ, இரண்டு மெகா இறுதிப் போட்டிகளை பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்கள் தயாராக உள்ளனர். #Finals #WorldCupFootball #WimbletonTennis #Fans
    ரஜினியின் காலா படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தியேட்டருக்கு வந்து கொண்டாடி இருக்கிறார்கள். #Kaala #Rajini #Rajinikanth
    ரஜினி நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கும் படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். 

    இப்படத்தில் ரஜினி படம் முழுக்க கருப்பு வேட்டி, கருப்பு சட்டை அணிந்தே வருகிறார். மும்பை தாதாவான அவரது இந்த தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்று படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலர் ரஜினியின் காலா தோற்றத்திலேயே தியேட்டர்களுக்கு வந்திருந்தனர்.



    கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து தியேட்டர்களில் அவர்கள் தெறிக்க விட்டனர். இதனால் தியேட்டர்களில் திரும்பிய திசையெல்லாம் கருப்பு வண்ணமாகவே காணப்பட்டது. இப்படி காலா உடையில் வந்த ரசிகர்கள் பலர் தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த ‘‘காலா ரஜினி’’ கட்அவுட்டுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
    மக்கள் நீதி மய்யம் கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பொறுப்புக்களில் தனது ரசிகர்களையே நியமிக்க கமல் அதிரடியாக முடிவு எடுத்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி புதுக்கட்சியை தொடங்கிய கமல் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்தந்த மாவட்டங்களில் நிலவும் முக்கிய பிரச்சனைகளை தனது ரசிகர்கள் மூலமாக அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வு காணவும் முயற்சி மேற்கொண்டார்.

    கமல் புதிய கட்சியை தொடங்கி 100 நாட்களாகி விட்டது. இந்த காலகட்டத்தில் மகளிர் அணியினருக்கான மாநாட்டை நடத்தியதுடன், திருவள்ளூர் மாவட்டம் அதுகத்தூரில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    கட்சியில் இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ள கமல், கிராமப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தவும் முடிவு செய்துள்ளார்.

    கட்சியின் பல்வேறு அமைப்புகளுக்கும் புதிய பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பொறுப்புக்களில் தனது ரசிகர்களையே நியமிக்க கமல் அதிரடியாக முடிவு எடுத்துள்ளார்.

    நற்பணி இயக்கம் என்ற பெயரில் கமல் கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்களை ஒருங்கிணைத்து வைத்துள்ளார். இந்த நற்பணி இயக்கத்தின் மூலமாக ரசிகர்கள் ரத்ததானம் உள்ளிட்ட நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    இப்படி நற்பணிகளில் தீவிர ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் ரசிகர்களுக்கே மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்புகளை கமல் வழங்க உள்ளார். இதற்காக அவர்களை நேரில் அழைத்து பேசவும் திட்டமிட்டுள்ளார். அப்போது நேர்காணல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

    கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கூடுதலாக பெண் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் இது போன்று பெண்கள் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளனர்.

    தென் மாவட்டங்களில் ரஜினி சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்த போது மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது. இதனை பயன்படுத்தி அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை கூடுதலாக சேர்க்கவும் மாநில நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். பொது மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக கமல் தொடங்கிய மய்யம் விசில் செயல் மூலமாக மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த செயலியில் தினமும் 500 புகார்கள் குவிகிறது. இந்த புகார்களை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளும் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கவும் முயற்சி செய்து வருகிறார்கள்.

    உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்று ஏற்கனவே கமல் அறிவித்துள்ளார். இப்போது அதற்கான ஆரம்பகட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அடுத்த 2 மாதங்களில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தி விட்டு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும் கமல் முடிவு செய்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    ×