என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 136593
நீங்கள் தேடியது "தஞ்சாவூர்"
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தஞ்சை மாவட்டத்தில் 90.25 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
தஞ்சாவூர்:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தஞ்சை மாவட்டத்தில் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாசினி, பிளஸ் -2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 13,116 மாணவர்கள் எழுதினர். இதில் 11,212 பேர் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் 16,131 மாணவிகள் எழுதியதில் 15, 183 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மாவட்டத்தில் மொத்தம் 29,247 பேர் எழுதினர். இதில் 26, 395 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90.25 சதவீத தேர்ச்சி ஆகும்.
அதாவது மாணவர்களில் 85.48 சதவீத பேரும், மாணவிகளில் 94.12 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டில் தஞ்சை மாவட்டம் பிளஸ்- 2 தேர்வில் 92.47 சதவீத தேர்ச்சி பெற்றது. இந்தாண்டு கடந்தாண்டை விட 2.27 சதவீதம் தேர்ச்சி குறைவாக பெற்றுள்ளது.
இதேபோல் கடந்தாண்டு தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் 19-வது இடம் பெற்றது. இந்தாண்டு 20-வது இடத்தை பிடித்துள்ளது.
மாவட்டத்தில் 90 அரசு பள்ளிகள் உள்ள மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 84.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் 1180-க்கு மேல் ஒரு மாணவி மதிப்பெண் பெற்றுள்ளார். 1151-1180 வரை 40 பேரும், 1126-1150 வரை 147 பேரும், 1101 -1125 வரை 245 பேரும், 1001 முதல் 1100 வரை 99 பேரும், 901 முதல் 1000 மதிப்பெண் வரை 3261 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தவமணி பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இதில் மொத்தம் பிளஸ்-2 தேர்வை 14,235 பேர் எழுதினர். இதில் ஆண்கள் 4920, பெண்கள் 7241 பேர் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 12161 பேர் ஆகும். இது 85.49 சதவீதம் ஆகும். சென்ற ஆண்டை விட 3.28 சதவீதம் தேர்ச்சி அதிகமாக பெற்றுள்ளனர். இந்த ஆண்டு தமிழகத்தில் தேர்ச்சி விகிதத்தில் 24-வது இடத்தை திருவாரூர் மாவட்டம் பிடித்துள்ளது.
நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 85.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டில் 17 ஆயிரத்து 958 பேர் தேர்வு எழுதினர். இதில் 15 ஆயிரத்து 438 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு தேர்ச்சியை விட இந்த ஆண்டு 2.11 சதவீதம் பேர் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். #Tamilnews
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தஞ்சை மாவட்டத்தில் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாசினி, பிளஸ் -2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 13,116 மாணவர்கள் எழுதினர். இதில் 11,212 பேர் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் 16,131 மாணவிகள் எழுதியதில் 15, 183 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மாவட்டத்தில் மொத்தம் 29,247 பேர் எழுதினர். இதில் 26, 395 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90.25 சதவீத தேர்ச்சி ஆகும்.
அதாவது மாணவர்களில் 85.48 சதவீத பேரும், மாணவிகளில் 94.12 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டில் தஞ்சை மாவட்டம் பிளஸ்- 2 தேர்வில் 92.47 சதவீத தேர்ச்சி பெற்றது. இந்தாண்டு கடந்தாண்டை விட 2.27 சதவீதம் தேர்ச்சி குறைவாக பெற்றுள்ளது.
இதேபோல் கடந்தாண்டு தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் 19-வது இடம் பெற்றது. இந்தாண்டு 20-வது இடத்தை பிடித்துள்ளது.
மாவட்டத்தில் 90 அரசு பள்ளிகள் உள்ள மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 84.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் 1180-க்கு மேல் ஒரு மாணவி மதிப்பெண் பெற்றுள்ளார். 1151-1180 வரை 40 பேரும், 1126-1150 வரை 147 பேரும், 1101 -1125 வரை 245 பேரும், 1001 முதல் 1100 வரை 99 பேரும், 901 முதல் 1000 மதிப்பெண் வரை 3261 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தவமணி பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இதில் மொத்தம் பிளஸ்-2 தேர்வை 14,235 பேர் எழுதினர். இதில் ஆண்கள் 4920, பெண்கள் 7241 பேர் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 12161 பேர் ஆகும். இது 85.49 சதவீதம் ஆகும். சென்ற ஆண்டை விட 3.28 சதவீதம் தேர்ச்சி அதிகமாக பெற்றுள்ளனர். இந்த ஆண்டு தமிழகத்தில் தேர்ச்சி விகிதத்தில் 24-வது இடத்தை திருவாரூர் மாவட்டம் பிடித்துள்ளது.
நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 85.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டில் 17 ஆயிரத்து 958 பேர் தேர்வு எழுதினர். இதில் 15 ஆயிரத்து 438 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு தேர்ச்சியை விட இந்த ஆண்டு 2.11 சதவீதம் பேர் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். #Tamilnews
கும்பகோணத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி தலையில் கியாஸ் சிலிண்டரை போட்டு கணவர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாக்கோட்டை மெயின்ரோட்டில் வசித்து வருபவர் பசீர் அகமது (வயது 42). இவரது மனைவி பாத்திமா (33). பசீர் அகமது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
பாத்திமாவின் சொந்த ஊர் சென்னை திருவான்மியூர் ஆகும். பாத்திமா ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். பின்னர் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பசீர் அகமதுவை திருமணம் செய்து கொண்டார். பசீர் அகமதுவுக்கு பாத்திமா 3-வது மனைவி ஆவார்.
பாத்திமா வீட்டிலேயே டெய்லர் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து பசீர் அகமது , கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார். ஊருக்கு வந்த அவர் மதுகுடித்து விட்டு மனைவி பாத்திமாவிடம் தகராறு செய்து வந்தார். இதேபோல் அடிக்கடி அவர் தகராறு செய்ததால் பாத்திமா பீவி நாச்சியார் கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றார்.
இதையடுத்து நேற்றுமுன் தினம் நாச்சியார் கோவிலுக்கு சென்ற பசீர் அகமது பேச்சுவார்த்தை நடத்தி மனைவியை குடும்பம் நடத்த சாக்கோட்டைக்கு அழைத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவில் திடீரென கணவன்- மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு வந்தது. இதையடுத்து இருவரும் ஒருவரையொருவர் சத்தம் போட்டப்படி இருந்தனர். பிறகு பசீர் அகமது அங்கிருந்து சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் பாத்திமா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பசீர் அகமது திடீரென வீட்டின் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை தூக்கினார். அதை அப்படியே தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் ‘டமார்’ என போட்டார். இதில் பாத்திமா மூளை சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
மனைவி இறந்து விட்டார் என்பதை அறிந்த பசீர் அகமது அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பாத்திமா கொலை செய்யப்பட்ட சம்பவம் நாச்சியார் கோவில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய கவுரி மற்றும் போலீசார் விரைந்து வந்து பாத்திமா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மனைவி தலையில் சிலிண்டர் போட்டு கொலை செய்த பசீர் அகமது இன்று காலை நாச்சியார் கோவில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாக்கோட்டை மெயின்ரோட்டில் வசித்து வருபவர் பசீர் அகமது (வயது 42). இவரது மனைவி பாத்திமா (33). பசீர் அகமது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
பாத்திமாவின் சொந்த ஊர் சென்னை திருவான்மியூர் ஆகும். பாத்திமா ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். பின்னர் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பசீர் அகமதுவை திருமணம் செய்து கொண்டார். பசீர் அகமதுவுக்கு பாத்திமா 3-வது மனைவி ஆவார்.
பாத்திமா வீட்டிலேயே டெய்லர் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து பசீர் அகமது , கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார். ஊருக்கு வந்த அவர் மதுகுடித்து விட்டு மனைவி பாத்திமாவிடம் தகராறு செய்து வந்தார். இதேபோல் அடிக்கடி அவர் தகராறு செய்ததால் பாத்திமா பீவி நாச்சியார் கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றார்.
இதையடுத்து நேற்றுமுன் தினம் நாச்சியார் கோவிலுக்கு சென்ற பசீர் அகமது பேச்சுவார்த்தை நடத்தி மனைவியை குடும்பம் நடத்த சாக்கோட்டைக்கு அழைத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவில் திடீரென கணவன்- மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு வந்தது. இதையடுத்து இருவரும் ஒருவரையொருவர் சத்தம் போட்டப்படி இருந்தனர். பிறகு பசீர் அகமது அங்கிருந்து சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் பாத்திமா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பசீர் அகமது திடீரென வீட்டின் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை தூக்கினார். அதை அப்படியே தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் ‘டமார்’ என போட்டார். இதில் பாத்திமா மூளை சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
மனைவி இறந்து விட்டார் என்பதை அறிந்த பசீர் அகமது அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பாத்திமா கொலை செய்யப்பட்ட சம்பவம் நாச்சியார் கோவில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய கவுரி மற்றும் போலீசார் விரைந்து வந்து பாத்திமா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மனைவி தலையில் சிலிண்டர் போட்டு கொலை செய்த பசீர் அகமது இன்று காலை நாச்சியார் கோவில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
தஞ்சாவூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். #Accident
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி செல்லும் புறநகர் வழிச்சாலையில் இன்று அதிகாலை லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
அப்போது நின்று கொண்டிருந்த லாரி மீது அங்கு வந்த கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். #Accident
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X