search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலர்கள்"

    இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மலர்களைப் பொறுத்து, நமக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சில மலர்களையும் அதற்கான பலன்களையும் பார்க்கலாம்.
    இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மலர்களைப் பொறுத்து, நமக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சில மலர்களையும் அதற்கான பலன்களையும் பார்க்கலாம்.

    செந்தாமரை மலர் - செல்வம் பெருகும்

    வெண்தாமரை மலர் - மனக்குறை போக்கும்

    தங்க அரளி - கடன் சுமை குறையும்

    செவ்வரளி - குடும்ப ஒற்றுமை உருவாகும்.

    நீல சங்கு புஷ்பம் - ஆயுள் விருத்திக்கும்

    மனோரஞ்சிதம் - கணவன்-மனைவிக்குள் அன்பை வலுப்படுத்தும்.

    ரோஜா, மல்லிகை, முல்லைப்பூ, பாரிஜாதம், செவ்வந்தி போன்ற வாசமுள்ள மலர்களை இறைவனுக்குச் சூட்டி வழிபட்டால், நேச மனப்பான்மை கொண்டவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
    சிம்ஸ் பூங்காவில் கடந்த மாதம் பூத்து குலுங்கிய அழகிய மலர்கள் மழை காரணமாக அழுகி உதிர்ந்துவிட்டன.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் சுற்றுலா தளங்களும் இயற்கை காட்சி முனைகளும் அதிக அளவில் உள்ளன. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டியை அடுத்து குன்னூர் சுற்றுலாவில் முக்கியத்துவம் பெறுகிறது. குன்னூரில் சிம்ஸ் பூங்கா, இயற்கை காட்சி முனைகளான லம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்றவைகள் சுற்றுலா பயணிகளால் அதிகம் விரும்பி பார்க்கும் இடங்கள் ஆகும். சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் பழக்கண்காட்சியை முன்னிட்டு புதிய மலர் நாற்றுகள் நடவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு 60- வது பழக்கண்காட்சி கடந்த மே மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

    இந்த மலர் கண்காட்சியை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் 2½ லட்சம் புதிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. இவைகள் கடந்த மே மாதம் பழக்கண்காட்சி நேரத்தில் நன்கு பூத்து சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தது. மே மாதம் கடைசி வாரத்திலிருந்து குன்னூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. தற்போது காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிம்ஸ் பூங்காவில் கடந்த மாதம் பூத்து குலுங்கிய அழகிய மலர்கள் மழை காரணமாக அழுகி உதிர்ந்துவிட்டன. மேலும் மழையின் எதிரொலியாக சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. 
    ×