search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 139734"

    தகுதி அடிப்படையில் தான் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டதாக துணை வேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்ய லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    இது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிதலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பி.துரைசாமி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

    அவரிடம் நிருபர்கள், கடந்த காலங்களில் துணை வேந்தர்கள் நியமனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் கை மாறியுள்ளதாக கவர்னர் பன்வாரிலால் எழுப்பியுள்ள புகார் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து துணை வேந்தர் துரைசாமி கூறியதாவது:-

    தகுதி அடிப்படையில் தான் துணை வேந்தர் நியமனம் நடைபெற்று வருகிறது. அப்போதைய கவர்னர் வித்யாசாகர்ராவ் இருக்கும் போது தான் நான் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டேன்.

    அதாவது துணை வேந்தர் பதவிக்கான நேர்முகத்தேர்வில் 3 பேர் பங்கேற்றோம். இதில் விதிமுறைகளின் படி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தான் இப்பதவி கிடைக்கப்பெற்றேன். இதில் எவ்வித பணப்பரிமாற்றமோ, சிபாரிசுகளோ நடைபெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாகிஸ்தானில் ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்றார்.

    இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கானை லாகூரில் சமூக ஆர்வலர்கள் நேற்று சந்தித்தனர். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதற்கு முன்பு இருந்தவர்கள் பல ஆண்டு காலமாக நாட்டை கொள்ளையடித்து நாசமாக்கிவிட்டனர். அவர்கள் பொது மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

    அதற்கான புதிய சட்டம் இயற்றப்படும். இந்த சட்ட வரைவு விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதில் ஊழல் அரசியல்வாதிகள் பற்றி தகவல் கொடுக்கும் சமூக நல ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அம்சங்களும் இடம் பெறும் என்றார்.

    இந்த சட்டம் குறித்து வேறு விளக்கம் எதுவும் அவர் அளிக்கவில்லை.  #ImranKhan
    பேராசிரியர்கள் நியமனத்திலும் பணம் வாங்கி கொண்டு முறைகேடு செய்ததாக புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி குற்றம்சாட்டி உள்ளது. #Scam
    தருமபுரி:

    பல கோடி வாங்கிக் கொண்டு தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குற்றம் சாட்டினார்.

    தற்போது பேராசிரியர்கள் நியமனத்திலும் பணம் வாங்கி கொண்டு முறைகேடு செய்ததாக புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி குற்றம்சாட்டி உள்ளது.

    இந்த அமைப்பின் சார்பில் தருமபுரி நகரம் முழுவதும் பரபரப்பு போஸ்டர்க்ள ஒட்டப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழக ஆளுனரே, உயர் கல்வி துறையே, பேராசிரியர் நியமனத்தில் தொடரும் முறைகேடுகள், முறைகேடாக நடந்த பணி நியமனத்தை ரத்து செய்.

    தமிழ்நாடு அரசு உதவி-மானியம் பெறும் கல்லூரிகளில் தொடரும் ஆசிரியர் நியமனத்தில் விற்பனை-இடஒதுக்கீடு முறைகேடுகள்.

    முறைகேட்டுக்கு தமிழக அரசு, உயர்கல்வி துறை, கல்லூரி கல்வி இயக்குனர், இடை இயக்குனர் என அனைவரும் ஒப்புதல்.

    2013-ம் ஆண்டு முதல் நடைபெற்ற இடஒதுக்கீடு நியமனங்கள் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு விசாரணைக்கு உத்தரவிடு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Scam



    தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று கிணத்துக்கடவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். #DMK #UdhayanidhiStalin
    நெகமம்:

    அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பனப்பட்டி கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    மேடையில் இருப்பது பெருமையல்ல, கீழே தொண்டர்களுடன் அமர்ந்து கொள்கிறேன் என நிர்வாகிகளிடம் சொன்னேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி மேடையில் ஏற்றியிருக்கின்றனர். மேடையில் இருப்பதால் தொண்டர்களை பார்க்க முடிகின்றது. தலைவர் கலைஞர் அவர்களை வணங்கி உரையை தொடங்குகின்றேன்.

    தமிழகம் முழுவதும் ஊழல் அ.தி.மு.க. அரசை கண்டித்து பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. இதற்கு அனுமதி வழங்கவில்லை. நீதிமன்றம் சென்று தான் அனுமதி பெற்றுள்ளோம். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    தலைவர் கலைஞரின் மறைவுக்கு பிறகு கூட நீதிமன்றம் சென்று போராடித்தான் மெரினாவில் இடம் வாங்கினோம்.

    எடப்பாடி பழனிசாமி எப்போதும் அம்மாவின் ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்கிறார். ஒரு வேளை ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் பெங்களூர் சிறையில்தான் இருந்திருப்பார். இப்போதுள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் வீடு புகுந்து திருடவில்லை. அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடைபெறுகிறது.

    தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது ஊழல் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள். தமிழகத்தில் 38 ஆயிரம் போராட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளோம் என எடப்பாடி பழனிசாமி கூறுகின்றார்.

    மக்கள் நிம்மதியாக இல்லை என்பதால் தான் போராடுகின்றனர். இது தெரியாமல் அதிக போராட்டம் இங்கு தான் நடக்கின்றது என முதல்-அமைச்சர் பெருமையாக சொல்கின்றார்.

    எடப்பாடி பழனிசாமி ஒரு கூட்டத்தில் பேசும் போது, நமது தலைவர் குறுக்கு வழியில் வந்ததாக கூறி உள்ளார். நீங்கள் எப்படி இருந்தீர்கள் என அனைவருக்குமே தெரியும். சசிகலாவின் காலை பிடித்து வந்தவர்கள் நீங்கள். ஆனால் உழைப்பால் உயர்ந்தவர் நமது தலைவர்.

    ஸ்டாலினுக்கு அடுத்த படியாக உதயநிதி வரிசையில் வந்து விட்டார் என எடப்பாடி பழனிசாமி சொல்கின்றார். நான் அரசியலுக்கு வந்தது தலைமை பொறுப்பை ஏற்பதற்கு அல்ல, கடைசி தொண்டனுக்கு தோள் கொடுப்பதற்காகத் தான்.

    இவ்வாறு அவர் பேசினார். #DMK #UdhayanidhiStalin
    ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இல்லை என்று வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
    சென்னை:

    செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்து நகரச் செயலாளர் நரேந்திரன் தலைமையில் பழைய பஸ்நிலையம் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் கரூர் முரளி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆப்பூர் வரலட்சுமி மதுசூதனன் பேசும்போது கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. குட்கா ஊழல், மின்வாரிய ஊழல், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறைகளில் மெகா ஊழல்கள் நடைபெறுகிறது.

    இதை எதிர்க்கட்சியான தி.மு.க. சுட்டிக் காட்டினாலும், ஆளும் தரப்பினர் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து கிடக்கிறது. திட்டப்பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் பணம் இல்லை என்கிறார்கள்.

    ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சருக்கு தைரியம் இல்லை. ஏனென்றால் அவர் மீதே லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் உள்ளது. என்னை மாட்டி விட்டால் உன்னை மாட்டி விடுவேன் என்று அமைச்சர்கள் மிரட்டுவதால் எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தலைவர் மு.க.ஸ்டாலின் இவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தொழில் அதிபர் ஆப்பூர் மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் செங்கை தாமஸ், ஒன்றிய செயலாளர் எம்.கே. தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.
    தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி நிதி அமைச்சராக இருப்பது கொடுமை என்று ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். #MansoorAliKhan #ArunJaitley
    ஈரோடு:

    ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் பற்றிய குறும்படம் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டார்.

    அப்போது நடிகர் மன்சூர் அலிகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு என்பது தந்தை பெரியார் பிறந்த பூமி ஆகும். ஈரோட்டுக்கு வந்த போது பெரியாரின் சாதனைகளும் அவரின் அருமை பெருமைகள் என் கண் முன்னே நிற்கிறது. தற்போது பெரியாரை பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் வருவது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிலும் 95 வயதிலும் அவர் செய்த சாதனைகள் அதிகம்.

    தமிழர்கள் பல துறைகளில் இந்தியா முழுக்க தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். பெரியார் மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் பிறந்த காரணத்தினால்தான் அவர் அர்ப்பணிப்புகளை தவறாக சொல்லி வருகின்றனர்.

    பெரியாரின் சிலைகளை அவமதித்து வருவது மிகவும் வருந்தத்தக்க வி‌ஷயம். அரசியல் சித்தாந்தத்தில் ஓட்டுகள் வாங்காமல் முதலமைச்சராக, கவர்னராக, அமைச்சர்களாக உள்ளனர். ராணுவ அமைச்சர்களாகவும் உள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி கூட நிதி அமைச்சராக இருப்பது கொடுமை.


    தி.க கட்சியில் உள்ள பல்வேறு தலைவர்கள் அமைச்சர்களாகவும், கவர்னராகவும் உயர் பதவியை அடையாத நிலையில் உள்ளனர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் இவர்களை இப்படி புறந்தள்ளியது ஏன்? என கேள்வி எழுப்புகிறேன்.

    பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அந்தப் பாதையிலிருந்து விலகியதால் தான் தற்போது தவறுகளும் ஏற்பட்டு வருகிறது. பெரியாரின் கொள்கை என்பது ஆயிரம் ஆண்டுகள் மக்களை வழிநடத்தக்கூடிய திறன் உள்ளது.

    இந்த மண்ணில் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இனியும் இதை வளரவிடக்கூடாது. திருமுருகன் காந்தி போன்றவர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஆட்சியாளர்கள் அராஜகம் செய்து வருகின்றனர். இதனை ஊழலற்ற ஆட்சி என்கிறார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்குகின்றனர்.

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்கள் கை கூலிகளாக உள்ளனர். இது வெட்கக்கேடான வி‌ஷயம்.

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. இந்த ஆட்சியை இனம் கண்டு தக்க பாடம் வருங்காலத்தில் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் பேசினார்.   #MansoorAliKhan   #ArunJaitley
    காற்றாலை மின்சாரத்தில் ஊழல் என்று மு.க.ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #TNMinister #Thangamani #DMK #MKStalin
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது தூத்துக்குடி அனல் மின்நிலையம். இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    முதல் மூன்று யூனிட்கள் 30 ஆண்டுகளை கடந்தவை என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இங்கு இயங்கிவந்த இரு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக மின் வாரிய அமைச்சர் தங்கமணி இன்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு வந்த அவர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து அவர் அனல்மின் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மின் உற்பத்தி தடைபடாமல் தொடர்ந்து நடைபெற உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. தற்போது இங்கு 1 லட்சத்து 2 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது. வருகிற 25‍-ந்தேதி ஒரு கப்பலில் நிலக்கரி வர உள்ளது. இதனால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது.

    தமிழகத்தில் தற்போதைய சூழலில் காற்றாலைகள் மூலமாக 3500 மெகாவாட், சூரிய சக்தி மூலமாக 1500 மெகாவாட், தண்ணீர் மூலம் 2500 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மின் உற்பத்தி அதிகமாக இருப்பதாலேயே தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. நிலக்கரி தட்டுப்பாடு என்பது தவறான தகவல்.

    தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் உடன்குடி, எண்ணூர், வடசென்னை ஆகிய இடங்களில் புதிய அனல் மின்நிலையங்கள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க கடல் நீரை சுத்தம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மழை நீரை சேகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


    காற்றாலை மின்சாரத்தில் ஊழல் என்று மு.க.ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு புறம்பானது. தனியார் நிறுவனம்தான் அரசுக்கு ரூ9.17 கோடி செலுத்தவேண்டியுள்ளது.

    பாளையங்கோட்டையில் 50 கிலோவாட் மின்சக்தி திறன் கொண்ட துணை மின் நிலையத்தை 80 கிலோவாட் சக்தி கொண்டதாக மாற்ற திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்குவதாக இருந்தது. அதற்காகவே மின்தடை அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Thangamani #DMK #MKStalin

    ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை அந்நாட்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று கைது செய்தனர். #NajibRazak #NajibRazakarrested
    கோலாலம்பூர்:

    மலேசியாவின் 14வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

    முன்னதாக, மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    தற்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி வெளிநாடுகளுக்கு மலேசியா நாட்டின் குடியுரிமைத்துறை தடை விதித்துள்ளது.

    இந்நிலையில், ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை அந்நாட்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று கைது செய்தனர்.

    புட்ரஜயா பகுதியில் உள்ள ஊழல் தடுப்பு தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.13 மணிக்கு நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டதாகவும், நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #NajibRazak #NajibRazakarrested 
    அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்து விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம்:

    அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விழுப்புரம் மத்திய, தெற்கு மாவட்டங்கள் சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், ராதாமணி, மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட தளபதி நற்பணி மன்ற தலைவர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் தனசேகரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் சபாராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், முத்துகுமார், அவைத்தலைவர் நந்த கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாவாடை குழந்தைசாமி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர்கள் வக்கீல் அருள்குமார், சிங்காரவேல் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.
    ஊழலை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே தி.மு.க. தான். அவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் நகைச்சுவையாக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். #ADMK #TNMinister #SellurRaju #DMK
    வேலூர்:

    காட்பாடியில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் விற்பனை கடைகள் 2016ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.1 கோடி 39 லட்சத்து 13 ஆயிரத்து 350-க்கு விற்பனை நடந்துள்ளது.

    ரூ.5.97 லட்சம் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. தரமான காய்கறிகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கவும், வெளிமார்க்கெட்டுகளில் காய்கறி விலையை கட்டுப்படுத்துவதற்காகவே பண்ணை கடைகள் தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை. இந்தாண்டு பருவமழை நன்றாக பெய்துள்ளது. இதனால் ரூ.8 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்படுகிறது. வேளண்மை கூட்டுறவு சங்கங்களில் ரசாயன உரத்துடன் இயற்கை உரமும் விற்பனை செய்யப்படுகிறது.


    ஊழலை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே தி.மு.க. தான். கசாப்பு கடைக்காரன் காரூன்யம் பேசுவது போல் உள்ளது. ஊழலுக்காக தி.மு.க. ஆட்சி தான் கலைக்கப்பட்டது. சர்க்காரியா கமி‌ஷனால் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சியும் தி.மு.க. தான்.

    தி.மு.க.வின் சொத்துக்கள் எவ்வளவு. இவர்கள் என்ன கல்குவாரியில் கல் உடைத்து சம்பாதித்ததா? இவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் நகைச்சுவையாக உள்ளது. யார்... யாரை குற்றம் சாட்டுவது என்று பொதுமக்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர்.

    தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள், இன்னாள் மாவட்ட செயலாளர்களை ஆராய வேண்டும். அவர்களின் ஆரம்ப நிலை என்ன? இப்போது சொத்து சேர்த்தது எப்படி? அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடக்கிறது. திட்டங்கள் சிறப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SellurRaju #DMK
    இனி வரும் தேர்தல்களில் முக ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகக்கூட வர முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். #MinisterSellurRaju #MKStalin
    மதுரை:

    மதுரை முனிச்சாலை மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் அவைத்தலைவர் துரைப்பாண்டியன் தலைமையில் நடந்தது. துணை செயலாளர் தங்கம், பொருளாளர் வில்லாபுரம் ராஜா முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    உலகத்திலே யாரும் சிந்திக்காத அளவிற்கு யோசித்து அண்ணாவின் பெயரை கட்சிக்கும், அவரது உருவத்தை கட்சியின் கொடியிலும் வைத்தவர் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர். மட்டும் அப்படி செய்யாமல் இருந்தால் அண்ணா என்ற ஒருவர் பிறந்தார், இருந்தார் என்றே யாருக்கும் தெரிந்து இருக்காது.

    அண்ணாவின் வழிப்படி கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்து மக்களுக்காக சத்துணவு திட்டம் தொடங்கி மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தந்தவர் கலியுக கர்ணனாக விளங்கியவர் எம்.ஜி.ஆர்.

    எம்.ஜி.ஆர் தனது அரசியல் வாரிசு என மதுரையில் செங்கோல் கொடுத்து ஜெயலலிதாவை அரசியல் வாரிசு ஆக்கினார். ஜெயலலிதா ஆட்சியில் காவிரி பிரச்சினை தீர்ந்தது. முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தியது, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியவர்.

    மு.க.ஸ்டாலின் வீட்டுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம், நம்மை அன்றாடம் வசைபாடும் டி.டி.வி. வீட்டுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தந்தவர் ஜெயலலிதா.

    மதுரை மக்கள் பயன் பெறும் வகையில் ரூ.150 கோடி செலவில் பறக்கும் பாலங்கள், உயர் மட்ட பாலங்கள் மதுரையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.1600 கோடி செலவில் குடிநீர் திட்டம் ரூ.1500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை, ரூ.250 கோடி செலவில் சுற்று சாலை போன்ற நல்லத்திட்டங்களை கொண்டு வரும் இந்த அரசை முக.ஸ்டாலின் எப்படி ராஜினாமா செய்ய சொல்ல முடியும். ஊழல்வாதிகளே அதிகமாக இருக்கும் தி.மு.க.வினர் எப்படி அ.தி.மு.க.வினர் மீது ஊழல் குற்றசாட்டு கூற முடியும்.

    மேலும் ஜெயலலிதா நினைவிடம் மெரினாவில் கட்டக்கூடாது என்பதற்காக வழக்கு தொடர்ந்த தி.மு.க.வினர் கலைஞருக்காக ஒரே இரவில் வழக்குகளை வாபஸ் பெற்ற தி.மு.க.வினர் இப்படி எங்கள் மீது குற்றம் சாட்டுவது நியாயமா, நீதியா? இனி வரும் தேர்தல்களில் மு.க.ஸ்டாலின் எதிர்க் கட்சி தலைவராகக்கூட வர முடியாது. இது அ.தி.மு.க.வினரின் விருப்பம் அல்ல பொதுமக்களின் விருப்பம்.

    மு.க.ஸ்டாலினால் மு.க.அழகிரியையே சமாளிக்க முடியவில்லை. எங்களை மு.க.ஸ்டாலினால் சமாளிக்க முடியாது. வாருங்கள் திருப்பரங்குன்றம் தேர்தலில் சந்திப்போம். மு.க.ஸ்டாலினின் பண பலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. எங்களிடம் மக்கள் படை உள்ளது. இளைஞர் படை, மாணவர் படை உள்ளது. நாங்கள் எதிரியை சந்திக்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #MinisterSellurRaju #MKStalin
    பூதலூர் அருகே வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2 கோடி ஊழல் நடந்தது குறித்து கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள், பெண்கள் என 50 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் பூதலூர் ஒன்றியம் வெண்டையம்பட்டி கிராமத்தில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறை கேடுகள் நடந்தது. இதே போல் தனிநபர் இல்ல கழிவறை, குடிநீர் உள்ளிட்ட திட்டங்களிலும் ஊழல் நடந்தது. சுமார் ரூ.2 கோடி வரை ஊழல் செய்துள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷமிட்டனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலை சந்தித்து புகார் மனு அளித்தனர். #tamilnews
    ×