என் மலர்
நீங்கள் தேடியது "பஸ் விபத்து"
- தனியார் பயணிகள் பஸ் ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது மோதியது.
- விபத்தில் சிக்கிய 3 வாகனங்களும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
புல்தானா:
மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில், காம்கான்-ஷேகான் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் முன்னால் சென்ற பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, பின்னால் இருந்து வந்த தனியார் பயணிகள் பஸ் ஏற்கனவே விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது மோதியது.
3 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிய இந்த பயங்கர விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
விபத்தில் சிக்கிய 3 வாகனங்களும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த பொய்கை மேம்பாலம் அருகே இன்று காலை முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது தனியார் பஸ் திடீரென மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ்சில் இருந்த பயணிகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போளூர் பஸ் நிலையத்தில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
போளூர்:
போளூர் பஸ் நிலையத்தில் நேற்று மதியம் 2 மணி அளவில் குன்னத்தூர் காலனியை சேர்ந்தவர் ராஜி (வயது 55) ஊருக்கு செல்வதற்கு நுழைவாயில் அருகே காத்திருந்தார்.
அப்போது திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் அரசு பஸ் நிலையத்தில் இருந்து வெளியே திரும்பும் போது முதியவர் மீது மோதியது.
இதில் ராஜி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இவருக்கு மணியம்மாள் என்ற மனைவியும் 5 மகன்களும் உள்ளனர். அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்களை ஏற்றி கொண்டு ஒரு பஸ் சென்றது.
- பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 16-ந்தேதி மாலையில் திறக்கப்பட்டது.
17-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். நடை திறந்த முதல் நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து ஐய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சென்ற வண்ணம் உள்ளனர்.
ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்களை ஏற்றி கொண்டு ஒரு பஸ் சென்றது. இன்று அதிகாலை அந்த பஸ் பத்தினம்திட்டாவை அடுத்த லாகா அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் இருந்த ஐய்யப்ப பக்தர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே தகவல் அறிந்து போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர்.
விபத்தில் பஸ்சில் இருந்த குழந்தை உள்பட 18 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பத்தினம்திட்டா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பரமக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பரமக்குடி:
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது80). இவர் தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரியில் நடந்த உறவினர் வளைகாப்பு நிழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் என்ற இடத்தில் கார் வந்த போது ராமநாதபுரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கி சேதமானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மணிமேகலை, நிர்மலா, கார் டிரைவர் செல்வகுமார் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் நான்கு வழிச்சாலையில் பரமக்குடி ஊருக்குள் செல்வதற்காக எதிர் திசையில் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் காயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் பகைவென்றி கிராமத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கேசவன் (53) என்பவர் குறுக்கு வழியில் சென்றபோது இந்த விபத்து நடந்திருப்பது தெரிய வந்தது. கேசவன் மீது ஏற்கனவே இரு விபத்து வழக்கு உள்ளது. போக்குவரத்து விதியை மீறி சென்றதால் இந்த ஏற்பட்டுள்ளதால் கேசவனை போலீசார் கைது செய்தனர்.
கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பரமக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 17 பேர் படுகாயம்
- 3 பேர் கவலைக்கிடம்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை ஆந்திர மாநில அரசு பஸ் குப்பத்திற்கு சென்றது. சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
தமிழக எல்லையோரம் உள்ள ஆந்திர மாநிலம் சந்தம் என்ற இடத்தில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் குப்பம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் குப்பம் போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் படுகாயம் அடைந்த வர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- பம்பையில் இருந்து நேற்று பக்தர்களுடன் திருவனந்தபுரம் சென்ற ஒரு அரசு பஸ் மன்னார்குளஞ்சி பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
- சபரிமலை சீசன் தொடங்கிய 2 மாதத்தில் மன்னார்குளஞ்சி பகுதியில் நடக்கும் 3-வது விபத்து இதுவாகும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து தற்போது மகரவிளக்கு விழா நடந்து வருகிறது.
மகர ஜோதியை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வருகிறார்கள். நடை திறந்த நாள் முதல் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த 2 நாட்களாக கோவிலுக்கு வருவோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தையும் கடந்தது. இதனால் பக்தர்கள் சன்னிதானத்தில் 18-ம் படி ஏற பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதி நடக்கிறது. இதற்காக கேரளா வரும் பக்தர்கள் சபரிமலை செல்ல அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வருவோர் அரசு பஸ்கள் மூலம் பம்பை சென்று அங்கிருந்து சபரிமலைக்கு செல்கிறார்கள். இவ்வாறு பம்பையில் இருந்து நேற்று பக்தர்களுடன் திருவனந்தபுரம் சென்ற ஒரு அரசு பஸ் மன்னார்குளஞ்சி பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் இல்லை. பஸ்சில் இருந்த பக்தர்கள் சிலர் லேசான காயங்களுடன் தப்பினர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கேரள பஸ் கவிழ்ந்த பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பும் இதுபோன்ற விபத்து ஏற்பட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
அதற்கு முன்பும் இதே இடத்தில் ஆந்திர பக்தர்கள் வந்த பஸ் விபத்தில் சிக்கியது. சபரிமலை சீசன் தொடங்கிய 2 மாதத்தில் மன்னார்குளஞ்சி பகுதியில் நடக்கும் 3-வது விபத்து இதுவாகும். எனவே இந்த இடத்தில் விபத்தை தவிர்க்க போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 18வது கொண்டை ஊசி வளைவில் பஸ் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே காட்டு மாடு திடீரென புகுந்தது.
- விபத்து நடந்த இடத்தில் சிறுமலை பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் பொதுமக்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன. இங்கு வேலை செய்ய திண்டுக்கல் மற்றும் கிராமங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பணிக்கு சென்று வருகின்றனர்.
இன்று அதிகாலையில் 18 பயணிகளுடன் அரசு பஸ் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சிறுமலை நோக்கி சென்றது. பஸ்சை தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த விஜயகுமார் (40) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக திண்டுக்கல் கள்ளிபட்டியை சேர்ந்த சேகர் இருந்தார்.
திண்டுக்கல்லில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில் சிறுமலை பகுதி முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவியது.
18வது கொண்டை ஊசி வளைவில் பஸ் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே காட்டு மாடு திடீரென புகுந்தது. இதனால் டிரைவர் பஸ்சை ஓரமாக திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்க ஓடி வந்தனர்.
பஸ்சுக்குள் சிக்கி இருந்தவர்களை அவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 2 ஆம்புன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த வெங்கடேஷ் (40), சிறுமலை தென்மலையை சேர்ந்த பழனியம்மாள் (65), பாஸ்கரன் (62), கார்த்திக் (26), கணேசன் (67), ஒய்.எம்.ஆர். பட்டியை சேர்ந்த கோபால் (40) ஆகியோர் உள்பட 14 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் சிறுமலை பஞ்சாயத்து தலைவர் சங்கீதா வெள்ளி மலை, கிராம நிர்வாக அதிகாரி வசந்தகுமார் ஆகியோர் பொதுமக்களை அழைத்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வந்தவாசி,பிப்.2-
திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அடுத்த கீழ்நெடுங்கள் கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தனியார் பஸ் மூலம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தனர்.
பஸ்சை டிரைவர் தினேஷ் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் பிருதூர் கிராமம் அருகே பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்த முயன்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வந்தவாசி போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக 4 பேரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் நடந்து குறிப்பிடத்தக்கது. திண்டிவனம் ஆரணி, வேலூர், புறவழி சாலையில், சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி விபத்து நடப்பதால் பொதுமக்கள் சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.* * *பஸ் கவிழ்ந்து கிடந்த காட்சி.
- பஸ் ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்த பிரியங்காவை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர்.
- பிரியங்காவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை:
சென்னை ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவை சேர்ந்தவர் பிரியங்கா. 22 வயதான இவர் கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷி நாதனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு இருவரும் ஓட்டலில் சாப்பிடுவதற்கு சென்றனர். ராயப்பேட்டை மேம்பாலத்தில் சென்ற போது ரிஷிநாதன் முன்னால் சென்ற மாநகர பஸ்சை முந்திச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர் திசையில் வந்த கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரியங்கா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி பிரியங்கா உடல் நசுங்கினார். பஸ் ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்த பிரியங்காவை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள். இந்த விபத்தில் ரிஷிநாதன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
- படிக்கட்டில் தொங்கியபடி சென்றபோது விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
திமிரியை அடுத்த மோசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கம லம். பஸ் டிரைவர். இவரது மகன் தினகரன் (வயது 17), ஆற் காட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பிளஸ்- 1 படித்து வருகிறார்.
நேற்று காலை ஆரணியில் இருந்து விளாப்பாக்கம் வழியாக ஆற்காடு நோக்கி வரும் அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங் கியபடி பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.
விளாப்பாக்கத்தை அடுத்த உப்புப்பேட்டை அருகே வரும் போது பஸ்சிலிருந்து தவறி கீழே விழுந்த அவர் மீது பஸ்சின் சக்கரம் ஏறியதில் காலில் உள்ள கட்டை விரல் நசுங்கி உள்ளது.
உடனே பஸ் நிறுத்தப்பட்டு தினகரனை பயணிகள் மீட்டனர். உடனடியாக தினகரனை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திமிரி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர வளைவில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த கிறிஸ்தவர்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று நடைபெறும் குருத்தோலை ஞாயிறு பவனியில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு டிரைவர், வழிக்காட்டுனருடன் 49 பேர் பஸ்சில் திருச்சூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். மொத்தம் 51 பேர் பஸ்சில் இருந்தனர்.
அந்த பஸ் இன்று அதிகாலை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த ஒக்கநாடு கீழையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர வளைவில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது.
பஸ்சில் இருந்தவர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுக்குள் சிக்கியவர்களை ஒவ்வொருவறாக பஸ்சில் இருந்து வெளியே மீட்டனர்.
இந்த விபத்தில் திருச்சூரை சேர்ந்த வர்க்கீஸ் மனைவி லில்லி (வயது 63), ஜோசப் மகன் ராயன் (9) ஆகிய 2 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதில் சிலருக்கு கை, கால் துண்டானது. விபத்துக்குள்ளான பஸ்சும் சேதமடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா மற்றும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த காயமடைந்தவர்களை தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி, ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.