search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம்"

    • எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகில் சரவணன் (வயது 43) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • இவர் நேற்று காலை திரும்பி வந்து கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பஸ் நிறுத்தம் அருகில் சரவணன் (வயது 43) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    கடையில் பணம் கொள்ளை

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற இவர் நேற்று காலை திரும்பி வந்து கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த பணம், மளிகை பொருட்கள் கொள்ளை–யடிக்கப்பட்டிருந்தது.

    புகார்

    இது குறித்து சரவணன் எலச்சிபாளையம் ேபாலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் ரூ.16 ஆயிரத்து 350 திருட்டு போனது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஆன்லைனில் கவர்ச்சியாக பேசும் நபர்களை கண்டு ஏமாந்து விடாமல் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆன்லைன் மோசடி தொடர்பாக கொடுக் கப்பட்ட புகாரின் அடிப்ப டையில் போலீசார் விசாரித்து 41 பேருக்கு ரூ.31 லட்சத்து 69 ஆயிரத்து 843 பணத்தை மீட்டு இன்று அவர்களிடம் ஒப்ப டைத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதை உரியவர்களிடம் வழங்கி னார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    குமரி மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி ஜிபே, போன் பே மூலமாக மோசடி என பல மோசடிகள் தொடர்பாக புகார்கள் வருகிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சைபர் கிரைம் போலீசார் இந்த ஆண்டு 27 வழக்குகளில் 21 குற்ற வாளிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    ஆன்லைனில் பணம் கொடுத்து ஏமாந்த 41 பேருக்கு ரூ.31 லட்சத்து 69 ஆயிரத்து 843 ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. இன்டர் நெட் மற்றும் ஆன் லைனில் கவர்ச்சியாக பேசும் நபர்களை கண்டு ஏமாந்து விடக்கூடாது. பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், நான் ஜி பே மூலமாக உறவினர் ஒருவருக்கு பணம் அனுப்பி னேன். ஆனால் ஜி பேயில் ஒரு எண்ணை தவறுதலாக மாற்றி அனுப்பியதால் பணம் வேறு நபருக்கு சென்று விட்டது. இது தொடர்பாக நான் பலமுறை அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் அந்த பணத்தை தருவதற்கு காலதாமதப்படுத்தினார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தேன். புகார் அளித்த ஒரு வாரத்தில் போலீசார் எனது பணத்தை மீட்டுத் தந்து விட்டனர் என்றார் .

    மேலும் ஒருவர் கூறுகை யில், எனது மகளின் வேலைக்காக பணத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பி வைத்தோம். பணம் அனுப்பிய பிறகு அந்த நபர் எங்களுடனான தொடர்பை துண்டித்தார். வேலையும் தரவில்லை. பணத்தையும் தரவில்லை. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தோம்.

    போலீசார் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தந்துள்ளனர். துரித நடவ டிக்கை எடுத்த அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • தவுபிக் தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    பல்லடம் :

    உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் தவுபிக்(வயது 37). இவர் பல்லடம் பனப் பாளையம் பகுதியில் உள்ள, தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்குச் செல்வதற்காக மில்லில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள், பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் தர மறுக்கவே அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த சுமார் ரூ. 10,000 மதிப்புள்ள செல்போன், ரொக்கம் ரூ.10,000 ஆகியவற்றை பறித்து சென்றனர். இதையடுத்து காயத்துடன் தொழிற்சாலைக்குச் சென்று அதன் உரிமையாளரிடம் கூறியுள்ளார். பின்னர் இது பற்றி பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 6 கவுண்டர்களில் கல்லாவில் இருந்த பணம் திருட்டு.
    • இரண்டாவது தளத்தில் உள்ள லிப்ட் வழியாக உள்ளே சென்று பணம் திருட்டு.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் நள்ளிரவில் இங்கு வந்த மர்ம நபர்கள் மாடி வழியாக இறங்கி கடையில் உள்ள பொருட்களை திருடி உள்ளனர். மேலும், 6 கவுண்டர்களில் கல்லாவில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சம் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி இன்ஸ்பெக்டர் செல்வி சம்பவ இடத்திற்கு சென்று கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது இரண்டாவது தளத்தில் உள்ள லிப்ட் வழியாக உள்ளே சென்று பணம் திருடி சென்றது தெரியவந்தது.

    முகத்தை துணியால் மூடிய நிலையில் திருடிய நபர் பச்சை கலர் டி சர்ட் மற்றும் கருப்பு கலர் டிராயர் அணிந்து இருந்தார்.

    இது பற்றி மன்சூர் அலி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • நான்கு தவணைகளாக ரூ. 34,000 பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார்.
    • மோசடியில் ஈடுபட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார்.

    நாகப்பட்டினம்:

    கீழ்வேளூர் மெயின் ரோடு பட்டமங்கலம் மனோகர் மகள் கீர்த்தனா (வயது 22).

    இவர் தனது செல்போன் எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் உறவினர்கள் போல் பேசி அவசரமாக பணம் உதவி தேவைப்படுகிறது எனக்கூறி கூகுள் பே மூலம் நான்கு தவணைகளாக ரூ.34,000 பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் விசாரணை செய்ய உத்தரவிட்டார். சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருக்–குமரன், தலைமை காவலர் முருகதாஸ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியின் வங்கி கணக்கினை முடக்கி ரூ.34,000 பணத்தினை மீட்டனர்.

    மீட்ட பணத்தை கீர்த்தனாவிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஒப்படைத்தார்.

    மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

    • இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் புரோக்கர்கள் பலரும் சிக்கினார்கள்
    • ஜன்னல் கண்ணாடியின் பின்னால் ரூ.500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

    கன்னியாகுமரி :

    இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் புரோக்கர்கள் பலரும் சிக்கினார்கள். அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த வருவதை பார்த்த புரோக்கர்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் கையில் இருந்த பணத்தை பதுக்கி வைத்தனர். அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியின் பின்னால் ரூ.500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் அந்த இடத்திற்கு சென்று அந்த பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    • வாலிபர் ஒருவர், தன் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதாக கூறி லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.
    • காட்டுப்பகுதிக்கு வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறி வாலிபர் இறங்கியுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று கார்த்திக் மோட்டார் சைக்கிளில் கோவைக்கு சென்றுள்ளார்.வஞ்சிபாளையம் பகுதியில் வந்தபோது வாலிபர்ஒருவர், தன் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதாக கூறி லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.சிறிது தூரத்தில் காட்டுப்பகுதிக்கு வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறி வாலிபர் இறங்கியுள்ளார்.அப்போது ஏற்கனவே அங்கு இருந்த 2 வாலிபர்களும் சேர்ந்து, திடீரென கார்த்திக்கை பணம்கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன கார்த்திக் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

    இதையடுத்து மொபைலில்இருந்து கூகுள் பே மூலம் ரூ.90 ஆயிரத்தை 2 பேரின்வங்கி கணக்கிற்கு பிரித்துகார்த்திக் அனுப்பி உள்ளார். பின்னர் 3 பேரும்அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து புகாரின்பேரில் திருமுருகன்பூண்டி போலீசார்வழக்குபதிந்து விசாரணைநடத்தினர்.மேலும் வங்கி கணக்குஎண் மற்றும் செல்போன்எண்களை கைப்பற்றி விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது வஞ்சிபாளையம்பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் (26), தனபாலன்(26), சுபாஷ் (26) ஆகியோர் என தெரிய வந்தது.இதையடுத்து 3 பேரையும்திருமுருகன்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன்மற்றும் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக உரம் விற்பனை செய்த ரூ 21.9 லட்சம் தொகையை கம்பெனிக்கு செலுத்தாமல் கிடங்கில் கொள்ளவிற்கு மேல் இருப்பு உள்ளதாக கணக்கு காட்டி உள்ளார் .
    • ஆய்வாளர் தெய்வசிகாமணிஆகியோர் விசாரணை செய்து ரூ 21,91,711 கையாடல் செய்ததாக சீனிவாசுவை கைதுசெய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    நாமக்கல்:

    மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் மூலம் கிராமபுறங்களில் விவசாயிகளுக்கு தேவையான முக்கிய இடுபொருட்களான உரம், பூச்சிமருந்து, களைக்கொல்லி மற்றும் உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

    இவற்றை இப்கோ இ-பசார் என்னும் துணை நிறுவனம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் ஒரு மையத்தை நிறுவி விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையில் செயல்பட்டு வரும் இ பசாரில் நாமக்கல் லைன் தெருவைச்சேர்ந்த முதுநிலை வேளாண் பட்டதாரி சீனிவாசு(வயது 30) என்பவர் விற்பனை யாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக உரம் விற்பனை செய்த ரூ 21.9 லட்சம் தொகையை கம்பெனிக்கு செலுத்தாமல் கிடங்கில் கொள்ளவிற்கு மேல் இருப்பு உள்ளதாக கணக்கு காட்டி உள்ளார் . இதனால் சந்தேகம் அடைந்த இ பசார் மாநில அலுவலர் ஹைதராபாத்தை சேர்ந்த புன்னம்ராஜு கொகக்கரராயப்பேட்டை கிளை அலுவலகத்தில் தணிக்கை செய்தார்.

    அப்போது உரவிற்பனை செய்து நிறுவனத்திடம் பணம் கட்டாமல் சீனிவாசன் தனது இந்தியன் வங்கி கணக்கில் செலுத்தியது தணிக்கையில் தெரிய வந்தது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புன்னம்ராஜ் புகார் அளித்தார்.

    இது குறித்து மாவட்ட குற்றப்பபிரிவு துணை கண்காணிப்பாளர் லட்சுமணன், ஆய்வாளர் தெய்வசிகாமணிஆகியோர் விசாரணை செய்து ரூ 21,91,711 கையாடல் செய்ததாக சீனிவாசுவை கைதுசெய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர். பருவ மழை காலத்தில் உரம் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் உர மோசடியால் கொக்கராயன் பேட்டையில் இப்கோ இ பசார் கடை மூடப்பட்டதால் விவசாயிகள் கடையை திறக்க கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • பல்லடம் கல்லம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விசைத்தறி குடோனில் வேலை பார்த்து வருகிறார்.
    • 3 நபர்கள் 2 செல்போன்கள், ரூ.3500, பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு மின்னலென மறைந்து விட்டனர்.

    பல்லடம் :

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயதீப் மகன் ராகுல்தீப்(வயது 24). இவர் பல்லடம் கல்லம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விசைத்தறி குடோனில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் சுபாஷ் சந்த்(23). இவர் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை, லட்சுமி நகரில் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டதால் சுபாஷ் சந்தை சந்திப்பதற்காக சின்னக்கரை லட்சுமி நகருக்கு ராகுல் தீப் சென்றார். இரவு நேரம் ஆகிவிட்டதால், சுபாஷ் சந்த் தனது மோட்டார் சைக்கிளில் ராகுல் தீப்பை ஏற்றிக்கொண்டு பல்லடம் கல்லம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கரைப்புதூரை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் தொட்டி அப்புச்சி கோவில் ரோட்டில் செல்லும்போது. இவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் இவர்களை மிரட்டி இவர்கள் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூ.3500, பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு மின்னலென மறைந்து விட்டனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து இருவரும் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வழிப்பறி செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சேலம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி வசந்தம் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடித்தனர்.
    • பீரோவில் இருந்த 4 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி வசந்தம் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சாந்தகிரி (வயது 36). இவரது மனைவி கிராந்தி (32). இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டைப் பூட்டி விட்டு, அருகில் வசிக்கும் தனது தாயார் வீட்டிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் முன்பக்க கதவு, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராந்தி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கிராந்தி கருப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். 

    • காசோலையை வங்கியில் செல்வராஜ் செலுத்தியபோது பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துவிட்டது.
    • 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 82).விவசாயி.

    இவரிடம் மன்னார்குடி நியூ பைபாஸ் ரோடு புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஓட்டல் தொழில் செய்து வரும் சத்தியமூர்த்தி (வயது 55) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு ரூ 4 லட்சம் செல்வராஜ் கடன் வாங்கி உள்ளார்.

    கடனை செல்வராஜ் திருப்பி கேட்ட பொழுது சத்தியமூர்த்தி கடன் தொகைக்காக காசோலை வழங்கியுள்ளார்.

    காசோலையை வங்கியில் செல்வராஜ் செலுத்தியபோது பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துவிட்டது.

    இதனை அடுத்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 -ல் செல்வராஜ் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று முன்தினம் முன்னாடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட சத்தியமூர்த்தி கடன்தொகையில் இரு மடங்கு தொகையான ரூ 8 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டும்.

    மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

    • கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையான வாலிபர்கள் பொதுமக்களை மிரட்டுவதும், பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து செல்வதும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம், செல்போன், டி.வி. உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருந்தன

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் ஓடைக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று உறவினர் வீட்டு விசேஷத்துக்காக சென்று விட்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம், செல்போன், டி.வி. உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருந்தன. இது குறித்து கம்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம் நகரில் போதை ஆசாமிகளின் தொல்லை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையான வாலிபர்கள் பொதுமக்களை மிரட்டுவதும், பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து செல்வதும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    நேற்று இரவு வியாபாரி போதை வாலிபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கம்பம் நகரில் வீட்டில் கொள்ளை நடந்தது பொதுமக்களை அச்சமடைய வைத்துள்ளது. எனவே போலீசார் இரவு ேநர ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அதிகரிக்கும் கொலை, கொள்ளை சம்பவங்களால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

    பழைய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைப்பதுடன் போதை வாலிபர்களையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×