search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம்"

    • இரவு கூரியர் நிறுவனத்தின் ஷட்டர்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை சேதப்படுதினர்.
    • மர்மநபர்கள் பாதுகாப்பு பெட்டகத்திற்கு செல்லும் மின்சார வயர்களை துண்டித்து, பணப்பெட்டி யில் உள்ள பணத்தை திருடியுள்ளனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு தொழில் பயிற்சி நிலையம் எதிரே உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் கூரியர் நிறுவனம் இயங்கி வருகிறது.

    மின்சார வயர் துண்டிப்பு

    நேற்று இரவு இந்த கூரியர் நிறுவனத்தின் ஷட்டர்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை சேதப்படுதினர்.

    இந்த நிறுவனத்தில் பணம் வைப்பதற்கான பாதுகாப்பு பெட்டகத்தை யாராவது தொட்டால் எச்சரிக்கை மணி ஒலிக்கும் வகையிலான வசதி செய்யப்பட்டு உள்ளது.

    இதையடுத்து, அந்த மர்மநபர்கள் பாதுகாப்பு பெட்டகத்திற்கு செல்லும் மின்சார வயர்களை துண்டித்து, பணப்பெட்டி யில் உள்ள பணத்தை திருடியுள்ளனர். மேலும் அங்கிருந்த கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்களை எடுத்துச் சென்று, மேட்டூர் அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் அதனை போட்டு சேதப்படுத்தினர்.

    கூரியர் நிறுவனத்திற்கு உள்ளே நுழைவதற்கு முன்னதாக, அந்த பகுதியில் இருந்த தெரு விளக்குகள், கட்டிடத்தின் முன்பு இருந்த டியூப் லைட்டுகளை சேதப்ப டுத்தி, அந்த பகுதியை இருட்டாக்கிவிட்டு உள்ளே நுழைந்து பணத்தை திருடி இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

    அதிர்ச்சி

    வழக்கம்போல் இன்று காலை கூரியர் நிறு வனத்திற்கு வேலைக்கு வந்த ஊழியர்கள், ஷட்டர் உடைக்கப் பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சிய டைந்த னர். பின்னர் இது தொடர்பாக மேட்டூர் போலீ சாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணை முடிவில் தான், கொரியர் நிறுவ னத்தில் இருந்து திருட்டுப் போன பணம் மற்றும் பொருட்கள் மதிப்பு தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன், பைக், பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்ட னர்.

    நத்தம்:

    நத்தம் அருகே குமர ப்பட்டிபுதூரை சேர்ந்தவர் சின்னையா மகன் அழகேசன் (வயது21). இவர் நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் 4 வழிச்சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவர்களை மிரட்டினர். மேலும் அழகேசனை தாக்கி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

    இது குறித்து நத்தம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் அத்திப்பட்டு மலைப்பகுதியில் பதுங்கி இருந்த மதுரையை சேர்ந்த ஆகாஷ் (22), நத்தம் பரளிபுதூரை சேர்ந்த அபிமன்யூ (23), காளையார்கோவிலை சேர்ந்த ஹரிதர்ஷன் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன், பைக், பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்ட னர். இதில் ஹரிதர்ஷன், ஆகாஷ் ஆகியோர் மீது பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் அவர் தேடப்படும் குற்றவாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • பணம் மற்றும் தங்க கட்டிகளை அங்கு மறைத்து வைத்தது யார்? என தெரியவில்லை.
    • பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யோஜனா பவன் என்ற அரசு அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு அரசுதுறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு அலுவலக அறையில் பணம் மற்றும் தங்ககட்டிகள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது அங்கு அலமாரியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த பையினை திறந்து சோதனை மேற்கொண்டனர்.

    அதில் கட்டுக்கட்டாக 2 கோடியே 31 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 1 கிலோ தங்கக்கட்டிகள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர், அந்த பணம் மற்றும் தங்ககட்டிகளை பறி முதல் செய்தனர். அந்த பணம் மற்றும் தங்க கட்டிகளை அங்கு மறைத்து வைத்தது யார்? என தெரியவில்லை.

    அது லஞ்சப்பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தர விடப்பட்டு உள்ளது. அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக 7 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கடந்த 2012 முதல் 2018 வரை மாதம் ரூ. 100, ரூ. 200 என்ற வீதம் மகளிர் குழுவில் சேமிப்பு செய்து வந்தனர்.
    • குழு தலைவி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் 19 பெண்கள் இணைந்து ஸ்டார் மகளிர் குழுவில் கடந்த 2012 முதல் 2018 வரை மாதம் ரூ. 100, ரூ. 200 என்ற வீதம் சிறுக சிறுக சேமித்து வந்த நிலையில் அக்குழுவின் தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2018 முதல் சேமிப்பு நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் மேற்படி குழு தலைவி மீதமுள்ள பணத்தை தங்களுக்கு தராமல் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி அறிவுறுத்தலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி விசாரணை செய்து மகளிர் குழுவின் சேமிப்பு பணம் ரூ. 2 லட்சத்து 56 ஆயிரத்தை மீட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பணத்தை மீட்டுக் கொடுத்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு பணத்தைப் பெற்ற பெண்கள் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    • 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
    • மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி நடைபெற்றது.

    அவினாசி :

    சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. 1000 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி நடைபெற்றது. அப்போது, சான்றிதழ்களை வழங்க பணம் வசூல் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.

    இதுகுறித்து பள்ளி நிா்வாகத்திடம் கேட்டபோது, சேவூா் பகுதியில் மின் தடை ஏற்பட்டதால் தனியாா் கடைகளில் சான்றிதழ்களை கலா் ஜெராக்ஸ் எடுப்பதற்காக மட்டுமே மாணவ, மாணவிகளிடம் தலா ரூ.100 வாங்கினோம். 25 மாணவா்கள் மட்டுமே சான்றிதழ் வாங்க வந்திருந்தனா். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதை அடுத்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்தனா். பின்னா் அதிகாரிகள் கூறியபடி மாணவா்களிடம் பெறப்பட்ட ரூ.100-ஐ அவா்களிடம் திரும்ப வழங்கி வருகிறோம் என்றனா்.

    • போலீசாரை கண்டதும் 5 பேரும் தப்பியோட முயற்சி செய்தனர்.
    • தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள செங்குளத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு சீட்டு விளையாடி கொண்டிருந்த 5 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சி செய்தனர். அதில் 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அவர்கள் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 33), பெரியசாமி (40), சொக்கம்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (48) ஆகியோர் என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ. 84 ஆயிரத்து 900-ஐ கைப்பற்றினர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வீட்டின் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது.
    • கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை மேலமடையை சேர்ந்தவர் ராஜேசுவரி (70). சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.

    பீரோவில் இருந்த ரூ.7ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோசாகுளம் திருமலை நகரை சேர்ந்தவர் சலீம் (61). இவர் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.அந்த பைக் சம்பவத்தன்று திருடு போனது.

    இதேபோன்று தபால்தந்திநகர் விரிவாக்கம் கோமதி நரை சேர்ந்த சுரேஷ்குமாரின் (42) பைக்கும் திருடு போனது. இது குறித்து கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் ெபாருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை திருடிய ஆனையூரை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    • 108 ஆம்புலன்சில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார்.
    • வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்தவைகள் திருடப்பட்டிருந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). 108 ஆம்புலன்சில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி பிரபாகரனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், திருமண வேலை சம்பந்தமாக பிரகாஷ் வீட்டை பூட்டு விட்டு வெளியே சென்றார். பின்னர் விட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது விட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் வீட்டிற்குள் சென்று பார்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் திருமணத்திற்காக வைத்திருந்த இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து பிரகாஷ் வேதாரண்யம் ேபாலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும், நாகையில் இருந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கியூ.ஆர்.கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி 3 மாதத்தில் செயல்படுத்தப்படும்.
    • அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு 3-ம் ஆண்டில் அடிெயடுத்து வைத்துள்ளது. கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையி லும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மக்களுக்கு தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.

    ரேஷன் கடை களில் கியூ.ஆர்.கோடு மூலமும் பணம் செலுத்தும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.முதல் கட்டமாக சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    பழங்காலத்தில் சிறுதானியங்களை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் மறந்து விட்டனர். ஆனாலும் இப்போது டாக்டர்கள் அறிவுரையின் பேரில் மீண்டும் சிறுதானியத்தின் பக்கம் மக்களின் கவனம் திரும்பி உள்ளது. இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

    ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் வழங்கும் திட்டம் தற்போது சோதனை முறையில் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழகத்தில் சிறுதானியங்களின் உற்பத்தி குறைவாக உள்ளது. கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்துதான் சிறுதானியங்களை வரவழைக்கிறோம்.

    எனவே இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவு படுத்துவதற்கு தேவையான அளவு சிறுதானியங்கள் கையிருப்பு வேண்டும். அதன் பின்னர்தான் இந்த திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்த முடியும். எதிர்காலத்தில் இந்த திட்டம் அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை-பணம் அபேஸ் செய்யப்பட்டது.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(வயது52). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த பொங்கல் திருவிழாவுக்கு சென்றுவிட்டு சிவகாசிக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக மினி பஸ்சில் ஏறினார். அப்போது டிக்கெட் எடுப்பதற்காக தான் கையில் வைத்திருந்த பையில் மணிபர்சை எடுத்தார். அதில் வைத்திருந்த 4½ பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரத்து 500 காணாமல் போய் இருந்தது. யாரோ மர்மநபர் நகைகளையும், பணத்தையும் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் முழுவதும் நிதி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடைக்காரர்களிடம் கட்டாயமாக ரூ.500 தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.

    சேலம்:

    சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வரும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக அந்த கட்சி யினர் சேலம் மாவட்டம் முழுவதும் நிதி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அருணாச்சல ஆசாரி தெரு பகுதியில் உள்ள வட மாநிலத்தவர்களின் மொத்த வியாபார கடைகளுக்கு அந்த கட்சி நிர்வாகிகள் சிலர் சென்றனர், அவர்கள் கடைக்காரர்களிடம் கட்டாயமாக ரூ.500 தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.

    இதில், மகாவீரர் என்ற வடமாநிலத்தவர் நடத்தி வரும் துணிக்கடையில் பணம் கேட்டபோது, தற்போது வியாபாரம் சரிவர நடைபெறவில்லை எனக் கூறி 100 ரூபாயும், 200 ரூபாயும் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திராவிடர் விடுதலைக் கழகத்தினர், தமிழர்கள் மூலம் வியா பாரம் நடத்திக் கொண்டு எங்களுக்கு மாநாட்டுக்கு நிதி தர மறுப்பதா என கூறி கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்க முயற்சித்துள்ளனர்.

    இதனால் அவர்களுக்கி டையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் நிதி வசூலிக்க வந்தவர்கள் வியாபாரி மகாவீரரை ஒருமையில் பேசி தாக்க முயன்றதோடு மிரட்டி சென்றதாக தெரி கிறது. உடனே மகாவீரர் தொலைபேசி மூலம் போலீசாரை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறினார். பின்பு அவர், அருணாச்சலஆசாரி தெரு சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த சேலம் நகர போலீசார் அவரை சமாதானப்படுத்தினர்.

    இதனிடையே சேலம் மில் ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பாக திராவிட விடுதலைக் கழகத்தை சேர்ந்தவர்கள் மீது சேலம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புன்னன்சத்திரம் அருகே தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர்
    • இதுகுறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் ஆர்.ஜி நகர் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் மோகன் (வயது 38). கல்குவாரியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (32), இவர்களுக்கு ஜனனி(8), சிவாணி(6) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மோகன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் தூங்க சென்றார். இரவு சுமார் 9 மணிக்கு வீட்டுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கதவை தட்டி உள்ளார்.

    அப்போது மோகன் எழுந்து சென்று கதவை திறந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர் கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் உள்ள பணம் நகைகளை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.அதற்கு மோகன் வீட்டில் பணம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து சட்டை பையில் வைத்திருந்த ரூபாய் ஆயிரத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மர்ம நபர் சென்று விட்டார். இதுகுறித்து மோகன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.


    ×