search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கல்லூரி வெளியே அமர்ந்து போராடிவரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் கல்லூரி இயங்கி வருகிறது.

    இங்கு சீர்காழி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த கல்லூரி முன்பு அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் இன்று 3-வது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே போல 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என போராடி வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா மற்றும் இணை ஆணையர் மோகனசுந்தரம், வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா உள்ளிட்டோர் இன்று பூம்புகார் கல்லூரிக்கு ஆய்வு நடத்த வந்தனர்.

    அப்போது இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையரிடம் மாணவர்கள் கல்லூரிக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத முதல்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கூறினர்.

    இதைத் தொடர்ந்து கல்லூரி உள்ளே சென்ற கூடுதல் ஆணையர் கழிவறை, ஆய்வுக்கூடம், வகுப்பறை.உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.

    பின்னர் ஒப்பந்தக்காரரை அழைத்து விரைந்து பணிகளை முடிக்கவேண்டும் என கூறினார்.

    அதனைத் தொடர்ந்து கல்லூரி வெளியே அமர்ந்து போராடிவரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றார்.

    அப்போது பேராசிரிய ர்கள் குறுக்கிட்டு தங்களது கோரிக்கைகளையும் கூறினர்.

    அப்போது இணை ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் பேராசிரியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை அடுத்து பேராசிரியர்கள் கல்லூரி வாயிலேயே நின்று முதல்வருக்கு உறுதுணையாக பேசும் இணை ஆணையர் மோகனசுந்தரத்தை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும், முதல்வரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து மாணவர்கள் வெளியே போராடி வரும் சூழ்நிலையில் பேராசிரியர்கள் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    அசாம்விதங்களை தடுக்கும் பொருட்டு பூம்புகார் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

    • 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • இருக்கைகள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் கல்லூரி இயங்கி வருகிறது.

    இங்கு சீர்காழி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று கல்லூரி முன்பு குடிநீர், சாலை, கழிப்பறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்தும் வகுப்பறை இருக்கைகள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகளை முழுமையாக செய்து தராத கல்லூரி நிர்வாகத்தையும் கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பூம்புகார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தரகோரி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பூம்புகார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    • கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்கள் அசத்தினர்.
    • உடல் உறுப்புகளை தானம் செய்வதின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தியது.

    திருமங்கலம்

    உலக சோடகான் கராத்தே அமைப்பும், திருமங்கலம் லீ சாம்பியன் ஆர்ட்சும் இணைந்து உலக சாதனை நிகழ்ச்சியாக கராத்தே மற்றும் சிலம்ப போட்டிகளை நடத்தியது. திருமங்கலம் தனியார் பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சி உடல் உறுப்புகளை தானம் செய்வதின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 5 மணிநேரம் கராத்தேயில் கிக்ஸ் (உதைத்தல்) நிகழ்ச்சியும், 2 கண்களை துணியால் கட்டியவாறு சிலம்பத்தில் இரட்டை கம்பு சுழற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.

    ஆணழகன் சங்கத்தின் செயலாளர் மற்றும் சோழன் உலக சாதனை புத்தகத்தின் தென்மாநிலத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். நிறுவனர் நிமலன் நீலமேகம் முன்னிலை வகித்தார். கராத்தே அமைப்பின் செயலாளர் பால்பாண்டி வரவேற்றார். கராத்தே கிக்சில் 101 மாணவர்களும், சிலம்பம் சுற்றுவதில் 166 மாணவர்களும் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார், தாசில்தார் சிவராமன், இந்தியன் சிலம்ப பள்ளி தலைமை பயிற்சியாளர் மணி, மதுரை மாவட்ட சிலம்ப கழகத்தின் பொருளாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலைமையில் பேரணி நடைபெற்றது.
    • மாணவ- மாணவிகளின் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (ஜூனியர் ரெட்கிராஸ்) இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் சார்பில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலை மையில், வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வசிதம்பரம் முன்னிலையில், மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் இடையூர் சங்கேந்தி, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் கதிரேசன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணி ராஜா, அன்பரசு, முருகேசன், முத்து லெட்சுமி, இந்திரா, அமிர்தம், பென்சிராணி, வனிதா மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
    • மாணவர்கள் கட்டாயம் இணைய வழி மூலம் வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் இந்த ஆண்டு (2022-2023) கல்வி உதவித்தொகை பெற இணைய வழியில் விண்ணப்பிப்பது குறித்து கல்லூரி முதல்வர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகைக்கான விண்ண ப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டரால் தெரிவிக்கப்பட்டது.

    அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இணைய வழியில் விண்ணப்பிக்க புதிய இணைய தளம் 30.01.2023 அன்று திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரடியாக தங்களின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் வகையில் https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    அனைத்து வகை கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை இணைய வழியில் விண்ணப்பிக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட கல்லூரி பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அதே போன்று மாணவர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

    மாணவர்கள் கட்டாயம் இணைய வழி மூலம் வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். மாணாக்கரின் வங்கி கணக்கில் இடம் பெற்றுள்ள பெயர், அம்மாணவர்களின் பள்ளி சான்றிதழ்களில் உள்ளவாறு இடம் பெற்றுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எச்.டி.எப்.சி வங்கியின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
    • 12 மாணவ, மாணவியர்களுக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் வழங்கினார்.

    சென்னை

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் 120 மாணவர்களுக்கு எச்.டி.எப்.சி வங்கியின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்ட 39 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையினை வழங்கிடும் அடையாளமாக 12 மாணவ, மாணவியர்களுக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, செல்வி அபூர்வா, ம. கோவிந்த ராவ், எச்.டி.எப்.சி வங்கி தலைவர் குமார் சஞ்சீவ், மண்டல தலைவர் ரமேஷ் வங்குரி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    • மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், சேந்தமங்கலத்தில் இயங்கி வரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், மற்றும் மகரிஷி சிபிஎஸ்இ பள்ளி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து தேசிய கணிதம் மற்றும் அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக கல்பாக்கத்தின் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பாக மாபெரும் கண்காட்சி கடந்த 31 மற்றும் 01-ம் தேதி நடைபெற்றது.

    இவ்வாராய்ச்சி மையமானது தங்களுடைய அணு சக்தியின் மூலம் பல விதமான பயணிக்கிகளைக் கொண்டு இயங்கி வருவதன் பலனை விவரித்தார்கள்.

    மேலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ/மாணவிகள் கண்காட்சிகளும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும் இடம்பெற்று இருந்தது, மேலும் அறிவியல் மற்றும் கணிதத்தின் முக்கியத்துவத்தை கணினி திரை மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்கள், முன்னதாக இக்கண்காட்சியினை வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து இருந்து சேந்தமங்கலம் வரை மாணவ மாணவிகளின் விழிப்புணர் பேரணி நடைபெற்றது, மேலும் அறிவியல் மற்றும் கணிதம் துறை சார்ந்த போட்டிகளும் நடைபெற்றது,

    இ்வ் விழாவினை, மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், கல்லூரியின் தாளாளர். வெங்கடராஜலு, தொடங்கி வைத்தார்.

    விழாவின் முக்கிய விருந்தினர்களாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் ஸ்ரீனிவாசன், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் மற்றும் ஜலஜாமதன்மோகன் (IGCAR) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இந்நிகழ்ச்சியின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், பள்ளி, மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 6000 மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    கண்காட்சி பொருட்களையும் அதன் செயற்பாட்டையும் மிக துள்ளிமாக அதன் உறுப்பினர்கள் பார்த்திபன், ராமன் ஆகியோர் விவரித்தனர்.

    திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இதன் பயன்பாட்டை நன்கு அறிந்து இவ்விதமான செயல்களை ஊக்குவிக்கும் வண்ணம் இருந்ததாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்வி குழுமத்தை பாராட்டினார்கள்.

    இவ்விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது,

    இவ் விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி முனைவர் நிர்மலா ஆனந்த், ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள், இவ் நிகழ்வில் கல்லூரியின் இயக்குநர், விஜயசு ந்தரம், நிர்வாக அலுவலர் சீதா கோபாலன், கல்லூரி மற்றும் பள்ளியின் முதல்வர் சிவ குருநாதன், கலைமகள், சுமித்திரா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள், ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், முனைவர் தமிழன்பன், நிர்மல், பாக்கியலட்சுமி ஆனந்தி, நெ ல்லிவனம், அருள் மேரி, முருகானந்தம், விஜயராகவன், நாகராஜன், ஜெகதீஷ், சுனில், மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • றி.டி.றி.ஏ. பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி கிறிஸ்தியா நகரம் றி.டி.றி.ஏ. மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உதயகுமார் முகாமினை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட திட்ட அலுவலர் பெர்சியளாள், வட்டாரகல்வி அலுவலர் ஜெயவதி ரத்னா வதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ செல்வி, தலைமைஆசிரியர் லிவிங்ஸ்டன் ஆகியேர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் மருத்துவ சான்றிதழ், தேசிய அடையாள அட்டை பதிவு செய்தல், பதிவை புதுப்பித்தல், தனித்துவ அடையாள அட்டைக்கான பதவி, ரெயில் மற்றும் போக்குவரத்து சலுகை, உபகரணங்கள் பெற பதவி, உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சாந்தி தலைமையில் ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப்பாசிரி யர்கள் செய்திருந்தனர்.

    • இசையானது நிறுத்தப்பட்டவுடன் மாணவர்கள் கீழே விழாமல் நாற்காலியில் அமர்வது போட்டியாகும்.
    • ஸ்கேட்டிங் விளையாடுவதன் மூலம் குழந்தைகளுக்கு மூளையின் ஆற்றல் அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறைகிறது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான ஸ்கேட் மியூசிக்கல் சேர் போட்டி நடைபெற்றது.

    போட்டியில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    மாணவர்கள் பூட்ஸ் அணிந்த ஸ்கேட்டிங்கை கால்களில் கட்டிக்கொண்டு இசை இசைக்கும் வரையில் நாற்காலியை சுற்றி வருவார்கள்.

    இசையானது நிறுத்தப்பட்டவுடன் மாணவர்கள் கீழே விழாமல் நாற்காலியில் அமர்வது போட்டியாகும். ஸ்கேட்டிங் விளையாடுவதன் மூலம் குழந்தைகளுக்கு மூளையின் ஆற்றல் அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறைகிறது.

    மேலும், இதன் மூலம் மாணவர்கள் கல்வியோடு புதிதாக பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. புத்துணர்ச்சியோடு படிப்பதற்கு இவ்வாறான போட்டிகள் உதவுகிறது.

    போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த பள்ளி தாளாளர் கார்த்திகேயனை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தினர்.

    இதில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழை பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார். முன்னதாக பள்ளி முதல்வர் அம்பிகாபதி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பாக செயல்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அந்த பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
    • ஆசிரியர்கள் செய்யும் இதுபோன்ற செயல்களால் மக்கள் மத்தியில் அரசு பள்ளி மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 180-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 12 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.

    இந்நிலையில் சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அந்த பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் 2 மாணவர்கள் குழாயில் தண்ணீர் பிடித்து கழிவறையில் ஊற்றி சுத்தம் செய்கின்றனர். பின்னர் அவர்கள் அந்த குழாய் தண்ணீரை மூடி விட்டு செல்கின்றனர்.

    இதேபோல புகைப்படங்களில் மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை துடைப்பத்தால் அகற்றுகின்றனர். மாணவர்கள் ஒட்டடை அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை கண்ட மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் பள்ளிக்கு படிப்பதற்காக அனுப்பிய தங்கள் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளதை கண்டு வேதனை அடைந்துள்ளனர். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்தாலும், ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் இதுபோன்ற செயல்களால் மக்கள் மத்தியில் அரசு பள்ளி மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

    சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதை தொடர்ந்து, தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்தார். மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

    இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு பள்ளியில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவு நாள் தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
    • மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று உறுதிமொழி ஏற்றனர்.

    திருவாரூர்:

    தேசத்தந்தை காந்தியடி களின் நினைவு நாள் தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

    அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி மேற்கொள்ள ப்பட்டது.

    வெண்ணவாசல் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று உறுதி மொழி ஏற்றனர்.

    இதுபோல் கொண்டையானிருப்பு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆனந்தி தலைமையிலும், தீபங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வ ராணி, திருப்பள்ளிமுக்கூடல் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் ஆசிரியர் கோமதி, பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வீரமணி, பூங்காவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இதுபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

    • புரவலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் நாகை ராஜரா ஜன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு எஸ்.கே. அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா, புரவலர்களுக்கு பாராட்டு விழா, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, பள்ளியின் ஆண்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தொல்காப்பியன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.வும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவருமான வேதரெ த்தினம், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளரும் தொழில் அதிபருமான சண்முகம், வேதாரண்யம் அரசு கலை கல்லூரி பேராசிரியர் பிரபாகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராசேந்திரன், ஆனந்தராசு ஊராட்சி மன்ற துணை தலைவர் அழகேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நிலவரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மனிதவள மேம்பாட்டு பயிற்றுனர் நாகை ராஜரா ஜன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    மாணவர்க ளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும், முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம் வழங்கினர். முடிவில் ஆசிரியர் செந்தமிழன் நன்றி கூறினார்.

    ×