search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேள்வித்தாள்"

    பிளஸ்-1 வேதியியல் வினாத்தாளை இணையதளத்தில் முன்கூட்டியே வெளியிட்டது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #HalfYearly #PlusOne #ChemistryQuestion
    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் கடந்த 10-ந் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்கியது.

    இந்த ஆண்டு பிளஸ்-1 புதிய பாடத்திட்டம் என்பதால் தமிழகத்தில் ஒரே மாதிரியான கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. பிளஸ்-2-க்கும் அரையாண்டு தேர்வு தற்போது நடைபெற்றது.

    இதில் சமீபத்தில் நடந்த உயிரியல் கேள்வித்தாள் இணைய தளத்தில் வெளியானது. இந்த வினாத்தாளும், தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாளும் ஒரே மாதிரி இருந்ததாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.



    இந்த நிலையில் பிளஸ்-1 வேதியியல் தேர்வு இன்று நடைபெறுகிறது. ஆனால் நேற்றே இந்த தேர்விற்கான கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியானது. இதை மாணவ-மாணவிகள் டவுன்லோடு செய்தனர்.

    அரசு பொதுத்தேர்வு எப்படி நடைபெறுகிறதோ அதேபோல் பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 இடங்களில் கேள்வித்தாள் மையங்கள் அமைக்கப்பட்டு ஒரு தலைமையாசிரியர் கட்டுப்பாட்டில் கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ளது.

    தேர்வு நடைபெறும் அன்று காலையில் தான் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வந்து கேள்வித்தாளை பெற்று செல்வார்கள். ஆனால் அதையும் மீறி இன்று நடைபெறும் வேதியியல் கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியான சம்பவம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிளஸ்-1 வேதியியல் கேள்வி வினாத்தாளை இணையதளத்தில் வெளியிட்டது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், வேதியியல் கேள்வித்தாளை இணைய தளத்தில் வெளியிட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். #HalfYearly #PlusOne #ChemistryQuestion

    இந்தியாவில் X மற்றும் XII வகுப்பு கேள்வித்தாள்களை என்க்ரிப்ட் செய்ய மைக்ரோசாஃப்ட் உடன் கைகோர்த்திருப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. #cbse #MicrosoftEdu


    இந்திய பள்ளிகளில் நடத்தப்படும் X மற்றும் XII வகுப்பு தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை என்க்ரிப்ட் செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் சி.பி.எஸ்.இ. இணைந்திருக்கிறது. இதன் மூலம் கேள்வித்தாள்கள் கசியாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

    இந்த திட்டம் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வுக்கான கேள்வித்தாள்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. இந்த தேர்வு 847 மையங்களில் மொத்தம் 4000 மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. விண்டோஸ் 10 இயங்குதளத்தில் ஆஃபீஸ் 365 மென்பொருள் மூலம் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முழு நடவடிக்கைகளையும் டிராக் செய்ய முடியும்.

    முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருப்பதோடு அனைத்து வழிமுறைகளும் தானாக நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வு துவங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் கேள்வித்தாள்களை டவுன்லோடு செய்ய முடியும் என்பதோடு இவை இரண்டடுக்கு கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படுகிறது. 



    கேள்வித்தாள்களை என்க்ரிப்ட் மற்றும் வாட்டர்மார்க் செய்து ஆஃபீஸ் 365 அம்சங்களை பயன்படுத்துகிறது. வாட்டர்மார்க்-இல் ஒவ்வொரு தேர்வு மையத்தின் குறியீடு இடம்பெற்றிருக்கும் என்பதால் எளிமையாக டிராக் செய்ய முடியும். ஒருவேளை அனைத்தையும் கடந்து கேள்வித்தாள் லீக் ஆகும் பட்சதித்ல் அதனை எளிதில் டிராக் செய்துவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ. தேர்வு கண்காணிப்பாளர் கேள்வித்தாள் விநியோகத்தை துவக்குவார். இவ்வாறு செய்ததும், குறிப்பிட்ட தேர்வு மையங்களுக்கு ஒன்டிரைவ் லின்க்-க்கு கேள்வித்தாள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும், இதனை குறிப்பிட்ட தேர்வு மையங்கள் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

    இதுமட்டுமின்றி தனியார் மற்றும் பொது கல்வி நிறுவனங்களுடன் இணைந்து கல்வி முறையை நவீனத்துவமாக்கி, மாணவர்களுக்கு குறைந்த கட்டத்தில் பயிற்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய பணியாற்றி வருவதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
    ×