search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றம்"

    தமிழகத்தில் குற்றங்களை தடுக்க வீடு, கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    போரூர்:

    வளசரவாக்கம், ராமாபுரம் போலீஸ் நிலையங்களை உள்ளடக்கிய வளசரவாக்கம் சரகத்தில் புதிதாக 1270 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதை இன்று காலை சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

    கூடுதல் கமி‌ஷனர் மகேஷ் குமார் இணை கமி‌ஷனர் மகேஸ்வரி தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன், உதவி கமி‌ஷனர்கள் சம்பத், ஆரோக்யபிரகாசம், வின்சென்ட் ஜெயராஜ், இன்ஸ்பெக்டர்கள் சுப்ரமணியன், அமுதா, கவுதமன், சந்துரு, ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், வேலுமணி, பிரான்சிஸ் ரூபன், பாலமுரளி, கோகிலா, கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது :-

    50மீட்டர் இடைவெளியில் ஒரு கண்காணிப்பு கேமரா என்கிற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் எங்களுக்கு அதை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சரகத்தில் 1270கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் செய்துள்ளதை மனதார பாராட்டுகிறேன்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை ஆந்திரா மாநிலத்தில் வைத்து பிடித்தோம் அதற்கு கண்காணிப்பு கேமரா தான் பெரிதும் எங்களுக்கு உதவியாக இருந்தது.

    இதேபோல் சமீபத்தில் பள்ளியில் இருந்து கடத்தி செல்லப்பட்ட ஒரு குழந்தையை பள்ளி அருகில் ஒரு சிறிய ஜூஸ் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியால் தான் 5 மணி நேரத்தில் மீட்டோம்.

    நள்ளிரவு பெண்கள் தனியாக சென்று வீடு திரும்பிட பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடு அலுவலகம் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம் மேலும் சாலையை நோக்கி அந்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி காவல்துறைக்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவை தந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
    கண்காணிப்பு காமிராவில் நகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்ததால் சென்னை நகரில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் விசுவநாதன் கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னையில் குற்றங்களை தடுக்க முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ராயபுரம் முதல் எண்ணூர் வரை 998 கண்காணிப்பு காமிராக்கள் திருவொற்றியூர் சாலை, எண்ணூர் விரைவுச்சாலை உள்ளிட்ட 11 முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டு உள்ளன.

    திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவில் நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமி‌ஷனர் விசுவநாதன் இந்த கண் காணிப்பு காமிராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை மாநகரில் மூன்றாவது கண் என்ற பெயரில் கண்காணிப்பு காமிரா பொருத்துவதை ஒரு இயக்கமாக செய்து வருகிறோம்.

    இதற்கு பல்வேறு அமைப்புகளும், தனி நபர்களும் உதவி வருகின்றனர்.

    கண்காணிப்பு காமிராவில் நகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்ததால் சென்னை நகரில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன.

    குற்றங்களை குறைப்பதிலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும் இப்போது பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் தாங்கள் கண்காணிப்பு காமிராவில் கண்காணிக்கப்படுகிறோம். என்ற பயத்துடன் உள்ளனர்.

    கடந்த மாதங்களில் சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் மிகவும் குறைந்துள்ளன. குற்றவாளிகளுக்கு கண்காணிப்பு காமிரா அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

    எண்ணூர் விரைவு சாலையில் போக்குவரத்தை சரி செய்ய உரிய கவனம் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அரபு நாடுகளை போன்று பொது இடத்தில் வைத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளது. #GKVasan
    சென்னை:

    மாற்றுத்திறனாளி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அதில் மாற்றுதிறனாளிகள் உரிமை சட்டத்தின் விதிமுறைகளை உடனடியாக அமுல்படுத்தும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மாற்றுத்தினாளிகள் மட்டுமல்லாது பொதுவாகவே பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையான சட்டங்களை கொண்டு வரவேண்டும். அரபு நாடுகளில் இருப்பதுபோல் பொதுமக்கள், குற்றவாளியின் உறவினர்கள் மத்தியில் பொது இடத்தில் வைத்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குற்றவாளி என்று தெரிந்ததும் காலம் கடத்தாமல் உடனடியாக தூக்குதண்டனை கொடுக்கும் அளவுக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.



    காவல்துறையினர் பாலியல் குற்றவாளிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லும்போது அவர்களது முகத்தை மூடக்கூடாது. இதுபோன்று இழி செயலில் ஈடுபடுவோர் முகம் பொதுமக்களுக்கு தெரிய வேண்டும். மக்கள் முன்னிலையில் அவர்கள் அவமானப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாற்றுதிறனாளிகள் சங்க தலைவலி லலிதாம்பிகை, செயலாளர் மகேஸ்வரி, த.மா.கா. நிர்வாகிகள் ஞானதேசிகன், சக்திவடிவேல், முனவர் பாஷா, ஜி.ஆர்.வெங்கடேஷ், அனுராதா அபி, அண்ணாநகர் ராம்குமார், சைதை மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #GKVasan
    ×