search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுப்பழக்கம்"

    சேலம் கன்னங்குறிச்சியில் மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளிக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சேலம்:

    சேலம் பிரபுநகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36) அச்சக தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான சீனிவாசன் அடிக்கடி மது குடித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் மனைவி கங்காவிடம் கேட்டார். அவர் பணம் கொடுக்காததால் விரக்தி அடைந்த சீனிவாசன் வீட்டில் உள்ள ஒரு அறையில் சென்று கதவை பூட்டி கொண்டார்.

    மனைவி மற்றும் உறவினர்கள் கதவை தட்டியும் திறக்காததால் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கதவை திறக்காதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது சீனிவாசன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிய படி கிடந்தார். இதை பார்த்த போலீசார் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தூக்கில் தொங்கிய சீனிவாசனுக்க ஆரிஸ் என்ற மகனும், கவுசல்யா என்ற மகளும் உள்ளனர்.
    அதிகம் மது அருந்தும் பெண்கள் அதற்கு அடிமையாவதும், ஆண்களை விட வெகு சீக்கிரம் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாவதும் நடக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் மிக மிகக் குறைவு. ஆனால் அந்தக் குறைந்த சதவீதத்தினரிலும் பெண்களே மதுப் பழக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு.

    மேற்கத்திய நாடுகளிலும், மது அருந்துபவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை இரு மடங்குக்கும் அதிகம். ஆனால் அங்கு பெண்கள் மது அருந்தும் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    அதிலும், 1991 முதல் 2000 ஆண்டு வரை பிறந்த பெண்கள் ஆண்களுக்கு நிகராக மது அருந்துகின்றனர். இந்த நிலை நீடித்தால் மேலை நாடுகளில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் மது அருந்துபவர்களாகக் கூட மாறிவிடுவார்களாம்.

    பொதுவாக மது அருந்துவதால் பெண்களே அதிக பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். அமெரிக்காவில் 2000-2015-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 45 முதல் 64 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் விகிதம் 57 சதவீதமாக இருந்தது.

    இது ஆண்களில் 21 சதவீதமாக மட்டுமே இருந்தது. 25 முதல் 44 வயதுக்கு உட்பட்ட பெண்களில் சிரோசிஸ் இறப்பு விகிதம் 21 சதவீதமாக உயர்ந்திருந்த நிலையில், ஆண்களில் இது 10 சதவீதமாகக் குறைந்திருந்தது.

    மது அதிகம் அருந்தி மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அளவுக்கு அதிகமாக, ஆபத்தான அளவுக்கு மது அருந்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக இந்தப் போக்கு பெண்களிடையே அதிகம் உள்ளது. ஆனால் அதிகளவில் பெண்கள் மது அருந்துவது மட்டுமே இங்கு பிரச்சினை அல்ல. மதுவானது ஆண்களின் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை ஒப்பிடும்போது பெண்கள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு வேறுவிதமாக உள்ளது.

    மது அருந்தும் பெண்களின் உடலில் குறைந்த அளவில் ஏடிஎச் என்ற நொதிப்பொருள் உற்பத்தி ஆகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் இத்திரவம், மதுவின் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. உடலிலுள்ள கொழுப்புச்சத்து, மதுவை தக்கவைத்துக் கொள்கையில் நீர் அதைக் கரைக்க முற்படுகிறது.



    பெண்கள் உடலில் கொழுப்பின் அளவு இயற்கையாகவே அதிகமாகவும் நீரின் அளவு குறைவாகவும் இருப்பதால் இயல்பாகவே அவர்களின் உடலில் மதுவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

    இந்த அம்சம்தான் ஆண்களைவிட பெண்களுக்கு மதுவால் அதிக பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார், டான் ஷுகர்மேன். இவர் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் உடலியக்கத் துறை பேராசிரியராக உள்ளார்.

    அதிகம் மது அருந்தும் பெண்கள் அதற்கு அடிமையாவதும், ஆண்களை விட வெகு சீக்கிரம் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாவதும் நடக்கிறது. இந்த நிகழ்வு டெலஸ்கோப்பிங் எனப்படுகிறது.

    ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு மதுப்பழக்கம் தாமதமாகவே ஏற்படுகிறது. அதேநேரம், ஆண்களை விட பெண்கள் விரைவாகவே மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். அவர்களுக்கு கல்லீரல் தொடர்பான கோளாறுகள் சீக்கிரமே ஏற்பட்டுவிடுகின்றன. இதயங்களும் நரம்புகளும் விரைந்து பழுதடைகின்றன.

    ஆண்களின் உடலிலும் பெண்களின் உடலிலும் மது ஏற்படுத்தும் பல பாதிப்புகள் கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அறியப்படவில்லை.

    அதிலும், மது தொடர்பான மருத்துவ ரீதியான சோதனைகள் அனைத்தும் 1990கள் வரை ஆண்களிடம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. மது என்பது ஆண்கள் தொடர்பான பிரச்சினை என நம்பப்பட்டதுதான் அதற்குக் காரணம்.

    மருத்துவ சோதனைகள் ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆரோக்கியத்துக்கான அமெரிக்க தேசிய நிறுவனம் உத்தரவிட்டது. இதன் பின்பே நிலைமை மாறத் தொடங்கியது.

    அதன் விளைவாகத்தான் தற்போதைய உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. 
    திருப்பூரில் தந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து கதறிய தந்தை இனி மது குடிக்க மாட்டேன் என்று கூறினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் அருமை காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (38). இவரதுமனைவி பேபி (34). இவர்களுக்கு ஹரிஹரன் (14) என்ற 9-ம் வகுப்பு படிக்கும் மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    பிரகாஷ் தினமும் மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும் போது மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதைப்பார்த்த மாணவர் ஹரிஹரன் தன் தந்தையிடம் உங்களுக்கு நாங்கள் 2 பிள்ளைகள் உள்ளோம்.

    நீங்கள் மது குடித்து விட்டு வந்து தினமும் வீட்டில் தகராறு செய்தால் நாங்கள் எப்படி படிக்க முடியும். ஏன் இப்படிசெய்கிறீர்கள் என்று கூறிவந்தார். பல முறை மாணவர் ஹரிஹரன் தன் தந்தைக்கு அறிவுரை சொல்லியும் அவர் கேட்ட பாடில்லை.

    சம்பவத்தன்றும் பிரகாஷ் வேலை முடிந்து குடி போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் வழக்கம்போல் தனது மனைவி பேபியிடம் தகராறு செய்தார்.

    அப்போது அங்கு வந்த மாணவர் ஹரிஹரன், தனது தந்தையிடம் பல முறை நான் சொல்லியும் நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள். எனவே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றார். ஆனால் அதை பிரகாஷ் கண்டு கொள்ளவில்லை.

    தொடர்ந்து அவர் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது திடீரென மாணவர் ஹரிஹரன் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

    பின்னர் மாணவர் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதையடுத்து பிரகாஷ் மற்றும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது மாணவர் பிரகாஷ் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுப்பற்றி 15 வேலம்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவர் தற்கொலை குறித்து போலீசார், பிரகாசிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது-

    நான் குடித்து விட்டு வருவதை என் மகன் தினமும் கண்டித்து வந்தான். மேலும் குடியை நிறுத்தாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறிவந்தான். இதை நான் பொருட்படுத்தவில்லை.

    நேற்று முன்தினம் நான் மனைவியிடம் சண்டை போட்ட போது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். இனி நான் சத்தியமாக குடிக்கவே மாட்டேன் என்று கூறினார்.

    தொடர்ந்து பிரகாஷ் வீட்டில் வைத்திருந்த குவாட்டர் மது பாட்டிலை வெளியே கொண்டு வந்து வீசி உடைத்தார். மேலும் தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது அவர் குடிப்பழக்கத்தால் நான் என் மகனை இழந்து விட்டேனே என்று கூறியப்படி கதறி அழுதார். #Tamilnews
    ×