search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராமங்கள்"

    டெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்பில் வீடுகள் சேதமானதால் முகாம்களில் தஞ்சமடைந்து இருக்கும் கிராம மக்கள் 23 நாட்களுக்கும் மேலாக மின் இணைப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    நெற்களஞ்சியமாக விளங்கிய டெல்டா மாவட்டங்கள் கடந்த மாதம் 16-ந்தேதி வீசிய கஜா புயலில் உருகுலைந்து போய் விட்டன.

    லட்சக்கணக்கான மரங்களையும், மின் கம்பங்களையும் சாய்த்த கஜா புயல் விவசாயிகள் வாழ்வதாரமாக விளங்கிய பயிர்களையும விட்டு வைக்கவில்லை. தென்னையை பிள்ளையை போல் வளர்த்த விவசாயிகள் அவைகள் வீழ்ந்து கிடக்கும் காட்சியை கண்டு கண்ணீர் வடித்த வண்ணம் உள்ளனர்.

    தங்கள் முன்னோர் உழைப்பில் உருவான தென்னைகளும், தங்களால் வளர்க்கப்பட்ட தென்னைகளும் முறிந்தும் வீழ்ந்தும் கிடப்பது அவர்களுக்கு பேரிடியாக அமைந்து விட்டது.

    வாழைகள், கரும்புகள் அடியோடு வீழ்ந்து விட்டதால் உழவர் பண்டிகையாம் தைபொங்கலை வரவேற்க தயாராக இருந்த விவசாயிகளுக்கு பொங்கலுக்கு நெல்லை மட்டுமே நம்பி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புயலை தொடர்ந்து அடுத்தடுத்து பெய்த கனமழை நெற்பயிர்களையும் நீரில் மூழ்கடித்து விட்டது.

    வீடுகள் சேதமானதால் முகாம்களில் தஞ்சமடைந்து இருக்கும் கிராம மக்கள் 23 நாட்களுக்கும் மேலாக மின் இணைப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர் அருகில் அமைந்துள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பேராவூரணி அருகில் அமைந்துள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் மின் வினியோகம் வழங்கபடவில்லை. இதேபோல நாகை மாவட்டம் வேதாரண்யம், கொள்ளிடம், தலைஞாயிறு, தரங்கம்பாடி அருகில் அமைந்துள்ள ஏராளமான கிராமங்களிலும் முறிந்து கிடக்கும் மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு வழங்க மின் வாரியத்தினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் புதிய மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு கொடுக்கும் போது நல்ல நிலையில் நிற்கும் சில பழைய மின்கம்பங்கள் முறிந்து விடுகின்றன. இதனால் அப்பணியை மீண்டும் செய்யும் அவல நிலை ஏற்படுகிறது. புயலில் இருந்து மீளாத கிராமங்களுக்கு மின் இணைப்பு கிடைக்க இன்னும் 10 நாட்கள் வரை ஆகும் என்று தெரிகிறது.

    பள்ளிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் பகலில் தங்களது இடங்களுக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் முகாம்களில் தங்கி வருகின்றனர்.

    வேதாரண்யம், தரங்கம்பாடி, சேதுபாவா சத்திரம் மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம், பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் படகுகள் சேதமாகி விட்டதால் மீண்டும் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் முழு வீச்சில் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அலுவலர்கள், புயல் பாதிப்பு பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர் . இருந்தபோதிலும் கஜா புயலில் இழந்த வாழ்வை மீண்டும் பெற முடியுமா? என்ற அச்சம் அகலாமல் டெல்டா மாவட்ட மக்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க தேவையான ஆலோசனைகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கிராமங்களில் கல்வி வளர ‘தினத்தந்தி’ முக்கிய பங்காற்றி வருகிறது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்தார். #DailyThanthi #KancheepuramCollector
    சென்னை:


    கல்வி பணியில் சீரிய முயற்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் ‘தினத்தந்தி’, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசும் வழங்கி சிறப்பித்து வந்தது.

    அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் தினத்தந்தியின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. மேலும், மேற்படிப்பில் என்ன பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கலாம்? என்பதை மாணவர்கள், பெற்றோர்கள் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக ‘வெற்றி நிச்சயம்’ என்ற நிகழ்ச்சியும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.



    இப்படியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவரும் ‘தினத்தந்தி’, கடந்த 2014-15-ம் கல்வி ஆண்டு முதல் ‘தினந்தந்தி கல்வி நிதி திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது. அதன்படி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ-மாணவிகளின் மேல்படிப்புக்கு ‘தினத்தந்தி’ நிதி உதவி அளித்து வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் 2 மாவட்டங்கள் என மொத்தம் 34 மாவட்டங்களில் தலா 10 மாணவர்கள் வீதம் 340 மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 2017-18-ம் கல்வியாண்டில் தினத்தந்தி கல்வி நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற தகுதிபெற்றுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற 30 மாணவ- மாணவிகளின் பெயர் விவரம் வருமாறு:-

    சென்னை மாவட்டம்

    1) மு.மணிமொழி, தூயமேரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர்.

    2) த.திருசவுமியா, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர்.

    3) வே.பிரியதர்ஷினி, சிறுவர் தோட்டம் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர்.

    4) சி.ஹேமலதா, சி.எஸ்.ஐ. தூய அகஸ்டின் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, தியாகராயநகர்.

    5) ம.பத்மபிரியா, முருகதனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வண்ணாரப்பேட்டை.

    6) கு.பவித்ரா, ஸ்ரீஅஹோபிலமத் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி, மேற்கு மாம்பலம்.

    7) அ.திவ்யதர்ஷினி, ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர்.

    8) க.சுகன்யா, கொ.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளி, வண்ணாரப்பேட்டை.

    9) சு.துர்கா, சிங்காரம்பிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம்.

    10) உ.கார்த்திகா பிரீத்தி, தனலட்சுமி மேல்நிலைப்பள்ளி, ராயபுரம்.

    திருவள்ளூர் மாவட்டம்

    1) கே.ஆர்.தனுஷ்யா, அரசு மேல்நிலைப்பள்ளி, புச்சிரெட்டிப்பள்ளி.

    2) ச.அரசு, எம்.ஆர். மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, மேட்டுக்குப்பம்.

    3) ரா.ஸ்ரீநிதி, அரசு மேல் நிலைப்பள்ளி, கவரப்பேட்டை.

    4) ச.ஜெயலட்சுமி, ஆசிரியர் மங்கலங்கிழார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அம்மையார்க்குப்பம்.

    5) கி.புவியா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி.

    6) ச.காயத்ரி, தளபதி கே.விநாயகம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி.

    7) பா.கார்த்திக், தி.மு.கி.வா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மையார்க்குப்பம்.

    8) மு.ஈஸ்வரி, அரசு மேல் நிலைப்பள்ளி, புச்சிரெட்டிப்பள்ளி.

    9) மு.டில்லிபாபு, தி.மு. கி.வா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மையார்க் குப்பம்.

    10) செ.நிர்மல், அரசு மேல்நிலைப்பள்ளி, சுண்ணாம்புக்குளம்.

    காஞ்சீபுரம் மாவட்டம்

    1) மு.வித்யா, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, முகலிவாக்கம்.

    2) ம.மிதுன்கண்ணா, தேசியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம்.

    3) மு.காயத்ரி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்பேட்டை.

    4) செ.லினிஷா, செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர்.

    5) ப.தயாநந்தினி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, வாலாஜாபாத்.

    6) சு.லோகேஷ்வரி, எஸ்.எஸ்.கே.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்.

    7) க.தமிழ்வளவன், அந்திரசன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்.

    8) ஸ்ரீ.ஜலஸ்ரீ, செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.

    9) க.ஜெயஸ்ரீ, புனித டொமினிக் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பரங்கிமலை.

    10) ஆ.சந்தியா, அரசினர் மேல்நிலைப்பள்ளி, மேடவாக்கம்.

    தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா சென்னை குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள எஸ்.சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 30 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தினத்தந்தி கல்வி நிதி திட்டத்தில் 2-வது முறையாக நான் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்குகிறேன். இதை நான் ஒரு பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கல்வி தான் முக்கியம். கல்வி கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றத்துக்கும் நாம் செல்லலாம்.

    அந்த வகையில் பவளவிழா கண்ட தினத்தந்தி நிறுவனம், 56 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இதுபோல் கல்வி நிதி உதவி வழங்கி சமூக தொண்டு செய்து வருகிறது. கல்வி பணியை இதுபோல் நேரடியாக செய்வது மட்டுமல்லாமல், மறைமுகமாகவும் பல்வேறு உதவிகளை தினத்தந்தி செய்துவருகிறது.

    கிராமங்களில் முன்பெல்லாம் பத்திரிகை என்றாலே அது தினத்தந்தி தான். அதன்பிறகு தான் மற்ற பத்திரிகைகள் சென்றடைந்தன. முதலில் கிராமங்களை சென்றடைந்து, அங்கு கல்வி வளர முக்கிய பங்காற்றியது ‘தினத்தந்தி’ தான். நான் பிறந்த கிராமத்தில் அனைத்து டீக்கடைகளிலும் தினத்தந்தி பேப்பர் தான் இருந்தது.

    நான் கல்லூரி படிக்கும் காலங்களில் தேசிய முதியோர் கல்வி தொடர்பாக கிராமப் புறங்களுக்கு சென்று அறிவொளி இயக்கத்தோடு இணைந்து முதியோர்களுக்கு வாசித்து, எழுதி பழக கற்றுக்கொடுப்போம். அப்போது முதற்கட்டமாக ‘தினத்தந்தி’ பத்திரிகையை கொடுத்து வாசிக்க கற்றுக்கொடுப்போம். அது ஏனென்றால் மற்ற பத்திரிகைகளை காட்டிலும் தினத்தந்தியில் எழுத்துகள் பெரிதாகவும், எளிதில் புரியும்படியும் இருக்கும். அந்த அளவு கிராமப்புற மக்களுக்கு தங்களுடைய பங்களிப்பை தினத்தந்தி செய்துவருகிறது.

    மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விதமான திட்டங்களை தினத்தந்தி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மாணவ- மாணவிகளும் தங்களுடைய கல்வித்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில், தினத்தந்தி சென்னை மேலாளர் ஆர்.சதீஷ்குமார் வரவேற்புரையாற்றினார். இதில் காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜே.ஆஞ்சலோ இருதயசாமி, பள்ளி செயலாளர் வி.சந்தானம், தாளாளர் கிருஷ்சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளி முதல்வர் பேபி சரோஜா நன்றி கூறினார். #DailyThanthi #KancheepuramCollector

    மியான்மர் நாட்டின் ஸ்வர் சாங் என்ற அணை உடைந்ததால் 85 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. #MyanmarFlood
    யாங்கூன்:

    மத்திய மியன்மார் பகுதியில் உள்ள ஸ்வர் சாங் என்ற அணையின் ஒரு பகுதி உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் 85 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. மேலும் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

    மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், மீட்பு குழுவினர் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி 2 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஸ்வர் சாங் அணை நீர்ப்பாசனத்துக்காக கட்டப்பட்டது என்றும், அதிக அளவில் நீரை சேமித்து வைத்திருக்கும் இந்த அணை முறையாக பராமரிக்கப்படாததாலேயே அணை உடைந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. #MyanmarFlood
    ×