search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீவைகுண்டம்"

    பனை தொழில் நசிவடைந்து வரும் நிலையில் பனை ஓலையின் மூலம் 3 அடி உயரத்தில் தாஜ்மஹாலை ஸ்ரீவைகுண்டம் தொழிலாளி உருவாக்கி உள்ளார். #TajMahal #PalmTree
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 65). பனைஏறும் தொழிலாளி. இவர் கருங்குளம் பகுதியில் பனை ஏறுவதும், மற்ற நேரங்களில் விவசாயமும் செய்தும் வந்தார். இவருக்கு பனை ஓலையில் பலவிதமாக பொருள்கள் செய்வதில் ஆர்வம். பனை நாரில் கட்டில் முடைவது, பனை ஓலையில் பாய் முடைவது, நார் பெட்டி செய்வது உள்பட தொழிலை செய்து கொண்டிருந்தார்.

    இவர் கண்காட்சியில் வைக்கும் அளவுக்கு ஓலையில் பலவிதமான பொருள்களை செய்ய ஆசைப்பட்டார். இதன் பயனாக தாஜ்மஹால் செய்வதற்கு இவர் பல ஸ்தூபிகளை அமைத்து அதன் மேலே ஓலையை கொண்டு பல வேலைபாடுகளை செய்துள்ளார். பளிங்கு மாளிகை என்பதை குறிக்கும் வண்ணத்தில் இதற்கு வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தாஜ்மஹால் சுமார் 3 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக காணப்படுகிறது.

    ஓலைகளால் செய்யப்பட்ட பெட்டிகள், கூடை மற்றும் குதிரை பொம்மைகள்.

    மேலும் ஏரோபிளேன், சர்ச், ஆலய கோபுரம், வில்லு வண்டி, யானை, நார் பெட்டி, கல்லாபெட்டி, மிளகு பெட்டி, கிலுக்கு உள்பட பல பொருள்களை செய்தார். பின் அதற்கு வர்ணம் தீட்டினார். இந்த பொருள்கள் பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது.

    இதுகுறித்து பால்பாண்டி கூறும்போது, தற்போது பனை தொழில் நசிவடைந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் பனையில் இருந்து கிடைக்கும் பொருள்கள் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் போலி பெருத்துக் கொண்டிருக்கிறது. பனை ஏறும் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் பனையின் பயன்பாடு எல்லோருக்கும் தெரிய வேண்டும் இதற்காக வித்தியாசமாக முயற்சி செய்ய நினைத்தேன்.

    பனை ஓலை மற்றும் நார் மூலமாக பொருள்களையெல்லாம் உருவாக்கி எனது வீட்டில் காட்சிக்கு வைத்துள்ளேன். விரைவில் கல்வி நிலையங்கள் உள்பட பல இடங்களுக்கு இந்த பொருள்களை கொண்டு போய் கண்காட்சியாக வைக்கலாம் என நினைக்கிறேன். அதோடு அரசு நலிந்து இருக்கும் இந்த தொழிலை மேலும் வலுப்படுத்த அரசு உதவிகள் செய்ய வேண்டும். இதை இந்த கண்காட்சி மூலமாக அரசுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TajMahal #PalmTree


    குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவி மற்றும் மனைவியின் தாய், பாட்டி ஆகிய 3 பேரையும் உயிரோடு தீவைத்து எரித்து விட்டு, சங்கர் தீக்குளித்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது32). லாரி டிரைவரான இவர் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் பேரூரை சேர்ந்த முருகன் மகள் கீதா (22). பட்டதாரி பெண்.

    சங்கரும், கீதாவும் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணமான 3 மாதத்திலேயே அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கீதா கணவரிடம் கோபித்துக் கொண்டு பேரூரில் உள்ள தனது தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து சங்கர் அவரை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தார். எனினும் கீதா திரும்பி வர மறுத்து பிடிவாதமாக தாய் வீட்டிலேயே இருந்தார். நேற்றுஇரவு சங்கர் தனது மனைவி கீதாவை அழைப்பதற்காக பேரூருக்கு சென்றார். அப்போது அங்கு கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரம் அடைந்த சங்கர் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து மனைவி கீதா உடல் மீது ஊற்றி தீவைத்தார். அவரை தடுக்க வந்த கீதாவின் தாய் பெருமா, பாட்டி செல்ல பொண்ணு ஆகியோர் மீதும் சங்கர் தீ வைத்தார்.

    இதனால் கீதா, அவரது தாய், பாட்டி ஆகிய 3பேர் மீதும் தீப்பற்றி எரிந்தது. இதனைப்பார்த்த சங்கர் பயத்தில் தனது உடல்மீதும் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இந்த சம்பவத்தில் சங்கர், அவரது மனைவி கீதா, மாமியார், கீதாவின் பாட்டி ஆகிய 4 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு 4பேரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    குடும்பம் நடத்த வரமறுத்த மனைவி மற்றும் மனைவியின் தாய், பாட்டி ஆகிய 3பேரையும் உயிரோடு தீவைத்து எரித்து விட்டு, சங்கர் தீக்குளித்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×