search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெறிநாய்"

    திருச்சி அரியமங்கலத்தில் வெறிநாய் கடித்து குதறியதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    பொன்மலைப்பட்டி:

    திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரில் அண்ணாதெரு, சவுக்கத்அலிதெரு, முத்துராமலிங்கதெரு, ஜீவானந்தம்தெரு உள்பட பல்வேறு தெருக்கள் உள்ளன. அங்கு அதிக எண்ணிக்கையில் நாய்கள் சுற்றி திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சுற்றி திரிந்த ஒரு நாய்க்கு திடீரென வெறி பிடித்தது. உடனடியாக அந்த நாய் பாய்ந்து சென்று அதேபகுதியில் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த மூதாட்டியை கடித்து குதறியதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனால் வீடு முழுவதும் ரத்தம் சொட்டியது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காமராஜ்நகரை சேர்ந்த காதர்(வயது 45), அண்ணாதெருவை சேர்ந்த முகமதுமைதீன்(47), கென்னடிதெருவை சேர்ந்த சுலையா(47), ஜின்னாதெருவை சேர்ந்த சகீலா(38) என அடுத்தடுத்து பலரை நாய் கடித்து குதறியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந் தனர். இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

    தொடர்ந்து ஒரேநாளில் 15 பேரை கடித்து குதறியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    உத்தரபிரதேசத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் சிகிச்சை பலன் அளிக்காமல் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.
    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள நன்தோஷி என்கிற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் நேற்று முன்தினம் அருகில் உள்ள கோவிலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது அங்கு நின்றிருந்த வெறிநாய்கள் சில சிறுவனை விரட்டி சென்று கடித்து குதறியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் வெறிநாய்களை விரட்டி அடித்துவிட்டு, சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.

    உத்தரபிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 6 மாத காலத்தில் 13 சிறுவர்-சிறுமிகள் வெறிநாய் கடித்து உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    தரகம்பட்டி அருகே வெறிநாய் கடித்ததில் 8 செம்மறி ஆடுகள் பலியாகின.
    தரகம்பட்டி:

    கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே மேலப்பகுதி ஊராட்சி மாலப்பட்டியைச் சேர்ந்தவர் ராசு (வயது 50). கொத்தனாரான இவர் 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று முன் தினம் ஆடுகளை மேய்த்துவிட்டு தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    மறுநாள் காலை வந்து பார்த்தபோது, படுகாயங்களுடன் 8 செம்மறிஆடுகள் இறந்து கிடந்தன. 6 செம்மறி ஆடுகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காணியாளம்பட்டி கால்நடை மருத்துவரை வரவழைத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செம்மறி ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார்.

    அந்த செம்மறி ஆடுகள் வெறிநாய் கடித்ததால்தான் இறந்துள்ளன என டாக்டரின் பரிசோதனையில் தெரியவந்தது. மேலும் கிராம நிர்வாக அதிகாரி மணிவேல் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் உள்ள வெறிநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். 
    ×