search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர்"

    திருப்பூரில், கடன் தொல்லை காரணமாக ரெயில் முன் பாய்ந்து ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர்–வஞ்சிபாளையம் ரெயில் நிலைய தண்டவாளப்பகுதியில் நேற்று காலை முகம் மற்றும் உடல் சிதைந்த நிலையில் ஒரு வாலிபரின் உடல் கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும், அவர் அருகில் கிடந்த செல்போனை கைப்பற்றிய போலீசார் அதில் இருந்த சிம்கார்டை பயன்படுத்தி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த மோகன் என்பது தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கிடைத்த விவரம் வருமாறு:–

    தேனி மாவட்டம் போடி அம்மாபட்டியை சேர்ந்தவர் மோகன்(வயது 29). ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்த இவர் கடந்த 2013–ம் ஆண்டு முதல் திருப்பூர் பூலுவப்பட்டி பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்து திருப்பூர் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்தார். இவருக்கு அதிக அளவு கடன் இருந்து வந்ததாக தெரிகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை உடனடியாக திரும்ப கொடுக்கும்படி மோகனிடம் வற்புறுத்தியுள்ளனர். இதனால் இவர் சில நாட்களாகவே மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து மோகனை அவருடைய அறையில் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த வீட்டின் உரிமையாளர், மோகனின் அறைக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அறையில் யாரையும் காணவில்லை. மோகன் வேறு எங்காவது சென்றிருக்கலாம் என்று நினைத்த வீட்டின் உரிமையாளர், அவரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    வழக்கமாக செல்ல வேண்டிய கவாத்து பயிற்சிக்கும் மோகன் செல்லவில்லை. இதனால் போலீஸ் அதிகாரிகளும் மோகனை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த மோகன் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்ற ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், மோகன் கடன் தொல்லையால் தான் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்ட மோகனுக்கு, ரமா என்ற மனைவியும் 6 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளனர். கடன் தொல்லையால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பூந்தமல்லியில் மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பூந்தமல்லி:

    சென்னை பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளனர். அதில் ஏராளமான போலீஸ்காரர்கள் அங்கேயே தங்கி உள்ளனர்.

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார்(வயது 40) என்ற போலீஸ்காரரும் அங்கேயே தங்கி உள்ளார். நேற்று காலை அவர் பணிக்கு செல்வதற்காக தான் தங்கி உள்ள கூடாரத்தில் இருந்து சீருடை அணிந்துகொண்டு புறப்பட்டார்.

    பின்னர் பணிக்கு செல்லும்போது அவர் எடுத்துச் செல்ல வேண்டிய துப்பாக்கியை எடுக்க மற்றொரு கூடாரத்துக்குள் சென்றார். திடீரென அந்த கூடாரத்தின் உள்ளே இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக போலீஸ்காரர்கள், அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது ராஜேஷ்குமார், ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார். அவருக்கு அருகில் துப்பாக்கி கிடந்தது. அவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்று இருப்பது தெரிந்தது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த சகபோலீஸ்காரர்கள், உயிருக்கு போராடிய அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், ராஜேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    ராஜேஷ்குமார், கடந்த 2001-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்தார். காஷ்மீரில் பணியாற்றி வந்த அவர், கடந்த ஆண்டுதான் பூந்தமல்லிக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் பணியில் இருந்த ராஜேஷ்குமார், தனது மனைவியிடம் செல்போனில் பேசினார். அப்போது கணவன்-மனைவி இடையே செல்போனிலேயே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    இதை அறிந்த உயர் அதிகாரிகள், பணியின் போது செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறி ராஜேஷ்குமாருக்கு அந்த இடத்திலேயே தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது. மனைவியுடன் தகராறு, செல்போனில் பேசியதற்காக அதிகாரிகள் தண்டனை வழங்கிய சம்பவங்களால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

    இந்தநிலையில் நேற்று காலை பணிக்கு செல்ல துப்பாக்கியை எடுக்க வந்தபோது, அதில் அதிக சத்தம் வராமல் இருக்க ‘சைலன்சரை’ பொருத்தி, தனது தாடை பகுதியில் துப்பாக்கியை வைத்து, காலால் அதன் விசையை அழுத்தியதால் குண்டுகள் பாய்ந்து அவர் இறந்து உள்ளார்.

    அந்த துப்பாக்கியால் ஒரு முறை சுட்டால் ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் வெளியே வரும். ஆனால் ராஜேஷ்குமார் தான் தற்கொலை செய்துகொள்வதற்காக துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டாவை மட்டும் போட்டு, அதால் சுட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    அவரது தற்கொலைக்கு இவைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த வளாகத்திலேயே வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம், சிறப்பு தனிச்சிறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 
    பணத் தகராறில் பெண் போலீசின் கன்னத்தில் அறை விட்ட போலீஸ்காரர் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் மாலா (வயது38). இவர் அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் உக்கிரபாண்டியிடம் ரூ.2 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார்.

    இந்த நிலையில் மாலா 6 மாதம் மருத்துவ விடுப்பில் சென்றார். நேற்று இரவு பணிக்கு வந்த மாலாவிடம் உக்கிரபாண்டி, கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் உக்கிரபாண்டி மாலாவின் கன்னத்தில் ‘பளார்’ அறை விட்டார். அதன் பின்னர் மாலா தனக்கு ஏற்பட்ட காயத்துக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    குஜராத் மாநிலத்தில் கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault
    ராஜ்கோட்:

    இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா தற்போது ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருகிறார். குஜராத் ஜாம்நகரில் இவருடைய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    ஜடேஜாவின் மனைவி ரீவா நேற்று முன்தினம் தனது தாயார் பிரபுல்லபாவுடன் ஜாம் நகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார், அங்கு வேகமாக வந்த போலீஸ்காரர் சஞ்சய் அகிர் என்பவரின் மோட்டார் சைக்கிள் மீது லேசாக மோதிவிட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், ரீவாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவரது கூந்தலை பிடித்து இழுத்து, தலையை கார் கண்ணாடி மீது பலமாக மோத வைத்து 3 முறை கன்னத்திலும் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உடன் இருந்த அவரது தாயார் போலீசில் புகார் செய்தார்.

    இதற்கிடையே டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் மாநில முதல்-மந்திரி அலுவலகம் உள்ளூர் எம்.எல்.ஏ. தர்மேந்திரசிங்கை தொடர்பு கொண்டு இது தொடர்பாக குறிப்பு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டன.

    இதையடுத்து, ஜாம்நகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவு செய்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சஞ்சய் அகிரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டது.  #RavindraJadeja #Rivaba #Jadejawifeassault
    வாலாஜாபாத் அருகே ரெயில் முன் பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜாபாத்:

    காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத், சின்னக்கடை, மகிமைதாஸ் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). இவர் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து கொண்டு, காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு டிரைவராகவும் இருந்துவந்தார். இவர் கடந்த ஆண்டு குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரியா (28) என்பவரை திருமணம் செய்தார். கடந்த வாரம் பிரியாவுக்கு வளைகாப்பு நடந்தது.

    இந்த நிலையில் சதீஷ்குமாருக்கும், அவரது மாமியாருக்கும் இடையே தகராறு இருந்ததாகவும், மாமியார் சதீஷ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் விடுப்பு எடுத்துக்கொண்டு, தனது காரில் வாலாஜாபாத்தை அடுத்த நத்தப்பேட்டை ரெயில் நிலையம் அருகே வள்ளுவப்பாக்கம் என்ற இடத்திற்கு சென்றார். அங்கு தனது காரை நிறுத்திவிட்டு காஞ்சீபுரம் நோக்கி சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

    அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தது போலீஸ்காரர் சதீஷ்குமார் என்பதை உறுதிபடுத்தினர். விபத்து குறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் சதீஷ்குமாரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது மனைவியுடன் சதீஷ்குமார் இருக்கும் புகைப்படத்துடன் பர்ஸ் ஒன்றும், அவரது செல்போனும் இருந்தது.

    மேலும் கடிதம் ஒன்று இருந்ததாகவும் அந்த கடிதத்தில், தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் எந்த தகராறும் இல்லை. மனைவியின் குடும்பத்தினர் தகராறு செய்ததால் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று எழுதியிருந்தாக போலீசார் தெரிவித்தனர்.

    செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×