search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தல்காரர்கள்"

    ராசிபுரம் அருகே ஈரோடு தொழில் அதிபரை கடத்தி சென்ற கடத்தல்காரர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். #Policeshot
    ராசிபுரம்:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் சக்திவேல் என்பவரை நேற்று காலை மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்தி சென்றது. பின்னர் அவரது குடும்பத்தினருக்கு போன் செய்து சக்திவேலை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் தர வேண்டும் எனக்கூறினர்.

    அப்போது அவரது குடும்பத்தினர் ரூ.5 லட்சம் தருவதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த பணத்தை சேலம்-கோவை பைபாஸ் சாலையில் தனியார் கல்லூரி அருகே வந்து தருமாறு அந்த கும்பல் கூறியது. இதுபற்றி சக்திவேல் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் ரூ.5 லட்சத்துடன் அவர்கள் கூறிய இடத்துக்கு சென்றனர். போலீசார் அந்த பகுதியில் பதுங்கி இருந்தனர். மாலை 6.30 மணி அளவில் அந்த இடத்துக்கு அந்த கும்பலிடம் சக்திவேலின் உறவினர் ஒருவர் பணத்தை எடுத்து சென்றார்.

    போலீசார் பதுங்கி இருந்ததை பார்த்ததும் அந்த கும்பல் காரை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றது. போலீசாரும் பின்தொடர்ந்து விரட்டிச்சென்றனர்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த அலவாய்பட்டி பகுதியில் ஊருக்குள் சென்றபோது எதிரே வந்த கார் மீது கடத்தல் கும்பல் வந்த கார் மோதி நின்றது. ஒரு காரில் சென்ற போலீசார் அவர்களின் பின்னால் சென்றனர்.

    காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதனால் போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களில் 2 பேர் அங்கிருந்து காட்டு பகுதிக்குள் தப்பி ஓடினர். 2 பேர் காரை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர். அவர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  #Policeshot
    பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தெருவில் ஊர்வலமாக அழைத்து சென்ற மேயர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். #Philippinemayordead
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள் மீது அந்நாட்டு அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களை கண்டவுடன் சுடுவதற்கும், தேடி கண்டுபிடித்து சுட்டுக் கொல்லவும் அந்நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்டட்ரே போலீசார் மற்றும் ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து, சுமார் ஏழரை லட்சம் பேர் சரண் அடைந்துள்ளனர். 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் பிரபல அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் போலீசாரின் தேடுதல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில், மின்டானாவோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த டட்டு சவுதி அம்பட்டுவான் நகர மேயர் சம்சுதீன் டிமாவ்கோம் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட சுமார் 4,200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    பட்டாங்காஸ் மாகாணத்தின் டனுவான் நகர மேயர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியின்போது அந்நகரின் மேயர் அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது தூரத்தில் இருந்து பாய்ந்துவந்த ஒரு தோட்டா, மேயரின் மார்பை துளைத்து சென்ற காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

    இதற்கு முன்னதாக, போலீசாரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களை தெரு வழியாக ஊர்வலமாக அழைத்து சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி என்பது குறிப்பிடத்தக்கது. #Philippinemayordead #tamilnews
    ×