search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 150704"

    • மதுரையை சேர்ந்த தம்பதிக்கு குழந்தையை பல லட்சம் ரூபாய்க்கு விற்றதாக பெண் தெரிவித்துள்ளார்.
    • இதைத்தொடர்ந்து போலீசார் அந்த தம்பதியை வரவழைத்து விசாரணை நடத்தியபின் பெண் குழந்தையை மீட்டனர்.

    மதுரை:

    மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    கணவரை இழந்த அந்த பெண் தனது மகன், மகள்களை வேலைக்கு சென்று வளர்த்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதில் அந்த பெண் கர்ப்பமடைந்தார்.

    இந்த விஷயம் மகன், மகள்களுக்கு தெரியவந்தால் அவமானமாகி விடும் என கருதிய அந்த பெண் வயிற்றில் கட்டி இருப்பதாக கூறி சமாளித்து வந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.

    ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த அந்த பெண் பின்னர் குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆனார். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரி செவிலியர்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு குழந்தை இல்லை.

    இதுகுறித்து கேட்டபோது உறவினர் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து தடுப்பூசி போட சுகாதார நிலையத்திற்கு குழந்தையுடன் கட்டாயம் வர வேண்டுமென செவிலியர்கள் அந்த பெண்ணிடம் கூறிவிட்டுச் சென்றனர். அதன்படி சுகாதார நிலையத்திற்கு அந்த பெண் மட்டும் சென்றுள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த டாக்டர்கள் குழந்தை மாயமானது குறித்து அலங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஏ.டி.எஸ்.பி. சந்திரமவுலி தலைமையில் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது மதுரையை சேர்ந்த தம்பதிக்கு அந்த குழந்தையை பல லட்சம் ரூபாய்க்கு விற்றதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த தம்பதியை வரவழைத்து விசாரணை நடத்தியபின் பெண் குழந்தையை மீட்டனர்.

    இந்து பெண்ணிற்கு பிறந்த குழந்தையை வேறு மதத்தினருக்கு தத்துக்கொடுக்கும் போது அதற்கான பிரத்யேக சட்டமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அதனை மீறி பெண் குழந்தை பல லட்சத்துக்கு தத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தத்தெடுத்த முஸ்லிம் தம்பதி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை உறவினர்களை அழைத்து விமரிசையாக நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை கே.கே.நகரை சேர்ந்த டிரைவர் ரவி, கோயம்பேடு போலீஸ் ஏட்டு செந்தில்குமாரால் கடத்தி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • உடலை எரிப்பதற்கு 10 லிட்டர் பெட்ரோல், 3 கிலோ சர்க்கரை ஆகியவற்றையும் வாங்கி சென்றுள்ளனர்.

    சென்னை:

    சென்னை கே.கே.நகரை சேர்ந்த டிரைவர் ரவி, கோயம்பேடு போலீஸ் ஏட்டு செந்தில்குமாரால் கடத்தி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏட்டு செந்தில்குமார், டிரைவர் ரவியை ரவுடிகளுடன் சேர்ந்து மிகவும் கொடூரமாக கொலை செய்திருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    இது தொடர்பாக செந்தில் குமாரின் காதலி கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் ஏட்டு மற்றும் 4 ரவுடிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

    டிரைவர் ரவியின் வீடும், போலீஸ் ஏட்டு செந்தில்குமாரின் காதலி கவிதா வீடும் எதிர்எதிரே உள்ளது. ரவியின் மனைவி ஐஸ்வர்யாவுக்கும், கவிதாவுக்கும் ஏற்பட்ட சிறிய தகராறே முற்றி கொலையில் முடிந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ரவி, செந்தில் குமாரை தாக்கி உள்ளார்.

    இதனை மனதில் வஞ்சமாக வளர்த்த ஏட்டு செந்தில்குமார் திட்டம் போட்டு ரவுடிகளுடன் சதி திட்டம் தீட்டி இந்த கொலையை செய்திருக்கிறார்.

    டிரைவர் ரவியை கொலை செய்வதற்கு ஏட்டு செந்தில்குமார், ஐசக் என்ற ரவுடியுடன் சேர்ந்து சினிமா பாணியில் திட்டம் தீட்டி இருக்கிறார்.

    இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

    கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்த ஏட்டு செந்தில்குமாருக்கு அதே பகுதியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி ஐசக்குடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்கள் போல பழகி உள்ளனர்.

    இந்த நேரத்தில் தான் ரவிக்கும், செந்தில்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, செந்தில்குமார் தாக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமாரின் காதலியான கவிதா, "நீங்கள் எவ்வளவு பெரிய ஆள், உங்களை சாதாரண ஆளான அவன் (ரவி) அடித்து விட்டானே, அவனை சும்மா விடக்கூடாது" என்று கூறியுள்ளார்.

    காதலி கவிதாவின் இந்த பேச்சுக்கள் ஏட்டு செந்தில்குமாரின் மனதை மாற்றியுள்ளது. டிரைவர் ரவி தன்னை தாக்கியதை கவுரவ பிரச்சினையாகவே ஏட்டு செந்தில்குமார் எண்ண தொடங்கினார்.

    இதையடுத்து செந்தில் குமார், ரவுடி ஐசக்கிடம் தனக்கு நேர்ந்த அவமானம் பற்றி எடுத்துக் கூறி எப்படியாவது ரவியை போட்டுத் தள்ள வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார். இதன்பிறகே கொலைக்கான திட்டத்தை செந்தில்குமார், ரவுடி ஐசக் இருவரும் சேர்ந்து தட்டி இருக்கிறார்கள்.

    இதைத்தொடர்ந்து டிரைவர் ரவி, வீட்டில் தனியாக இருக்கும்போது கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காகவே ஐசக், தனக்கு தெரிந்த அடியாட்கள் 3 பேரை தயார் செய்துள்ளார்.

    இதன்படி சம்பவத்தன்று, ஏட்டு செந்தில்குமார், ரவுடி ஐசக் மற்றும் கூட்டாளிகள் 3 பேர் என 5 பேரும் சேர்ந்து ரவியின் வீட்டுக்கு சென்றனர். ரவியின் மனைவி ஐஸ்வர்யா தான் பணிபுரியும் ஆஸ்பத்திரிக்கு இரவு வேலைக்கு சென்றிருந்தார்.

    இது ஏட்டு செந்தில்குமாருக்கு வசதியாக போய் விட்டது. ஐசக் உள்ளிட்ட ரவுடிகள் 4 பேருடன் ரவியின் வீட்டுக்குள் புகுந்தார். அங்கு போதையில் படுத்திருந்த ரவியை செந்தில்குமாரும், ரவுடி கும்பலை சேர்ந்தவர்களும் மிகவும் கொடூரமாக உயிர்நாடியில் தாக்கி உள்ளனர்.

    பின்னர் வெளியில் வந்து எதுவும் தெரியாததுபோல வீட்டை காலி செய்யும் வேலையிலும் ஈடுபட்டனர். ரத்தம் வெளியில் கசியாத அளவுக்கு ரவுடி கும்பல் தாக்குதல் நடத்தி ரவியை கொலை செய்துள்ளது. பின்னர் யாருக்கும் தெரியாமல் எதிரில் உள்ள காதலியின் வீட்டுக்கு இரவோடு இரவாக உடலை மாற்றினர். அங்கு வைத்து சாக்குமூட்டையில் உடலை கட்டினர். ஒருநாள் இரவு முழுவதும் ரவியின் உடலை வீட்டிலேயே மறைத்து வைத்திருந்தனர்.

    பின்னர் வீட்டை காலி செய்த பொருட்களுடன் சேர்த்து ரவியின் உடல் அடங்கிய சாக்குமூட்டையையும் தூக்கி போட்டுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    பின்னர் ஆம்னி வேன் ஒன்றில் தூக்கிபோட்டுக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள படாளம் பழையனூர் பகுதிக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளனர். இதில் ரவியின் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போனது.

    கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பழைய ஆம்னி வேனை ஆதம்பாக்கத்தில் ரூ.40 ஆயிரத்துக்கு வாங்கி உள்ளனர். உடலை எரிப்பதற்கு 10 லிட்டர் பெட்ரோல், 3 கிலோ சர்க்கரை ஆகியவற்றையும் வாங்கி சென்றுள்ளனர். உடலில் சர்க்கரையை போட்டு பின்னர் பெட்ரோலை ஊற்றி எரித்து விட்டு அனைவரும் ஆளுக்கு ஒரு திசையாக தப்பி ஓடி உள்ளனர்.

    இதையடுத்து செந்தில் குமார், ரவுடி ஐசக் உள்பட 5 பேரையும் பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    சென்னை மாநகர காவல்துறையினர் மத்தியில் ஏட்டு செந்தில்குமாரின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கருப்பசாமி உயிருடன் இருந்தால் தனிமையில் சந்திக்க முடியாது என கருதிய கள்ளக்காதலர்கள் கருப்பசாமியை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.
    • சம்பவத்தன்று கருப்பசாமி திண்ணையில் படுத்து தூங்கிய போது கனகலெட்சுமி, ரவிச்சந்திரன் ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள பேரூரணி வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 36), லாரி டிரைவர். இவரது மனைவி கனகலெட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 7-ந் தேதி இரவு கருப்பசாமி வீட்டின் முன்பகுதியில் உள்ள திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார். மறுநாள் அதிகாலை கருப்பசாமி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது தொடர்பாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ், தட்டப்பாறை சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசார் விசாரணையில் கருப்பசாமியின் மனைவி கனகலெட்சுமி முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

    கனகலெட்சுமியின் பெரியம்மா மகளின் கணவர் ரவிச்சந்திரன். அக்காள் கணவர் என்ற முறையில் அடிக்கடி ரவிச்சந்திரன், கருப்பசாமி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்போது அவருக்கும், கனகலெட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து பேசிவந்துள்ளனர். இது கருப்பசாமிக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் இருவரையும் கண்டித்துள்ளார்.

    மேலும் கருப்பசாமியும், கனகலெட்சுமியும் கருத்துவேறுபாடு காரணமாக இதற்கு முன்னர் பிரிந்து இருந்த போது ஏற்பட்ட தகராறில் கருப்பசாமி, ரவிச்சந்திரனை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    கருப்பசாமி உயிருடன் இருந்தால் தனிமையில் சந்திக்க முடியாது என கருதிய கள்ளக்காதலர்கள் கருப்பசாமியை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். சம்பவத்தன்று கருப்பசாமி திண்ணையில் படுத்து தூங்கிய போது கனகலெட்சுமி, ரவிச்சந்திரன் ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கள்ளக்காதலை கண்டித்ததால் கருப்ப சாமியை கொன்றதாக தெரிவித்து உள்ளனர்.

    நிலக்கோட்டையில் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள கோடாங்கி நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் பானு (வயது 30). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்தவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு பானுவின் கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் பானுவுக்கும் சர்புதீன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இந்த விபரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே அவர்களை கண்டித்தனர்.

    இதனால் பானு தனது கள்ளக்காதலனுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது சகோதரர் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    ×