search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட்"

    அநீதி குறும்பட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் ஜி.வி.பிரகாஷ், நீட் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று பேசினார். #Aneedhi #GVPrakash
    நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது. இதில் ’ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 

    அநீதிக்கு தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கி இருக்கிறார். 

    இந்த படத்தின் திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், கதிர், சமூகப்போராளி திருமுருகன் காந்தி, இயக்குநர் இளன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.



    ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, 

    அநீதி ரொம்ப முக்கியமான குறும்படம். இந்த படத்தைப் பாதிக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் முடிவு பாசிட்டிவாக அமைத்தது சந்தோஷமாக இருந்தது. நீட் என்பதை யார் கொண்டு வந்தார்களோ, அவர்களே அதை வைத்துக்கொள்ளட்டும் தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை. நான் அனிதாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். மரணிக்கும் சமயத்தில் அனிதாவின் மனதில் என்ன ஓடியிருக்கும் என்பதை அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்த போது என்னால் அறிய முடிந்தது. அதனால் அந்த வலி எனக்கு அதிகமாக இருக்கிறது. அந்த கலக்கம் இன்னும் என்னை விட்டு போகவில்லை. இந்த படத்தின் கதையோட்டம் எப்படி இருந்தாலும் படத்தின் முடிவு மிக முக்கியமானது’ என்றார்.

    அநீதி குறும்படம் இதுவரை 7 விருதுகளை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Aneedhi #GVPrakash

    மருத்துவ மாணவர் சேர்க்கையை போல் என்ஜினீயரிங் படிப்புக்கும் அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வு அடிப்படையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய தொழில்நுட்ப கவுன்சில் துணை தலைவர் எம்.பி. பூனியா தெரிவித்துள்ளார். #Engineering #NEET
    சென்னை:

    தமிழ்நாட்டில் மருத்துவம், என்ஜினீயரிங் கல்லூரிகளில் பிளஸ்-2 மார்க் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வு மார்க் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்று கூறி நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது.

    ஆனால் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு நீட்தேர்வு கட்டாய நடைமுறைக்கு வந்தது. இந்த ஆண்டும் அதே நடைமுறையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கையையும் அகில இந்திய நீட் தேர்வு அடிப்படையில் நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

    இந்த தகவலை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் துணைத் தலைவர் எம்.பி. பூனியா தெரிவித்துள்ளார். சென்னையில் சத்யபாமா அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிலைய பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய எம்.பி. பூனியா இந்த தகவலை வெளியிட்டார்.


    அவர் கூறும்போது, மருத்துவ கல்லூரிகளில் நடத்தப்படும் நீட் தேர்வு போலவே என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு நடத்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே 2019 கல்வியாண்டு முதல் என்ஜினீயரிங் படிப்புக்கும் நீட் தேர்வு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

    தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி நீட் தேர்வையே இப்போதும் கடுமையாக எதிர்த்து கொண்டிருக்கும் நிலையில் என்ஜினீயரிங் கல்லூரிக்கும் நீட்தேர்வு வரும் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    எனவே தமிழ்நாட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Engineering #NEET
    நீட் தேர்வு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் டி.கே.ரங்கராஜன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    நீட் தேர்வில் தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ரங்கராஜன் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 49 வினாக்களுக்கு 196 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட்டது.


    இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என தெரிகிறது. எனவே, இந்த வழக்கு தொடர்பாக, டி.கே.ரங்கராஜன் இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், நீட் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என கூறியிருந்தார். #NEET #NeetExam #SC #Caveat

    நீட் தேர்வால் உயிரிழந்த எனது தங்கைகள் அனிதாவும் பிரதீபாவும் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். #GVPrakash #Pratheeba
    இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கு என ஒரே தகுதித்தேர்வாக அறிவிக்கப்பட்டது நீட் தேர்வு. இந்த தேர்வு முறை அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறது.

    மருத்துவ படிப்பை விரும்பிய மாணவர்களின் இலக்கிற்கு மிகப்பெரிய தடையாக அமைந்த இந்த நீட் தேர்வை தடை செய்யுமாறு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி வருடந்தோறும் தவறாமல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டுக்கான நீட் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பிரதீபா என்ற மாணவி தோல்வியடைந்துள்ளதால், விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பலர் ஆழ்ந்த இரங்கலையும், நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்.



    இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ‘தகுதி பெறுவதற்கான முறையான பயிற்சி அளித்தபின் போட்டிக்கு அழைத்திருக்க வேண்டும். எனது தங்கைகள் அனிதாவும் பிரதீபாவும் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர். பல கனவுகளோடு படித்த எம் மாணவர்களின் உயிர்வலி உணர மறுப்பதும் குற்றமே...” என்றார்.
    ‘நீட்’ அநீதியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க கடுமையான போராட்டங்களுக்கான வியூகத்தை வகுக்குமாறு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு திணிப்பை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டதையும் மீறி நீட் தேர்வு நடத்தப்பட்டதால் ஏற்படுகிற பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

    தற்போது நடத்தப்பட்ட நீட் தேர்வில் தேசிய அளவில் மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 45 ஆயிரத்து 336 மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. இது 39.56 சதவீதமாகும்.

    எதிர்காலங்களில் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தமிழக ஆட்சியாளர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

    செஞ்சிக்கு அருகில் பெருவர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீபா என்கிற தலித் மாணவி 1125 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப நிகழ்வு நடந்துள்ளது.

    இத்தகைய தற்கொலைகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு அ.தி.மு.க. அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளும், அதில் 3050 இடங்கள் இருந்தாலும் நீட் தேர்வு காரணமாக நமது மாநிலத்திலேயே மருத்துவ படிப்பில் சேருகிற வாய்ப்பை இழக்க வேண்டிய மோசமான நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு தான் காரணமாகும்.

    எனவே, தமிழகத்திற்கு மிகப்பெரிய அநீதிகள் பல முனைகளில் தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகின்றன. இந்த அநீதிகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து ஏற்படுத்தி வருகின்றன. இந்த அநீதியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க கடுமையான போராட்டங்களுக்கான வியூகத்தை வகுக்குமாறு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் டெல்லியைச் சேர்ந்த 19 வயது மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #NEET #NEET2018 #NEETkills
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கு என ஒரே தகுதித்தேர்வாக அறிவிக்கப்பட்டது நீட் தேர்வு. இந்த தேர்வு முறை அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறது.

    மருத்துவ படிப்பை விரும்பிய மாணவர்களின் இலக்கிற்கு மிகப்பெரிய தடையாக அமைந்த இந்த நீட் தேர்வை தடை செய்யுமாறு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி வருடந்தோறும் தவறாமல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியுற்றதால் டெல்லியைச் சேர்ந்த பர்னவ் மெஹன்டிரடா என்ற 19 வயது மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், கடந்த 2 ஆண்டுகளாக மாணவர் நீட் தேர்வு எழுதி வருவதாகவும், ஆனால் தொடர்ந்து தோல்வியுற்றதால் மனம் உடைந்த பர்னவ் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

    மேலும், மாணவர் பிரனவின் அறையில் இருந்த அவரது இறுதி கடிதத்தில், நீட் தேர்வு முடிவுகள் குறித்து பெற்றோரிடம் பொய் கூறிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். பிரனவ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தூக்கு போட்டுக்கொள்ள முயற்சித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் பிரதீபா என்ற மாணவி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    தரமான மருத்துவர்களை உருவாக்கும் என அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு மரணங்களை உருவாக்கி வரும் நிலையில் அரசு கண்டுகொள்ளாமல் மாணவர் சேர்க்கையில் கவனம் செலுத்தும் நிகழ்வு வேதனையளிக்க கூடியதாகவே உள்ளது. #NEET #NEET2018 #NEETkills
    டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணிய பிரதீபாவை இழந்து தவித்து வருவதாக அவருடைய பெரியப்பா கண்ணீர் மல்க தெரிவித்தார். #NEET2018 #Pratheeba #TNStudentSuicide
    விழுப்புரம்:

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மாணவியின் பெரியப்பா முருகன் கூறியதாவது:-

    நீட் தேர்வு எழுதி எப்படியாவது அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து டாக்டராகி விட வேண்டும் என்பது பிரதீபாவின் கனவாக இருந்தது.

    கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் பிரதீபாவுக்கு வேலூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. அங்கு சென்று தேர்வு எழுதினார். அந்த தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் பிரதீபா குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாள். இதனால் அவள் மனதளவில் பாதிப்படைந்து காணப்பட்டார். அவளுக்கு நாங்கள் ஆறுதல் கூறினோம். இருப்பினும் அவளால் அதனை சகித்து கொள்ள முடியவில்லை.

    தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா

    தான் கண்ட டாக்டர் கனவு நிறைவேறாமல் போய் விட்டதே என்று எண்ணிய பிரதீபா வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணிய பிரதீபாவை இழந்து தவித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார். #NEET2018 #Pratheeba #TNStudentSuicide
    நீட் தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயித்திருந்த நிலையில் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #NEETissue #upperagelimit
    புதுடெல்லி:

    மருத்துவ படிப்புக்காக நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்பதன் அடிப்படையில் நீட் தேர்வு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையில் நாடு முழுவதும் மாணவர்கள் வேறு வழியின்றி நீட் தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்கின்றனர்.

    நீட் தேர்வில் அதிகமாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும் என்பதால் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் இதன்மூலம் சிரமத்தை சந்தித்தனர். மேலும், தேர்வறைக்கு செல்லும் போது நடைபெறும் பலகட்ட சோதனைகளும் மாணவர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது.

    நீட் தேர்வுக்கு தமிழகம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசோ அதனை கண்டுகொள்ளாமல் வருடந்தோறும் தேர்வை தவறாமல் நடத்தி வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே இன்று வெளியிடப்பட்டது.

    இதற்கிடையில், நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பினை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயித்தது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்ட அறிக்கையில் பொதுப் பிரிவினருக்கு 25 வயதும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயதாகவும் வயது உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதனை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த 2 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஎஸ்சியின் அறிவிப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், வயது உச்சவரம்பை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் பலர் தொடர்ந்த பல்வேறு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் இன்று ஒப்புக்கொண்டது. மேலும், இதுதொடர்பாக ஜூலை 2-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #NEETissue #upperagelimit
    மே 6-ம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிடப்பட்டது. #NEET #NEET2018
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தியா முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1.07 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

    வினாத்தாள் குளறுபடி காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சங்கல்ப் என்ற அமைப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடையில்லை என்று தீர்ப்பளித்தனர்.

    இதையடுத்து, 2 மணிக்கு வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள், முன்னதாகவே வெளியாகியுள்ளது. மாணவர்கள் www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். #NEET #NEET2018

    நீட் நுழைவுத் தேர்வு கடந்த 6-ந்தேதி நடந்தது. இந்த தேர்வுக்கான விடைத்தாள் இன்று காலை சிபிஎஸ்இ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. #NEETExam #NEET

    தருமபுரி:

    எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 6-ந்தேதி நடந்தது. இந்த தேர்வுக்கான விடைத்தாள் இன்று காலை சி.பி.எஸ்.இ. இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதேபோல மாணவ, மாணவிகள் எழுதி இருந்த தேர்வுக்கான விடைத்தாள் மற்றும் கேள்விக்கான பதில்கள் பிரிவு வாரியாகவும் (ஆன்சர் கீ) இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் விடைத்தாள் குறித்து ஆட்சேபணை இருந்தால் ரூ.1000 கட்டி சி.பி.எஸ்.இ.க்கு முறையீடு செய்யலாம். இந்த விடைத்தாள் மற்றும் ஆன்சர் கீ ஆகியவற்றை வருகிற 27-ந்தேதி மாலை 5 மணி வரை மாணவ, மாணவிகள் இணைய தளத்தில் பார்க்கலாம். அடுத்த மாதம் 5-ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளனர். #NEETExam #NEET 

    ×