search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 151061"

    • காயமடைந்தவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • குடிபோதையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோவை

    கோவை இருகூர் டி.எஸ்.கே நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் இன்று காலை தன்னுடன் வேலை பார்க்கும் பிரபு(28) என்பவருடன் ஒண்டிப்புதூர் மேம்பாலம் கீழே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். பின்னர் இருவரும் அங்கு மது வாங்கி அருந்தினர். அப்போது இருவருக்கும் இடையே குடிபோதையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கட்டிட தொழிலாளி பிரபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நண்பர் பிரபுவை குத்தினார். இதில் பிரபுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அவர் அலறி துடித்தார். இதனால் பயந்து போன கட்டிட தொழிலாளி பிரபு அங்கிருந்து ஓடினார். அக்கம் பக்கத்தினர் கத்திக்குத்தில் காயமடைந்த பிரபுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை டாஸ்மாக் கடை முன்பு வாலிபருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு சிறுவன் பைக்கில் கடைசியாக அமர்ந்திருந்த ஆயுஷை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான்.
    • போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 6 சிறுவர்களை கைது செய்துள்ளனர்.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், பிரதான சாலையில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல்லூரி மாணவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டிசம்பர் 31ம் தேதி மாலையில் கல்லூரி மாணவர் ஆயுஷ் (வயது 22) தனது இரண்டு நண்பர்களுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பிரதான சாலையில் நெரிசல் அதிகமாக இருந்தது. ஆயுஷ் ஹாரன் அடித்து, முன்னால் நின்றுகொண்டிருந்த சிறுவர்களிடம் வழிவிடும்படி கூறி உள்ளார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறுவர்கள் ஆயுஷின் பைக்கை பின்தொடர்ந்து துரத்தினர். ஒரு சிறுவன் பைக்கில் கடைசியாக அமர்ந்திருந்த ஆயுஷை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளான். இதில் பலத்த காயமடைந்த ஆயுஷ் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 6 சிறுவர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இந்த கத்திக்குத்து தொடர்பான சிசிடிவி காட்சி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • சேலம் திருவாக்வுண்டனூர் புத்தர் தெருவை சேர்ந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டுக்கு வந்து செல்லும் பூபதியின் நண்பர் அம்மாப்பேட்டையை சேர்ந்த என்பவர் சரண்யாவை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார்.
    • கண்ணனை அடித்து உைதத்து கத்தியால் குத்தினார். அப்போது கண்ணன் தப்பி ஓடும்போது சாலையில் எதிரே வந்த வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் திரு வாக்வுண்ட னூர் புத்தர் தெருவை சேர்ந்தவர் பூபதி (வயது 36). வெல்டிங் தொழிலாளியான இவருக்கு சரண்யா ( 27) என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டுக்கு வந்து செல்லும் பூபதியின் நண்பர் அம்மாப்பேட்டையை சேர்ந்த கண்ணன் ( 32) என்பவர் சரண்யாவை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதி, கண்ணனை அடித்து உைதத்து கத்தியால் குத்தினார். அப்போது கண்ணன் தப்பி ஓடும்போது சாலையில் எதிரே வந்த வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

    இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பூபதி கூறியதாவது-

    கண்ணன் தனது மனைவியை அழைத்துச் சென்றதால் 2 குழந்தைகளும் தினமும் அம்மா எங்கே என்று கேட்டு அழுது அடம் பிடித்தனர்.சிறிய குழந்தைகளான அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கலங்கினேன்.அதனால் கண்ணனுக்கு போன் செய்து திருவாக்கவுண்டனூர் பகுதிக்கு அழைத்து இருவரும் மது அருந்தினோம். பின்னர் எனது செல்போனில் இருந்த குழந்தைகளின் படத்தை கண்ணனிடம் காண்பித்து குழந்தைகள் அம்மா இல்லாமல் அழுகிறார்கள்.

    குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி யாகி விடும் . எனவே எனது மனைவி சரண்யாவை எனது வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கண்ணனின் காலில் விழுந்து கேட்டேன். ஆனால் கண்ணன் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் எனது மனைவியும் கண்ணனும் நெருக்கமாக உள்ள படத்தை காட்டி, மிரட்டினார்.

    இதனால் ஆத்திரமடைந்த நான், கண்ணனை தாக்கினேன். இவ்வாறு பூபதி கூறினார். கைது செய்யப்பட்ட பூபதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

    • திருமண தரகர்கள் 2 பேருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.
    • தேவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள முதுகொலா கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா்.

    பிக்கோல் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவன். இவா்கள் இருவரும் திருமண தரகா்களாக உள்ளனா். இருவருக்குமிடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கோவைக்கு செல்ல பாலகொலா சந்திப்பு பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக சிவகுமாா் காத்திருந்தாா். அப்போது அங்கு வந்த தேவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவகுமாரை வயிற்றில் குத்தினாா்.

    இதை பாா்த்த கிராம மக்கள் தேவனை பிடித்து கட்டி வைத்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். உடனடியாக அங்கு வந்த ஊட்டி புறநகர் போலீசார் தேவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கத்தியால் குத்தப்பட்ட சிவகுமாா் ஆபத்தான நிலையில ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • பிளஸ்-2 பயிலும் மாணவர்களில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மாணவரை கத்தியால் குத்திய மாணவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இன்று பள்ளியில் இடைவேளையின்போது மாணவர்கள் சாப்பிட்டு விட்டு கை கழுவி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது பிளஸ்-2 பயிலும் மாணவர்களில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அது மோதலாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த மாணவர் ஒருவர் சக மாணவரை கத்தியால் குத்தினார். இதனால் அந்த மாணவர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று காயம்பட்ட மாணவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மாணவரை கத்தியால் குத்திய மாணவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண் உள்பட 3 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் மாங்காதோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜாவித் (வயது 40). இவரது மகன் ஜனா. நேற்று முன்தினம் இரவு மளிகை பொருட்கள் வாங்க ஜனா அருகில் இருந்த கடைக்கு சென்றார்.

    பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு வரும் போது அதே பகுதியை சேர்ந்த பிரதாப் (28) என்பவருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஜனா தனது தந்தை ஜாவித்தை அழைத்து வந்ததாக வும், பிரதாப் உறவினரான அருண் (28), சுகன்யா (26) ஆகியோரை அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது‌.

    பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரதாப், சுகன்யா, அருண் ஆகியோர் கத்தியால் ஜாவித், ஜனாவை குத்தியதாக தெரிகிறது.

    இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டனர்.

    இது குறித்து ஜாவித் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரதாப், அருண் சுகன்யா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரியப்பன் கோவை ராமநாதபுரம் ஒலம்பசில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
    • போலீசார் தொழிலாளி மாரியப்பனை கத்தியால் குத்திய நபரை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (42). இவர் கோவை ராமநாதபுரம் ஒலம்பசில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் மாரியப்பனிடம் பணம் கேட்டு மிரட்டினார்.

    அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாரியப்பனை குத்திவிட்டு தப்பினார்.

    இதில் காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாரியப்பன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் தொழிலாளி மாரியப்பனை கத்தியால் குத்திய நபரை தேடி வருகின்றனர்.

    • மோட்டார்சைக்கிளில் சென்ற சரவணன் தரப்பினருக்கும், சோலைவேல் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • காயம் அடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாலைசதுரன். இவரது மகன் சாலைமுனீஸ் (வயது 25). இவரது நண்பர் சரவணன் (21).

    கத்திக்குத்து

    இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று சங்கரன்கோவில் டவுண் பகுதிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓடைத்தெரு பகுதியில் திரு.வி.க. தெருவை சேர்ந்த சோலைவேல் மற்றும் அவரது நண்பர் கதிர்வேல்(26)ஆகியோர் நடுரோட்டில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அவ்வழியே மோட்டார்சைக்கிளில் சென்ற சரவணன் தரப்பினருக்கும், சோலைவேல் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே சாலைமுனீஸ், சரவணன் ஆகியோரை எதிர்தரப்பினர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

    கைது

    மேலும் தடுக்க வந்த மாரிமுத்து, வீராசாமி , சுவாமிநாதன் ஆகியோருக்கும் சரமாரி குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த 5 பேரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் கதிர்வேலை கைது செய்தனர். தப்பி ஓடிய சோலைவேலை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • 2 வாலிபர்களுக்கு இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது.
    • பலத்த காயம் அடைந்த முனுசாமி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள குமரபேட்டை ஊராட்சி, அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே அரசு மதுபான கடை உள்ளது. இங்கு 2 வாலிபர்களுக்கு இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனை ராள்ளபாடி கிராமத்தை சேர்ந்த முனுசாமி (வயது31) என்பவர் தடுத்தார். இதில் முனுசாமிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குனியமுத்தூரை சேர்ந்த பூவேந்திரன் என்பவர் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்ததாக தெரிகிறது.
    • சசியின் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப ஒப்படைக்க மறுத்து விட்டார்.

    குனியமுத்தூர் 

    கோவை சுண்டாக்காமுத்தூரை சேர்ந்தவர் சசி (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். இவரை மிரட்டி குனியமுத்தூரை சேர்ந்த பூவேந்திரன் என்பவர் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்ததாக தெரிகிறது. மேலும் திரும்ப ஒப்படைப்பதற்கு ரூ. 10 ஆயிரம் பணம் தர வேண்டும் என கேட்டார்.

    இதனை சசி தனது நண்பரான வாட்டர் கேன் சப்ளையர் மாரிமுத்து(35) என்பவரிடம் தெரிவித்து, அவரிடம் ரூ. 10 ஆயிரம் வாங்கி பூவேந்திரனிடம் கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்று கொண்ட அவர் சசியின் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப ஒப்படைக்க மறுத்து விட்டார். இது குறித்து அவர்களுக்கிடையே முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், மாரிமுத்து, அவரது நண்பர்களான டிரைவர்கள் குனியமுத்தூர் ஆதி சக்தி நகரை சேர்ந்த சேகர்(31), திருநகரை சேர்ந்த சுஜித்(33) ஆகியோருடன் குனியமுத்தூர் சிறுவாணி ரோட்டில் உள்ள ஒரு தாபாவில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

    அப்போது பூவேந்திரன் தனது நண்பர்கள் 3 பேருடன் அங்கு வந்தார். அப்போது மீண்டும், மாரிமுத்து தரப்புக்கும், பூவேந்திரன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பூவேந்திரன் உட்பட 4 பேர் கும்பல் மாரிமுத்துவை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு தலை, தோள்பட்டையில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த அவர் மீதான தாக்குதலை, சேகர் மற்றும் சுஜித் தடுக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் சேகர் மற்றும் சுஜித்தையும் கத்தியால் குத்தினர். பின்னர் 4 பேரும் அவர்களை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    கத்திக்குத்தில் மாரிமுத்து, சேகர், சுஜித் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் 3 பேரும் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் பூவேந்திரன்(34) உட்பட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • கடந்த 6 ஆண்டாக ஒரு ஹெர்பல் நிறுவனத்தில் மருத்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
    • 4 பேர் கொண்ட கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி ஸ்டீபன் ராஜை தாக்கினர்.

    கோவை

    கோவை போத்தனூர் காந்தி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது29). இவர் கடந்த 6 ஆண்டாக ஒரு ஹெர்பல் நிறுவனத்தில் மருத்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று ஸ்டீபன் ராஜ் தனது நண்பர்களை சந்திப்பதற்காக கணபதி ரவீந்திரநாத் தாகூர் வீதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

    அப்போது திடீரென ஓட்டல் அறைக்குள் 4 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் ஸ்டீபன் ராஜின் முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டு தகராறு செய்தனர்.

    அப்போது அவர்களு க்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி ஸ்டீபன் ராஜை தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்தனர்.

    அந்த கும்பலில் ஒருவன் கத்தியால் ஸ்டீபன் ராஜின் தலையில் குத்தினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    பலத்த காயமடைந்த ஸ்டீபன் ராஜை அவரது நண்பர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் கும்பல் வந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    • வாலிபர்கள் 2 பேரும் திருநங்கைகளிடம் தகராறில் ஈடுபட்டனர்.
    • 2 திருநங்கைகளையும் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சூலூர்

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர்கள் யமுனா(வயது24), சைலஜா(22). இவர்கள் 2 பேரும் திருநங்கைகள்.

    நேற்று இரவு யமுனாவும், சைலாஜாவும் கோவை சிந்தாமணிபுதூர் புறவழிச்சாலையில் நின்று பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி திருநங்கைகள் அருகில் சென்று பேசினர். திடீரென வாலிபர்கள் 2 பேரும் திருநங்கைகளிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருநங்கைகளை குத்தினர்.

    இதில் 2 திருநங்கைகளுக்கும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் நின்றிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர்.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 2 திருநங்கைகளையும் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  

    ×