search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 151724"

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகச்சாமி ஆணையம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. #JayaDeathProbe #Jayalalithaa
    சென்னை:

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. இந்த கமிஷன் ஜெயலலிதா தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

    இந்நிலையில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை அளிக்க வந்த டெல்லி எய்மஸ் மருத்துவர்கள் ஜி.சி கில்னானி, அஞ்சன்டிரிகோ, நிதிஷ் நாயக் ஆகியோர் வரும் 23, 24-ம் தேதிகளில் ஆஜராக விசாரணை கமிஷன் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
    கிரீடம், மதராசபட்டிணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல் விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Jayalalithaa #ALVijay #ADMK
    சென்னை:

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் பல கோலிவுட் இயக்குநர்கள் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக செய்திகள்  அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தன.

    இந்நிலையில், தற்போது ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்கான திரைக்கதையை இயக்குனர் ஏ.எல்.விஜய் எழுதி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் அஜித் நடித்த கிரீடம், மதராச பட்டணம், சைவம் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சாய்பல்லவி நடித்த 'தியா' என்ற படத்தை இயக்கியிருந்தார்.



    திரைக்கதை அமைக்கும் பணி முடிந்தவுடன் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கும் நடிகை குறித்து ஏ.எல் விஜய் முடிவு செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த கேரக்டரில் நடிக்க த்ரிஷா, கீர்த்திசுரேஷ், நயன்தாரா உள்பட முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    மூன்று மொழிகளில் வெளியாக உள்ள ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முதல் பாதி அவருடைய திரையுலக வாழ்க்கை குறித்து இரண்டாம் பாதி அரசியல் வாழ்க்கை குறித்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    விபிரி மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தின் அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.
    திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. மரணம் அடைந்த நிலையில் ஜெயலலிதா விரல் ரேகை சர்ச்சையாகி இருப்பதால் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
    சென்னை:

    திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் சமீபத்தில் மரணம் அடைந்தார். அந்த தொகுதி விரைவில் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.

    ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில்தான் ஏ.கே. போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

    வழக்கு விசாரணையின் போது வேட்பாளரை பரிந்துரை செய்து தேர்தல் கமி‌ஷனுக்கு அ.தி.மு.க. சார்பில் அனுப்பிய படிவத்தில் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிவு செய்ததில், சந்தேகம் எழுப்பப்பட்டது.

    இதையடுத்து டாக்டர் பாலாஜி ஐகோர்ட்டில் ஆஜராகி, தன் முன்புதான் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டது என்று வாக்குமூலம் அளித்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் வி.அருண் ஆஜராகி வாதிட்டார்.

    அப்போது அவர், ‘டாக்டர் பாலாஜி ஐகோர்ட்டில் பொய்யான வாக்குமூலத்தை அளித்துள்ளார். 2016-ம் ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவிடம் அனைத்து ஆவணங்களையும் வாசித்துக் காட்டி, படிவத்தில் பெரு விரல் ரேகையை பதிவு செய்ததாக டாக்டர் பாலாஜி வாக்குமூலம் அளித்தார். ஆனால், அது தொடர்பான அனுமதி உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம், அதேநாளில் இரவு 8 மணிக்குத்தான் பிறப்பித்துள்ளது. உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே, அதாவது 2 மணி நேரத்துக்கு முன்பாகவே ரேகையை பதிவு செய்ததாக டாக்டர் பாலாஜி கூறுவது பொய்’ என்று வாதிட்டார்.

    மேலும் அவரது வாதத்தில், ‘திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு, 2016-ம் ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி கடிதங்களை மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அனுப்பியுள்ளார். ஆனால், இந்த கடிதத்தையும், அக்டோபர் 27-ந்தேதி மாலை 6 மணிக்கே ஜெயலலிதாவுக்கு படித்து காட்டி விட்டதாக டாக்டர் பாலாஜி கூறியுள்ளார். எனவே, இவர் சொல்வது பொய். படிவத்தில் ஜெயலலிதாவின் விரல் ரேகைதான் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதில் சந்தேகம் உள்ளது’ என்றார்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது ஏ.கே.போசின் இறப்பு சான்றிதழை ஒப்படைக்க உத்தரவிட்டார்.

    ஜெயலலிதாவின் விரல் ரேகை சர்ச்சையாகி இருப்பதால் அது போலியானதா? உண்மையானதா? என்பதை உறுதி செய்ய வேண்டி உள்ளது. எனவே கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களில் குளறுபடி இருப்பதை விசாரணை ஆணையம் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #Jayalalithaa #JayaDeath
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி கமிஷன் விசாரணை செய்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான தகவல்களை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்திருந்தது.

    இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த ஆவணங்களில் குளறுபடி இருப்பதை விசாரணை ஆணையம் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவசரகதியில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் சந்தேகிக்கிறது.

    அப்பல்லோ மருத்துவமனையின் ஆவண பாதுகாவலரை விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆணையத்தின் காலத்தை மேலும் 4 மாதங்கள் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #Jayalalithaa #JayaDeath
    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 24 -ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். முதல்கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. 

    இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 30 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.



    குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் டிசம்பர் 24 -ஆம் தேதியில் இருந்து 6 மாத காலத்துக்கு அதாவது 2018 -ஆம் ஆண்டு ஜூன் 24 -ஆம் வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் பலரை விசாரிக்க வேண்டி உள்ளதால் ஜூன் 24 -இல் இருந்து மேலும் 6 மாத காலத்துக்கு விசாரணை காலத்தை நீட்டிக்க வேண்டும் என ஆணையம் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 4 மாத அவகாசம் வழங்கி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மூடிமறைக்கவே சிகிச்சையின்போது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். #SterliteProtest #Jayala
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆடியோ ஒன்று விசாரணை ஆணையத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறதே?.

    பதில்:- இந்த ஆட்சியாளர்கள் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுத் தள்ளி, என்கவுண்ட்டர் செய்திருக்கிறார்கள். அதனால் மக்களிடத்தில் இந்த ஆட்சி மீது இன்னும் அதிகமான வெறுப்பு ஏற்பட்டு, இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்ற உணர்வோடு இருக்கின்ற நிலையில், மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகம் விசாரணை கமிஷனை பயன்படுத்துகிறார்கள் என்ற எண்ணம் வந்திருக்கிறது.


    இவ்வளவு நாள் இல்லாமல் இன்று (அதாவது நேற்று) சிகிச்சையின்போது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேரம் இது வெளியிடப்பட்டதற்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மூடிமறைக்க எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகத்தான் தோன்றுகிறது.

    கேள்வி:- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, ஏற்கனவே டான்சி வழக்கில் ஆதரவாக செயல்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா தலைமையில் விசாரணை கமிஷன் போட்டு இருக்கிறார்களே?

    பதில்:- ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இருப்பதே, இதை முழுமையாக மூடி மறைக்க வேண்டும், எந்த உண்மையும் வெளிவந்துவிடக்கூடாது, என்பதற்காக திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள். நியாயமாக, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டிய அவசியமே இல்லை. காரணம், ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே, வன்முறையை தூண்டியதால் தற்காப்புக்காக இந்த முறையை கையாண்டதாக தெளிவாக சொல்லிவிட்டார். முதல்- அமைச்சரே விசாரணை நடத்தி, தீர்ப்பு சொல்வது போல, அவரே சொல்லிவிட்டார். எனவே, விசாரணை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. இது ஒரு கபட நாடகம் மட்டுமே.

    கேள்வி:- பிரதமர் பதவியேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், 13 பேர் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லையே?.


    பதில்:- இதுதான் அவருடைய மிகப்பெரிய சாதனை. தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது. இங்கு இருக்கின்ற ஆட்சியாளர்கள் என்கவுண்ட்டர் நடத்தி, 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஆனால், இதுகுறித்து 4 ஆண்டுகளாக மிகப்பெரிய பிரதமர் பொறுப்பில் இருக்கக்கூடிய மோடி அனுதாபம் கூட தெரிவிக்காமல் இருப்பதுதான் அவரது சாதனை.

    கேள்வி:- முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு ஒருநாள் முன்பாக சென்று பல்வேறு ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படும் நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்று கூட அரசு தெரிவிக்கவில்லையே?

    பதில்:- அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் யார் மாமூல் வாங்கிக் கொண்டிருக்கிறாரோ, அவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது. அதனால் தான் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை அங்கிருந்து மாற்றி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், பணியில் இருந்து இடைநீக்கம் கூட செய்யாமல், காத்திருக்கும் பட்டியலில் கூட வைக்காமல் உள்ளனர். அந்த காவல் கண்காணிப்பாளருக்கு அவார்டு கொடுப்பது போல, பதவி உயர்வு கொடுப்பது போல, சென்னைக்கு மாற்றி இருப்பதில் இருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

    கேள்வி:- தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இன்று (நேற்று) ஆலையை மூட படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்து இருக்கிறாரே?

    பதில்:- அமைச்சரவை கூடி ஒரு கொள்கை முடிவு எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வுகாண முடியும். அதைத்தான் தூத்துக்குடி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

    கேள்வி:- சட்டமன்றத்தில் இதுகுறித்து தி.மு.க.வின் நடவடிக்கை என்ன?

    பதில்:- வரும் 28-ந்தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தவிருக்கிறோம். எப்படிப்பட்ட வியூகம் அமைப்பது என்று அதில் முடிவு செய்வோம்.

    கேள்வி:- பா.ஜ.க.வுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து நிதியுதவி வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதே?

    பதில்:- இது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்று பல இடங்களில் இருந்து நிதி வந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நிதி கிடைத்ததால் தான் பிரதமர் மோடி இதுபற்றி வாய்திறக்காமல் இருக்கிறார் என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.  #SterliteProtest #Thoothukudi #Tuticorin #Jayalalithaa #JayalalithaaAudio #Jayalalithaa #4YearsofModi
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பதர்சயீத் மற்றும் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் ஆஜர் ஆனார்கள். #JayalalithaDeath

    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது.

    அதில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர்சயீத், போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் ஆகியோர் இன்று விசாரணை கமி‌ஷன் முன் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது.


    அதை தொடர்ந்து இன்று 2 பேரும் விசாரணை கமி‌ஷன் முன் ஆஜராகினர். பதர்சயீத் 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ. ஆக இருந்தார். இவர் ஜெயலலிதாவின் பள்ளி பருவ தோழி ஆவார்.

    எனவே அவரது உடல் நலம் குறித்த தகவல்களை விசாரணை கமி‌ஷன் முன் வழங்கினார்.

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது கடந்த 2011-ம் ஆண்டில் பொன் மாணிக்கவேல் உளவுப்பிரிவு டி.ஐ.ஜி. ஆக இருந்தார். அவரிடமும் ஜெயலலிதா உடல் நலம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் பதில் அளித்தார். #JayalalithaDeath

    ×