என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 151724"
திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் சமீபத்தில் மரணம் அடைந்தார். அந்த தொகுதி விரைவில் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.
ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில்தான் ஏ.கே. போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
வழக்கு விசாரணையின் போது வேட்பாளரை பரிந்துரை செய்து தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க. சார்பில் அனுப்பிய படிவத்தில் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிவு செய்ததில், சந்தேகம் எழுப்பப்பட்டது.
இதையடுத்து டாக்டர் பாலாஜி ஐகோர்ட்டில் ஆஜராகி, தன் முன்புதான் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டது என்று வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் வி.அருண் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது அவர், ‘டாக்டர் பாலாஜி ஐகோர்ட்டில் பொய்யான வாக்குமூலத்தை அளித்துள்ளார். 2016-ம் ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவிடம் அனைத்து ஆவணங்களையும் வாசித்துக் காட்டி, படிவத்தில் பெரு விரல் ரேகையை பதிவு செய்ததாக டாக்டர் பாலாஜி வாக்குமூலம் அளித்தார். ஆனால், அது தொடர்பான அனுமதி உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம், அதேநாளில் இரவு 8 மணிக்குத்தான் பிறப்பித்துள்ளது. உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே, அதாவது 2 மணி நேரத்துக்கு முன்பாகவே ரேகையை பதிவு செய்ததாக டாக்டர் பாலாஜி கூறுவது பொய்’ என்று வாதிட்டார்.
மேலும் அவரது வாதத்தில், ‘திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு, 2016-ம் ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி கடிதங்களை மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அனுப்பியுள்ளார். ஆனால், இந்த கடிதத்தையும், அக்டோபர் 27-ந்தேதி மாலை 6 மணிக்கே ஜெயலலிதாவுக்கு படித்து காட்டி விட்டதாக டாக்டர் பாலாஜி கூறியுள்ளார். எனவே, இவர் சொல்வது பொய். படிவத்தில் ஜெயலலிதாவின் விரல் ரேகைதான் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதில் சந்தேகம் உள்ளது’ என்றார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது ஏ.கே.போசின் இறப்பு சான்றிதழை ஒப்படைக்க உத்தரவிட்டார்.
ஜெயலலிதாவின் விரல் ரேகை சர்ச்சையாகி இருப்பதால் அது போலியானதா? உண்மையானதா? என்பதை உறுதி செய்ய வேண்டி உள்ளது. எனவே கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆடியோ ஒன்று விசாரணை ஆணையத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறதே?.
பதில்:- ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இருப்பதே, இதை முழுமையாக மூடி மறைக்க வேண்டும், எந்த உண்மையும் வெளிவந்துவிடக்கூடாது, என்பதற்காக திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள். நியாயமாக, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டிய அவசியமே இல்லை. காரணம், ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே, வன்முறையை தூண்டியதால் தற்காப்புக்காக இந்த முறையை கையாண்டதாக தெளிவாக சொல்லிவிட்டார். முதல்- அமைச்சரே விசாரணை நடத்தி, தீர்ப்பு சொல்வது போல, அவரே சொல்லிவிட்டார். எனவே, விசாரணை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. இது ஒரு கபட நாடகம் மட்டுமே.
கேள்வி:- முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு ஒருநாள் முன்பாக சென்று பல்வேறு ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படும் நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்று கூட அரசு தெரிவிக்கவில்லையே?
பதில்:- அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் யார் மாமூல் வாங்கிக் கொண்டிருக்கிறாரோ, அவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது. அதனால் தான் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை அங்கிருந்து மாற்றி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், பணியில் இருந்து இடைநீக்கம் கூட செய்யாமல், காத்திருக்கும் பட்டியலில் கூட வைக்காமல் உள்ளனர். அந்த காவல் கண்காணிப்பாளருக்கு அவார்டு கொடுப்பது போல, பதவி உயர்வு கொடுப்பது போல, சென்னைக்கு மாற்றி இருப்பதில் இருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கேள்வி:- தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இன்று (நேற்று) ஆலையை மூட படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்து இருக்கிறாரே?
பதில்:- அமைச்சரவை கூடி ஒரு கொள்கை முடிவு எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வுகாண முடியும். அதைத்தான் தூத்துக்குடி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
கேள்வி:- சட்டமன்றத்தில் இதுகுறித்து தி.மு.க.வின் நடவடிக்கை என்ன?
பதில்:- வரும் 28-ந்தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தவிருக்கிறோம். எப்படிப்பட்ட வியூகம் அமைப்பது என்று அதில் முடிவு செய்வோம்.
கேள்வி:- பா.ஜ.க.வுக்கு ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து நிதியுதவி வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதே?
பதில்:- இது ஒன்றும் புதிதல்ல. இதுபோன்று பல இடங்களில் இருந்து நிதி வந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நிதி கிடைத்ததால் தான் பிரதமர் மோடி இதுபற்றி வாய்திறக்காமல் இருக்கிறார் என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். #SterliteProtest #Thoothukudi #Tuticorin #Jayalalithaa #JayalalithaaAudio #Jayalalithaa #4YearsofModi
சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர்சயீத், போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் ஆகியோர் இன்று விசாரணை கமிஷன் முன் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து இன்று 2 பேரும் விசாரணை கமிஷன் முன் ஆஜராகினர். பதர்சயீத் 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ. ஆக இருந்தார். இவர் ஜெயலலிதாவின் பள்ளி பருவ தோழி ஆவார்.
எனவே அவரது உடல் நலம் குறித்த தகவல்களை விசாரணை கமிஷன் முன் வழங்கினார்.
ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது கடந்த 2011-ம் ஆண்டில் பொன் மாணிக்கவேல் உளவுப்பிரிவு டி.ஐ.ஜி. ஆக இருந்தார். அவரிடமும் ஜெயலலிதா உடல் நலம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் பதில் அளித்தார். #JayalalithaDeath
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்