search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 152272"

    • மதுரை அருகே இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது தொடர்பாக திருப்பரங்குன்றம், அவனியாபுரம், கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருமலையூர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம். இவரது மகள் மகாலட்சுமி (வயது 16). இவருக்கு தீராத வயிற்று வலி தொல்லை இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் பலன் இல்லை. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகாலட்சுமி, சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அவனியாபுரம், பிரியங்கா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 42). இவருக்கு திருமணம் ஆகவில்லை. எனவே தனிமையில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. எனவே ரவிக்குமார் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி, பிரயோக பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை கே.புதூர், ராமவர்மா நகரை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 63). இவருக்கு நிரந்தர வேலை இல்லை. எனவே குடும்பம் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஆசீர்வாதம் சம்பவத்தன்று காலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உமாமகேஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மேலும் இது குறித்து வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த பறைக்காட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. அவரது மனைவி உமாமகேஸ்வரி (36). இவர்களுக்கு திருமண மாகி 6 வருடங்கள் ஆகிறது. இன்னும் இவர்களுக்கு குழந்தை இல்லை. உமா மகேஸ்வரி இதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு உமா மகேஸ்வரி மலையம்பாளையம் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது அவர் கர்ப்பம் இல்லை என முடிவு வந்தது. இதனால் உமா மகேஸ்வரி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உமாமகேஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வரப்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உமாமகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • இளம்பெண் மகனுடன் வெளியில் சென்றார்.

    கோவை 

    பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த 30 வயது இளம்பெண். இவ–ருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்தார். ஆனாலும் இளம்பெண் வாலிபருடனான கள்ளக்கா–தலை தொடர்ந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் மகனுடன் வெளியில் சென்றார். அதன்பின்னர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து இளம்பெ–ண்ணின் கணவர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது மனைவிக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றிய தகவல் எனக்கு தெரிந்ததும், நான் எனது மனைவியை கண்டித்தேன். இதனால் எனது மனைவி எனது மகனுடன் அந்த வாலிபருடன் சென்றி–ருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. எனவே எனது மனைவி மற்றும் மகனை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • 7மாதங்கள் முன்பு திருமணம் நடந்தது.
    • திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாததால் மனம் உடைந்து காணப்பட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த ஊத்துக்குளி, தளவாய்பாளையத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 25). இவருக்கு கடந்த, 7மாதங்கள் முன்பு திருமணம் நடந்தது.இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத காரணத்தால் கணவன் வீட்டில் இருந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இதனையடுத்து பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை சமாதானம் செய்து வந்தனர். இருந்த போதிலும் அவருக்கு திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாததால் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் கிடைத்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாம்பவர் வடகரை அருகே உள்ள ஊர்மேல்அழகியான் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது25). லாரி டிரைவர். இவரது மனைவி தங்கமதி (22).
    • குடும்ப பிரச்சினை காரணமாக அதிக மாத்திரைகளை சாப்பிட்டார்.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர் வடகரை அருகே உள்ள ஊர்மேல்அழகியான் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது25). லாரி டிரைவர். இவரது மனைவி தங்கமதி (22). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த தங்கமதி, குடும்ப பிரச்சினை காரணமாக அதிகமாத்திரைகளை சாப்பிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தங்கமதி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சாம்பவர் வடகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

    • பாலக்காட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
    • மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லாமல் நின்றது.

    கோவை,

    கோவை கணபதி அருகே உள்ள பதி கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். வெல்டர். இவரது மனைவி ஷீபா (வயது 33). இவர்களது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு.

    சம்பவத்தன்று இவர்கள் பாலக்காட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் வீட்டிற்கு திரும்பினர். மோட்டார் சைக்கிள் உக்கடம் ராஜவீதியில் வந்து கொண்டு இருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லாமல் நின்றது.

    இதனையடுத்து சுரேஷ் மோட்டார் சைக்கிளை பெட்ரோல் பங்க் நோக்கி தள்ளிச் சென்றார். ஷீபா பின்னால் நடந்து சென்றார். சிறிது தூரம் சென்று பார்த்த போது அவரது மனைவியை காணவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த அவர் தனது மனைவியை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து உக்கடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மாயமான ஷீபாவை தேடி வருகிறார்கள்.  

    • சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் முதல் தெரு பகுதியில் இளம்பெண் மாயம்.
    • நேற்று மாலை 6 மணிக்கு மருந்து, மாத்திரைகள் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. சைக்கிள் ஸ்பேர்ஸ் பார்ட்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மகள் ஆயிஷா (வயது 18). பள்ளிப் படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் குடும்பத்தி னர் நேற்று மாலை 6 மணிக்கு மருந்து, மாத்திரைகள் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர். குடும்பத்தினர் கடையில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது ஆயிஷா அங்கு இல்லை. திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம் பக்கம், அருகிலுள்ள இடங்களில் தேடியும் எங்கும் ஆயிஷாவை கண்டு பிடிக்க முடியவில்லை.

    • இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள குலசேகரன் கோட்டையை சேர்ந்த மண்டையன்-பஞ்சவர்ணம் தம்பதியின் மகள் கருப்பாயி (வயது 25). இவருக்கும் சின்ன பாலமேட்டை சேர்ந்த பிரபுவுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த கருப்பாயி சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாயார் பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் பேரில் பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமாதாக கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
    • இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகில்வண்ணன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 28), கொத்தனார். இவரது மனைவி அழகேஸ்வரி (27). இவர்களுக்கு சக்திகுமார் (5), சசிகுமார் (3) என்ற மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் மாணிக்கம் கடந்த 4 நாட்களாக வெம்ப க்கோட்டை பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போதுஅவரது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.

    இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீசில் மாணிக்கம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்.

    • மோகனாவுக்கு நாளை (8-ந் தேதி) திருமணம் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த இளம்பெண் மோகனா கடந்த 5-ந் தேதி திடீரென மாயமானார்.
    • பெற்றோர் மோகனாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் சின்ன காலனி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பாபு. அவரது மகள் மோகனா (வயது 19). இவருக்கு நாளை (8-ந் தேதி) திருமணம் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் வீட்டில் இருந்த இளம்பெண் மோகனா கடந்த 5-ந் தேதி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மோகனாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் மோகனா கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பாபுவின் மனைவி மின்னல்கொடி புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் மனுவில் திருவாமூரை சேர்ந்த ஜெயக்குமார் (26) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், மோகனாவை கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். அதன் அடிப்படையில் மோகனா எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகி றார்கள்.

    • கணவருடன் செல்ல மறுத்ததால் பரபரப்பு
    • குலசேகரம் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே அண்ணாநகர், சானல்கரை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு மனைவியும், 6 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.

    தொழிலாளியின் மனைவி மார்த்தாண்டம் பகுதியில் ஒரு தனியார் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் காலையில் பஸ்சில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.அப்போது ஆற்றூர்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த வாலிபர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். அதன்பிறகு தனிமையில் வசித்து வந்தார். இதனால் தொழிலாளியின் மனைவியும், வாலிபரும் நெருங்கி பழகினர். அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக வாழ்ந்தனர். இதற்காக கணவருக்கு தெரியாமல் அருகில் உள்ளவர்களிடம் இருந்து சுமார் ரூ. 8 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி கள்ள காதலனுடன் பல்வேறு இடங்களில் சுற்றி வந்தார்.

    கடன்காரர்கள் இவரிடம் கடன் கொடுத்த பணத்தை கேட்டு தொந்தரவு செய்தவுடன் கணவர் தலையிட்டு 4 லட்சம் பணத்தை கடன்காரர்களுக்கு திருப்பி கொடுத்தார்.கடந்த ஒரு வருடத்துக்கு முன் அந்த பெண் கணவர், இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு கள்ள காதலனுடன் சென்றார். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து கண்டுபிடித்து கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் கணவர் வேலைக்கு சென்ற பிறகு இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கள்ள காதலனுடன் மாயமானார்.கணவர் வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்த பார்த்த போது வீட்டில் மனைவி இரண்டு பிள்ளைகளையும் காணவில்லை உடனே அவர் குலசேகரம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் தேடி வந்தனர். இவர்களின் செல்போன் நம்பரை வைத்து தேடிய போது நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் இருந்தனர். உடனே உள்ளுர் போலீசார் உதவியுடன் மீட்டு குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை அழைத்து வந்தனர்.

    அங்கு கணவருடன் செல்ல மாட்டேன், கள்ள காதலனுடன் தான் செல்வேன் என்று அந்த பெண் அடம் பிடித்தார். போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தி பிறகும் அவரது முடிவு மாறவில்லை. அதன் பிறகு குழந்தைகளின் பாச போராட்டம் நடத்தியும் பலன் அளிக்கவில்லை

    அதன் பிறகு இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு அந்த பெண் கள்ள காதலுடன் காரில் ஏறி சென்றார்.

    இதனால் குலசேகரம் போலீஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
    • குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அண்ணா நகர் சாணல்கரை பகுதியைச் சேர்ந்தவர் தினுகுமார் (வயது 31), தொழிலாளி.

    இவரது மனைவி நிஷாந்தி (26). இவர்களுக்கு 6 வயதில் மகனும் 4 வயதில் மகளும் உள்ளனர். கடந்த 31-ந் தேதி தினு குமார் வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டார். மாலையில் அவர் திரும்பிய போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. உறவினர் வீடுகளில் விசா ரித்த போதும் நிஷாந்தி மற்றும் குழந்தைகள் பற்றிய விவரம் தெரியவில்லை.

    நிஷாந்தியின் செல்போ னுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. எனவே குல சேகரம் போலீசில் தினு குமார் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிவு செய்து நிஷாந்தி மற்றும் அவரது மகன், மகளை தேடி வருகிறார். 

    ×