search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 152272"

    • கோபிசெட்டிபாளையம் அருகே கணவன் மனைவியை திட்டியதால் மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவல்லை.
    • இது குறித்து கணவர் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய கொரவம் பாளையம் நடராஜபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி ரத்தினாள் (34). இவர் விவசாய கூலி தொழிலாளி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்னர்.

    இந்த நிலையில் ரதினால் வேலைக்கு சென்று விட்டு வந்து சரியாக வீட்டு வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனைவியை கணவன் கண்டித்து வந்தார்.

    இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    தொடர்ந்து தங்கராஜ், ரதினாலை திட்டினார். இதனால் ரத்தினாள் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவல்லை.

    அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து தங்கராஜ் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அந்தோணி பலரிடம் இருந்து அதிக அளவில் கடன் வாங்கியதால் கடன் தொல்லையால் அவதிபட்டுள்ளார்
    • மீண்டும் குழந்தைகளை விட்டுவிட்டு, அஜிதா மட்டும் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார்

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை கடற்கரை கிராமம் 17-ம் அன்பியத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது 37). இவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    இவருக்கு அஜிதா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். அந்தோணி பலரிடம் இருந்து அதிக அளவில் கடன் வாங்கியதால் கடன் தொல்லையால் அவதிபட்டுள்ளார். கடன் கொடுத்தவர்கள் வீட்டில் தொல்லை கொடுத்ததால் கடந்த சில மாதம் முன்பு அஜிதா அவரது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாயமானார்.

    இது தொடர்பாக அப்போது புதுக்கடை போலீசில் புகார் செய்ப்பட்டு, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் மாயமானவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் குழந்தைகளை விட்டுவிட்டு, அஜிதா மட்டும் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். கடன் தொல்லையால் தன்னிடம் சொல்லாமல் வீட்டில் இருந்து மனைவி மாயமாகியுள்ளதாகவும், எனவே மாயமான தனது மனைவியை கண்டு பிடித்து தர வேண்டும் என மீண்டும் அந்தோணி புதுக்கடை போலீசில் புகார் செய்துள்ளார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இளம்பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்,

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மகா சக்தி நகரை சேர்ந்தவர் மனோன்மணி இவரது மகள் அபிநயா (வயது 21). சென்னையில் உள்ள பாரதி நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து விட்டு பெரியபட்டிணம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியில் தற்காலிகமாக வேலைப்பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அபிநயா மதுரையை சேர்ந்த வாலிபரை காதலித்தாக தெரிகிறது. இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் காரைக்குடிக்கு செல்வதாக கூறி சென்ற அபிநயா பின்னர் வீடு திரும்பவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது பேச மறுப்பதாலும், பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கேணிக்கரை போலீசில் தாய் மனோன்மணி புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண் “என்னால் இங்கு இருக்க பிடிக்கவில்லை. உன்னுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்.” என கூறினார்
    • இளம் பெண்ணின் கணவர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் சேர்ந்து வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கினர்.

    கோவை:

    கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் 23 வயது வாலிபர். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த திருமணமான இளம்பெண் ஒருவருடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி வெளியே சென்று ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். மேலும், வாலிபரை அழைத்து எச்சரித்தார். இதனால் கடந்த சில நாட்களாக இருவரும் பேசாமல் இருந்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இளம்பெண் "என்னால் இங்கு இருக்க பிடிக்கவில்லை. உன்னுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்." என கூறினார்.சம்பவத்தன்று வாலிபரை தொடர்பு கொண்ட இளம் பெண் சவுரிபாளையம் கருணாநிதி நகர் அருகே நிற்பதாக கூறினார்.

    இதையடுத்து வாலிபர் அங்கு சென்றார். அங்கு நின்று கொண்டிருந்த இளம் பெண்ணின் கணவர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் சேர்ந்து வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கினர்.

    பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து வாலிபர் பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண், அவரது கணவர், மற்றும் சகோதரர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
    • நாம் காதலிக்கும் போது உன்னிடம் கொடுத்த அனைத்தையும் திருப்பி கொடு, அவரும் அவரிடம் உள்ளவற்ற கொடுத்து விடுவதாக கூறினார்.

    கோவை:

    கோவை அருகே உள்ள பெரிய நாயக்கன் பாளையத்தை சேர்ந்த 25 வயது வாலிபர். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2 பேரும் பேசாமல் இருந்தனர். சம்பவத்தன்று இளம்பெண் வாலிபரை தொடர்பு கொண்டார்.

    அப்போது பேசிய அவர் நாம் கடைசியாக ஒரு முறை சந்திக்க வேண்டும். நாம் காதலிக்கும் போது உன்னிடம் கொடுத்த அனைத்தையும் திருப்பி கொடு, அவரும் அவரிடம் உள்ளவற்ற கொடுத்து விடுவதாக கூறினார்.

    இதனையடுத்து இளம்பெண் ராஜவீதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து சந்திக்கலாம் என கூறினார். அதற்கு வாலிபரும் சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து வாலிபர் இளம்பெண் அழைத்த லாட்ஜிக்கு சென்றார்.

    அங்கு 2 பேரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அறைக்குள் இளம்பெண்ணின் ஆண் நண்பர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அவர்கள் வாலிபரை தகாத வார்த்தைகள் பேசி தாக்கி விட்டு இளம்பெண்ணுடன் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து வாலிபர் பெரியக்கடை வீதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் அவரது நண்பர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இலக்கியாவை கணவர் பாண்டியராஜன் மற்றும் குடும்பத்தினரிடையே வரதட்சனை பிரச்சனை இருந்து, வந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று காலை சம்பவ இடத்திற்குச்சென்று இலக்கியாவின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம்அருகே மயிலக்கோயில் கிரா மத்தைச் சேர்ந்த அன்புதா சன் என்பவரின் மகன் பாண்டி யராஜன் (35) என்பவருக்கும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இலக்கியா (28) என்பவருக்கும் திருமணம் ஆகி 3 வருடம் ஆன நிலையில் இதழினி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இலக்கியாவை கணவர் பாண்டியராஜன் மற்றும் குடும்பத்தினரிடையே வரதட்சனை பிரச்சனை இருந்து, வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு இலக்கியா வீட்டிற்குள் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து இலக்கியாவின் தந்தை கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த குணசேகரன், கொள்ளிடம் போலீசில் கொடுத்த புகாரில் தனது மகள் இலக்கியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று காலை சம்பவ இடத்திற்குச்சென்று இலக்கியாவின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.

    கோவை:

    கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் 35 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனையடுத்து அந்த பெண் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அப்போது அவருக்கு அதே பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றார்.

    அப்போது அந்த வாலிபருக்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். ஆனால் தொடர்ந்து அந்த வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார். இது குறித்த சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நான் எனது வீட்டில் இருந்து 10 பவுன் தங்க நகைகள், செல்போன், கல்லூரி சான்றிதழ் எடுத்துக்கொண்டு குலாம் தஸ்தகீருடன் சென்றேன்.
    • முதல் திருமணத்தை மறைத்து 2-வதாக இளம்பெண்ணை திருமணம் செய்த குலாத் தஸ்தகீரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை குனியமுத்தூரை சேர்ந்த 26 வயது இளம்பெண். இவர் மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் கல்லூரி படித்து முடித்து உள்ளேன். நான் எனது தோழியின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அப்போது தியாகி குமரன் வீதியை ேசர்ந்த போட்டோகிராபர் குலாம் தஸ்தகீர்(35) என்னை பார்த்துள்ளார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு எனது தந்தையை அடிக்கடி தொடர்பு கொண்டு என்னை பெண் கேட்டார்.

    அப்போது எங்களுக்கு இடைேய பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த காதலுக்கு எனது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து நான் எனது வீட்டில் இருந்து 10 பவுன் தங்க நகைகள், ஸ்மாட் வாட்ச், செல்போன், கல்லூரி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு குலாம் தஸ்தகீருடன் சென்றேன்.

    நாங்கள் பெங்களூரில் உள்ள எனது காதலனின் சகோதரி வீட்டிற்கு சென்றோம். பின்னர் ஆந்திர மாநிலம் விகோடாவுக்கு சென்று 4 பேர் முன்னிலையில் திருமணம் செய்தோம். இதனை தொடர்ந்து பெங்களூரில் உள்ள எனது கணவரின் சகோதரி வீட்டில் வசித்து வந்தோம்.

    அப்போது தான் தெரிந்தது எனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் இருப்பது தெரிய வந்தது. முதல் திருமணத்தை மறைத்து ஏன் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என கேட்டதால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. என்னை எனது கணவர் அடித்து உதைத்து கொடுமைபடுத்துகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் முதல் திருமணத்தை மறைத்து 2-வதாக இளம்பெண்ணை திருமணம் செய்த குலாத் தஸ்தகீரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • சேலம் அருகே உள்ள மூங்கில்பாடி அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் மாயமான இளம்பெண் மீட்டனர்.
    • இவரை சேலம் கன்னங்குறிச்சி யில் உள்ள போதிமரம் ஆதரவற்றோர் இல்லத்தில் பெற்றோர்கள் சேர்த்து விட்டனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அருகே உள்ள மூங்கில்பாடி அடுத்த கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மகள் வனிதா (வயது 38). இவர் சற்று மனநலம் பாதித்தவர். இவரை சேலம் கன்னங்குறிச்சி யில் உள்ள போதிமரம் ஆதரவற்றோர் இல்லத்தில் பெற்றோர்கள் சேர்த்து விட்டனர்.அங்கிருந்த இவர் நேற்று காலை திடீரென மாயமானார். இதுகுறித்த தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று காலை செட்டி சாவடி பகுதியில் சுற்றித் திரிவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வனிதாவை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.

    • திருமணமான 3 வருடத்தில் கோமதி இறந்த தால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
    • கோமதி தனது குழந்தை க்கு கொடுப்பதற்காக உணவு தயார் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    கோவை:

    திருச்சியை சேர்ந்தவர் சரவணன். டிரைவர். இவரது மனைவி கோமதி (வயது 22). கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. 11 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் கோவை பீளமேடு அருகே உள்ள சின்னி யம்பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

    சம்பவத்தன்று கோமதி தனது குழந்தை க்கு கொடுப்பதற்காக உணவு தயார் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கோமதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 வருடத்தில் கோமதி இறந்த தால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    • இளம்பெண் மாயமானார்.
    • சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆண்டாள்புரம் கிழக்குத்தெருவை சேர்ந்த ராணி மகள் ஹரிதா (23). கடந்த 6-ந் தேதி இவர் தனது நண்பரின் தந்தையை பார்ப்பதற்காக மீனாட்சி மிஷின் மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்ைல. இதுகுறித்து தாய் ராணி கொடுத்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம் பேரையூர் அருகே உள்ள சலுப்பப்பட்டியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் பாக்கியலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று பாக்கியலட்சுமி இளைய மகள் அருள்செல்வியுடன் (8) மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த போலீசார் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சுரேஷ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார்.
    • வாழ்க்கயைில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஆலங்கொம்பை சேர்ந்தவர் சரவணன்.இவரது மனைவி கன்னியம்மாள் (வயது 30). இவருக்கும் சுரேஷ் என்பவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சுரேஷ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்தார்.

    பின்னர் கன்னியம்மாள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சரவணன் என்பவரை 2-வது திருமணம் செய்தார். கடந்த 3மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைக்கு இடையே கருத்து வேறுபாடு எற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சரவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    2 கணவர்களும் இறந்ததால் கன்னியம்மாள் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கயைில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட கன்னியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×