search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 152272"

    • 2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் மாயமான இளம்பெண்ணை தேடிவருகின்றனர்.
    • அமீன் சென்னையில் வேலை பார்த்து வருவதால் ஜாரியத்துல் சபரியா தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஈசா பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் ஜமீல் கான். இவரது மகள் ஜாரியத்துல் சபரியா (வயது25). இவருக்கும் அமீன் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்து 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    அமீன் சென்னையில் வேலை பார்த்து வருவதால் ஜாரியத்துல் சபரியா தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த 2016-ம் ஆண்டு வீட்டின் அருகே வசிக்கும் நெப்போலியனுக்கும், ஜாரியத்துல் சபரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2பேரும் வீட்டை விட்டு வெளி யேறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்த னர். போலீசார் ஜாரியத்துல் சபரியாவை மீட்டு ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்த ஜாரியத்துல் சபரியா மீண்டும் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மாயமானார். பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும்அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் பெண் னின் தாயார் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ரஞ்சித் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜாரியத்துல் சபரியா ஏற்கனவே மாயமான நெப்போலியனுடம் சென்றி ருக்கலாம் என சந்தேகிக்க ப்படுகிறது. எனவே நெப்போ லியனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • விடுதி அருகே ரோட்டோரம் உள்ள வேப்பமரத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்.
    • இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை :

    கோவை ரேஸ்கோர்சில் தனியார் கல்லூரி செயல்ப ட்டு வருகிறது. கல்லூரி வளாகத்தில் மாணவிகள் விடுதி உள்ளது. விடுதி அருகே ரோட்டோரம் உள்ள வேப்பமரத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனை பார்த்து மாணவிகள் அதிர்ச்சி யடைந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அதிகாரி அழகர்சாமி சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் யார் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கணவர் “அழகில்லை” என கூறியதால் முகத்தில் தீ வைத்து கொண்ட இளம்பெண் இறந்தார்.
    • எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மறவர் பெருங்குடியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி கற்பகம் (வயது 27). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கற்பகம் தனது முகத்தில் தீ வைத்துக் கொண்டார்.

    தீயில் கருகிய அவரது முகம் கோரமானது. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது தீ வைத்தது குறித்து பேச்சியம்மாள் மகளிடம் விசாரித்துள்ளார். இதில் கணவர் அடிக்கடி "அழகில்லை" எனக்கூறி கேலி கிண்டல் செய்து வந்தார். இதனால் விரக்தியடைந்த தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கற்பகம் பரிதாபமா இறந்தார்.

    இதுகுறித்து பேச்சியம்மாள் ெகாடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் பஸ் மோதி பலியானார்.
    • நிற்காமல் சென்ற அரசு பஸ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த முத்து முனியாண்டி மகள் அமிர்தம் (26). இவர் நேற்று இரவு தோழியுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். திண்டுக்கல் மெயின் ரோட்டில் சென்றபோது புது விளாங்குடி அருகே, வேகமாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் அமிர்தம் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அரசு பஸ் சக்கரத்தில் சிக்கியவர், பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். இருந்தபோதிலும் அரசு பஸ் நிற்காமல் சென்று விட்டது. அமிர்தத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிற்காமல் சென்ற அரசு பஸ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வயிற்றுவலி காரணமாக லாவண்யா தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்
    • குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்த குள்ளாகிபாளையத்தை சேர்ந்தவர் சுகுமார். இவர் கோழிப்பண்ணையும், விவசாயமும் செய்து வருகிறார்.

    இவரது மனைவி லாவண்யா( வயது 27). இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. வயிற்றுவலி காரணமாக லாவண்யா தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.மேலும் லாவண்யா உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் லாவண்யா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி லாவண்யா உறவினர்கள் அவரது கணவர் சுகுமாரின் உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • குழந்தைக்கு தாயான நிலையில் இளம்பெண் திருமணத்துக்கு மறுத்துள்ளார்.
    • மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை கீழச்சந்தை பேட்டையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.

    அதில், நான் மேல அனுப்பானடி, வீட்டு வசதிவாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தேன். அவர் திருமணம் செய்வதாக வாக்குறுதி அடிப்படையில், என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    நான் கர்ப்பம் ஆனேன். எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த வாலிபர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். போலீசார் இதில் தலையிட்டு எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல அனுப்பானடி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த செந்தில் (43) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் மகனுடன் மாயமானார்.
    • இது குறித்து ரங்கநாதன் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த பொம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி கவுசல்யா (வயது 27). இவர்களுக்கு அவந்திகா (7) என்ற மகளும், அனீஷ் (4) என்ற மகனும் உள்ளனர். கவுசல்யா வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ரங்க நாதன் வேலைக்கு சென்ற பிறகு அவரது மனைவி கவுசல்யா அடிக்கடி செல்போனில் பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தெரிய வந்ததும் கவுசல்யாவை அவரது கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கவுசல்யா மகளை பள்ளியில் விட்டு விட்டு மகன் அனீசை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ரங்கநாதன் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு மனைவி மற்றும் மகன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரை பற்றி அக்கம் பக்கம் மற்றும் உறவினர்களிடமும் விசாரித்தார். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து ரங்கநாதன் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொட்டாம்பட்டி அருகே இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்திருப்பது தெரியவந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியில் இருந்து பொட்டப்பட்டிக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு தென்னந்ேதாப்பில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் கருகிய நிலையில் நேற்று பிணமாக கிடந்தார்.

    இதனை அந்த தென்னந்தோப்பின் காவ லாளியான வெற்றிசெல்வம் என்பவர் பார்த்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பத்பநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பிணமாக கிடந்த அந்த பெண் சுடிதார் அணிந்திருந்தார். மேலும் அந்த பெண்ணின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்தது. ஆகவே அவரை யாரோ மர்மநபர்கள் தென்னந்தோப்புக்கு கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று உடலை எரித்திருப்பது தெரியவந்தது.

    அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இளம்பெண் கொன்று எரிக்கப்பட்ட தகவல் அறிந்த மதுைர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    இதைதொடர்ந்து அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கொைல செய்யப்பட்ட பெண் யார்? என்பதை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று துப்பு துலக்கி வருகிறார்கள். அந்த பெண்ணை அடையாளம் காண்பதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலை யங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்ட போலீஸ் நிலையங்களிலும் யாரேனும் மாயமாகி இருக்கிறார்களா? என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாரமங்கலம் அருகில் உள்ள கருக்கல்வாடி கிராமம் கரட்டூர் பகுதியில் தங்கை கணவருடன் இளம்பெண் ஓட்டம் பிடித்தார்.
    • இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகளாகியும் இதுவரை குழந்தைகள் இல்லை.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள கருக்கல்வாடி கிராமம் கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 33). இவருடைய மனைவி கோகிலா (27). இவர்களுக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகளாகியும் இதுவரை குழந்தைகள் இல்லை .

    இந்நிலையில் தளவாய்பட்டியில் உள்ள கோகிலாவின் தங்கை கணவர் மோகன்ராஜ் (28) என்பவரோடு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த விவரம் கணவர் நாகராஜுக்கு தெரியவந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தில் சண்டை நடந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி முதல் கோகிலாவை காணவில்லை என்றும் மோகன்ராஜ் தனது மனைவியை கடத்தி சென்று விட்டதாகவும் நாகராஜ் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவராஜ்க்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
    • வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    முத்தூர் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் . இவர் முத்தூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 35). இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சிவராஜ்க்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் செல்வி மனமுடைந்து இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளகோவில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தில் தகாத உறவுக்கு அழைத்த மாமனாரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் அருகே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா (வயது 25). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன்(38), என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 5 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வெங்கடேஸ்வரன் லாரி டிரைவராக உள்ளார்.

    கணவர் வேலைக்கு சென்று விட்ட நேரத்தில், மாமனார் பச்சமுத்து (67), தன்னை தகாத உறவுக்கு அழைத்ததாகவும், இதற்கு மாமியார் தனலட்சுமி உடந்தையாக இருப்பதாகவும், இளம்பெண் ரம்யா கடந்த 20-ந் தேதி வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான மாமனார் பச்சமுத்து மற்றும் மாமியார் தனலட்சுமி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில், புகார் கொடுத்து ஒரு வாரம் கடந்த நிலையிலும், தன்னை மானபங்கம் செய்ய முயன்ற மாமனார், உடந்தையாக இருந்த மாமியார் மற்றும் இதனைத் தட்டிக் கேட்காத கணவர் ஆகிய மூவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, இளம்பெண் ரம்யா, இன்று தனது குழந்தைகளுடன் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன், கடலூர் சாலையில் உறவினர்களுடன் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரம்யா மீது தண்ணீரை ஊற்றினர். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் கொலை வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    எடப்பாடி:

    சேலம் எடப்பாடி, குடிசைக்குள் துர்நாற்றம் கொங்கணாபுரம் அடுத்த கோணசமுத்திரம் கிராமம் குப்பம்பட்டியை சேர்ந்தவர் ராதா (வயது 45). இந்த நிலையில் நேற்று இவரது குடிசை வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இதனால் பொதுமக்கள் கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அங்கு ராதா நிர்வாண நிலையில் படுக்கையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதனால் அதே ஊரை சேர்ந்த 4 -க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் ராதா வேலை பார்த்த நூற்பாலையில் பணியாற்றிய சக ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×