search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 152272"

    • 21 வயதான பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார்.
    • பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    பல்லடம் :

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் ரோபாஸ்டன் (வயது 21). இவர் அந்த பகுதியை சேர்ந்த 21 வயதான பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார். இந்தநிலையில் காதலர்கள் இருவரும் ஊட்டிக்குச் செல்ல திட்டமிட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் சாயல்குடியில் இருந்து ஊட்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மதுரை ,ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். பல்லடம் அருகே செல்லும்போது திடீரென அவர்களது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து வாலிபர் ஒருவர் வந்தார். திடீரென அவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்து இருவரும் எங்கு செல்கிறீர்கள். உங்களைப் பார்த்தால் சந்தேகமாக உள்ளது. உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியு ள்ளார். நாங்கள் ஊட்டி செல்கிறோம், இருவரும் காதலர்கள் என்று அவர்கள் கூறிய போது உங்களை தனித்தனியே விசாரிக்க வேண்டும் என்று கூறிய அந்த வாலிபர், ரோபாஸ்டனை மோட்டார் சைக்கிளில் சுமார்1 கிலோமீட்டர் தூரம் வரை அழைத்து சென்று பல்லடம் - திருச்சி சாலையில் உள்ள மாதப்பூர் கருப்பசாமி கோவில் அருகே நிற்க வைத்துவிட்டு, காதலியிடம் விசாரணை நடத்த செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்தநிலையில் அந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்த ரோபாஸ்டன் உடனே காதலி இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு காதலியை காணவி ல்லை. அதிர்ச்சி அடைந்த அவர் அப்பகுதியில் தேடிப் பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து காதலி கடத்தப்பட்டது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சோத னை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து வாலிபரை பிடிக்க உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து போலீ சார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை யில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சி களையும் பார்வையி ட்டனர்.

    இந்நிலையில் நேற்று காலை கடத்தப்பட்ட இளம்பெண் மதுரையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு பல்லடதிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.பின்னர் அந்தப் பெண் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இளம்பெண்ணை போலீஸ் எனக் கூறி, கடத்திய வாலிபரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்க ப்பட்டது. தனிப்படை போலீசார் , இளம்பெண்ணை கடத்திய வாலிபர் யார், எதற்காக கடத்தி சென்றார் என்று தீவிர விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

    • நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை.
    • நந்தினி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    கோபி,

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி நந்தினி (வயது 26). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை எனவும் இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் நந்தினி மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நந்தினி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதை கண்ட அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி நந்தினி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவர், குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி தேவியை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைக்காரப்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 26). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி நந்தினி தேவி (25). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். சம்பவத்தன்று குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் பால்பாண்டி வெளியே சென்று விட்டார். இதை யடுத்து அருகே உள்ள தாய் வீட்டிற்குச் சென்ற நந்தினி தேவி குழந்தைகளை அங்கு விட்டு விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு பால்பாண்டி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி தேவியை தேடி வருகின்றனர்.

    • ஆஷிக் மகன் பக்கிம்அஸ்லாம் (வயது 25). ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறா
    • மகேஸ்வரி (22) என்பவரை பக்கிம் அஸ்லாம் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்பல த்தாடிமடத் தெருவைச் சேர்ந்தவர் ஆஷிக் மகன் பக்கிம்அஸ்லாம் (வயது 25). ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வேலைக்காக சென்ற கொத்தங்குடித் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகள் மகேஸ்வரி (22) என்பவரை பக்கிம் அஸ்லாம் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் கர்ப்பமான மகேஸ்வரி, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய போது வீட்டில் வந்து கேட்குமாறு தெரிவித்துள்ளார், வீட்டில் சென்று கேட்ட போது பக்கிம் அஸ்லாம் தந்தை ஆஷிக் மறுப்பு தெரிவித்தார். இருந்தபோதிலும் மகேஸ்வரி 8 மாத கர்ப்பிணையாக இருந்த போது இஸ்லாமியராக மாற வேண்டும் என தெரிவித்தனர். மகேஸ்வரி இஸ்லாமியராக மதம் மாறி, அவருக்கு ஆயிஷா என்ற பெயரும் வைக்கப்பட்டு கடந்த 01.01.2023 அன்று சிதம்பரம் லப்பை தெருவில் உள்ள பள்ளிவாசலில் நிக்கா நடைபெற்றதாக கூறப்படுகிறது  இதையடுத்து ஜனவரி 16-ந்தேதி மகேஸ்வரி என்கிற ஆயிஷாவுக்கு ஆண் குழந்தை பெற்றெ டுத்தார். இதனையடுத்து ஆயிஷாவின் கணவர் பக்கிங் அஸ்லாம் தலைமறைவானார். தனது கணவரை அவரது தந்தை மறைத்து வைத்திருப்பதாகவும், கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகார் மீது மகளிர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால், திருமணம் நடைபெற்ற லப்பை தெரு பள்ளிவாசல் முன்பு நீதி கேட்டு ஆயிஷா 3 மாத கைக்குழந்தை, உறவினர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிஷா மற்றும் உறவினர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    • பைனான்ஸ் விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய கும்பல்
    • ஆட்டோ டிரைவர் பைனான்ஸில் ஆட்டோவை வாங்கிவிட்டு பணத்தை செலுத்தாதது தெரிய வந்தது.

    நாகர்கோவில் :

    திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது வாலிபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நாகர்கோவிலில் தங்கி ஆட்டோவில் சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு இடலாக்குடி ஆணை பாலம் பகுதியில் அந்த வாலிபர் தனது மனைவி குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்தது. பின்னர் ஆட்டோவில் இருந்த அந்த வாலிபரை தாக்கியதாக தெரிகிறது.இதனால் அந்த வாலிபர் கூச்சலிட்டார்.

    இதையடுத்து அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். ஆட்டோவில் வந்த வாலிபரை தாக்கிய வரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அப்போது மற்றொரு வாலிபர் ஆட்டோவை எடுத்துக் கொண்டு சென்றார். ஆட்டோவில் வாலிபரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பொதுமக்கள் பிடியில் இருந்த வாலிபரை மீட்ட போலீசார் அவரிடம் விசா ரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் ஆட்டோவை வைத்திருந்த நபர் நீண்ட நாட்களாக பணத்தை கட்டததால் பணத்தை கேட்க வந்த போது அவர் கொடுக்கவில்லை.

    இதனால் வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். ஆட்டோவில் தப்பி சென்ற வாலிபரை தொடர்பு கொண்டு கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு தகவல் தெரிவித்தனர். அவரும் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    ஆட்டோவில் அழைத்துச் சென்ற பெண் மற்றும் குழந்தைகளும் போலீஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஆட்டோ டிரைவர் பைனான்ஸில் ஆட்டோவை வாங்கிவிட்டு பணத்தை செலுத்தாதது தெரிய வந்தது. அந்த பணத்தை விரைவில் கொடுப்பதாகவும் கூறினார். இரு தரப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    பேச்சுவார்த்தையில் நிதி நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய பணத்தை விரைவில் கட்டுவதாக ஆட்டோ டிரைவர் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து இரு தரப்பினரும் எழுதிக் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

    • இளம்பெண் தற்கொலை செய்தது ஏன்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததால் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த கே.போத்தப்பட்டியைச் சேர்ந்தவர் அமர்நாத். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த குழந்தை களுக்கு இன்று (26-ந்தேதி) காதணி விழா நடத்த இருந்த னர்.

    இந்த நிலையில் நேற்று அமர்நாத் மது குடித்து விட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சென்று விட்டதாக கூறப் படுகிறது. காதணி விழா நடைபெற இருந்த நிலையில் கணவர் பொறுப்பில்லாமல் சென்று விட்டதால் மீனா மனமுடைந்தார். அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் உசிலம்பட்டி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக மீனா சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் ஆம்புலன்சில் உடலை ஏற்றவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததால் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    • தான் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும், மனைவி தன்னுடன் வர மறுப்பதால் சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
    • பட்டப்பகலில் கோர்ட்டுக்குள் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார்.

    இவருக்கு கவிதா (வயது33) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2016-ம் ஆண்டு கவிதா பஸ்சில் சென்ற போது, அதே பஸ்சில் பயணித்த பயணி ஒருவரிடம் நகையை திருடியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.1 கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் ஜெயிலிலில் இருந்து வெளியில் வந்த கவிதாவுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து கவிதா தனது கணவரை பிரிந்து, கோவை சூலூர் கண்ணம்பாளையம் பிரிவில் வசித்து வந்துள்ளார்.

    கணவர் பலமுறை தன்னுடன் வந்து சேர்ந்து வாழுமாறு கவிதாவிடம் கூறியும் அவர் மறுத்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது.

    இந்நிலையில், கவிதா 2016-ல் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக ஆஜராவதற்காக இன்று கோவை கோர்ட்டிற்கு வந்தார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து அவரது கணவர் சிவக்குமார் வந்துள்ளார்.

    அவர் தனது மனைவியிடம், நீ பிரிந்து சென்றுவிட்டாய். நானும், குழந்தைகளும் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

    எனவே நீ எங்களுடன் வந்துவிடு என கூறினார். ஆனால் அவர் பதில் எதுவும் பேசாமல் நின்று கொண்டே இருந்தார்.

    சிவக்குமார் தொடர்ந்து பேசியும், அவர் எனக்கு கோர்ட்டிற்கு நேரமாகிறது என கூறி விட்டு கோர்ட்டிற்குள் சென்றார். சிவக்குமாரும் அவரை பின் தொடர்ந்து கோர்ட்டிற்குள் சென்றார். அங்கு 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இங்கு பேசினால் பிரச்சினை பெரிதாகிவிடும் என நினைத்த கவிதா கணவரை விட்டு நகர்ந்து, ஜே.எம்.1 கோர்ட்டு அருகே சென்று நின்று கொண்டார்.

    தான் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும், மனைவி தன்னுடன் வர மறுப்பதால் சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற சிவக்குமார் தான் ஏற்கனவே பாட்டிலில் மறைத்து எடுத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கொண்டு மனைவி நின்ற இடம் நோக்கி நடந்து சென்றார்.


    அவரின் அருகில் சென்றதும் தான் வைத்திருந்த ஆசிட்டை மனைவியின் மீது ஊற்றினார். இதில் அவர் உடல் முழுவதும் ஆசிட் பற்றி அவரது சேலை முழுவதுமாக எரிந்தது.

    இதனை அருகே நின்ற பெண் வக்கீல் ஒருவர் பார்த்து வேகமாக ஓடி சென்று தான் அணிந்திருந்த கருப்பு கோட்டை கழற்றி பெண்ணிண் மீது போட்டார். ஆனால் அதுவும் எரிந்ததுடன், வக்கீலின் கையிலும் காயம் ஏற்பட்டது.

    ஆசிட் வீச்சில் காயம் அடைந்த கவிதா வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகே நின்றிருந்த வக்கீல்கள் அனைவரும் ஓடி வந்தனர்.

    அவர்கள் காயத்துடன் உயிருக்கு போராடிய கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே சிவக்குமார் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை அங்கு இருந்த பெண் போலீஸ்காரர் பார்த்து அவரை பிடியுங்கள் என கூறவே வக்கீல்கள் துரத்தி சென்று அவரை பிடித்து சரமாரியாக தாக்கி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவரிடம் எதற்காக ஆசிட் வீசினாய் என விசாரணை நடத்தினர். அதற்கு அவர் தனது மனைவி என்னையும், எனது குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்றதால் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்தும் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, அங்கு இருந்தவர்களிடம் விசாணை நடத்தினர்.

    பட்டப்பகலில் கோர்ட்டுக்குள் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோர்ட்டு அருகே ரவுடி ஒருவரை 5 பேர் கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அடங்குவதற்குள், தற்போது கோர்ட்டுக்குள்ளாகவே பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவமும் கோவை மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. 

    • விருதுநகர் அருகே தோட்டத்து கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் நதியா(வயது23).

    நர்சிங் முடித்துள்ள இவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கற்பகம் வேலைக்கு செல்லு ம்போது மகளையும் உடன் அழைத்துச்சென்று வந்தார்.

    சம்பவத்தன்று கற்பகம் வேலைக்கு செல்லும்போது மகளை வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு நதியா வரவில்லை என கூறி மறுத்து விட்டார். இதையடுத்து கற்பகம் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களிடம் மகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறி வேலைக்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் வீட்டில் இருந்த நதியா திடீரென மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்த கற்பகம் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே அதே ஊரை சேர்ந்த அனந்த பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் நதியா பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர். நதியா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சுப்பிரமணியனின் தாயார் கடந்த 1 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார்.
    • ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன், பரமேஸ்வரியை தாக்கினார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி (38). சுப்பிரமணியனின் தாயார் கடந்த 1 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அவரது 8 பவுன் தங்க செயினை பரமேஸ்வரி தனது அண்ணன் செந்தில் குமாரிடம் கொடுத்து வைத்துள்ளார். சுப்பிரமணியன் மது அருந்தி விட்டு வந்து, தங்க செயினை தருமாறு பரமேஸ்வரியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    சம்பவத்தன்றும் செயினை தருமாறு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன், பரமேஸ்வரியை தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர் கரிசல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என தெரியவந்தது.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஞானகுரு. இவரது மனைவி தங்கேஸ்வரி(வயது40). இவர்களது மகள் கவிதா. நேற்று திருநகரில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக தங்கேஸ்வரி தனது மகளுடன் புறப்பட்டார். இதற்காக வத்திராயிருப்பில் இருந்து பஸ்சில் திருமங்கலம் வந்த அவர்கள் திருநகர் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    அப்போது திடீரென ஒரு வாலிபர் கவிதா அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடினார். உடனே அங்கு ஊருக்கு செல்வதற்காக காத்திருந்த விருதுநகரை சேர்ந்த சில போலீசார் விரைந்து செயல்பட்டு நகை பறித்த அவரை விரட்டிச்சென்று பிடித்தனர். திருமங்கலம் நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கரிசல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து(29) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    • சுப்புராமு ராணுவவீரராக பணியாற்றி வருகிறார்.
    • இளம்பெண் ஒருவருக்கு சுப்புராமு செல்போனில் ஆபாச தகவல் அனுப்பி உள்ளார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள உமையதலைவன்பட்டியை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மகன் சுப்புராமு (வயது25). இவர் ராணுவவீரராக பணியாற்றி வருகிறார்.

    தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆன இளம்பெண் ஒருவருக்கு சுப்புராமு செல்போனில் அந்தரங்க பகுதி குறித்து ஆபாச தகவல் அனுப்பி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அது குறித்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்புராமு, அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் திரு வேங்கடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவவீரர் சுப்புராமை தேடி வருகின்றனர்.

    • சிவகாசி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தாய் புகார் தெரிவித்தார்.
    • அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள வேண்டுராயபுரம் சாமி நத்தம் காலனியை சேர்ந்த வர் பூமிநாதன் என்ற புவனே சுவரன். இவரது மனைவி சந்தனமாரி (வயது 20). இவர்களுக்கு 1 வயதில் மகன் உள்ளான்.

    கடந்த சில மாதங்களாக பூமிநாதன் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று மகனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சந்தனமாரியின் தாய் முத்துலட்சுமி மகள், பேரனை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டின் கதவு வெளிபுறமாக பூட்டப்பட்டு இருந்தது. செல்போனும் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்பட வில்லை. சிலமணி நேரம் கழித்து பூமிநாதன் அங்கு வந்து கதவை திறந்தார். அப்போது முத்துலட்சுமி வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஒரு அறையில் சந்த னமாரி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சந்தனமாரி ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர் பாக மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள னர். இந்த நிலையில் தனது மகள் சாவில் மர்மம் இருப்ப தாக முத்துலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×