search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டப்பணி"

    கரூர் பகுதியில் ரூ. 3 கோடியே 20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசினார். #MRVijayaBhaskar #ADMK
    கரூர்:

    கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, மண்மங்கலம், நன்னியூர், வாங்கல்குப்புச்சி பாளையம், நெரூர் வடக்கு, நெரூர் தெற்கு ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 3 கோடியே 20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

    ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில், ரெட்டிபாளையம் பஸ்ஸ்டாப் முதல் பொன்நகர் வரை புதியதிசை மாற்று வடிகால் அமைக்கும் பணி ரூ.14.03 லட்சம் மதிப்பிலும், ஆப்பிள் பாரடைஸ் (கோவை ரோடு) பகுதியில், என்.ஜி.எம். ரோடு முதல் ஆப்பிள்பாரடைஸ் வரை பேவர் பிளாக் அமைக்கும் பணி ரூ.6.40 லட்சம் மதிப்பிலும், கோவை மெயின்ரோடு ஆண்டனி பள்ளி முதல் பி.கே.ஜி நகர் கல்வெர்ட் வரை புதிய திரை மாற்றுவடிகால் அமைக்கும் பணி ரூ.27.44 லட்சம் மதிப்பிலும், சாந்தி நகர் (ஈரோடு ரோடு) பகுதியில், சாந்திநகர் சாலை மேம்பாடு செய்யும் பணி ரூ.25.30  லட்சம் மதிப்பிலும் பூமி பூஜை நடந்தது. இதபோன்று பல்வேறு பகுதிகளில் திட்டப்பணிகள் நடந்தன.

    முன்னதாக, பிரேம் மஹாலில் மகாத்மா காந்தியின் 150&வது பிறந்தநாளை முன்னிட்டு சத்தான உணவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் நடைபெற்ற சைக்கிள் பேரணியை  தொடங்கி வைத்தார்.  

    இந்நிகழ்ச்சியில் கீதா எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், செல்வி, பாலச்சந்தர், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், காளியப்பன், திருவிக, கமலக்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். #MRVijayaBhaskar #ADMK
    விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் பகுதிகள் பயனடையும் வகையிலான புதிய கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் நகராட்சி கூட்டரங்கில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 30 பேருக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியமாக மொத்தம் ரூ.63 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை கலெக்டர் சிவஞானம் தலைமையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் திருத்தங்கல், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய நகராட்சி பகுதிகளில் ரூ.404 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் நகராட்சிகளிலும் ரூ.450 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து பணிகள் தொடங்க அறிவிக்கப்பட உள்ளது.

    குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தில் மாவட்டத்தில் 4,210 வீடுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, ரூ.126 கோடியே 30 லட்சம் மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் கட்டமாக 30 பேருக்கு ரூ.63 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன், உதவி நிர்வாக பொறியாளர் சுப்பாராஜ், தாசில்தார் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×