search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவு"

    தஞ்சையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதிய சத்துணவு வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளருக்கு பணிக்கொடையாக ஒட்டு மொத்த தொகை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

    விலைவாசி உயர்வுக்கேற்ப மாணவர்களுக்கான உணவூட்ட செலவுத் தொகையை ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தகுதிவாய்ந்த சமையல் உதவியாளர்களுக்கு அமைப்பாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலை நகரங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி முதல் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர்ந்து 3 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களது போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்காததால் அவர்களை கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

    இதைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறி இன்று காலை தஞ்சை ரெயில் நிலையம் முன்பு 150 பெண்கள் உள்பட 175 பேர் திரண்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தஞ்சை நகர டி.எஸ்.பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் இன்று முதல் பள்ளிகளில் மாணவ ர்களுக்கு சத்துணவு வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலான அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் சில பள்ளிகளில் ஆசிரியைகள், பணியாளர்கள் சமையல் செய்து மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள திருமலைக்கவுண்டம் பாளையத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் சமையலராக பாப்பாள் வேலை பார்த்து வருகிறார்.

    இப்பள்ளியில் நேற்று மதியம் சத்துணவு சாப்பிடுவதற்காக 31 பேர் பெயர்களை பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 25 பேர் சத்துணவு சாப்பிட்டனர்.

    சத்துணவு சாப்பிட்ட சற்று நேரத்தில் 8-ம் வகுப்பு மாணவி பவித்ராவுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கும் வாந்தி ஏற்பட்டது. இதில் 15 மாணவிகள், 10 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) பிரபாகர், அவினாசி டி.எஸ்.பி. பரமசாமி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    சாப்பாட்டில் பள்ளி கிடந்ததால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா, சத்துணவு பணியாளர் பாப்பாள் கவனக்குறைவால் தான் பல்லி விழுந்து விட்து என போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். ஆனால் பாப்பாள் இதனை மறுத்துள்ளார். நான் சமையல் செய்யும் போது பாத்திரங்களை மூடி தான் சமையல் செய்தேன். எனது மகளும் சத்துணவு சாப்பிட்டு இருக்கிறாள் என கூறினார்.இது தொடர்பாக டி.எஸ்.பி.யிடம் பாப்பாள் புகார் மனுவும் கொடுத்து உள்ளார். #tamilnews
    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே அரசு பள்ளியில் தலித் பெண் சமைப்பதால் மாணவர்கள் சாப்பிட மறுத்து வீட்டில் இருந்தே மதிய உணவு எடுத்து வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள சேவூர் திருமலைக் கவுண்டன்பாளையம் ஆதி திராவிட காலனியை சேர்ந்தவர் பாப்பாள் (42). அரசு பள்ளி சத்துணவு சமையலர்.

    இவர் ஒச்சம்பாளையம் ஆதி திராவிடர் காலனியில் உள்ள தொடக்க பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வந்தார். அவினாசி வட்டாரத்தில் பணியாற்றி வந்த 19 சமையலர்கள் ஓய்வு பெற்றனர். இதனை தொடர்ந்து பாப்பாள் தனது சொந்த ஊரான திருமலைக்கவுண்டன் பாளையம் அரசு உயர்நிலை பள்ளிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

    சொந்த ஊர் என்பதால் அவர் மகிழ்ச்சியுடன் பணியில் சேர்ந்தார். ஆனால் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என கூறி கிராம மக்களில் ஒரு தரப்பினர் அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். சத்துணவு கூடத்தை தாங்களே கைப்பற்றி சமையல் செய்தனர்.

    இந்த போராட்டம் காரணமாக பாப்பாளின் பணி இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அவர் இதற்கு முன் பணியாற்றிய ஒச்சாம் பாளையம் பள்ளிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

    இதனை தொடர்ந்து பாப்பாள் பணி இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பாப்பாளை திருமலைக்கவுண்டன் பாளையம் பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற சப்-கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

    அப்பள்ளியில் பாப்பாள் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில் அவர் சமையலை சில மாணவர்கள் சாப்பிட மறுத்து வருகிறார்கள் அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தே டிபன் பாக்சில் மதிய உணவு எடுத்து வருகிறார்கள்.

    திருமலைகவுண்டம் பாளையம் அரசு பள்ளியில் மொத்தம் 65 மாணவர்கள் சத்துணவு சாப்பிட பெயர் பதிவு செய்து உள்ளனர். அவர்களில் தற்போது 33 மாணவர்கள் மட்டுமே சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள்.

    32 மாணவர்கள் சத்துணவு சாப்பிடவில்லை. அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தே மதிய உணவு எடுத்து வருகிறார்கள். தலித் பெண் சமைப்பதால் அவர்கள் சாப்பிட மறுப்பதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சத்துணவு அமைப்பாளரிடம் கேட்ட போது அவரும் 33 மாணவர்கள் தான் சாப்பிடுவதை உறுதி செய்தார். இது தொடர்பாக இன்று பள்ளியில் ஆய்வு பணி நடைபெற உள்ளது.

    அதில் மாணவர்கள் குறைவாக சாப்பிடுவது தெரிந்தால் அதற்கு தகுந்தாற் போல் சாப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    ×