search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157065"

    • ரவையில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று எளியமுறையில் ரவா லட்டு செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    ரவை - ½ கிலோ

    சர்க்கரை - ½ கிலோ

    நெய் - 6 ஸ்பூன்

    முந்திரி பருப்பு - 50 கிராம்

    தேங்காய் - 1

    ஏலக்காய் - 12

    பால் - 250 மில்லி லிட்டர்

    செய்முறை:

    முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக (முழு முந்திரி பருப்பை நான்காக) உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவிக் கொள்ளவும்.

    ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.

    பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும்.

    அடுத்ததாக சர்க்கரையை அதனோடு சேர்த்துக் கிண்டவும். தொடர்ந்து சிம்மில் வைத்தே செய்யவும். ஓரளவு சர்க்கரையின் அளவு சிறுத்து ரவையோடு சேர்ந்து வரும்போது தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டவும்.

    கைவிடாமல் கிண்டவும். இல்லை எனில் அடியில் தீய்ந்து ஒட்டிக் கொள்ளும்

    பின்னர் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வரும்படி கிளறவும்.

    கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி பருப்பைச் சேர்க்கவும்.

    சூடான ரவைக் கலவையில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி ஒரு பகுதியை மட்டும் நன்கு கலந்து விட்டு லட்டு பிடிக்கலாம்.

    சுவையான ரவா லட்டு தயார்.

    • இது அனைவருக்கும் பிடித்தமான மாலை நேர சிற்றுண்டி.
    • நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    ரவை - ½ கப்

    உருளைக்கிழங்கு - 2

    சோள மாவு - 2 மேஜைக்கரண்டி

    பூண்டு பல் - 5

    சில்லி ஃப்ளேக்ஸ்- 1 மேஜைக்கரண்டி

    சாட் மசாலா - ¼ மேஜைக்கரண்டி

    வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    * பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். ( இதில் தண்ணீர் இதில் சேர்ந்து விடாமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியம்.)

    * மிக்ஸியில் ரவையை போட்டு நைசாக அரைத்து வைத்து கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    * பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் சில்லி ஃப்ளேக்ஸ்ஸை போட்டு நன்கு கலந்து விட்டு சுமார் அரை நிமிடம் வரை அதை வதக்கவும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    * தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் ரவையை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    * பின்னர் அதில் நாம் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் சாட் மசாலாவை போட்டு அதை நன்கு கலந்து விட்டு பின்பு அடுப்பை அணைத்து அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும். (சாட் மசாலாவை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)

    * உருளைக்கிழங்கு கலவை சிறிது ஆறியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் சோள மாவை போட்டு 5 நிமிடம் கைகளால் நன்கு பிசையவும்.

    * 5 நிமிடத்திற்கு பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    * ஒரு கிண்ணத்தில் சிறிதளவு சோள மாவை கொட்டி வைத்து கொள்ளவும்.

    * சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கலவையை எடுத்து நம் கைகளில் வைத்து தட்டி அதை கிண்ணத்தில் இருக்கும் சோள மாவில் இரு புறமும் போட்டு எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து நன்கு அனைத்து புறங்களிலும் சமமாக தேய்க்கவும்.

    * பின்பு ஒரு பெரிய சைஸ் டம்ளர் மற்றும் அதற்கு அடுத்த சைஸ் சின்னதாக இருக்கும் டம்ளரை எடுத்து கொள்ளவும்.

    * பின்னர் நாம் தேய்த்து வைத்திருக்கும் மாவில் முதலில் பெரிய டம்ளரை வைத்து அச்சி ஏற்படுத்தவும், பின்பு சிறிய சைஸ் டம்ளரை நாம் ஏற்படுத்திய அச்சின் உள்ளே வைத்து இன்னொரு அச்சியை ஏற்படுத்தி அதில் வரும் ரிங்ஸ்ஸை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    * இவ்வாறு மீதமுள்ள ரிங்ஸ்களை செய்து எடுத்து ஒரு தட்டில் தயாராக வைத்து கொள்ளவும்.

    * இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்திருக்கும் ரிங்ஸ்களை போட்டு பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.

    * சூடான மற்றும் மொறு மொறுப்பாக இருக்கும் பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் தயார்

    • பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் இந்த அல்வா மிகவும் பிரபலம்.
    • இதை பஞ்சாபில் Gajar ka halwa என்று அழைக்கின்றார்கள்.

    தேவையான பொருட்கள் :

    துருவிய கேரட் - 3 கப்

    சர்க்கரை தலை தட்டி - 1 கப்

    பால் கோவா - 1/4 கப்

    நெய் - 1/2 கப்

    உலர் திராட்சை - 1 மேஜைக்கரண்டி

    முந்திரி - 1 மேஜைக்கரண்டி

    பாதாம் - 1 மேஜைக்கரண்டி

    ஏலக்காய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி

    தேவையான அளவு - எண்ணெய்

    செய்முறை :

    * முந்திரி மற்றும் பாதாமை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் கப்புக்கும் சிறிதளவு கூடுதலான நெய் மற்றும் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

    * எண்ணெய் சூடானதும் அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்து வைக்கவும்.

    * அடுத்து அதில் துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டுபச்சை வாசம் போய் நன்கு வதங்கி வேகும் வரை வதக்கவும். (இது சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை எடுக்கலாம்.)

    * கேரட் வெந்ததும் அதில் சர்க்கரை மற்றும் பால் கோவாவை போட்டு நன்கு கேரட்டோடு ஒன்றோடு ஒன்றாக சேருமாறு கிளறி விட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்துக் கொள்ளவும்.

    * சர்க்கரை ஓரளவிற்கு உருகியதும் அதில் பொடித்து வைத்திருக்கும் ஏலக்காய் தூளை போட்டு நன்கு கிளறி விடவும்.

    * அடுத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய்யை இதில் சேர்த்து கிளறி விடவும்.

    * மிக கவனமாக அல்வா இளகிய பதம் இருக்கும் போதே இறக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் துருவிய பாதாம் துண்டுகளை அதன் மேலே தூவி சிறிது நேரம் ஆற விட்டு பரிமாறவும். (அல்வாவை சுருளாக வதக்கி விட கூடாது. அப்படி செய்தால் அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பத்தாவது நிமிடத்தில் அல்வா இறுகி கட்டியாகி விடும்.)

    * இப்பொழுது சூடான மற்றும் சுவையான கேரட் அல்வா தயார்.

    • நீரிழிவு உள்ளவர்களும்கூட பன்னீரை தைரியமாக சாப்பிடலாம்.
    • புரதம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் பன்னீரில் அதிகம்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீா் - 500 கிராம்

    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    வெங்காயம் - 4

    பச்சை மிளகாய் - 7

    கறிவேப்பிலை - 2 கொத்து

    பூண்டு, பூண்டு விழுது - 1 ½மேஜைக்கரண்டி

    சோம்பு தூள் - 1 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 1½ மேஜைக்கரண்டி

    மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    உருளைக்கிழங்கு - 3

    பொரிக்க தேவையான பொருட்கள்:

    சோள மாவு - 4 மேஜைக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    பிரெட் தூள் - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்..

    வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் சோம்பு, கரம் மசாலா மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் துருவிய பன்னீரை சேர்த்து நன்கு கிளறவும்.

    மீண்டும் 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்.

    பின்பு பன்னீர் கலவையை மசித்த உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு பிசையவும்.

    பின்பு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, தட்டையாக செய்து கொள்ளவும்.

    பின்பு சோள மாவுடன் நீர் சேர்த்து கலவை தயாரித்து கொள்ளவும்.

    கட்லெட்டுகளை சோளமாவுக் கலவையில் முக்கி பின் பிரெட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    இப்போது சுவையான பன்னீர் கட்லெட் தயார்.

    • சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வைட்டமின்களும் எண்ணற்ற பயன்கள் கொண்டவை.
    • கம்பு நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

    தேவையான பொருட்கள்:

    கம்பு மாவு - 2 கப்

    வெல்லம் - 2 கப்

    பாதாம் - 10

    ஏலக்காய் - 10

    பிஸ்தா - 10

    முந்திரி - 10

    திராட்சை - 10

    எண்ணெய் - தேவையான அளவு

    தண்ணீர்- தேவையான அளவு

    செய்முறை :

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    கொழுக்கட்டை வடிவில் அந்த மாவை பிடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த கொழுக்கட்டையை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அது ஆறியவுடன் மிக்ஸியில் மாவாக பொடித்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா அனைத்தையும் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக் கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் வெல்லம் சேர்த்து பாகு எடுத்து அரைத்த மாவு, பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கையில் சூடு பொறுக்கும் வரை லட்டுகளாக பிடித்து எடுத்தால் சூடான சுவையான கம்பு லட்டு தயார்.

    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 4

    கேரட் - 1

    கோஸ் - 1/2 கப்

    குடை மிளகாய் - 1

    சீஸ் - 1 கப்

    பச்சை மிளகாய் - 2

    பூண்டு விழுது - அரை ஸ்பூன்

    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    பிரெட் - 12 துண்டுகள்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    சீஸ், கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கோஸ், குடைமிளகாய், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, கேரட் துருவியது, கோஸ், குடைமிளகாய் போட்டு அதனுடன் துருவிய சீஸ், பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, அதனை நீரில் நனைத்து, பிழிந்து விட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து, பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான சீஸ் பிரெட் போண்டா தயார்.

    • வீட்டில் இருக்கும் வாழைப்பழங்களை கொண்டே இந்த ரெசிபியை செய்யலாம்.
    • இந்த ரெசிபி ஆரோக்கியமானது, சத்தானது.

    தேவையான பொருட்கள்

    வாழைப்பழம் - 1

    சாக்லேட் கிரீம் - தேவைக்கேற்ப

    முந்திரி, திராட்டை, பாதாம், வால்நட், பிஸ்தா - விருப்பம் போல்

    செய்முறை

    முந்திரி, திராட்டை, பாதாம், வால்நட், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை அல்லது மஞ்சள் நிற வாழைப்பழத்தின் தோல் பகுதியை நீக்கிவிட்டு, பழத்தை சிறிதாக வெட்டிக்கொள்ளுங்கள்.

    பழத்தின் மீது சாக்கோ கிரீம் தடவுங்கள்.

    அதன் மேலே, முந்திரி, பாதாம், வால்நட், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை சிறிதாக நொறுக்கி தூவினால் இனிப்பான வாழைப்பழ ஸ்நாக்ஸ் ரெடி.

    • நாளை நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • இன்று ஓணம் ஸ்பெஷல் நெய்யப்பம் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - 1 ஆழாக்கு

    பொடித்த வெல்லம் - 3/4 ஆழாக்கு

    தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

    செய்முறை

    * அரிசியை குறைந்தது 2 மணிநேரம் ஊறவிட்டு நன்கு கழுவி அதனுடன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * அரைத்த விழுதில் தேங்காய் துருவல்+ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் நெய்யை சற்று தாராளமாக ஊற்றி காய்ந்ததும் (புகை வரக்கூடாது) அதில் வெல்லமாவைச்சேர்த்து வேக விடவும். ஒருபுறத்தில் நன்கு வெந்தவுடன் கம்பியால் குத்தி அடுத்த பக்கமாக நெய் அப்பத்தை திருப்பவும்.

    * பொன்னிறமான நெய்யப்பம் நைவேத்தியத்திற்கு ரெடி.

    • மக்கன் பேடாவை கடையில் வாங்க வேண்டாம். வீட்டிலேயே செய்யலாம்.
    • இந்த இனிப்பை செய்வது மிகவும் எளிமையானது.

    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்

    இனிப்பு இல்லாத கோவா - 150 கிராம்

    வெண்ணெய் - 1 ஸ்பூன்

    சமையல் சோடா - 1 சிட்டிகை

    எண்ணெய் - தேவையான அளவு

    பூரணம் செய்ய தேவையான பொருட்கள்

    பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் பருப்பு - 1 ஸ்பூன்

    சாரைப் பருப்பு - 1 ஸ்பூன்

    குங்குமப்பூ - சிறிதளவு

    சர்க்கரை பாகு செய்ய

    சர்க்கரை - 1 1/2 கப்

    தண்ணீர் - 1 கப்

    செய்முறை

    * மைதாவை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சமையல் சோடாவை போட்டு அதனுடன் வெண்ணெயைச் சேர்த்து நுரைபோல் வரும் வரை கலக்கவும்.

    * மைதாவுடன் சிறிதளவு சமையல் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * இத்துடன் இனிப்பு இல்லாத கோவா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.

    * பூரணம் செய்வதற்கு பாதாம், முந்திரி, சாரப்பருப்பு, சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் 1 ½ கப் அளவிற்கு சர்க்கரை போட்டு அதனுடன் 1 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு சிறு கம்பி பதம் வரும் அளவிற்கு பாகை தயாரித்துக் கொள்ளவும்.

    * பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    * உருண்டையின் நடுவில் லேசாக தட்டி அதன் உள்ளே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மூடிவிடவும்.

    * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுக்கவும்.

    * பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து ஊறவைத்து பரிமாறினால் சுவையான ஆற்காடு மக்கன் பேடா தயார்.

    • சமோசாக்களில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
    • இன்று மாட்டு இறைச்சி வைத்து சமோசா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மாட்டு இறைச்சி - அரைக்கிலோ (கொத்து இறைச்சி/கீமா/கைமா)

    உருளைக்கிழங்கு - 4

    பச்சை மிளகாய் - 3

    பெரிய வெங்காயம் - 2

    கறிமசாலா - 1 தேக்கரண்டி

    மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி

    மிளகாய் பொடி - தேவையான அளவு

    நச்சீரகம், பெருஞ்சீரகம் பொடி - தலா 1 தேக்கரண்டி

    ஏலக்காய் - 2

    கருவாப்பட்டை - 2

    இஞ்சி பூண்டு, விழுது - 1 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    சமையல் எண்ணெய் - பொரிக்கவும், தாளிக்கவும்

    மைதா மாவு - 1 கப்

    செய்முறை:

    ப.மிளகாய், வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறைச்சியை நன்றாக கழுவி சிறிது உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

    மைதா மாவில் உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணிநேரம் ஊற வைக்கவும்.

    உருளை கிழங்கை கழுவி விட்டு நன்றாக அவித்து தோலுரித்து, அதை மசித்து வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் 3 மேசைக்கரண்டி விட்டு சூடானதும் ஏலக்காய், கருவாப்பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி பூண்டு விழுதை போட்டு கிளறவும்.

    அடுத்து அதில் வேக வைத்த இறைச்சியை போட்டு நன்றாக கிளற வேண்டும்

    அடுத்து மஞ்சள் தூள், உப்பு, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.

    அத்துடன் பச்சை மிளகாய், கறிமசாலா பொடி, மல்லி பொடி, மிளகாய் பொடி, நச்சீரகம், பெருஞ்சீரகம் பொடி போட்டு கிளறி விடவும்.

    கடைசியாக வெங்காயம் போட்டு நன்றாக வதங்கி நீர் வற்றியதும் இறக்கி தனியாக வைக்கவும்

    மாலை சப்பாத்தி போல் திரட்டி இரண்டாக வெட்டி கோன் வடிவில் செய்து அதன் உள்ளே சிறிது பீப் மசாலாவை வைத்து ஓரங்களில் நன்றா ஒட்டி விடவும்.

    இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பீப் சமோசா ரெடி.

    • குழந்தைகளுக்கு திடீரென ஸ்நாக்ஸ் செய்ய விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
    • இதை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள் :

    அப்பளம் - 10,

    காய்கறி பொரியல் - 50 கிராம்,

    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு அப்பளத்தை தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து பாதியாக கட் செய்து, ஒரு பாதியின் இரு முனைகளையும் நன்றாக கைகளால் அழுத்தி ஒட்டி கோன் வடிவத்தில் செய்யவும்.

    இதில் காய்கறி பொரியலை வைத்து, ஓரங்களை அழுத்தி ஒட்டி விடவும்.

    இதே போல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான அப்பளம் சமோசா ரெடி.

    • தினமும் ஒரு வேளை தினையை உணவாக சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
    • தினை அரிசி புரதசத்து அதிகம் உள்ளது. கொழுப்பு சத்து அறவே இல்லாதது.

    தேவையான பொருட்கள் :

    தேங்காய் - அரை மூடி

    நெய் -அப்பம் பொரிக்க

    தினை - 200 கிராம்

    பொடித்த வெல்லம் - ஒரு கப்

    வாழைப்பழம் - 1

    ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை:

    தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

    தினையை வறுத்து மாவாக அரைக்கவும்.

    வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப் பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து, நன்கு கெட்டியாகக் கரைக்கவும்.

    குழிப்பணியாரக்கல்லில் நெய் விட்டு , ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான தினை தேங்காய்ப் பால் அப்பம் ரெடி.

    ×