என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 157065"
- பச்சை பட்டாணியை தவறாமல் எடுத்துகொள்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வராது.
- பட்டாணியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது.
தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி - 1 கப்,
கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
வரமிளகாய் - 2, கறிவேப்பிலை - 6 இதழ்கள்.
மேலே தூவுவதற்கு
அரிந்த கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
பச்சை பட்டாணியை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த பட்டாணியைச் சேர்த்து வதக்கி கேரட் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கொத்தமல்லித்தழை தூவி கலந்துவிடவும்.
இப்போது சூப்பரான பட்டாணி கார சுண்டல் ரெடி.
- சிக்கனில் பல்வேறு வித்தியாசமான ரெசிபிகளை செய்யலாம்.
- மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சிக்கன் சமோசா செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/4 கிலோ ( எலும்பு நீக்கியது )
கொத்தமல்லி தழை - சிரிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
மைதா - 3 கப்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா - 1 ஸ்பூன்
வேகவைத்த பட்டாணி - ½ கப்
பெரிய வெங்காயம் - 1
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மைதாவை போட்டு அதில் தேவையான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அடுப்பில் வைத்து நீர் வற்றும் வரையில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வெந்த சிக்கனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அதில் கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்.
* பின்னர் வேக வைத்த பட்டாணி, சிக்கன், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சப்பாத்தி போல் திரட்டி முக்கோண வடிவில் செய்து அதில் செய்து வைத்த சிக்கன் கலவையை போட்டு ஓரங்களில் தண்ணீர் தொட்டு நன்றாக மூடி விடவும். இவ்வாறு இருக்கின்ற எல்லா மாவையும் இதே போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
* இப்போது சூப்பரான சிக்கன் சமோசா ரெடி.
- விருப்பப்பட்டால் பீட்சாவை வாங்கிச் சாப்பிடலாம். ஆனால், தொடர்ந்து சாப்பிடுவது நம் உடல்நலத்துக்கு நல்லதல்ல
- அதிக அளவில் இதைச் சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
மைதா - 4 கப்
ஈஸ்ட் - 5 கிராம்
சீனி - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
ஸ்டப்பிங் செய்ய:
பீட்ஸா சாஸ் - தேவையான அளவு
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - 1
கேரட் - ஒன்று
குடை மிளகாய் - பாதி
பச்சை மிளகாய் - ஒன்று
துருவிய சீஸ் - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
வெதுவெதுப்பான தண்ணீரில், ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி சேர்த்து நன்றாக கலக்கிய பின்னர் ஒரு கப் மைதாவை சேர்த்து நன்கு கலக்கிக் கலவையை 10 நிமிடம் எடுத்து வைக்கவும்.
10 நிமிடம் கழித்து, 3 கப் மைதாவில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கலக்கி வைத்த கலவையை சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பரோட்டாவுக்கு பிசையும் மாவை விட சற்று மிருதுவாக பிசைய வேண்டும்.
பிசைந்த மாவினை ஒரு ஈரத் துணியால் மூடி ஒரு மணி நேரம் வைத்து பார்த்தால் அது இருமடங்காக அதிகரித்து இருக்கும்.
மாவினை வெளியே எடுத்து மீண்டும் நன்றாக பிசைந்து, மீண்டும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து, அவன் ட்ரேயில் மாவை போட்டு சமமாக கையிலேயே விரித்து விடவும். ஓரங்களில் விரலால் ஒரே மாதிரியாக அழுத்தி விடவும்.
பீட்ஸா பேஸ் ரெடி.
இப்போது பீட்ஸா மீது சாஸ் தேவையான அளவு தடவிய பின்னர் காய்கறிகளை ஒன்றின் பின் ஒன்றாக தூவவும்.
துருவிய சீஸை தேவையான அளவு பரப்பி விடவும்.
பின் சிறிது எண்ணெய்யை சீஸ் மேல் ஆங்காங்கே சேர்க்கவும்.
பின்னர் பீட்ஸாவின் ஓரங்களிலும் எண்ணெய் தடவி விடவும். இதனால் வேகும் போது கிறிஸ்பியாக இருக்கும்.
பின் ட்ரேவை எலக்ட்ரிக் அடுப்பின் மேல் ஸிம்மில் வைத்து சூடாக்கவும்.
ஃப்ளேம் கொண்ட அடுப்பு எனில் ஃபுல் ஃப்ளேமில் தோசை கல்லை வைத்து அதன் மேல் ட்ரேவை வைக்கவும். ட்ரே நன்கு சூடானதும் எடுத்து விடவும்.
பீட்ஸாவின் ஓரங்கள் பொன்னிறத்தில் மாறி, சீஸ் காய்கறிகளுடன் நன்கு கலந்திருக்கும் போது வெளியே எடுக்கவும்.
இப்போது சூப்பரான பீட்சா ரெடி.
- கேழ்வரகில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன.
- கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.
ராகி எனும் கேழ்வரகு தென்னிந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன. கேழ்வரகில் உள்ள அமினோ அமிலங்கள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும். சரும ஆரோக்கியம், எலும்புகளின் வலிமை, முடி வளர்ச்சி போன்றவற்றுக்கும் கேழ்வரகில் உள்ள சத்துக்கள் பயன்படுகின்றன. கேழ்வரகைக் கொண்டு பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்படும் 'ராகி சிமிலி' செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
எள் - 4 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
உப்பு - ¼ தேக்கரண்டி
செய்முறை:
பாத்திரத்தில் கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, நெய் ஊற்றி சப்பாத்திகளாக சுட்டுக்கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எள் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கி பொடித்துக்கொள்ளவும்.
கேழ்வரகு சப்பாத்தி ஆறியதும் மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் வெல்லம் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாகப் பிசையவும். கலவை கையில் ஒட்டும் பதத்தில் வரும்போது உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.
இப்பொழுது சுவையான மற்றும் சத்து மிகுந்த 'கேழ்வரகு சிமிலி' தயார்.
- மாலை நேர ஸ்நாக்ஸ்களில் பஜ்ஜிகளுக்கு என தனி இடம் உண்டு.
- இன்று பீட்ரூட்டில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்,
பீட்ரூட் – 2 பெரியது
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்,
காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன்,
பெருங்காயம் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவிற்கு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிகொள்ளவும்.
பிறகு, பீட்ரூட்டை வில்லைகளாக நறுக்கி தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சிறிது நேரம் போட்டு எடுக்கவும். பீட்ரூட் ஈரப்பதம் இல்லாமல் இருந்தால்தான்
பஜ்ஜி எண்ணெய் குடிக்காது என்பதை மனதில் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா, பெருங்காயம், உப்பு போன்றவற்றை சேர்த்து
நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் அவற்றுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பீட்ரூட் வில்லைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பாத்த டேஸ்டியான பீட்ரூட் பஜ்ஜி தாயார்.
இந்த பஜ்ஜிக்கு தேங்காய், கார சட்னி அல்லது சாம்பார் சேர்த்து ருசிக்கலாம்.
- கேரட் பஜ்ஜி தனித்துவமான சுவையுடன் அற்புதமாக இருக்கும்.
- இந்த பஜ்ஜி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கேரட் - கால் கிலோ
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
ஓமம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் மெதுவாக நீரை ஊற்றி கட்டிகளின்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதில் பேக்கிங் சோடா மற்றும் பஜ்ஜி மொறுமொறுப்புடன் இருக்க சிறிது சூடான எண்ணெய் ஊற்றி 15 நிமிடம் அப்படியே விட்டு, பின் கிளறி விட வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கேரட்டை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கேரட் பஜ்ஜி தயார்.
- தினமும் கீரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- கீரையில் குழம்பு, பொரியல் செய்து சாப்பிடுவதை போல் வடையும் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
கீரை - 1 கட்டு
உளுந்து - 200 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும். மாவு கையில் ஒட்டக் கூடாது.
கீரையை நன்றாக சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைத்த மாவில் பச்சை மிளகாய், சீரகம், உப்பு, இஞ்சி, கீரை சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.
பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை எலுமிச்சை அளவு மாவு எடுத்து ஓட்டவடை அளவுக்கு வட்டமாக தட்டி நடுவே ஒரு ஓட்டை போட வேண்டும். பின் லாவகமாக எண்ணெயில் உடையாமல் போடுங்கள்.
பொன்னிறமாக பொரிந்ததும் வெளியே எடுத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் கீரை வடை தயார்.
இந்த வடைக்கு அரை கீரை, சிறு கீரை, பசலை கீரை, முருங்கைக்கீரை என எந்த கீரையும் போடலாம். எதுவாக இருந்தாலும் பொடியாக நறுக்க வேண்டும்.
- மாலை வேளையில் டீ, காபியுடன் மொறுமொறுப்பான பக்கோடாவை சாப்பிடலாம்.
- இன்று காலிஃப்ளவர் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு -1 கப்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
காலிஃப்ளவர் - 1
வெங்காயம் - 2 (வட்டமாக நறுக்கவும்)
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
காலிஃப்ளவரை நன்றாக கழுவி பூக்களை சிறிதாக உதிர்த்துக்கொள்ளவும்.
கடலை மாவுடன் பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம் மற்றும் காலிஃப்ளவரை கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் பக்கோடாவாக உருட்டி கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.
இப்போது சூப்பரான காலிஃப்ளவர் பக்கோடா ரெடி.
- ‘ஷவர்மா’ என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.
- இன்று அசத்தலான ருசியில் ‘வெஜ் ஷவர்மா’ செய்யலாம் வாங்க..
'ஷவர்மா' என்றதும் கோழிக்கறி கொண்டு தயார் செய்யப்படும் 'சிக்கன் ஷவர்மா' ஞாபகம் வருகிறதா? அதன் அசைவ சுவைக்கு ஈடு கொடுக்கும் வகையில் பல வித மசாலா பொருட்கள் சேர்த்து, அசத்தலான ருசியில் 'வெஜ் ஷவர்மா' எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 300 கிராம்
தயிர் - 6 தேக்கரண்டி
மோர் - 5 தேக்கரண்டி
தண்ணீர் - தேவைக்கேற்ப
ஆலிவ் எண்ணெய் - தேவைக்கேற்ப
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர்- 1 தேக்கரண்டி
பன்னீர் - 200 கிராம்
சீரகப்பொடி - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
புதினா இலைகள் - சிறிதளவு
கடலை மாவு - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
கறிமசாலாப்பொடி - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
சாட் மசாலா - 2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி
மயோன்னஸ் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
நீளவாக்கில் வெட்டிய கேரட்,
முட்டைகோஸ், வெள்ளரி - 100 கிராம்
மீல் மேக்கர் - 50 கிராம்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தயிர் 3 தேக்கரண்டி, நறுக்கிய புதினா இலைகள், சீரகப்பொடி, தனியாத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், சோம்புத்தூள், கறிமசாலாப்பொடி, கடலைமாவு, மிளகுத்தூள், சாட் மசாலா, மஞ்சள் தூள், சிறிது பெருங்காயத்தூள், 4 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
இந்தக் கலவையில் சிறிது தனியாக எடுத்து, அதில் வெந்நீரில் ஊறவைத்து பிழிந்தெடுத்த சோயாவை சேர்த்து நன்றாகக் கலந்து ஊறவைக்கவும். பின்பு, மீதமுள்ள கலவையில் நீளவாக்கில் வெட்டி வைத்த பன்னீரை போட்டு கலந்து ஊற வைக்க வேண்டும்.
வேறொரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, ஆலிவ் எண்ணெய், 3 தேக்கரண்டி தயிர், 5 தேக்கரண்டி மோர் சேர்த்து நன்றாகக் கலந்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும். பின்பு அந்த மாவை எண்ணெய் விடாமல் 'நாண் ரொட்டிகளாக' தயார் செய்து கொள்ளவும். அடுத்து ஊறவைத்த பன்னீர் மற்றும் சோயாவை தனித்தனியாக சிறிது எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.
சட்னி:
கொத்தமல்லித்தழையுடன் சிறிது புதினா, 2 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு, உப்பு, ¼ தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து அரைக்கவும். அதனுடன் சிறிது மயோன்னஸ், சிறிது தயிர் மற்றும் சிறிது வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஷவர்மா:
கேரட், முட்டைகோஸ் மற்றும் வெள்ளரியுடன், பொரித்தெடுத்த பன்னீர் மற்றும் சோயா மசாலா சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின்பு நாண் ரொட்டியின் மேற்பகுதியில் கிரீன் சட்னியை பரவலாகத் தடவி, அதன் மேல் காய்கறி கலவையை நீளவாக்கில் வைத்துச் சுருட்டவும்.
இப்போது சுவையான வெஜ் ஷவர்மா பரிமாறுவதற்குத் தயார்!
- சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாஸ்தா என்றால் சாப்பிட அழைக்காமலேயே சாப்பிடுவதற்கு அமர்ந்து விடுவார்கள்.
- பாஸ்தாவில் இன்று சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரிப்பன் வடிவில் இருக்கும் மேக்ரோனி - ½கப்
மூக்கடலை அல்லது ராஜ்மா (நம் விருப்பத்திகேற்ப) - ½கப்
வெங்காயம் (விருப்பமிருந்தால்) - சிறியது 1
தக்காளி சிறியது - 1
தேங்காய் துருவியது - சிறிதளவு
தாளிக்க கடுகு, உளுந்து, - சிறிதளவு
மிளகாய் (ஃப்ளோக்ஸ்) - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு.
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மூக்கடலை அல்லது ராஜ்மாவை முதல்நாள் இரவே ஊறவைத்து விடவேண்டும். அடுத்தநாள் குக்கரில் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.
மேக்ரோனியை அகலமான அடி கனமான பாத்திரத்தில் உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறிவிட்டு வேகவைத்து அதில் உள்ள நீரை வடித்து விட்டு உடனே குளிர்ந்த நீரில் இரண்டுமுறை அலசினால் அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.
இப்பொழுது வானலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும், உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு அத்துடன் பெருங்காயத்தூளையும் தூவி சிறிது உ.பருப்பு கலர் மாறியவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதுடன் தக்காளியையும் சேர்த்து, அதற்கு தேவையான உப்பையும் சேர்த்து வதக்கவும்.
பின்பு, வேக வைத்த மூக்கடலை அல்லது ராஜ்மாவையும் அத்துடன் மிளகாய் ஃப்ளோக்ஸ் சேர்த்து வதக்கவும்.
கடைசியாக மேக்ரோனியை கலந்து மிகவும் லேசாக கிளறி கொத்தமல்லி தூவி இறக்கலாம்.
கடைசியில் தேங்காய் துருவலையும் சேர்த்து பரிமாறலாம்.
இந்த மேக்ரோனி சுண்டலைக் கட்டாயம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிளகாய் சேர்க்க விரும்பாதவர்கள் மிளகு தூள் சேர்த்தும் சுண்டல் செய்யலாம்.
- பொதுவாக உருளைக்கிழங்கு, வெங்காயத்தில் தான் பஜ்ஜி செய்து சாப்பிடுவோம்.
- இன்று சற்று வித்தியாசமாக கத்தரிக்காய் கொண்டு பஜ்ஜி செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் - 2
எண்ணெய் - பொரிக்க
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* கத்திரிக்காயை நீள வாக்கிலோ அல்லது வட்ட வடிவிலோ வெட்டிக் கொள்ளுங்கள்.
* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* நறுக்கிய கத்திரிக்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கத்திரிக்காய் பஜ்ஜி தயார்.
ரவை (அ) மைதா மாவு - கால் கிலோ
சர்க்கரை - அரை கிலோ
வறுகடலை - கால் கிலோ
தேங்காய் - 2
ஏலக்காய் பொடி - சிறிதளவு
நெய் - சிறிதளவு
செய்முறை :
வறுகடலையையும், சர்க்கரையையும் சமஅளவு எடுத்து தனித்தனியாக நன்கு பவுடராக அரைத்துக்கொள்ளவேண்டும்.
தேங்காயைத் துருவி, வாணலியில் நெய் ஊற்றி லேசாக வதக்கிக் கொண்டு, அதில் அரைத்த வறுகடலை மாவையும், சர்க்கரை மாவையும் சேர்த்து சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பூரணம் தயார் செய்துகொள்ள வேண்டும்.
ரவையை சிறிது தண்ணீர் தெளித்து கிளறி ஊறவைக்க வேண்டும்.
பின்னர் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு இடித்து மைதா மாவு பதத்திற்கு கொண்டுவர வேண்டும். (வேண்டுமானால் ரவைக்கு பதிலாக மைதா மாவை பயன்படுத்தலாம். ஆனால் ரவையில் செய்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.)
அந்த மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்த்து, அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மடித்து, அதன் ஓரப்பகுதியை கையால் நன்கு அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இப்போது சோமாஸ் ரெடி.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ள சோமஸை போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்